Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Oru Gulmohar Marathin Keezhaey
Oru Gulmohar Marathin Keezhaey
Oru Gulmohar Marathin Keezhaey
Ebook102 pages54 minutes

Oru Gulmohar Marathin Keezhaey

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.

Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.
Languageதமிழ்
Release dateApr 23, 2018
ISBN6580100600251
Oru Gulmohar Marathin Keezhaey

Read more from Devibala

Related to Oru Gulmohar Marathin Keezhaey

Related ebooks

Reviews for Oru Gulmohar Marathin Keezhaey

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Oru Gulmohar Marathin Keezhaey - Devibala

    http://www.pustaka.co.in

    ஒரு குல்மொஹர் மரத்தின் கீழே…!

    Oru Gulmohar Marathin Keezhaey…!

    Author:

    தேவிபாலா

    Devibala

    For more books
    http://www.pustaka.co.in/home/author/devibala

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    1

    "வ

    லது காலை எடுத்து வச்சு வாம்மா!"

    குரலைத் தொடர்ந்து, தன் மருதாணி அணிந்த கொலுசுக் கால்களைச் ‘சல்’லென்று உள்ளே பதித்தாள் மோகனா.

    என்ன பங்கஜம் பார்த்துட்டு நிக்கற? மருமக வந்ததும் தலைகால் தெரியலியா? உட்கார வச்சு பால், பழம் குடு!

    வயதான குரல் கட்டளையிட-

    ஐம்பத்தாறு வயது பங்கஜம் தன் பெரிய உடம்பைத் தூக்க மாட்டாமல் தூக்கியபடி உள்ளே ஓடினாள்.

    பெரிய ஹாலில் மத்தியில், அந்தக்கால பாணியில் தொங்கும் தேக்கு மர ஊஞ்சலில் முதலில் போய் உட்கார்ந்தான் ரங்கன்.

    நீயும் உட்காரு மோகனா!

    ரங்கனின் தங்கை சுமதி ஓடி வந்து அண்ணியின் மாலையைச் சரி செய்தாள்.

    பால், பழம் கொடுத்து, ஆரத்தி எடுத்து உறவுக் கூட்டம் மெல்ல மெல்ல விலக-

    ஏறத்தாழச் சொந்த மனிதர்களை மட்டும் வைத்துக் கொண்டது அந்த வீடு.

    சீனிவாசன் உள்ளே நுழைந்தார்.

    சீனிவாசன் பங்கஜம் தம்பதியருக்கு ரங்கன் ஒரே மகன். அடுத்த வருடம் ஓய்வு பெற இருக்கும் சீனிவாசனுக்கு குடும்ப பாரம் காரணமாக முப்பத்தி மூன்று வயதில் திருமணம். அதனால் ரங்கனுக்கு இப்போது இருபத்தி நாலு.

    அவனுக்குப் பிறகு ஆறு வருட இடைவெளியில் பிறந்தவள் சுமதி.

    ரங்கன் தனியார் நிறுவனமொன்றில் உதவி மானேஜராகப் பணி புரிகிறாள். சுமதி கல்லூரியில் படிக்கிறாள்.

    கூட்டம் ஓஞ்சுதா பங்கஜம்? ரயில் பிரயாணம் வேற… குழந்தைகளை உள்ளே அனுப்பி ஓய்வெடுக்க விடு!

    ஓ… மறந்துட்டேன்!

    ரங்கா, நீ போய்ரெஸ்ட் எடு. நீ வா மோகனா என்னோட. இந்த வீட்டுப் பழக்கங்களையெல்லாம நீ தெரிஞ்சுக்க வேண்டாமா?

    மோகனா மௌனமாக மாமியாரைப் பின் தொடர்ந்தாள். புது அண்ணியை, ஆர்வத்துடன் அணுகினாள் சுமதி.

    தபாரு மோகனா! சமையல், வீட்டு நிர்வாகம் இதெல்லாம் தன்னால வரும். நான் இருக்கும் போது உன் தலைல எந்தப் பாரமும் நீ சுமக்கவும் வேண்டாம்!

