Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Oru Pattamilagaiyum Konjam Uppum
Oru Pattamilagaiyum Konjam Uppum
Oru Pattamilagaiyum Konjam Uppum
Ebook113 pages9 minutes

Oru Pattamilagaiyum Konjam Uppum

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

தன் எழுத்தாக்கம் எப்போதும் தனித்துவம் அமைய வேண்டும், வாசகர்களுக்கு புத்துணர்வளிக்க வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு, இலக்கிய உலகில் பயணித்து வருகிறார்.

வாழ்வியலை வார்த்தைகளாக வார்த்திருக்கிறார்.

கண் கண்ட கவின் காட்சிகளை கவித்துவமாக்கியிருக்கிறார்.

எண்ணங்களை எழில் எழுத்தாக்கியிருக்கிறார்

அழகியலை அர்த்தமாக்கியிருக்கிறார்.

கேள்விகளைக் கேட்கிறார்…

தாய்ப் பாசம் வணங்குகிறார்…

மகள் பாசம் வளர்க்கிறார்...

உண்மைநிலை தேடுகிறார்…

நிதர்சன நிகழ்வுகளோடு நாட்களைக் கடத்த முயல்கிறார்…

நண்பரின் காரமும் உவர்ப்புமான தலைப்பில் அமைந்த இப்புத்தகம், அறுசுவைக்கும் அப்பாற்பட்ட ஒரு தனித்துவ ருசியைத் தரும்

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580117802146
Oru Pattamilagaiyum Konjam Uppum

Related to Oru Pattamilagaiyum Konjam Uppum

Related ebooks

Reviews for Oru Pattamilagaiyum Konjam Uppum

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Oru Pattamilagaiyum Konjam Uppum - Meera Selvakumar

    http://www.pustaka.co.in

    ஒரு பட்டமிளகாயும் கொஞ்சம் உப்பும்

    Oru Pattamilagaiyum Konjam Uppum

    Author:

    மீரா செல்வகுமார்

    Meera Selvakumar

    For more books
    http://www.pustaka.co.in/home/author/meera-selvakumar

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    ஒரு பட்டமிளகாயும் கொஞ்சம் உப்பும்

    கவிஞனைக் கண்டுகொண்டேன்!

    ஒரு பெரும் இயக்கம் நடத்தும்போது, அரியவர் சிலரின் அறிமுகம் கிடைக்கும். அதுவே, அந்தப் பெரிய இயக்கத்தின் ஆகப்பெரிய பலனாகவும் அமைந்துவிடும். இது அறிவொளி இயக்கத்திலும் ஜேக்டீ, ஜாக்சாட்டோ போலும் அரசு-ஊழியர் ஆசிரியர் இயக்கப் போராட்டங்களின் போதும் நடந்ததை நடத்தியவர் மட்டுமே அறிவோம். தொடர் பலனை ஊரறியும்!

    அறிவொளி இயக்கத்தில் நான் கண்ட அற்புதப் படைப்பாளி ஆர்.நீலா! சிறுகதை,கவிதை,கட்டுரை, களப்பணிகள் என்று இன்று தமுஎகசவின் மாநிலத் துணைத்தலைவராக உயர்ந்து நிற்கிறார் –படைப்பு, பணிகளால்!  இதை அவரது கவிதைத் தொகுப்புக்கான எனது முன்னுரையும் கூறும்!

    அறிவொளி நாடகங்களில் அசத்திய நான்குபேரை, அறிவொளிக்குப்பின் என் வீட்டுக்கழைத்து, பூபாளம் கலைக்குழுஎன்று பெயர்சூட்டி, இப்போது அக்கலைக்குழு அமெரிக்கா வரை சென்று இங்கும் சாதனை தொடர்கிறது! சுய கலை-இலக்கியத்திறம் மிக்கவர்கள் என்பதாலேயே அவர்கள் உயர்ந்து வளர்ந்து நிற்கிறார்களே யன்றி என் வழிகாட்டுதலால் அல்ல! இதை நானும் சொல்கிறேன், அவர்களும் சொல்கிறார்கள் என்பதே மகிழ்ச்சி!

    இன்னும் நிறையச் சொல்லலாம் – விரிவுக்கு அஞ்சி விட்டுவிடுகிறேன்!

    இப்படி எனது 40ஆண்டுக் கலை-இலக்கியப் பயணத்தில் நான் கண்ட ஒருசில முத்துக்களில் அண்மைக்கால முத்து இந்த மீரா.செல்வக்குமார்!

    கொஞ்சம் பின்னால் போவோமா? வாருங்கள் என்னோடு-

    புதுக்கோட்டைக் கணினித் தமிழ்ச்சங்கம் நடத்திய "தமிழ் வலைப்பதிவர் திருவிழா-2015 நிகழ்வினால் எங்களுக்குக் கிடைத்த நுட்பமான கவிஞர் மீரா. செல்வக்குமார். கலை-இலக்கியப் பெருமன்றத்தின் நகரத் தலைவராக ஏற்கெனவே செயல்பட்டு வந்திருந்தாலும், இணையத்தின் வழியாக யார் இந்த மீரா.செல்வக்குமார்?" என உலகமே திரும்பிப் பார்த்து, தேடப்பட்ட கவிஞராக மாறிப்போனார் இந்த மெல்லுணர்வு மிக்க கவிஞர்!

    அந்த நேரத்தில்

    Enjoying the preview?
    Page 1 of 1