Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Uyir Thotta Urave!
Uyir Thotta Urave!
Uyir Thotta Urave!
Ebook148 pages1 hour

Uyir Thotta Urave!

Rating: 2 out of 5 stars

2/5

()

Read preview

About this ebook

Mrs. Uma Balakumar started writing in 2005 and she has written around 42 novels so far. Most of her novels are nice romantic novels. She has also written 5 spiritual novels. Her first novel is “Theendi Chendra Thendral” which got published in 2005 in Kanmani Magazine. All her novels are available as printed books in Arun publications. She has also written around 15 short stories. She has got an award from Thanga Mangai and another award from Kumutham Snehithi for her short stories.

She born and brought up in Kumbakonam, Tamilnadu. She loves long drives and to hear melodious music. Her husband has encouraged her throughout her journey as a author. She strongly believes that “God is the ultimate power” and has written 5 spiritual books too including a travelogue on “Sadhuragiri”.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580118502744
Uyir Thotta Urave!

Read more from Uma Balakumar

Related to Uyir Thotta Urave!

Related ebooks

Reviews for Uyir Thotta Urave!

Rating: 2 out of 5 stars
2/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Uyir Thotta Urave! - Uma Balakumar

    http://www.pustaka.co.in

    உயிர் தொட்ட உறவே!

    Uyir Thotta Urave!

    Author:

    உமா பாலகுமார்

    Uma Balakumar

    For more books

    http://www.pustaka.co.in/home/author/uma-balakumar

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    1

    விடியலின் அடர்த்தியான நிசப்தத்தை, தாள லயத்துடன் பூபாளமிசைத்து, இனிதாய்க் கலைத்துக் கொண்டிருந்தது, முகம் காட்டாப் பறவை ஒன்று!

    தோட்டத்துப் புற்களின் கூரான நாசியில், பனித்துளிகள் வைர மூக்குத்திகளாய் மின்னிக் கொண்டிருந்தன.

    விடியலின் அணைப்பில் சுகமாக உறங்கிக் கொண்டிருந்த சைதன்யாவை, அவளுடைய அப்பா தயாகரின் குரல் உசுப்பி எழுப்பியது.

    தன்யா! கெட் அப்! வாக்கிங் போகறதுக்கு ரெடியாகலையா?

    அவருடைய கம்பீரமான மிலிட்டரி குரல் அவளைக் கனவுகளிலிருந்து கலைத்தெழச் செய்ய, ம்… அஞ்சு நிமிஷத்துல ரெடியாயிடறேன்ப்பா! என்றாள் சோம்பலுடன் பிரிந்த விழிகளுடன்

    பிறகு, அவசரமாக அடுத்த அறையில் உறங்கிக் கொண்டிருந்த தம்பி சந்தீப்பை எழுப்பிவிட்டுத் தயாராகி ஹாலுக்குச் சென்ற போது, சுறுசுறுப்புடன் காத்திருந்தார் தயாகர்.

    அவர், கார்கில் போரில் பங்கெடுத்து முடிந்தவுடனே தன் சர்வீஸை முடித்துக் கொண்டு சென்னைக்கு வந்து பிரபலமான செக்யூரிட்டி சர்வீஸ் ஒன்றை நடத்திக் கொண்டிருக்கும், முன்னாள் மிலிட்டரி ஆபீஸர்!

    அவர், எதிலுமே மிகவும் ஒழுங்கையும் கட்டுப்பாட்டையும் எதிர்பார்ப்பவர்!

    இந்த ஏழு வருடங்களாகக் காலையில் எழுந்தவுடனே, தன் மகளையும், மகனையும் உடனழைத்துக் கொண்டு வாக்கிங் சென்று வருவதை வழக்கமாகக் கொண்டிருப்பவர்.

    மூவரும் வேகமாக நடந்தபோது, விடிகாலைக் காற்றின் வருடல் மனதிற்கும் உடலுக்கும் பெரும் இதமளிக்க, அந்த பெசன்ட் நகர் சாலையில் நடப்பதே சுகானுபவமாய்!

    சைதன்யா, எம்.சி.ஏ. முடித்திருக்கிறாள்.

    சிறிது காலம் வேலை பார்த்த பிறகே திருமணம் என்பதில் உறுதியாக இருப்பவள். சந்தீப், என்ஜினியரிங் இரண்டாவது வருடம்!

    மூவரும் நன்றாக நடந்துவிட்டு வீட்டிற்குள் வந்தபோது, சிடியில் செளந்தர்யலஹரி கசிந்து கொண்டிருக்க,ஊதுபத்தியின் நறுமணம் வீட்டையே நிறைத்திருந்தது.

