Uyiril Kalantha Uravugul
By GA Prabha
()
About this ebook
Currently she lives in Gopichetty Palayam, Tamil Nadu.
Read more from Ga Prabha
En Idhayam Enbathu Neeyaga Rating: 0 out of 5 stars0 ratingsUravai Naadum Paravai Rating: 0 out of 5 stars0 ratingsAasai Veedu Rating: 5 out of 5 stars5/5Manasukkul Pozhiyum Mazhai Rating: 4 out of 5 stars4/5Manathin Arathanai Rating: 5 out of 5 stars5/5Kandan Pugazh Padum Kandar Alangaram Rating: 0 out of 5 stars0 ratingsPeiyena Peiyum Mazhai Rating: 0 out of 5 stars0 ratings
Related to Uyiril Kalantha Uravugul
Related ebooks
Venpura Nesam Rating: 0 out of 5 stars0 ratingsMeeravin Kaadhal Rating: 0 out of 5 stars0 ratingsImsaigal Rating: 0 out of 5 stars0 ratingsKanavu Devathai Rating: 1 out of 5 stars1/5Nesam Marakkavillai Nenjam Rating: 5 out of 5 stars5/5Vannathu Poochiyai... Rating: 0 out of 5 stars0 ratingsSol Sol Ennuyire Rating: 0 out of 5 stars0 ratingsMaya Poigai Rating: 0 out of 5 stars0 ratingsParavasam Rating: 0 out of 5 stars0 ratingsSoorya Dharisanam Rating: 0 out of 5 stars0 ratingsVennilavu Deepangal Rating: 0 out of 5 stars0 ratingsVaigairai Deepangal Rating: 5 out of 5 stars5/5Nilavodu Vaa Thendraley Rating: 0 out of 5 stars0 ratingsNeelanira Kanavugal Rating: 0 out of 5 stars0 ratingsPavala Malli Rating: 0 out of 5 stars0 ratingsNishabdha Sangeetham Rating: 5 out of 5 stars5/5Kaadhal Vaibogame Rating: 2 out of 5 stars2/5Kuppaikku 'Good Bye'! Rating: 0 out of 5 stars0 ratingsArunaa Nandhiniyin Short Stories Rating: 0 out of 5 stars0 ratingsAayiram Malaril Oru Malar Neeye Rating: 0 out of 5 stars0 ratingsPathinooravathu Avatharam Rating: 0 out of 5 stars0 ratingsAgayam Ullavarai Rating: 0 out of 5 stars0 ratingsVaana Prestham Rating: 0 out of 5 stars0 ratingsMinnal Devathaigal Rating: 0 out of 5 stars0 ratingsManathin Nizhalgal Rating: 0 out of 5 stars0 ratingsIndha Ithazhil Arambamagirathu Rating: 0 out of 5 stars0 ratingsKrishna Gaanam Rating: 0 out of 5 stars0 ratingsNaan Unai Neenga Maatten Rating: 5 out of 5 stars5/5Saatharana Manithargal Rating: 0 out of 5 stars0 ratingsKankal Solkindra Kavithai Rating: 5 out of 5 stars5/5
Reviews for Uyiril Kalantha Uravugul
0 ratings0 reviews
Book preview
Uyiril Kalantha Uravugul - GA Prabha
http://www.pustaka.co.in
உயிரில் கலந்த உறவுகள்
Uyiril Kalantha Uravugal
Author:
ஜி.ஏ.பிரபா
G.A.Prabha
For more books
http://www.pustaka.co.in/home/author/ga-prabha
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
1
எத்தனை படிகள் என்று மலைக்காதீர்கள்.
எல்லா படிகளும் கடக்கக் கூடியவையே.
காற்றில் இன்னும் குளிர் இருந்தது.
சின்னச் சின்ன வைரத்துணுக்குளாய் ஒரு நாள் வாழ்ந்தாலும் ஒப்புமை இல்லாத அழகுடன், உற்சாகத்துடன் வாழ்வோம் என்று அறைகூவல் விடுத்தபடி பனித்துளிகள் இலை நுனியில் தேங்கி நின்றது.
தெரு விளக்கின் பளீர் ஜொலிப்பில் அதிகாலை பனித்துளியை மிக்க கவனத்துடன் தன் கைகளில் ஏந்தினாள் சங்கமித்ரா.
