Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Oru Kodi Inbangal
Oru Kodi Inbangal
Oru Kodi Inbangal
Ebook126 pages1 hour

Oru Kodi Inbangal

Rating: 3.5 out of 5 stars

3.5/5

()

Read preview

About this ebook

Anuradha was born in 1947 in Thanjavur, Tamil Nadu. Her grandfather R. Balasubramaniam was an actor who inspired Anuradha to become a writer. Anuradha started her career as an artist before making several unsuccessful attempts to get a job with popular magazines. This prompted her to join Mangai, a Tamil magazine after the editor found her writings very interesting. Anuradha's literary career started in 1977 while working for the magazine.

Apart from her literary contributions, she was well known for her "anti-divorce counselling" work. In a career that spanned over 30 years, Anuradha wrote nearly 800 novels and 1,230 short stories. Her works were mainly centered on family and everyday happenings. One of her early works Sirai, won a gold medal for the best short story from Ananda Vikatan. It was adapted into a film of the same name. Following this, her other novels Kootu Puzhukkal, Oru Malarin Payanam and Oru Veedu Iruvasal were adapted into films in various languages such as Tamil, Telugu and Kannada. Oru Veedu Iru Vasal, directed by Balachander won the National Film Award for Best Film on Other Social Issues in 1991. The 1988 Telugu film Oka Baarya Katha based on her work won five Nandi Awards. In addition to films, many of her stories such as Archanai Pookal, Paasam and Kanakanden Thozhi have been adapted into Television serials. She was awarded a gold medal by M. G. Ramachandran, the then Chief Minister of Tamil Nadu.

Languageதமிழ்
Release dateDec 12, 2016
ISBN6580110001635
Oru Kodi Inbangal

Read more from Anuradha Ramanan

Related to Oru Kodi Inbangal

Related ebooks

Reviews for Oru Kodi Inbangal

Rating: 3.6666666666666665 out of 5 stars
3.5/5

3 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Oru Kodi Inbangal - Anuradha Ramanan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    ஒரு கோடி இன்பங்கள்

    Oru Kodi Inbangal

    Author:

    அனுராதா ரமணன்

    Anuradha Ramanan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/anuradha-ramanan-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    1

    அம்மா... சேப்பங்கிழங்கு ரோஸ்ட் பிரமாதம் போ... - ரவி பாராட்டும்பொழுது ஜானகியின் இதழில் பெருமிதச் சிரிப்பொன்று தவழ்கிறது.

    நான்கூடப் பிள்ளையார் மாதிரி ஒரு சபதம் எடுத்துக்கப் போறேன்... என்ன தெரியுமோ...?

    ரவி, ஈரக்கையை டவலில் துடைத்தபடி குறும்பாக அம்மாவைப் பார்த்துக் கண்களை இடுக்கிக் கொண்டு சிரிக்க, ஜானகி பிள்ளையின் சிரிப்புக்குக் காரணம் புரியாமல் விழிக்கிறாள்.

    என்னடா சபதம்?

    எங்கம்மா மாதிரி யார் வகைதொகையா எனக்குச் சமைத்துப் போடுவாளோ, அவளைத்தான் நான் கல்யாணம் பண்ணிக்கப் போறதா சபதம் எடுத்துக்கப் போறேன்.

    போடா சாப்பாட்டு ராமா!

    ஜானகி, ரவியின், முன்நெற்றிக் கிராப்பைப் பிடித்து உலுக்குகிறாள். சுவாமி அலமாரியிலிருந்து விபூதிச் சம்புடத்தை எடுத்து, சின்னக் கீற்றாக அவன் நெற்றியில் அவளது விரல்கள் பூச,

    நான் வரேம்மா... சாயந்திரம் நான் ஆபீஸிலேருந்து வரதுக்குள்ளே என் ஃபிரண்ட் ஜோசப் வந்துட்டான்னா, கொஞ்சநேரம் வெயிட் பண்ணச் சொல்லு... அப்பா அவன்கிட்ட வளவளன்னு ஏதாவது பேசி அறுக்கப் போறார். பார்த்துக்கோ...

    ரவி, சைக்கிளில் பாய்ந்து ஏறி மிதிக்க, ஜானகி வாசல் வரையில் வந்து வழி அனுப்புகிறாள்.