    அவர்களுடைய அம்மா தேவகி, பூஜை செய்து கொண்டிருந்தார்.

    மூவரும் குளித்து முடித்துத் தயாராகி டிபன் சாப்பிடும் போது தான், வாயிலில் அழைப்புமணி ஒலித்தது.

    யாரென்று பார்க்கச் சென்ற தேவகி, திரும்பி வரும் போது கையில் அழகிய பெரிய ட்ரேயுடன் வந்தார். அதில் அழகாக இனிப்பும் பழங்களும் அடுக்கப்பட்டிருந்தன.

    யாரோ பக்கத்து வீட்டை வாங்கி இன்னிக்குத்தான் புதுசா குடித்தனம் வந்திருக்காங்களாம். ஸ்வீட்ஸ், பழமெல்லாம் டிரைவர்கிட்ட கொடுத்தனுப்பியிருக்காங்க என்றார் புன்னகையுடன்.

    ஏன்... அவங்களே நேரில வந்து குடுக்கமாட்டாங்களாமா? இதென்ன மேனர்ஸே தெரியாம..?

    மெதுவாய் முணுமுணுத்த சந்திப்பை, அப்பாவின் பார்வை அடக்கியது.

    இரண்டு மாதங்களாய் பூட்டப்பட்டிருந்த வீடு, காலையில் வாக்கிங் போய் விட்டு வரும்போது அலங்கரிக்கப் பட்டிருந்ததும் நினைவு வந்தது.

    அன்று சைதன்யாவிற்குக் கம்ப்யூட்டர் சென்டரில் ஒரு தேர்வு!

    எம்.சி.ஏ. முடித்திருந்தாலும், டெஸ்டிங் துறையில் ஆர்வமிருந்தால் மூன்று மாதங்கள் அதற்காகத் தனியாக ஒரு கோர்ஸூம் பயின்றதில், இன்று இறுதிப் பரீட்சை!

    தேர்வை நல்ல முறையில் செய்த மகிழ்ச்சியுடன், அன்று மாலை அவளும் சந்தீப்பும் ஷட்டில் காக் விளையாடிக் கொண்டிருந்தபோது, யாரோ தன்னை உற்றுப் பார்ப்பதுபோல் ஒரு பிரமை எழுந்தது.

    திரும்பினால், பக்கத்து வீட்டு மாடியில் திரைச்சீலை அசைந்தாற் போல் ஒரு பிரமை!

    யோசனையுடன் தோளைக் குலுக்கிவிட்டு விளை பாட்டில் கவனத்தைச் செலுத்தியபோதும், ஏதோ ஒன்று மனதில் உறுத்திக் கொண்டே இருந்தது.

    அந்த நிமிடம் பக்கத்து வீட்டு மாடி ஜன்னலின் வழியே, அவர்கள் இருவரும் விளையாடுவதை ஒரு வித சுவாரஸ்யத்துடன் கவனித்து விட்டு விலகிய வேதவியாசனின் விழிகளில், பழைய நினைவுகள்!

    ஆனால், அவை தந்த வலிகள் முகத்தில் வேதனைக் கோடுகளை வரவழைக்க, தலையைக் குலுக்கியபடிச் சென்று அலுவலகம் செல்லத் தயாரானான் அவன்.

    மீண்டும் மீண்டும்… தானும் தன் தம்பியும் இதுபோல் பாசத்துடன் இணைந்திருந்த நிழலான ஞாபகங்கள் கனவாய் வலம் வந்தன.

    அன்று அலுவலகம் சென்று பிராஜெக்ட் விஷயமான முடிவுகளை எடுக்கும்பொழுதும் மலரும் நினைவுகள் மனதில் முட்களாய் நெருட ஆரம்பித்தன.

    அந்த நிமிடம், வீட்டில் வைஜெயந்தியும் பழைய நினைவுகளை மனதில் வருடியபடிக் கண்ணீருடன் அமர்ந்திருந்தார்.

    வேதவியாசன் அவர்களுடன் கோபித்துக் கொண்டு, வீட்டை விட்டு வெளியேறி மூன்று வருடங்களானதைப் பெருமூச்சுடன் நினைவு கூர்ந்தது மனது.

    அளவிலாத பாசத்தைக் கொட்டி அவனை வளர்த்திருந்தாலும், அதை அவன் புரிந்து கொள்ளவில்லையே என்ற வேதனை அவரை உருக்குலைத்திருந்தது.

    சிறிய மகன் விவேக்கைக் கூட இப்போதெல்லாம் அவர் சரிவரக் கவனிப்பதில்லை.

    அவனும் தன் நண்பர்கள், கல்லூரி என்று அதிலேயே ஒன்றி விட்டிருந்தான்.

