Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kolai Nila
Kolai Nila
Kolai Nila
Ebook92 pages36 minutes

Kolai Nila

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பெண்களின் பல்வேறு நிலையினைப் பல்வேறு நாவல்களில் படம்பிடித்து காட்டியுள்ளார். பிரதானமாய் சேலம் மாவட்ட கிராமங்களில் நடைபெறும் "பெண் சிசு கொலையினைப்" பின்னணியாய் கொண்டு பல்வேறு நாவல்கள் சிறுகதைகள் கட்டுரைகள் புனைந்துள்ளார்.

இவர் கணவர் மின்வாாரியத்தில் பொறியாளராகப் பணிபுரிந்த காரணத்தால் இவருக்கு அந்த அனுபவங்களை நேரில் காணும் வாய்ப்பு கிடைத்தது, மனம் நெருட காலவோட்டத்தில் அதை நாவலாக்கினார்.

இவரது பல நாவல்கள் கல்லூரிகளில் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. பல மாணவ மாணவிகள் இவரின் நாவல்களை "எம்ஃபில்" படிப்பில் ஆய்வு செய்கின்றனர்.

Languageதமிழ்
Release dateMay 26, 2017
ISBN6580114202198
Kolai Nila

Read more from Hamsa Dhanagopal

Related to Kolai Nila

Related ebooks

Reviews for Kolai Nila

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kolai Nila - Hamsa Dhanagopal

    http://www.pustaka.co.in

    கொலை நிலா

    Kolai Nila

    Author:

    ஹம்சா தனகோபால்

    Hamsa Dhanagopal

    For more books
    http://www.pustaka.co.in/home/author/hamsa-dhanagopal

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    1

    கல்லூரி வளாகம், கல்லூரியிலிருந்து பனிரெண்டு படிகள் இறங்கினால்தான் புல்தரை சந்திப்பு நிகழும். சிநேக லதா, தன் தோழிகளுடன் அந்தப் படிகளில் இறங்கிக் கொண்டிருந்தாள்.

    நட்சத்திரக் கூட்டங்களுக்கிடையே முழு நிலா பவனி போல அவள் வருகை நிகழ, புல் தரையில் ஆங்காங்கே சிதறிக் கிடக்கும் மாணவர்களிடையே வேகம் விதைத்தது. சிகரெட் புகைத்தவர்களும் கலர் கனவுகளில் மூழ்கிக் கிடந்தோர்களும், சினிமா நடிகைகளின் கவர்ச்சியில் அங்கலாய்த்தவர்களும் ஒட்டு மொத்தமாய் அவளை வரவேற்பது போலட் பார்த்தார்கள்.

    சிநேகலதா லேசான கிளிப் பச்சை நிறத்தில் மிடி போன்ற உடை அணிந்து வலது தோளின் மீது நீண்ட கருப்பு ஸல்வாருடன் கிளிக்கூண்டு ஜிமிக்குகள் ஊசலாட, மார்பில் நீண்ட மெல்லிய டுவிஸ்ட் சங்கிலி அசைந்து கவர்ச்சி சொல்ல… அவள் விழிகளின் மின்னலில் மனக்கட்டுப்பாடு கொண்டவன் கூட ஆடிப்போய் விடுவான் என்பதில் ஐயமில்லை.

    ஆண்டுகள் பாகுபாடில்லாமல் சிதறி, தத்தம் மன மொத்தவர்களுடன் நின்றிருந்த மாணவ மாணவிகள், விழிகளில் வியப்பு ஏந்தி அந்த முழு நிலாவை ஆரத்தி கரைத்து வரவேற்காத குறையாய்... அண்ணாந்து பார்த்துப் பெருமூச்சுக்கள் துரத்த...

    அவளுடைய பல தோழர்கள் கையசைத்து ஹலோ வைக் காற்றில் தூது விட்டார்கள் நேசத்துடன். சிலர் சிக ரெட்டை அவசரமாய்க் காலுக்கடியில் போட்டு மிதித்துப் புன்னகைக்க முயன்றார்கள்.

    பெரிய போலீஸ் அதிகாரியின் மகன் அரவிந்த்- கல்லூரியின் ஏராளமான மாணவர்களுக்குத் தலைவனாய் மற்றவர்களால் சுலபமாய் அங்கீகரிக்கப்பட்டவன்- அவள் அருகே ஷூக்கள் சப்திக்கப் போனான். கல்லடி பட்ட காக்கைகளாய் நட்சத்திரக் கூட்டம் தலைவியை விட்டுத் தள்ளி நிற்கப் போனது. மற்ற மாணவர்கள் கூர்மையுடன்- ஏக்கங்களுடன் அந்தக் காட்சியில் கவனம் செலுத்த...

