Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Uyir Meethu Thaagam
Uyir Meethu Thaagam
Uyir Meethu Thaagam
Ebook112 pages53 minutes

Uyir Meethu Thaagam

Rating: 3.5 out of 5 stars

3.5/5

()

Read preview

About this ebook

Rajesh Kumar is an extremely prolific Tamil novel writer, most famous for his crime, detective, and science fiction stories. Since publishing his first short story "Seventh Test Tube" in Kalkandu magazine in 1968, he has written over 1,500 short novels and over 2,000 short stories.

Many of his detective novels feature the recurring characters Vivek and Rubella. He continues to publish at least five novels every month, in the pocket magazines Best Novel, Everest Novel, Great Novel, Crime Novel, and Dhigil Novel, besides short stories published in weekly magazines like Kumudam and Ananda Vikatan. His writing is widely popular in the Indian state of Tamil Nadu and in Sri Lanka.

Languageதமிழ்
Release dateOct 4, 2016
ISBN6580100401570
Uyir Meethu Thaagam

Read more from Rajesh Kumar

Related to Uyir Meethu Thaagam

Related ebooks

Reviews for Uyir Meethu Thaagam

Rating: 3.5 out of 5 stars
3.5/5

2 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Uyir Meethu Thaagam - Rajesh Kumar

    http://www.pustaka.co.in

    உயிர் மீது தாகம்

    Uyir Meethu Thaagam

    Author :

    ராஜேஷ் குமார்

    Rajesh Kumar

    For other books

    http://www.pustaka.co.in/home/author/rajesh-kumar

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    உயிர் மீது தாகம்

    1

    ஒரு டிசம்பரின் சனிக்கிழமை.

    ராத்திரி நேரம்.

    மணி 10.04 இதைச் சொல்கிற நேரம் பக்கத்துக் கட்டத்தில் முப்பது விநாடி தாண்டியிருந்தது. 30, 31, 32…

    சென்னை நிலமங்கை நகரின் கோடியில் தெரிந்த பங்களாவில் - மாடியில் பவுடர் போட்ட மாதிரி - கண்ணாடி ஜன்னல்கள் வழியே ப்ளோரஸண்ட் வெளிச்சம் அடிக்க - சைக்கியாட்ரிஸ்ட் தியாகேஷ் மேஜையடியில் குனிந்து டயரியில் எதையோ எழுதிக் கொண்டிருந்தார். வேகமான ஆங்கில வார்த்தைகள் பக்கங்களைக் கறுப்பாcக்கிக் கொண்டிருந்தன.

    தியாகேஷ் தன்னுடைய நாற்பத்தேழு வயதை போன மார்ச் மாதத்தில் முடித்திருந்தார். குபீரென்ற உயரம். நெற்றியின் இரண்டு பக்கங்களும் பாலக்காட்டுக் கணவாய் மாதிரி வழுக்கை உள் வாங்கியிருந்தது. நீள சைஸ் மண்டைக்கு அந்தப் பெரிதான இரண்டு காதுகளும் எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்குகள் மாதிரித் தெரிந்தன. பலஹீனமான புருவ முடிகளுக்குக் கீழே முயல் கண்கள். அமுங்கின மூக்குக்கு அடியில் - ஒழுங்காய்ப் பராமரிக்கப்பட்ட மீசை, சதைப் பிடிப்பான உதடுகளுக்கு மத்தியில் - உறுதியான பல்வரிசை கால் கிலோ சதையை ஒட்டவைத்த மாதிரி ஆரோக்கியமான மோவாய்,

    தியாகேஷ் வேகமாய் டயரியில் எதையோ எழுதிக் கொண்டிருந்த நேரத்தில் கீழே ஹாலில் இருந்த டெலிபோன் கதறியது. அந்தக் கதறலைப் பொருட்படுத்தாமல் அவர் எழுதிக் கொண்டிருந்தார்.

    சில விநாடிகளில் -

    மேஜையின் மேல் இருந்த அந்த சாம்பல்நிற இண்டர்காம் ஒரு அழகான சினிமா நடிகையைப் போல் இருமியது.

    தியாகேஷ் ரிஸிவரை எடுத்து வலது காதுக்குக் கொடுத்தார்.

    ஹலோ…

    ஹாலில் கீழேயிருந்து அவருடைய மனைவி சப்தமி பேசினாள்...யாரோ சூர்யகலாதரனாம்… உங்ககூட பேசணுமாம்…

    பேசச் சொல்லு…

    ஐந்தே விநாடிகள்! ஓர் ஆண்குரல் ரிஸிவரில் வழிந்தது.

    ஹலோ… டாக்டர் தியாகேஷ்?

    எஸ்... ஹோல்டிங்!

    டாக்டர்… என்னோட பேர் சூர்யகலாதரன்… அண்ணாநகர் ஈஸ்ட்லயிருந்து பேசறேன்...

    என்ன விஷயம் சொல்லுங்க...

    டாக்டர்… நான் இப்போ உங்களைப் பார்க்க வரலாமா…?

    இந்நேரத்துக்கா…?

    தியாகேஷ் தன் கையிலிருந்த வாட்ச்சைப் பார்த்தார். நேரம் 1O.O7.

    ஆமா... டாக்டர்... உங்ககிட்டே நான் ஒரு கன்சல்டேஷனுக்காக வரணும்... ஒரு மணி நேரம் எனக்கு ஒதுக்கித் தரமுடியுமா…?