    யாரோ வருகின்ற சப்தம் கேட்டு கண்களைத் துடைத்த படி நிமிர்ந்தபோது, அவருடைய கணவர் வெற்றிச் செல்வன், போலீஸ் உடையுடன் வந்து கொண்டிருப்பது தெரிந்தது.

    தன் மனைவியின் முகத்தைக் கண்டவுடன், என்ன... பையனோட ஞாபகமா…? ஒரு நாள், நம்மளை எல்லாம் புரிஞ்சிக்கிட்டு அவன் திரும்பி வருவான்… முதல்லே அழறதை நிறுத்து ஜெயந்தி! வா... வந்து எனக்கு சாப்பாடு போடு… விவேக்கை கவனி! கொஞ்ச நாளாவே கவனிக்கிறேன்… இவனும் நம்மை விட்டு விலகிப் போற மாதிரி. ஒரு ஃபீலிங்! இல்லாததை நினைச்சு இருக்கறதைக் கோட்டை விட்டுடாதே! கூறியபடி மனைவியை ஆறுதலாக அழைத்துச் சென்றார் அவர்.

    ***

    2

    ‘வெற்றிச் செல்வன் ஐ.பி.எஸ்.’ வருகிறாரென்றால், அவருடைய டிபார்ட்மெண்டில் எல்லாருமே பயப்படுகிற அளவுக்கு, நேர்மையான அதே சமயம் கண்டிப்பான ஒரு போலீஸ் அதிகாரி, அவர்!

    ஆனால், தன் மூத்த மகனிடம் மட்டும் தன்னுடைய கண்டிப்பு, செல்வாக்கு, அன்பு எதுவுமே செல்லுபடியாகாமல் போனதை, ஒரு தோல்வியுடன் உணர்ந்தவரும் அவர்தான்!

    ஒரு பெருமூச்சுடன் மெளனமாக சாப்பிட்டுவிட்டு அவர் கிளம்பியவுடன், ஒய்வெடுத்த வைஜெயந்திக்குள் வருடலாய் மகனின் நினைவுகள்!

    சிறு குழந்தையாய் அவனைத் தன் கையில் தாய்மை உணர்வுடன் ஏந்தியது… அவன் தவழ்ந்தது… பள்ளிக்குச் சென்றது… அவன் அந்த வீட்டில் தன் பாதம் பதித்த ஆறாவது வருடம், அத்திப்பூவாய் தன் மணிவயிற்றில் மலர்ந்த விவேக்கின் நினைவு!

    பழைய நினைவுகள் அவரை பலவீனப்படுத்த, தன்னையே சமாதானப்படுத்திக் கொண்டவரின் மனதில், வியாஸ் வீட்டை விட்டு வெளியேறிய நாளன்று நடந்த நிகழ்வுகளின் அணி வகுப்பு!

    அன்று ஊரிலிருந்து வைஜெயந்தியின் அண்ணன் புருஷோத்தமன் வந்திருந்தார்.

    மாலையில் வீடு திரும்பிய வியாஸும் அவரும் அரசியல் பேசிக் கொண்டிருக்க, மெதுவாக ஆரம்பித்தார் வைஜெயந்தி.

    அண்ணா! நம்ம வியாஸுக்கு கல்யாணத்துக்கு பாக்க ஆரம்பிக்கலாம்னு இருக்கோம். அவனுக்கும் இருபத்து நாலு வயசாயிடுச்சி… இந்த வயசிலயே நல்ல போஸ்டுல இருக்கான்… அவங்கப்பாவை விட நிறைய சம்பாதிக்கிறான்!

    அவர் முடித்தவுடன், அப்புறம் என்னம்மா… மாப்பிள்ளைக்கு கல்யாணம் பண்ணிட வேண்டியதுதானே? என்றார் புருஷோத்தமனும் உற்சாகமாய்!

    அதுதான்னா உங்ககிட்ட கேக்கிறேன். நம்ம வசுந்தராவையே மருமகளாக்கிக்கலாம்னு எனக்குத் தோணுது. நீங்க என்ன சொல்றீங்க? அவ உங்க பொண்ணாச்சே... உங்ககிட்டேதானே கேக்கணும் புன்னகையுடன் முடித்தார் அவர்.

    சட்டென்று எழுந்தான் வியாஸ்.

    ஏம்மா. எனக்குக் கல்யாணம் வேணும்னு நான் உங்ககிட்டே கேட்டேனா? இப்ப எதுக்கு இதெல்லாம்? எனும் போதே இடைமறித்தது, புருஷோத்தமனின் குரல்.

    "வியாஸ்… என் பொண்ணைக்

    Enjoying the preview?
    Page 1 of 1