    ஹாய் சிநேகா, குட் ஈவினிங்.

    குட் ஈவினிங். என்னப்பா பக்கத்துல வந்து நின்னு பேசற? என்ன விஷயம்? குற்றால அருவியின் குளிர்ச் சிரிப்பு. இந்த இவளின் சிரிப்பிற்காகவே சிநேகலதாவின் அடிமையாய் ஆயுள் பரியந்தம் சாஸனம் எழுதிக் கையொப்பமிடலாம்போல இருந்தது.

    சிநேகா , ப்ளீஸ்! முடியாதுன்னு நீ சொல்லிரக்கூடாது.

    வாட் இஸ் தட்? நீ ஏதாச்சும் கன்னாபின்னான்னு கேட்டு வைப்பே நான் உனக்கு சத்தியப்பிரமாணம் செய்து குடுக்க முடியுமா?"

    மெல்லப் பேசு சிநேகா என் ப்ரண்ட்ஸ் பார்த்துட்டிருக்காங்க. அவங்க காதுல விழுந்துரப் போவுது. நோ... நோ... அப்படி எந்தத் தப்பான விஷயமும் நான் கேட்டுர மாட்டேன். சொல்லு சத்தியமா செய்வியா?"

    ஒ… நோ சஸ்பென்ஸ்யா. சஸ்பென்ஸ் தாங்காது. நான் கதை படிக்கிறப்பகூட முடிவு வாசிச்சிட்டுதான் ஆரம்பம் படிப்பேன். சொல்லு அரவிந்த்.

    எனக்கு நாளைக்கு பர்த் டே.

    குட் நியூஸ், மெனி ஹேப்பி ரிடன்ஸ் ஆஃப் த டே. நான் போகலாமா? வழி விடு அரவிந்த்.

    வந்து சிநேகா, இந்த கிரீட்டிங்க்ஸை இங்கே சொல்லாதே. நாளைக்குக் கன்னிமாரால பார்ட்டி இருக்கு. நீ அங்கே வந்து சொல்லணும்.

    அவள் தோள் குலுக்கி கை விரித்தாள். அப்போது அவள் இளமைகள் குலுங்கின. உடன், பல இதயங்களும் குலுங்கிச் சரிந்தன.

    ஸாரியா, என்னால் முடியாது. படிக்கணும்.

    ப்ளீஸ் சிநேகா. உன்னை எப்படியும் பார்ட்டிக்கு வரவழைச்சுக் காட்டறேன்னு சபதம் செஞ்சிருக்கேன் சிநேகா. நீ வரலன்னா என்னை எந்தப் பயலும் மதிக்கவே மாட்டானுங்க.

    என்னைக் கேட்டா சபதம் செஞ்சே?

    ஐயோ வேணாமே. தனியா எப்படி வேணாப் பேசு. இல்ல கன்னத்திலே வேணா அறைஞ்சிரு. ஆனா எல்லாப் பயல்களும் இப்ப வாயில் ஈ புகுந்து போறாப்பல பார்த்திட்டிருக்காணுங்க பாரு. ப்ளீஸ், வரேன்னு சொல்லு அப்பதான் இந்த உயிர் உடல்ல ஒட்டியிருக்கும்.

    கையிலிருந்த ஒற்றைப் புத்தகத்தை மார்பில் அணைத்த படி நகம் கடித்துத் தலை சாய்த்து யோசித்தாள் சிநேகலதா.

    சொல்லு சிநேகா, வரேன்னு சொல்லு. நான் வேனாபோறப்ப வரப்ப உன்னை என் கார்ல அழைச்சுப் போறேன்.

    உனக்கு அந்தக் கஷ்டம் வேணாம்பா. நான் என் ஹோண்டால வந்துடறேன், எத்தனை மணிக்கு பார்ட்டி?

    சரியா அஞ்சு மணி மறந்துராதே. என் மானம் மரியாதை எல்லாமே உன் வருகையில்தான் அடங்கி இருக்கு.

    ஓ.கே. பை தென் ஸி யூ.

    கொலுசுகள் சின்னக் குரலில் செல்லம் கொஞ்ச, பல இதயங்களை

    Enjoying the preview?
    Page 1 of 1