Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ulagangalin Porattam
Ulagangalin Porattam
Ulagangalin Porattam
Ebook136 pages1 hour

Ulagangalin Porattam

Rating: 1 out of 5 stars

1/5

()

Read preview

About this ebook

P.B Subramaniyam alias Sivan was born on 22-06-1955. He did his education across various cities like Madurai, Senkai and Chennai. He started his career with
Peasum Padam Magazine followed by Gemini Cinema, Thinasari, Vetri Malai Magazines. He translated many English classic like Frankenstein, Alice in the wonder
world and etc., and Malayalam books written by various authors like Kottayam Pushpanath, Thakazhi Sivasankara Pillai etc., to Tamil. He has published more than 100 books
are published.
Languageதமிழ்
Release dateJan 6, 2017
ISBN6580103701793
Ulagangalin Porattam

Read more from Sivan

Related to Ulagangalin Porattam

Related ebooks

Reviews for Ulagangalin Porattam

Rating: 1 out of 5 stars
1/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ulagangalin Porattam - Sivan

    http://www.pustaka.co.in

    உலகங்களின் போராட்டம்

    Ulagangalin Porattam

    Author: H. G. Wells

    ஹெச். ஜி. வெல்ஸ்

    Translated by: Sivan

    சிவன்

    For other books

    http://www.pustaka.co.in/home/author/sivan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    உலகங்களின் போராட்டம்

    1

    லண்டனின் ‘டெய்லி டெலகிராஃப்’ செய்தித் தாளில் 1894 - ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13 - ஆம் தேதியன்று திடுக்கிட வைக்கும் அந்தச் செய்தி வெளியானது! அன்று அந்தச் சிறிய செய்தியைப் பெரும்பாலான வாசகர்கள் கவனித்திருக்க மாட்டார்கள். நானும் முதலில் அதை கவனிக்கவில்லை.

    ‘செவ்வாய் கிரகத்திலிருந்து வாயுக்கள் வெடித்துத் தெறிக் கின்றன!’ - ஜாவா தீவிலிருந்து வெளியான ரிப்போர்ட்டுகள்தான் இதை முதலில் வெளியிட்டன. ’12 - ஆம் தேதி நள்ளிரவில் இருந்து செவ்வாய் கிரகத்திலிருந்து தீ ஜூவாலைகள் வெளிப்படத் தொடங்கின. ஜொலிக்கும் ஹைடிரஜன் வாயுதான் அது என்றும் விளங்கியது. அந்த வாயு, பூமியை நோக்கி மிகுந்த விரைவில் பயணம் செய்வதாகவும் தோன்றியது. ஆனால், வெறும் பதினைந்து நிமிட நேரத்துக்குள் அவை மறைந்தன.

    அந்தப் பத்திரிகைச் செய்தி, சுத்தமாகவே என் கண்ணில் படவில்லை. எனவே, மனித இனத்துக்கு மிக விரைவில் ஏற்படவிருக்கும் அபாயகரமான அந்த விபத்து குறித்து எனக்கு எதுவும் தெரியவில்லை. என் நெடுநாள் நண்பரான ஒகில்வியை மட்டும் சந்தித்திராவிட்டால், ஒருவேளை நீண்ட நாட்கள் நானும் அப்படியே ‘ஒன்றும் தெரியாதவனாக’ இருந்திருப்பேன்.

    நகரத்தில் அன்றைக்கு நான் சுவாரஸ்யமற்றவனாக நடக்கும்போதுதான் வானிலை ஆராய்ச்சியாளரான ஒகில்வியை சந்தித்தேன்.

    வெல்ஸ், உங்களிடம் ஒரு விஷயம் கேட்கலாமா? - என்னைப் பார்த்ததும் அவர் கேட்டார்: செவ்வாய் கிரகம் பற்றி வெளியான அந்தச் செய்தி குறித்து... உங்களது அபிப்பிராயம் என்ன?

    எந்தச் செய்தி? - எனக்கு எதுவும் புரியவில்லை. ‘ஏறத்தாழ நான்கு கோடி மைல் தொலைவிலுள்ள ஒரு கிரகத்திலிருந்து, நமக்கு என்ன செய்தி வரப் போகிறது?’

