Unnai Vittal Yarumillai
By Rajesh Kumar
5/5
()
About this ebook
Reviews for Unnai Vittal Yarumillai
4 ratings1 review
- Rating: 4 out of 5 stars4/5Good thriller novel .Unexpected turn in the last chapter.Hats off to Rajeshkumar
Book preview
Unnai Vittal Yarumillai - Rajesh Kumar
http://www.pustaka.co.in
உன்னை விட்டால் யாருமில்லை
Unnai Vittal Yaarumillai
Author :
ராஜேஷ் குமார்
Rajesh Kumar
For more books
http://www.pustaka.co.in/home/author/rajesh-kumar
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
அத்தியாயம் 21
அத்தியாயம் 22
அத்தியாயம் 23
அத்தியாயம் 24
அத்தியாயம் 25
அத்தியாயம் 26
அத்தியாயம் 27
1
கல்யாணராமன் தன் ஆயுளில் அவ்வளவு வேகமாக என்றைக்கும் ஓடியதில்லை. அந்த நள்ளிரவு தாண்டிய நேரத்தில்- ஆள் நடமாட்டம் அறவே அற்ற சிந்தாதிரிப் பேட்டையில் குறுகலான தெருக்களில்- நுரையீரல்கள் காற்றுக்காகத் தவிக்க- உடம்பு பூராவும் வியர்ந்து வழிய ஓடிக் கொண்டிருந்தான்.
உயிருக்கு பயந்த ஓட்டம் அது...!
முதுகுக்குப் பின்னால் அந்த பைக் சத்தம் விடாப்பிடியாய்க் கேட்டுக் கொண்டிருந்தது. ‘டப்... டப்... டப்...!’
‘இன்னும் இரண்டு தெருக்களைத் தாண்டினால் போதும்... போலீஸ் ஸ்டேஷன் வந்து விடும். உள்ளே நுழைந்து விட்டால் அப்புறம் பயமில்லை...
பைக்கின் சத்தம் இப்போது அதிகப்பட்டது. முகப்பு விளக்கின் வெளிச்சம் ஒருமுறை அவனை நனைத்து விலகியது.
கல்யாணராமனுக்கு அடிவயிற்றில் பயமாய் அமிலம் சுரந்து மயிர்க்கால்களைச் சிலிர்க்க வைத்தது.
போலீஸ் ஸ்டேஷனைத் தொடுவதற்குள் பாவிகள் பிடித்து விடுவார்களா?
குறுக்குச் சந்தில் திரும்பினான். படுத்திருந்த மாடு ஒன்று மிரண்டு எழ- அதன் மீது மோதிக் கொண்டு- கீழே விழுந்து முழங்காலில் கணிசமாய் சிராய்த்துக் கொண்ட- எரிகிற காயத்தோடு எழுந்து ஓடினான்.
சின்னதாய் ஒரு சாக்கடைக் குறுக்கிட்டது. ஓடுகின்ற பதற்றத்தில் அதில் ‘ச்சொத்’தென்று காலை வைக்க சேறும் சகதியும் சிதறியது.
பைக் சத்தம் விடாமல் தொடர்ந்தது.
அந்த குறுகலான சாலையின் இரண்டு பக்கங்களிலும் வீடுகளும் கடைகளும் சாத்தப்பட்ட கதவுகளோடு நிசப்தமாய் வந்தன.
கல்யாணராமன் ஒரு விநாடி யோசித்தான்.
‘ஏதாவது ஒரு வீட்டின் கதவைத் தட்டி உதவி கேட்கலாமா?’
‘அதுதான் சரி... இப்படி வெறும் காலால் ஓடிக் கொண்டிருந்தால் சீக்கிரமே பிடிபட்டு விடுவோம்...!’
‘எந்த வீட்டின் கதவைத் தட்டுவது...?’
பார்த்துக்கொண்டே ஓடினான் கல்யாணராமன். நெஞ்சுக்கூடு முழுவதும் பயத்தில் யுத்த கால முரசு மாதிரி மாறியிருந்தது.
ஓடிக்கொண்டிருந்தவன் சட்டென்று வேகத்தைக் குறைத்தான். சாக்குப் படதாக்கள் மறைவாய்க் கட்டியிருந்த அந்தத் தெருமுனை வீடு பார்வைக்குக் கிடைத்தது. சிறிய ஓட்டு வீடு. வீட்டு முகப்பில் ‘பொன்னம்மா இட்லிக் கடை’ என்று சாக்பீசால் எழுதப்பட்ட எழுத்துகள் துருப் பிடித்த ஒரு தகர போர்டில் தெரிந்தது.
‘இந்த வீட்டுக்குள் நுழைந்து விட வேண்டியதுதான்!’