    நாளைக்குக் காலையில என்னோடக்ளினிக்குக்கு வாங்களேன். நான் ராத்திரி நேரங்களில் கன்சல்டேஷனை அட்மிட் பண்றதில்லை...

    ப்ளீஸ் டாக்டர்… நீங்க கேக்கிற பீஸைத் தர்றேன்.

    என்னோட பீஸ் எவ்வளவுன்னு உங்களுக்குத் தெரியுமா?

    தெரியும் டாக்டர். ஒரு மணி நேரத்துக்கு ஐநூறு ரூபாய். நான் ஆயிரம் ரூபாய் தர்றேன்… வரட்டுமா டாக்டர்?

    உங்களுக்கு என்ன பிராப்ளம்…?

    நேரில்தான் சொல்ல வேண்டும்…

    நான் என் வீட்டில் கன்சல்டேஷனை வைத்துக் கொள்வதில்லை...

    உங்களுடைய க்ளினிக்கிற்கே வந்துவிடட்டுமா…?

    வாங்களேன்.

    தியாகேஷ் ரிஸிவரை வைத்துவிட்டு நிமிர்ந்தபோது - பால் நிரம்பிய டம்ளரோடு - சப்தமி மாடிப் படிகளின் உச்சியில் தெரிந்தாள்.

    சப்தமிக்கு முப்பது வயதிருக்கலாம். அழகான முகம் என்று துணிந்து வர்ணிக்கலாம். பூசின மாதிரியான உடம்புக் கட்டுக்கு கார்டன் சில்க் க்ரெஸண்ட் சேலையைக் கொடுத்திருந்தாள். மோவாய்க்கும் கீழுதட்டுக்கும் இடையில் எள்ளைப் பதித்தமாதிரி கறுப்பாய் ஒரு மச்சம் - அவளுடைய பர்சனால்டியை உச்சத்திற்குக் கொண்டுபோயிற்று.

    யார்ங்க அந்த சூரியகலாதரன்…?

    கேட்டுக்கொண்டே பால் டம்ளரை நீட்டினாள் சப்தமி. அவரருகே காலியாக இருந்த நாற்காலியில் உட்கார்ந்து கொண்டாள்.

    எனக்கும் தெரியலை. ஏதோ ஒரு கேஸ்... கன்சல்டேஷனுக்கு ஒரு மணி நேரத்துக்கு ஆயிரம் ரூபா தர்றானாம்.

    க்ளினிக்குக்கு போகப்போlங்களா?

    ஆமா...

    காசுன்னா ஏன் இப்படிப் பறக்கறீங்க…?

    ஏன் பறக்கிறேனா…? காசில்லாத இந்த உலகத்தை ஒரு நிமிஷம் நினைச்சுப் பாரு... ஆட்சியைப் பிடிக்கிறதுக்காகக் கட்சிகள் மத்தியில சண்டையே வராது… அப்புறம் பெண்டாட்டிக்கு…

    சரி… சரி... மொதல்ல பாலைக் குடிங்க ஏற்கெனவே ஆறிப்போன பால்லதான் சர்க்கரை போட்டுகிட்டு வந்தேன்...

    தியாகேஷ் பால் டம்ளரை எடுத்து ஒரே மூச்சில் குடித்துவிட்டு எழுந்தார்...சப்தமி…! ஒரு எக்ஸ்பரிமெண்ட் ரிப்போர்ட்டை எடுக்கிறதுக்காக நானே க்ளினிக்குக்குப் போகணும்ன்னு நினைச்சுட்டிருந்தேன். இப்போ கேஸும் வருது… ஆயிரம் ரூபாயை விடுவானேன்…

    பேசிக்கொண்டே பக்கத்து அறைக்குள் நுழைந்து - நீளமான அங்கி சைஸில் கோட்டு ஒன்றை மாட்டிக்கொண்டு வெளியே வந்தார். சுவர் ஆணியில் மாட்டியிருந்த உல்லன் தொப்பியை எடுத்துப் பொருத்திக் கொண்டார். சப்தமியிடம் திரும்பினார்.

    க்ளினிக் சாவியை பீரோவுக்குள்ளே வெச்சிருந்தேன் எடு...

    சப்தமி எழுந்து போய் - பீரோவைத் திறந்து - சாவியை எடுத்துக் கொடுத்தாள். லேட் பண்ணாமே சீக்கிரமா வந்துடுங்க... இவ்வளவு பெரிய வீட்ல நான் ஒருத்தி மட்டும் தனியா நடுங்கிட்டே உட்கார்ந்திருக்கணும்…

    எதுக்காக நடுங்கணும்... இந்த வீட்ல என்ன பயம்…? சிரித்துக் கொண்டே மாடிப்படியில் இறங்கி ஹாலுக்கு வந்தார் தியாகேஷ். டி.வி.யின் தலைமேலிருந்த டாட்சன் கார் சாவியை எடுத்துக்கொண்டார்.

    பத்திரம் சப்தமி…

    ம்…ம்…

    காலிங் பெல் சத்தம் கேட்டா யார்ன்னு கேளு… தெரிஞ்சவங்களாயிருந்தா கதவைத் திற... இல்லேன்னா கம்ன்னு இருந்துடு...

    Enjoying the preview?
    Page 1 of 1