    உத்வேகம் ஏற்படுத்தும் அசாதாரணச் செய்தி! - ஒகில்வி உரத்த குரலில் கூறினார்: சக்தி வாய்ந்த ஒளிக்கதிர்கள் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பிலிருந்து கிளம்பியுள்ளன!

    நான் நண்பரை, சந்தேகத்துடன் பார்த்தேன். அவரது பரபரப்பை என்னால் பங்கிட முடியுமா என்பதில் அப்போதும் எனக்கு சந்தேகமே.

    என் மனத்தை வாசித்து அறிந்தவர் போல் ஒகில்வி தொடர்ந்தார்: எனது வானிலை ஆராய்ச்சி நிலையத்துக்கு இன்றிரவு நீங்கள் ஏன் வரக்கூடாது? நாம் ஒன்றாக அமர்ந்து ஆகாயத்தில் நடப்பது என்னவென்று தெரிந்து கொள்வோம்.

    கண்டிப்பாக வருகிறேன்! - நான் ஒப்புக் கொண்டேன்.

    அன்று ஏறத்தாழ நள்ளிரவு வேளையில் நான் தொலைநோக்கிக் கண்ணாடி மூலமாக ஆகாயத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது செவ்வாய் கிரகத்தின் விளிம்புகளில் சிவப்பு நிற ஒளிக் கீற்றுகளைக் கண்டேன்.

    ஒகில்வி சீக்கிரம் வாருங்கள்! - நான் உரத்த குரலில் கூறினேன்.

    ‘அது செவ்வாய் கிரகத்திலிருந்து கிளம்பும் மிஸைலின் (ஏவுகணையின்) ஒளிதான்!’ என்று நான் கற்பனை கூடச் செய்த தில்லை. 24 மணி நேரத்துக்கு முன்னால் பூமியை நோக்கி ஏவப்பட்ட முந்தைய மிஸைலின் பாதையையே இதுவும் பின்தொடர்கிறது என்றும் நான் கருதவில்லை. ஆமாம்... அவர்கள் அனுப்பும் பொருள்கள் மிகுந்த விரைவுடன் 400 லட்சம் மைல் தொலைவைத் தாண்டி பூமிக்கு வந்து சேர்கிறது!

    சுமார் ஒரு மணி நேர ஆராய்ச்சிக்குப் பிறகு தொலை நோக்கிக் கண்ணாடியிலிருந்து விடுபட்ட நான், ஒகில்வியிடம் கேட்டேன்: ஒருவேளை செவ்வாயின் உயிரினங்கள் நமக்கு ஏதாவது தகவல் அனுப்புகின்றனவோ?

    என்ன பைத்தியக்காரத்தனம் இது? - ஒகில்வி முணு முணுத்தார்.

    ஒரு வேளை செவ்வாயில் நெருப்பு மழை பொழியலாம்... அல்லது அங்கு எரிமலை ஏதாவது வெடித்திருக்கலாம்!

    செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் உள்ளன என்பதில், உங்களுக்கு என்ன சந்தேகம்? - நான் கேட்டேன்.

    செவ்வாயில் மனித உயிர் வாழ்வதற்கான வாய்ப்பு லட்சத்தில் ஒன்றுதான்! ஒகில்வி பதில் அளித்தார்: சூரியனிலிருந்து ஒரு கோடியே 40 லட்சம் மைல் தொலைவில் உள்ளது செவ்வாய் என்பதை நாம் நினைவுகூர வேண்டும். எனவே, பூமியில் நமக்குக் கிடைக்கும் சூரிய ஒளி மற்றும் வெப்பத்தில் பாதியளவே அங்கு கிடைக்கும். அப்படிப்பட்ட இடத்தில் மனிதர்கள் வசிக்க முடியாது. மட்டுமின்றி, செவ்வாய் நாளுக்கு நாள் குளிர்ந்து கொண்டிருக்கிறது!

    சரி… செவ்வாய் கிரகத்தில் தண்ணீரும் காற்றும் இல்லையா? நான் கேட்டேன்: அவை உயிர்களுக்கு உத்வேகம் அளிக்காதா?