யோசித்தவன்- விநாடி நேரத்தைக் கூட வீணாக்காமல் சாக்குப் படுதாவுக்குள் நுழைந்தான். பழங்காலக் கதவு பார்வைக்குக் கிடைக்க, தட்டினான்.
த்ட்... த்தட்...
உள்ளேயிருந்து உடனே ஒரு குரல் கேட்டது.
பெண்ணின் குரல்.
வர்றேன்... வர்றேன்...
கல்யாணராமன் வாயிலும் மூக்கிலும் மூச்சிரைத்துக் கொண்டு காத்திருந்தான். அந்தப் பயத்திலும் பதற்றத்திலுங்கூட அவனுக்கு ஆச்சரியமாய் இருந்தது.
கதவைத் தட்டியதுமே அந்தப் பெண் திறக்க வருகிறாளே...? வெளியே போயிருக்கிற அவளுக்கு வேண்டியவர்கள் யாராவது வந்து கதவைத் தட்டுவதாக நினைத்துவிட்டாளோ...?
பைக் சத்தம் இப்போது அதிகப்படியாய் கேட்டது. ஹெட்லைட் வெளிச்சமும் எதிர்புறச் சுவரில் விழுந்தது. மறுபடியும் கதவைத் தட்டினான் கல்யாணராமன்.
த்ட்... த்ட்...
வந்துட்டேன்... வந்துட்டேன்...
கொட்டாவி விடும் சத்தமும் வளையல் சிணுங்குவதும் கதம்பமாய் கலந்து கேட்க கதவின் தாழ்ப்பாள் விலகியது.
ஜீரோவாட்ஸ் விளக்கு வெளிச்சத்தில் அந்தப் பெண் நிழல் உருவமாய் நின்றிருந்தாள். இளம் பெண் தலைமுடி கலைந்து சிலும்பித் தெரிந்தது.
"ஏன்யா இவ்வளவு லேட்டு...? உள்ளே வாய்யா... கல்யாணராமனின் சட்டையைப் பிடித்து உள்ளே இழுத்தவள் சட்டென்று கதவைச் சாத்தித் தாழிட்டாள். அவனை மெத்தென்று அணைத்துக் கொண்டவள் மல்லிகைப்பூ வாசனையோடு கேட்டாள்...
"ஏன்யா... இப்படி ஓடி வந்திருக்கே... நாய் ஏதாவது துறுத்திச்சா...?
இ... இல்லே...
"சரி... வா... வந்து உட்கார்...! வேலு சாய்ந்திரமே என் கையில சொல்லிடுச்சு... ஒரு மணிக்கு மேல பார்ட்டி வரும் கண்டுக்கோன்னு...! நானும் ஒரு மணியிலருந்து காத்துக்கிட்டிருக்கேன்... ரேட்டெல்லாம் வேலு சொல்லிச்சா...?
கல்யாணராமனுக்கப் புரிந்துவிட்டது. இவள் உடம்பை விற்கிற பெண். முன்பின் தெரியாத ஒரு புதிய வாடிக்கையாளருக்காகக் காத்துக் கொண்டிருக்கிறாள்...! என்னய்யா... எதையோ பார்த்து பயந்து போன பச்சக்கொளந்த மாதிரி முளிக்கிறே...?
வந்து... வந்து...
அக்கம் பக்கம் இருக்கிறவர்களுக்குத் தெரிஞ்சுடுமோன்னு பார்க்கிறியா...? இராத்திரி பத்து மணி வரைக்கும் இது இட்லிக் கடை. அதுக்கப்புறம் இது வேறு மாதிரியான கடைன்னு எல்லாருக்கும் தெரியும். யாரும் கண்டுக்க மாட்டாங்க. போலீஸ் இன்ஸ்பெக்டருக்குப் போய் சேர்ந்துடும்.
வெளியே பைக் சத்தம் கேட்டது. வீட்டு வாசலுக்கு முன்பாய் அந்தச் சத்தம் அணைந்து போவதும் தெரிந்தது.
கல்யாணராமன் அந்தப் பெண்ணின் கைகளைப் பற்றிக் கொண்டான். இதோ பாரம்மா... ரெண்டு பேர் என்னைக் கொல்றதுக்காகத் துரத்திட்டு வர்றாங்க... நான் இங்கே எங்கேயாவது ஒளிஞ்சுக்கறேன். தயவு பண்ணி என்னைக் காட்டிக் கொடுத்திடாதே...!
அவள் தன் தாடையில் கையை வைத்து ஆச்சரியப்பட்டாள். அப்படின்னா நீ வேலு சொல்லி உட்ட ஆளில்லையா...?
இ... இல்ல...
அவள் ஏமாற்றத்தோடு முனகினாள்.
‘நடுராத்திரியில் இப்படியொரு சாவுகிராக்கியா...?’
