Uyirin Oli
By Rajesh Kumar
4/5
()
About this ebook
Reviews for Uyirin Oli
2 ratings0 reviews
Book preview
Uyirin Oli - Rajesh Kumar
http://www.pustaka.co.in
உயிரின் ஒளி
Uyirin Oli
Author :
ராஜேஷ் குமார்
Rajesh Kumar
For more books
http://www.pustaka.co.in/home/author/rajesh-kumar
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
1
உடம்பு பூராவும் கனமான அழுகை பூசிக் கொண்ட அரசு பஸ் ஊறுகாய் பாட்டில் மாதிரி ஜனங்களை அடைத்துக் கொண்டு - ஹம்ம்மென்ற உறுமலோடு திணறலாக மலைப்பாதையில் ஏறியது. ஜன்னலுக்கு அந்தப் பக்கம் பச்சைப் பசேலென்று பள்ளத்தாக்கு கிடுகிடுவென்று சரிந்து சென்றது. ஜன்னல் வழியே பிரவேசித்த குளிர் காற்று குத்தூசி முனைகளாக மாறி உடம்பை விறைக்க வைக்க முயல – அநேகம் பேர் ஸ்வெட்டர் மாட்டியிருந்தார்கள். வைஷ்ணவி, பக்கத்தில் இருக்கும் கணவன் தமிழ்ச்செல்வனின் உள்ளங்கையோடு தன் உள்ளங்கையை சேர்த்துக் கொண்டு – அவனுடைய தோளில் ரிலாக்ஸ்டாக சாய்ந்து இருந்தாள். ஜன்னல் செவ்வகத்தில் சினிமா பிரேம் மாதிரி மாறிக் கொண்டிருந்த வெளிப்புறக் காட்சிகளைப் பார்த்துக் கொண்டு வந்தாள்.
சூப்பர்ப் லொகேஷன்… இல்லீங்க…?
துமிழ்ச்செல்வன் முகத்க்குக் கண்களை உயர்த்திக் கேட்ட வைஷ்ணவிக்கு சென்ற ‘ஜனவரி மாதம் பதினாலாம் தேதியோடு இருபத்தி மூன்று வயசு பூர்த்தியாகிறது என்கிற நிஜத்தைச் சொன்னால் என்னை நீங்கள் அடிக்கவே வந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. பத்தொன்பது வயசுக்கரியின் உடற்கட்டு முகவெட்டு. அந்த பிங்க் நிறப் பூக்கள் தெளிந்த இளம்பச்சை சல்வார் கமீஸ் அவள் வயசைக் குறைத்துக் காட்டுவதில் கணிசமாய் வேலை செய்தது. சிம்லா ஆப்பிளைப் பிசிறில்லாமல் தோல் சீவி வைத்த மாதிரி மின்னும் அந்தப் பொன்னிறக் கன்னங்கள் யாரையும் ஒரு விநாடி தடுமாற வைத்து விடும். சட்டக்கல்லூரி முடித்து விட்டு லா ப்ராக்டீஸுக்கு போய்க் கொண்டிருந்தவள் - சீனியர் வக்கீலின் வீட்டுக்குப் பக்கத்துக் காம்பவுண்டில் இருந்த தமிழ்ச்செல்வனிடம் மனசைப் பறிகொடுத்து - கூடவே காதல் ப்ராக்டீஸும் பண்ண ஆரம்பித்தாள். இரண்டு மாசத்துக்கு முன்னால் ரிஜிஸ்தர் ஆபீசில் வக்கீலின் ஆசிர்வாதத்தோடு மாலை மாற்றிக் கொண்டு – அந்தக் காதலை சிம்பிளான கல்யாணமாக சுபமுடிவுக்குக் கொண்டு வந்திருந்தார்கள்.
இதுக்கே ஆச்சரியப்பட்டா எப்படி…. ?இங்க வெறும் இயற்கைக் காட்சி மட்டும்தான் இருக்கு. பரமானந்த ரிஷியின் ஆசிரமத்துக்குப் போயிட்டா இந்த இயற்கைச் சூழ்நிலையோட, தெய்வீகச் சூழலும் கை கோர்த்துக்கிட்டு… எப்பேர்பட்ட மனசும் லயிச்சுப் போயிரும் தெரியுமா?
சொன்ன தமிழ்ச்செல்வனை அழகன் என்று சொல்ல முடியாது. திருத்தான். தமிழ் இலக்கியத்தில் கொள்ளை கொள்ளையாய் ஆர்வம். அந்த ஆர்வத்திலேயே சுந்தர் என்கிற தன் பெயரை தமிழ்ச்செல்வன் என்று மாற்றி வைத்துக் கொண்டான். ‘கவச குண்டலம்’ என்ற பெயரில் கைக்காசு போட்டு சிற்றிதழ் நடத்தி வருகிறான். ஆதில் தமிழ்ச்செல்வன் எழுதும் சூடான கட்டுரைகள் அவன் வட்டத்தில் பிரபலம். ஆந்தக் கட்டுரையின் காரணமாக லோக்கல் எம். எல். ஏ. வின் ஆட்களுடன் ஒரு தடைவ கை கலப்பு நடந்திருக்கிறது. ஆன்மீகத்தில் நாட்டம் அதிகம். அதிலும் குறிப்பாக பரமானந்த ரிஷியின் தீவிர பக்தன். அவருடைய அருள் உரை ஆடியோ கேசட்டுகள் ஒரு பெட்டி நிறையச் சேர்த்து வைத்திருக்கிறான்.
ஆசிரமத்துக்கு இன்னும் எவ்வளவு தூரம் போகணும்…?
கேட்டாள் வைஷ்வி.
"டாப்ஸ்லிப்புக்குப் பதினைந்து கிலோமீட்டர் முன்னாடியே ஆசிரமம் வந்துடும். ஆசிரமம் வந்ததும் பாரேன்… பஸ்ஸில் பாதிக்