    ரவி தெருமுனையில் திரும்பும்போதும், கழுத்தை நொடித்து அம்மாவை ஒருதரம் பார்க்கிறான். அவள் இதற்காகவே காத்திருந்ததுபோலக் கையை அசைக்கிறாள்.

    அம்மா...

    ‘பளிச்’சென்ற ஒன்பது கஜ மடிசார் புடவை; வெள்ளை ரவிக்கை; ஈரத்தலையில் நுனி முடிச்சிட்டிருப்பாள்... முடிச்சிலிருந்து கொட்டுகிற ஈரம் வெள்ளை ரவிக்கையில் திட்டாகப் பரவும்பொழுது... அம்மாவின் தாழம்பூ நிறம் ஈர ரவிக்கை வழியே மின்னுவது பார்க்க அழகாக இருக்கும்... சற்று பருமனாக, ஆனால் அந்தப் பருமனே ஒரு தனி அழகாக கம்பீரமாக இருப்பாள்... முகத்தில் வயசின் ஆதிக்கம் அதிகமில்லாமல் குழந்தையின் முகம் போல நிஷ்களங்கமாய் இருக்கும்... முன் நெற்றியில் பட்டையாக நரைத்த மயிர்தான் வயசானதற்கு சாட்சி... அந்த நரைகூட மஞ்சள் பூசிக் குளிப்பதனால் முகத்தின் மஞ்சள், முன்நெற்றிவரை பரவி, பொன்னிழையாக மின்னும் போது அந்த முகத்துக்கே தனிக் களையாக இருக்கும்...

    ‘அப்பா இந்த வயசிலேயும் அம்மாவைச் சுத்திசுத்தி வரார்னா, சும்மாவா... இப்பவே இத்தனை அழகா இருக்கற அம்மா தன்னோட இளம் வயசிலே எப்படி இருந்திருப்பா...?’

    ரவி, தனக்குள் நமட்டுத்தனமாய்ச் சிரித்துக்கொள்கிறான். ராத்திரி நேரங்களில் அப்பாவின் படுக்கை காலியாக இருப்பதும், சற்றுநேரத்தில் புழக்கடைக் கதவைத் திறந்துகொண்டு அம்மாவும் அப்பாவும் உள்ளே வந்து அவரவர்கள் யதாஸ்தானத்தில் படுப்பதும்...

    ஆ... அதெல்லாம் ரசமான கவிதைகள்!

    ரவி, இதையெல்லாம் அருவெறுப்புத் தரும் விஷயங்களாக எடுத்துக் கொள்ளமாட்டான். அவனுக்கு தன் அம்மாவின் கம்பீரமான அழகு பிடிக்கும். அம்மாவைக் காணும்போதெல்லாம் அப்பாவின் முகத்தில் பெருகுகிற... (அதற்குபேர் என்ன சொல்வது... காதல் என்று சொல்லலாமா) காதலைப் பார்க்கப் பிடிக்கும். அம்மாவுக்கு ஒத்தாசை செய்தபடி சமையலறையிலேயே வளைய வந்து கொண்டிருக்கும் பெரிய தங்கை வேதாவைப் பிடிக்கும். துடிப்பும் நொடிப்புமாய் ஏட்டிக்குப் போட்டி பேசிக் கொண்டு வீட்டாரால் ‘லங்கிணி’ என்கிற பட்டப் பெயர் சூட்டப்பட்ட சின்னத் தங்கை வசுமதியைப் பிடிக்கும். காலேஜ் பையனாய் லட்சணமாய் ஒவ்வொரு வாரமும் சினிமா பார்த்துக்கொண்டு, க்வீன் மேரீஸ், ஸ்டெல்லா மேரீஸ், எஸ்.ஐ.ஈ.டி., இப்படி அத்தனைப் பெண்கள் காலேஜ் வழியாக தினம் ஊர்வலம் வந்துகொண்டு, ஊரிலிருக்கிற அத்தனை பெண்களையும் ஒருசேரக் காதலித்து, அடுத்து வரும் ஸ்டிரைக்குக்காகக் காத்துக் கொண்டிருக்கும் கடைக்குட்டி மோகனை ரொம்பப் பிடிக்கும்.