கல்யாணராமன் கும்பிட்டான். நாளைக்குக் காலையில உனக்கு வேண்டிய பணம் தர்றேன்... என்னை மட்டும் அவங்ககிட்ட இருந்து காப்பாத்திடு போதும்...
அவங்க எதுக்காக உன்னைத் துரத்தறாங்க...?
கல்யாணராமன் பேச வாயெடுத்த விநாடி- வாசலில் பேச்சுக் குரல்கள் கேட்டன.
இதுவரைக்கும்தான் ஓடி வந்திருக்கிறான்.
எப்படிச் சொல்றே...?
காலடிச் சகதி பாரு... ஓடறப்ப சாக்கடையை மிதிச்சிருக்கான்...
பொன்னம்மா இட்லிக் கடைன்னு போர்டு போட்டிருக்கு.
அவன் அந்த வீட்டுக்குள்ளாறதான்... நுழைஞ்சிருப்பான்னு என் மனசுக்குப் படுது...
கதவைத் தட்டிட வேண்டியதுதான்!
தட்டினார்கள்.
கதவு தட்டப்பட்டதும் கல்யாணராமன் மறுபடியும் அந்தப் பெண்ணைக் கும்பிட்டான். கதவைத் தட்டறது... அவங்கதான்... எப்படியாவது என் உசிரைக் காப்பாத்து...!
அவள் சலித்துக் கொண்டாள். என்னய்யா... நீ... நட்ட நடுராத்திரியில வந்து பேஜார் பண்ணிக்கிட்டு...
என்னைக் காப்பாத்திட்டா உனக்குப் பணம் தர்றேன்... என்னை அவங்க கொன்னுட்டாங்கன்னா... சில முக்கியமான உண்மைகள் வெளியுலகத்துக்குத் தெரியாமல் போயிடும்...
நாளைக்குக் காலைல எவ்வளவு பணம் தருவே?
நீ கேட்கிற பணம்...
சரி வீட்டுக்குப் பின்னாடி பழைய சாமான்கள் போட்டு வைத்திருக்கிற அறை இருக்கு. அதுக்குள்ளார போய் ஒளிஞ்சுக்க... வர்றவங்க யாராயிருந்தாலும் நான் டாவு கட்டி அனுப்பிடறேன்...
கதவு தட்டப்பட்டது.
கல்யாணராமன் வீட்டுக்குப் பின்பக்கமாக ஓடி அந்தப் பழைய அடைசல் அறைக்குள் அடைந்து கொண்டான்.
பொன்னம்மா அவிழ்ந்த கூந்தலை முடிந்து கொண்டே போய் வாசல் கதவைத் திறக்க- வாசற்படியில் இரண்டு பேர் வலுவான புஜங்களோடு நின்றிருந்தார்கள்.
உடம்புக்கட்டில் சட்டை பிதுங்கியது. அவர்கள் விட்ட மூச்சுக்காற்றில் கள்ளச் சாராயம் நாறியது.
யார் வேணும்?
இங்க ஒருத்தன் ஓடி வந்தானா...?
யாரும் வரலையே?
பொய் சொல்லாதே...! சாக்கடை சேறு படிஞ்ச காலடி தடம் உன் வீட்டு வாசல் வரைக்கும் வந்திருக்கு...
வந்தவன் அப்படியே வேற பக்கம் எங்கேயாவது ஓடியிருக்கலாம். பக்கத்து சந்துல போய்ப் பாருங்க...
இரண்டு பேர்களில் ஒருவன் சட்டென்று கதவைச் சாத்தித் தாழிட, இன்னொருவன் பொன்னம்மாவின் தலைமுடியைப் பற்றி விசுக்கென்று உயர்த்தி பற்களைக் கடித்தான். பொய் சொன்னே... உன் குரல்வளையை அப்படியே நசுக்கிவிடுவேன். நாங்க வெளியே கதவு தட்டும் போது நீ உள்ளே யார் கூடவோ பேசிக்கிட்டிருந்தே! யாரவன்...?
நா... நான் யார்க்கிட்டேயும் பேசலையே...?
நிசமா... நீ யார்க்கிட்டேயும் பேசலையா...?
பே... பேசலை...
ப்ப்ப்ளீர்...!
பொன்னம்மாவின் தலையே தெறித்தப் போகிற மாதிரி கன்னத்தில் அறை விழ- பொறி கலங்கிப் போனாள்.
சொல்லு... அவனை எங்கே மறைச்சு வச்சிருக்கே...? நீ அவனைக் காப்பாற்ற நினைச்சே... உன்னோட உயிர் உனக்கு சொந்தமில்லை...
பொன்னம்மாவுக்கு வாய் உலர்ந்து போயிற்று.
வந்து... வந்து...