பனித்துளியை பாருங்கள். அதன் ஆயுள் சூரியன் வரும் வரைதான். அதற்காக உற்சாகத்துடன் இந்த உலகுக்கே குளுமையையும் சிலிர்ப்பையும் பரவசத்தையும் தருகிறதே. அதைப்போல வாழு… ஒவ்வொரு கணத்தையும்
தமிழாசிரியர் குரல் காதுகளில் மோதியது.
தெரு விழித்தது. எதிரே உள்ள பெருமாள் கோவிலின் மணி அடித்தது. வீட்டுக்கு அருகிலேயே ராமர் கோவில், சிறிது தூரம் தள்ளி மாரியம்மன் கோவில், தெருக்கோடியில் பிள்ளையார் கோவில் என்று சுற்றிச் சுற்றி விபூதி மணம் கவிழ்ந்தது.
ஆன்மீகம்தான் இதயத்தை ஒளிர வைக்கும்.
எங்கோ படித்தது நினைவில் வந்தது மித்ராவுக்கு. உண்மையில் இது மாதிரி கோவில்களுக்கு வரும் போது, அங்கு வருபவர்களிடம் அறிமுகம் ஆவதன் மூலம் நட்பு வட்டம் பெரிதாகிறது. பேசும் போது, நல்ல விஷயங்களில் மனது பதிந்து விசாலமாகிறது. இதுதான் சத்சங்கம்.
சங்கமித்ரா நிதானமாக நடந்தாள்.
"பல்லாண்டு, பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
பலகோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா!
ஊன்
செவ்வடி செவ்வி திருக்காப்பு"
பெருமாள் கோவிலில் ராயரின் குரல் ஒலித்தது. ஒவ்வொரு மார்கழி நாளிலும், பஜனை முடிந்து பல்லாண்டு பாடுவார் ராயர்.
கடவுள்கிட்ட நமக்கு வேண்டிய மங்களங்களை வேண்டி பெறணும். குறைவில்லாமல் இருப்பதே நமக்கு மங்களம்னு பல்லாண்டு பாடறார். அதாம்மா சிறப்பு. இறைவன் சர்வ மங்களக்காரன்
ராயர் மெய்மறந்து பேசுவார்.
பக்தின்னு இல்லாம, இதுல இருக்கிற தமிழ், உவமை, ஓசை நயம் இதுக்காகவே படிக்கணும்
என்பார். தினமும் மாலை தன் வீட்டில் நாலாயிர திவ்யப் பிரபந்தமும், லலிதா சமஸ்ரநாமமும் சொல்லித் தருகிறார். விடுமுறை நாளில் சங்கமித்ராவும், தங்கை மினுவும் போவார்கள்.
வீட்டை விட, வெளி இடம் உற்சாகம் நிறைந்ததாக இருக்கிறது. அது அம்மாவைப் போல் புலம்பியதில்லை.
சங்கமித்ரா கோவிலுக்குள் நுழைந்தாள். பிரகாரம் சுற்றி ராமர் சந்நிதிக்கு வந்து நின்றாள். பஜனை முடியும் தருணம்.
மித்ரா, ஏதானும் பாடும்மா
–ராயர்.
முடிஞ்சிருச்சே!
–தயங்கினாள்.
ஏன் பிரசாதம் வேணுமதா?
– சங்கரி பாட்டி.
என்ன பாட்டி
சிணுங்கினாள் மித்ரா. என்ன பாடட்டும்?
ஆண்டாள் திருவாய்மொழி ஏதானும் பாடு
மித்ரா யோசித்து ஆரம்பித்தாள்.
"கூடாரை வெல்லும் சீர்கோவிந்தா உந்தனைப்
பாடிப் பறை கொண்டு யாம் பெறும் சம்மானம்"
தமிழ் இனிமையில் ராகத்தின் குழைவில் மனம் மெய் மறந்தது.
முடித்த பிறகும் கூட்டம் பாட்டில் ஆழ்ந்து கிடந்தது.
இந்தா முழங்கை வரை நெய் வராது. உள்ளங்கையில் வாங்கு
சீனு ஸார் உள்ளங்கையில் சர்க்கரைப் பொங்கலைப் போட்டார்.
இதே அமிர்தம்
அப்படித்தான் மெச்சிக்கணும்
ராயர், பின்னாடியே தொன்னையில் வெண்பொங்கலுடன் வந்தார்.