    ரவிக்குப் பிடிக்காததே இல்லை. எல்லாவற்றையும் அனுபவித்துப் பார்ப்பதில் அவனுக்கு நிகர் அவன்தான். டென்னிஸையும், வாலிபாலையும், விரும்புகிற அளவுக்கு ஆபீஸில் தனக்காகக் காத்திருக்கிற வேலைகளையும் விருப்பத்தோடு செய்ய அவனால் முடியும்.

    எத்தனைபேர் ஆபீஸ் வேலையை ஆசையோடு செய்கிறார்கள். சொல்லுங்கள் பார்ப்போம்...

    அவன் ரசனையே தனிதான். அவன் உலகத்தைப் பார்க்கிற கண்ணோட்டமே அலாதிதான்...

    அண்ணா... இன்னிக்கு டிபன் பாக்சிலே பூரிகிழங்கு வச்சிருந்தேனே... சாப்பிட்டியோ...?

    ஒ... சாப்பிட்டேனே... உப்புதான் போட மறந்துட்டே போல இருக்கு...

    ஆமாண்ணா... இந்த தடிச்சி, லங்கிணி, உனக்கு டிபன் எடுத்து வைக்கிறதுக்கு முன்னாடியே சாப்பிட்டு பார்த்திருக்கா. ‘உப்பு போடலைடி’ன்னு சொல்லக்கூடாது...

    போனாப் போறது. இப்போ அதனாலே என்ன... நான் கேன்டீனிலிருந்து கொஞ்சம் டேபிள் சால்ட் வாங்கி மசாலாவுல தூவிக் கலந்துண்டேன்...

    அய்யே, சரியாக கலந்திருக்காதே...

    ஆமா, சரியா கலக்கலைதான், ஒருபக்கம் ஒண்ணுமே இல்லாம ‘சப்’புனு... இன்னொருபக்கம் ஒரேயடியா உப்புக் கரிக்க, நடுவுல கொஞ்சம் பதமான உப்போட வாயில அகப்பட்ட மசாலா... அதுகூட ரொம்ப ஜோரா இருந்தது வேதா... நீ அந்த மாதிரி ஒரு நாள் சாப்பிட்டுப் பாரேன்...

    அவன் சிரிக்கிறான். கண்களை இடுக்கிக் கொண்டு குறும்பாக... அந்தச் சிரிப்பு... அதற்கு இணை... எதைச் சொல்வது...

    டென்னிஸ் கோர்ட்டில்...

    டேய், என்னடா நீ இப்போதெல்லாம் அந்தப் பட்டுப் பாவாடைப் பாப்பாவை ஸைட் அடிக்கறதையே நிப்பாட்டிட்டே... பாவம்மா... அது ரொம்ப ஏங்கிப் போச்சு... ரவியின் நண்பன் ஜோசப் சீண்டுவான்.

    அதுவாம்மா... நேத்திக்குத்தான் பார்த்தேன். நான் ஸைட் அடிக்கற பெண்ணையே என் தம்பியும் ஸைட் அடிக்கிறான்... அதான் அண்ணனா லட்சணமா விட்டுக்கொடுத்துட்டேன்...

    ஜோசப்பின் கேலிக்கு, சற்றும் சளைக்காமல் பதிலளித்துவிட்டுப் பகபகவென சிரிப்பான் ரவி. நிஜத்தில் ரவி காதலிக்க இன்னும் ஒருத்தி வரவில்லை. இதெல்லாம் நண்பர்களுக்குள் தினசரி நடக்கிற கலாட்டாக்கள்.

    ஒவ்வொருத்தியையும் எப்படியெல்லாமோ வர்ணிப்பான் ரவி. அவனைச் சுற்றி இளைஞர் கூட்டமே வாய் பிளந்து நிற்கும்.

    டேய் ரவி, நேத்து நீ என்கிட்ட சொன்ன ஜோக்கை நம்ம ஃப்ரண்ட்ஸுக்கு சொல்லுப்பா...

    சீ, போடா எனக்கு வெட்கமாயிருக்கு... - நாணிக்கோணி டென்னிஸ் மட்டைக்குள்

    Enjoying the preview?
    Page 1 of 1