"சொல்லு... அவள் தொண்டைக் குழியில் ஒருவனுடைய பெருவிரல் அழுத்தமாய் பதிய மூச்சுத் திணறிக் கொண்டு வீட்டின் பின்பக்கம் கையைக் காட்டினாள்.
வந்து காட்டு...
பொன்னம்மாவைத் தள்ளிக் கொண்டுப் போனார்கள்.
வீட்டின் பின்பக்கம் இருட்டில் இருக்க- பழைய சாமான்கள் போட்டு வைத்திருக்கும்- அந்தச் சிதிலமான அறைக்கு முன்பாய் வந்து நின்றாள் பொன்னம்மா.
இந்த ரூமா...?
ஆமா...
இரண்டு பேரும்- தங்கள் இடுப்புகளில் மறைத்து வைத்திருந்த பளபளப்பான கத்திகளை எடுத்தக் கொண்டார்கள். அறைக் கதவை ஒருவன் எட்டி உதைக்க-
அது படீரென்று திறந்து கொண்டது.
ஒரு பெரிய டின்னின் மறைவில் ஒளிந்து உட்கார்ந்திருந்த கல்யாணராமன் கண்களில் மரண பயத்தோடு மெதுவாய் எழுந்து நின்றான்.
2
கல்யாணராமன் அந்த இரண்டு பேரையும் பார்த்துக் கைக்கூப்பினான். தொண்டையின் ஆதாம் ஆப்பிள் புடைத்தக் கொள்ள- என்னை ஒண்ணும் பண்ணிடாதீங்க...
என்று கெஞ்சினான்.
மொதல்ல வெளியே வாடா.
கல்யாணராமன் இரண்டடி முன்னாடி எடுத்து வைத்தான். உதடுகள் விடாப்பிடியாக ‘என்னை ஒண்ணும் பண்ணிடாதீங்க...’ என்கிற வாக்கியத்தை ஒரு மந்திரம் மாதிரி சொல்லிக்கொண்டிருக்க- பொன்னம்மா அந்த இரண்டு பேரையும் பயமாய்ப் பார்த்தாள்.
அவனை இங்கே வைச்சுக் கொன்னுடாதீங்க... நாளைக்கு நான்தான் போலீசு கோர்ட்டுன்னு அலைய வேண்டியிருக்கும். அந்த ஆளை ஏதாவது பண்றதாயிருந்தா... வெளியே கொண்டு போய்... ரெண்டு தெரு தாண்டி பண்ணுங்க.
கல்யாணராமன் பயத்தில் உறைந்து போனான்.
ம்... வாடா வெளியே!
அங்குலம் அங்குலமாய் நகர்ந்து வந்தான்.
சீக்கிரம் வாடா. உன்னோட ஆயுசுக்கு முற்றுப் புள்ளி வைச்சு ரொம்ப நேரமாச்சு.
அவன் சிரித்துச் சொல்லிக் கொண்டிருக்கும் போதே கல்யாணராமன் பளிச்சென்று செயல்பட்டான்.
அடுப்பை எரிப்பதற்காக டின்களில் நிரப்பி வைத்திருந்த மரத்தூளை சட்டென்று இரண்டு கைகளாலும் அள்ளி இரண்டு பேர் முகங்களை நோக்கி வீச, அவர்கள் நிலை குலைந்து குனிய- கல்யாணராமன் கிடைத்த இடைவெளியில் புகுந்து ஓடினான். மறுபடியும் தெருவுக்கு வந்து ஓடத் தொடங்கிய போது- பைக் ஸ்டார்ட் ஆகி உறுமும் சத்தம் கேட்டது.
‘இனியும் எங்கேயும் நிற்கக்கூடாது!’
‘போலீஸ் ஸ்டேஷன்தான் சரியான இடம்...!’
உடம்பில் இருக்கின்ற அத்தனை பலத்தையும் திரட்டிக் கொண்டு- ‘ஹஸ் புஸ்’ என்று மூச்சிரைத்துக் கொண்டு ராட்சசத்தனமாய் ஓடினான்.
பைக் தூரத்தில் படபடத்தது.
இன்னும் ஒரு தெருதான்! தாண்டி விட்டால் போலீஸ் ஸ்டேஷன் வந்துவிடும். அதற்குப் பிறகு பயமில்லை!
அதே விநாடிகளில்- சிந்தாரிப்பேட்டை காவல் நிலையத்தில் சப்- இன்ஸ்பெக்டர் கண்ணன் லாக் அப் கைதி ஒருவனை விசாரித்தபடி தம்ளரில் இருந்த டீயை உறிஞ்சிக் கொண்டிருந்தார். உன் பேரென்னடா?
சுப்ரமணியன் சார்.
"எத்தனை நாளா இந்தச் சங்கில்