Ullam Rendum Ondru
5/5
()
About this ebook
Reviews for Ullam Rendum Ondru
1 rating0 reviews
Book preview
Ullam Rendum Ondru - Lakshmi Prabha
http://www.pustaka.co.in
உள்ளம் ரெண்டும் ஒன்று
Ullam Rendum Ondru
Author:
லட்சுமி பிரபா
Lakshmi Praba
For more books
http://www.pustaka.co.in/home/author/lakshmi-prabha
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
1
பூமியின் மெளனம் கலைத்து, பறவைகள் பட்டிமன்றம் நடத்த மலர்கள் புத்துணர்ச்சியுடன் முகம் மலர்த்தி, ரசித்து சிரித்துக் கொண்டிருந்தன.
தோட்டத்து மலர்களைப் பார்வையால் வருடிக் கொடுத்த ராதா... கிணற்று மேடையருகே வந்தாள்.
பட்டாணி சைஸில் இருந்த சிறு கல்லைப் பொறுக்கி மெல்ல கிணற்றுக்குள் போட்டுவிட்டு... கிணற்று மேடையைத் தொட்டு கண்களில் ஒற்றிக் கொண்டாள்.
டகடகவென்று ஜகடை உருள கிணற்றிலிருந்து நீரை இறைத்து பித்தளை அண்டாவில் நிறைத்தவள்... முகத்தை அலம்பிக் கொண்டாள்.
"காலங்கார்த்தால கிணத்துல தண்ணியிறைக்கும் முன்னாடி. சின்னக் கல்லைத் துக்கி கிணற்றுக்குள்ளே மெதுவா போடணும். அதுக்கு அப்புறம் தான் இரும்பு வாளியை இறக்கி தண்ணிர் சேந்தணும்.
ஏன்னா... ஆழ்ந்த உறக்கத்திலிருக்கிற கங்கா மாதாவை மென்மையா தட்டி எழுப்பிவிட்டு அதுக்கு அப்புறமாத்தான் கனமான வாளியை இறக்கி தண்ணிர் சேந்தணும்னு. ஆண்டாண்டு காலமா எங்கம்மாவும் பாட்டியும் சொல்லியிருக்காங்க...
பெரியவங்க சொன்னா... அதுலே எப்பவுமே ஒரு அர்த்தம் இருக்கணும். சரியா ராதா?’ என்று அம்மா சிவகாமி அவளிடம் கூறி வைத்ததை... தட்டாமல் செய்து வருபவள் ராதா.
அம்மா கிழித்த கோட்டை அவள் என்றுமே தாண்டியதே இல்லை.
அம்மாவின் மணமறிந்து நடந்து கொள்பவள்.
மூத்த மகள் ராதா பொறுமைசாலி மட்டுமல்ல. பொறுப்பு மிகுந்தவள்.
அம்மாவின் மீதும் தங்கைகளின் மீதும் பாசமும் அக்கறையும் கொண்டவள். படிப்பிலும் கெட்டிக்காரி! '
‘கண் பார்த்தால் கை செய்யும் வகையைச் சார்ந்தவள் சமையல் முதல் வீட்டை நேர்த்தியாகப் பராமரிப்பது வரை... அத்தனையும் அவளுக்கு அத்துபடி என்பதால்... அம்மா சிவகாமிக்கு அவள் மீது அதீத பாசம்!
ராதாவின் தங்கைகள் ஸ்வேதா, நிவேதா. இருவருமே மாநிறத்துடன் சுமாரான தோற்றம் கொண்டவர்கள் தான்.
ஆனால் ராதாவோ... சிற்பி செதுக்காத பொற்சிலையாய் காண்போர் கண்களைக் கட்டிப் போட்டாள்.
இரு தினங்களுக்கு முன்னர்தான்.
ராதாவுக்கும் சிவகாமியின் ஒன்றுவிட்ட அண்ணன் மகன் கண்ணனுக்கும் நிச்சயதார்த்தம் நடந்தேறியது.
ராதா எட்டாம் வகுப்பு