குடுங்கோ மாமா, நான் தரேன்! இன்னைக்கு என்ன விசேஷம்? இத்தனை பிரசாதம்?
இன்னைக்கு கூடாரை வெள்ளீல்ல
ஓ! ஸாரி மாமா. தெர்லை
எப்படித் தெரியும். தினமும் கோவிலுக்கு வந்தா எல்லாம் தெரியும். நீதான் ஆடிக்கு ஒருநாள், அமாவாசைக்கு ஒரு நாள் வர்றவளாயிட்டுதே
ஸாரி மாமா… காலேஜ்
நெளிந்தாள் மித்ரா.
சாயந்திரம் வர்றதுக்கு என்ன?
காலேஜ் முடிச்சி, அப்படியே டியூஷன் எடுக்கப் போயிட்டு ராத்திரி வர எட்டாயிடறது
என்ன கிளாஸ் எடுக்கற இப்ப?
பத்து, பன்னிரெண்டு
எவ்வளவு தரான்?
மூவாயிரம்
போதாது
எனக்கும், மினுவுக்கும் படிப்பு செலவுக்குப் போதும்.
அண்ணா வர்றதே இல்லையா?
– சங்கரி பாட்டி.
முகம் கூம்பியது மித்ராவுக்கு. இல்ல பாட்டி
அண்ணா பையனுக்கு இன்னைக்கு முதல் பிறந்த நாளாம்
யார் பாட்டி சொன்னது?
உங்க அம்மாதான். நேத்து தெரு பூரா சாக்லேட் விநியோகம். அண்ணா வந்து கூப்பிட்டானா?
‘இல்ல பாட்டி. பெரிய மாமா வந்து சொன்னார்."
ம்… அவன் ஏணியை எட்டி உதைச்சிட்டு போறான். உங்கம்மா, அவன் பின்னாடியே ஓடறா. ரெண்டு பொண்க இருக்கறதனால இங்க இருக்கேன். இதுகளைக் தாட்டி விட்டுட்டா எம்புள்ளைகிட்ட போயிடுவேன்றா. ஏன் அம்மா இப்படி இருக்கா?
மவுனச் சிரிப்பு மட்டுமே தர முடிந்தது!
என்னவோ போ, பெருமாள் தான் கண்ணைத் திறக்கணும்
அவரே வைகுண்டத்துல தூங்கிண்டு இருக்கார்
தமிழாசிரியர் சிதம்பரம் மெல்ல மூச்சு வாங்க படி ஏறி உள்ளே வந்தார். தலையில் குல்லாய். ஊடலை சுற்றி கம்பளி. மூச்சு இறைத்தது.
வணக்கம் ஸார். நீங்களும் வந்துட்டீங்க?
வாக்கிங்
சிரித்தார் சிதம்பரம். ஒரு வேலை நிறுத்தம் பல நல்ல விஷயங்களை துவக்கி வச்சிருக்கு
என்ன விஷயம் ஸார்
நேத்து எங்க அபார்ட்மெண்ட்ல லிப்ட் வேலை செய்யலை. படி ஏறினப்பதான் தெரிஞ்சுது உடம்பு பெருத்துப் போச்சுன்னு. ஸோ நடையா இது நடையா
குளத்துல தண்ணீ குறைஞ்சிடும்
சிதம்பரம் சிரித்தார். அம்மாடி மித்ரா,காலேஜ் லீவா இன்னைக்கு?
ஆமா ஸார்
குட். உனக்கு திருப்புகழ் புஸ்தகம் எடுத்து வச்சிருக்கேன். வந்து வாங்கிக்க. திருப்பித் தந்துடணும்
கண்டிப்பா, சாயந்தரம் வரேங்க
மித்ரா, பிரசாதத்துடன் வெளியில் வந்தாள். மினுவுக்கு கோவில் பொங்கல் பிடிக்கும். வீட்டில் நல்ல டிபன் கிடையாது. பணம் எங்கிருக்கிறது என்று சிடுசிப்பாள்.
அம்மாவையும் சொல்லிப் பயனில்லை. அப்பா இல்லை. மினு பிறந்த பிறகு இறந்து விட்டார். சொந்தங்களும் உதவக் கூடிய வசதியில் இல்லை. ஒரு