    மோகனா தலையை மட்டும் அசைத்தாள்.

    ரங்கன் எங்களுக்கு ஒரே பிள்ளை. வாழ்க்கைல எனக்கும், உங்க மாமாவுக்கும் ஒரே பிடிப்பு அவன்தான். ஒற்றுமைதான் இங்கே மூலதனம். உனக்குப் புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்.

    பதில் சொல்லாமல் மெலிதாகச் சிரித்தாள்.

    அது மட்டுமில்லைமா, இத்தனை பெரிய உத்யோகத்துல இருந்தாலும், நாலு பேர்கிட்ட கலகலப்பாப் பழகினாலும், இயல்புல ரங்கன் ரொம்பவும் மென்மையான குணம் கொண்டவன். அதிர்ந்து பேச மாட்டான். கோபம்னா என்னன்னே அவனுக்குத் தெரியாது. குசும்பு புரியாது. சண்டையை விரும்ப மாட்டான். மொத்தத்துல உன் புருஷன் குழந்தையாட்டமா. இனி இவனை உருவாக்கறது உன் பொறுப்பு!

    சரி அத்தே. ஒற்றை வார்த்தை பதில்.

    சுமதி இருக்காளா மாமி? கேட்டுக் கொண்டே சுவாதீனமாக உள்ளே நுழைந்தாள் அந்தப் பெண்.

    அடடா, வா பூர்ணிமா!

    மோகனாவை நெருங்கி விட்டாள் பூர்ணிமா.

    அடடா அண்ணி? என்னை நானே அறிமுகப்படுத்திக்கறேன். நான் பக்கத்து வீட்டுப் பூர்ணிமா. வயசு இருபது. ரங்கன் ஆபீஸ்ல ஸ்டேனோவா இருக்கேன். சம்பளம் ஆயிரம். படபடன்னு பேசுவேன். இன்னும் கல்யாணம் ஆகலை. எப்ப ஆகும்னு தெரியலை.

    அப்பப்பா… லொட லொடன்னு உண்டியலை உருட்டிவிட்ட மாதிரி. பயந்துறப் போறா மோகனா!

    எங்கே ரங்கன்?

    உள்ளே ரெஸ்ட் எடுக்குது அண்ணன்!

    அவருக்கென்ன ரெஸ்ட்? நான் விசாரிக்கணுமே அவரை! வீட்ல பேரைச் சொல்லித்தான் கூப்பிடுவேன்… ஆபீஸ்ல மட்டும்தான் சார். உங்களை எப்படி கூப்பிடட்டும்? அண்ணினு கூப்பிட்டா அந்நியமாமத் தோணுது!

    அக்கானு கூப்பிடு பூர்ணிமா! அம்மா.

    என்ன வயசு உங்களுக்கு?

    இருபது!

    அடடா! நம்ம ஜாதிதான்! பேரைச் சொல்லிக் கூப்பிட்டா தப்பில்லை. என்ன மோகனா? எங்கே நம்மாள்?

    தடதடவென நடந்தாள்.

    ரொம்ப வெகுளியான பொண்ணு. எல்லோருக்கும் அவளை ரொம்பப் பிடிக்கும். பாரேன்! அவன் ரூமுக்குள்ள போயிருவா. என்ன பேசுவாளோ தெரியாது. அவனை ஒரு வழி செஞ்சிருவா!

    மோகனா ஒன்றும் பேசவில்லை.

    ஏம்மா, அண்ணி பேச மாட்டாங்களா? சுமதி.

    நாமெல்லாம் புதுசு. சின்னப் பொண்ணு வேற. மிரட்சி இருக்கத்தானே செய்யும். மோகனா, நீ அப்படியே கொஞ்ச நேரம் படுத்துக்கோ!

    மோகனா ஒரு

    Enjoying the preview?
    Page 1 of 1