Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Annai Velanganni
Annai Velanganni
Annai Velanganni
Ebook64 pages24 minutes

Annai Velanganni

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சுற்றுலாத் தலங்களுக்கு மட்டும் சென்றால் மட்டும் போதுமா... புனிதமான இடங்களுக்கும் ஆலயங்களுக்கும் செல்ல வேண்டாமா? திருப்பதி சென்றுவர திருப்பம் கிடைக்கும் என்பார்கள். அதுபோல் புனிதமான இடங்களுக்கு சென்றுவர நம்முடைய வாழ்க்கை மேம்படும். உற்சாகம் கிடைக்கும். அந்த வகையில் வேளாங்கன்னி ஆலயம் பற்றிய குறிப்புகளின் சில தொகுப்பு.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580111801524
Annai Velanganni

Read more from Surya

Related to Annai Velanganni

Related ebooks

Related categories

Reviews for Annai Velanganni

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Annai Velanganni - Surya

    http://www.pustaka.co.in

    அன்னை வேளாங்கன்னி

    Annai Velanganni

    Author :

    சூர்யா

    Surya

    For other books

    http://www.pustaka.co.in/home/author/surya

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1.சுற்றுலா

    2.மரியா

    3.அன்னை வேளாங்கன்னி, காட்சியளித்த மூன்று சம்பவங்கள்

    4.சுற்றுலா செல்வோமா?

    5.ஆலயத்தின் நிகழ்ச்சிகள்

    6.நவநாள் ஜெபங்கள்

    7.உதவிக்கரங்கள்

    8.இயேசுவின் மலைச் சொற்பொழிவு

    அன்னை வேளாங்கன்னி

    முன்னுரை

    ஒருமுறை அன்னை வேளாங்கன்னி ஆலயத்திற்கு கணவனுடன் சென்றேன். அங்கு ஜாதி, மதம், இனம், மொழி, நாடு என்று இல்லாமல் பலர் வந்து பிரத்தனை செய்ததையும் முகம் தெரியாத மனிதர்களுடன் கூட சகோதர சகோதரிகள்போல் பழகியதை நேரில் பார்த்தேன். அதை என் கணவருடன் பகிர்ந்து கொண்டேன். சமையல் புத்தகமே எப்பொழுதும் எழுதுகிறாயே வேளாங் கன்னி ஆலயம் குறித்து எழுதுவதுதானே என்று ஆலோசனை வழங்கினார். அதன்படி, ஒவ்வொரு சிலை குறித்தும் குறிப்புகள் எடுத்தேன். ஆலயத்திற்கு வருபவர்களுக்கு என்னென்ன வசதிகள் இருக்கின்றன என்று ஆராய்ந்தேன். சென்னைக்கு வந்தபின் குறிப்புகளை ஒருங்கினைத்து பலரிடம் ஆலோசனைப் பெற்று புத்தகத்தை உருவாக்கினேன்.

    படித்துப் பாருங்கள் பகிர்ந்து கொள்ளுங்கள்

    அன்புடன்

    உங்கள் பிரியமான தோழி

    சூர்யா

    1.சுற்றுலா

    வாழ்க்கை ஒரு தேடல். அந்தத் தேடல் புதிய புதிய அனுபவத்தை ஏற்படுத்தும். அந்த அனுபவம் வாழ்க்கையை மேம்படுத்தும். நம்மை முன்னைவிட திறமை உடையவனாக உருவாக்கும். அதற்கு பயணம் மிகவும் முக்கியம்.

    பயணம் என்பது ஒரு சுகமான அனுபவம். நமது சொந்த ஊரைவிட்டு அடுத்த ஊர் எப்படி இருக்கிறது? அங்கு வாழும் மக்களின் பழக்க வழக்கங்கள் என்னென்ன? பேசும் மொழி என்ன? என்று அறிந்து கொள்வதன் மூலமாக நம்மை நாம் மேம்படுத்திக் கொள்ளலாம். பயணம் மூலமாக நமது சோர்வு நீங்கும். புதிய நம்பிக்கை ஏற்படும்.

    தமிழ் மொழி மதுரையில் ஒரு மாதிரியும் திருநெல்வேலியில் ஒரு மாதிரியும் சென்னையில் ஒரு மாதிரியும் பேசப்படுகிறது. அவற்றை அறிய வேண்டுமெனில் நாம் அங்கு சென்று அந்த மனிதர்களுடன் பழகினால்தான் புரியும். தெரிந்த மொழியிலேயே தெரியாத விஷயங்கள் இவ்வளவு இருக்கிறதா என்பது அங்கு சென்றபிறகுதான் தெரியும். இந்த அவசர வாழ்க்கையில் கணவன், மனைவி மனம் விட்டு பேசவும் கூட பயணம் வழிவகுக்கும்.

    பயணம் என்பது முன்புபோல் கடினம் இல்லை. மும்பை, கோவா, மதுரை, டில்லி, பெங்களூரு என்று எங்கு செல்ல வேண்டியது இருந்தாலும் இணையதளத்திலோ அல்லது நூலகத்திற்குச் சென்று புத்தகம் மூலம் நாம் செல்ல வேண்டிய ஊர் குறித்து அறிந்து கொள்வது எளிது. அவ்வாறு அறிந்து கொண்டு செல்வது புத்திசாலித்தனமானது.

    நான் ஊட்டி போகலாம்னு நினைக்கிறேன்பா

    இப்ப வேணாம் சார்... ஏப்ரல், மே மாசத்துல போங்க... அப்பதான் சீசன் களைகட்டும். அந்த மாதங்களில்தான் அங்கே நிறைய நிகழ்ச்சிகள் நடக்கும் என்பன போன்ற ஆலோசனைகள் நம் பக்கத்து வீட்டுக்காரர்கள் மூலமாகவோ, உறவினர்கள் மூலமாகவோ கிடைக்க... நாம் அதற்கேற்ப நம்முடைய பயணங்களை முடிவு செய்துகொள்ளலாம்.

    "போன

    Enjoying the preview?
    Page 1 of 1