    ஒரு வேளை அப்படியும் நடக்கலாம்! - என்றவர் சற்று நேர யோசனைக்குப் பிறகு பேச்சைத் தொடர்ந்தார்: ஆனால், பூமியில் இருப்பது போல் அவை ஒரு போதும் முன்னேற்றமடைந்த உயிர்களாக இருக்காது!

    அந்த இரவில்... நமது பூமியை, மனிதர்களைவிட அறிவுக்கூர்மை கொண்ட உயிர்கள் நுட்பமாக ஆராய்கின்றன என்று எனக்குத் தெரியவில்லை. மனிதர்களைப் போல் அந்த உயிர்களும் வலிமை வாய்ந்தவையாக இருந்தன. மனிதர்கள் கனவில் கூடக் காண முடியாத ஆயுதங்கள் மற்றும் கருவிகளை அவை படைத்திருந்தன. பூமியை அவை பொறாமையுடன் ஆராய்ந்தன. நிதானமாக உயிரிழக்கும் செவ்வாய் கிரகத்தை விட்டு வெளியேற அவை திட்டமிட்டுள்ளன. ஆகவே, செழுமையான... பசுமையான பூமியின் ஆதிபத்தியத்தைக் கைப்பற்ற முற்படுகின்றன அவை. பூமி மட்டுமே அவற்றின் ஒரே புகலிடம். தங்களை நிலைநிறுத்திக் கொள்ள… அதைத் தவிர வேறு வழி எதுவும் இல்லை என்று அவை நம்பின. எல்லாவற்றுக்கும் மேலாக, பூமியிலுள்ள ஜனக்கூட்டம், அவற்றை விட அறிவிலோ... ஆற்றலிலோ மிகவும் மட்டமானவை என்றும் அவை நினைத்திருக்கலாம்!

    பூமியில் உள்ள மற்ற வானியல் ஆராய்ச்சியாளர்களும் அந்தக் காட்சியைக் கண்டனர். ஓர் இரவில் மட்டும் அல்ல; தொடர்ந்து பத்து இரவுகள் இவ்வாறு செவ்வாயிலிருந்து வெடித்துத் தெறித்த ஒளிப்பிழம்புகளை அவர்கள் தொலைநோக்கிக் கண்ணாடி மூலம் கண்டனர். ‘பத்து நாட்களுக்குப் பிறகு செவ்வாயின் மேற்பரப்பில் ஏன் ஒளிப் பிழம்புகள் மீண்டும் தென்படவில்லை?’ பூமியிலுள்ள எவராலும் அதை விளக்க முடியவில்லை.

    அப்போது செவ்வாய்வாசிகள் நமக்கு நேராக எய்துவிட்ட மிஸைல்கள், லட்சக் கணக்கான மைல்களைத் தாண்டி... பூமியை நோக்கி விரைந்தன. அவை கொண்டு வரும் மரணமும் அழிவும் நம் தலைக்கு மேல் தொங்கும்போதும் மனிதர்கள் தங்கள் பாட்டுக்குத் தங்களது அன்றாடக் கடமைகளில் மூழ்கி இருந்தனர். அமைதியாகவும், பாதுகாப்பாகவும் அவர்கள் வாழ்ந்தனர். அவர்கள் வேறு எதைக் குறித்தும் யோசிக்கவில்லை. ஆகாயப் பரப்பில் பளபளக்கும் ஒரு புள்ளியாக… அவ்வப்போது அவர்களது பார்வையில் பட்டது செவ்வாய்!

    2

    மறு நாள் இரவில் ஆகாயத்தில் அற்புதமான காட்சியொன்று தென்பட்டது. மத்தாப்பு கொளுத்தியது போல் நெருப்புக் கொழுந்து ஒன்று பூமியில் வந்து விழுந்தது! ஆகாயத்தில் தீ ஜூவாலை கெட்டியான ஒரு கோடு போல் தெளிவடைந்தது. சீறலுடன் பயணம் செய்த அதன் பின்புறத்தில், பச்சை வண்ணக் கோடு ஒன்றும் தட்டுப்பட்டது. அதைப் பார்த்த எல்லாரும், அதை ஏதோ ஓர் எரிமலையின் குழம்பு என்றே நினைத்தனர்… அல்லது மற்றொரு விண்கல் பூமியில்

    Enjoying the preview?
    Page 1 of 1