Oomatham Pookkal
By Rajesh Kumar
()
About this ebook
Many of his detective novels feature the recurring characters Vivek and Rubella. He continues to publish at least five novels every month, in the pocket magazines Best Novel, Everest Novel, Great Novel, Crime Novel, and Dhigil Novel, besides short stories published in weekly magazines like Kumudam and Ananda Vikatan. His writing is widely popular in the Indian state of Tamil Nadu and in Sri Lanka.
Read more from Rajesh Kumar
Karuppu Udai Devathai! Rating: 5 out of 5 stars5/5Kuttralathil Oru Kutram Rating: 0 out of 5 stars0 ratingsPuthiya Abaayam Rating: 4 out of 5 stars4/5Mathangalil Aval Margazhi Rating: 5 out of 5 stars5/5Sorgam Rating: 5 out of 5 stars5/5Vivek Thotrathillai Rating: 5 out of 5 stars5/5Vivek, Vishnu, Oru Vidukadhai Rating: 4 out of 5 stars4/5Naan Naaneythaan Rating: 4 out of 5 stars4/5Theeratha Dhrogam Rating: 5 out of 5 stars5/5Manidhan Rating: 5 out of 5 stars5/5Mella Mella Oru Thigil Rating: 5 out of 5 stars5/5Uyir Urugum Satham Rating: 5 out of 5 stars5/5Sivappai Oru Pournami Rating: 4 out of 5 stars4/5Dinasari Moondru Kolaigal Rating: 4 out of 5 stars4/5Sorry Wrong Number Rating: 4 out of 5 stars4/5Uyir Meethu Thaagam Rating: 4 out of 5 stars4/5Isai Kolai Rating: 5 out of 5 stars5/5Shimla Ramya Rating: 5 out of 5 stars5/5Nalliravu Seithi Rating: 4 out of 5 stars4/5Only Vivek! Rating: 5 out of 5 stars5/5Vendru Vaa Vivek Rating: 3 out of 5 stars3/5Vivek, Roopala Thuppariyum Novelgal Thoguthi 1 Rating: 4 out of 5 stars4/5Thavarukkum Thavarana Thavaru! Rating: 5 out of 5 stars5/5Oru Kulir Kaala Kutram Rating: 5 out of 5 stars5/5Uravugal Pirivathillai Rating: 5 out of 5 stars5/5Oru Everest Thavaru! Rating: 5 out of 5 stars5/5‘Sorry... Konnuttean..!’ Rating: 0 out of 5 stars0 ratingsAntha 69 Naatkal! Rating: 5 out of 5 stars5/5Good Night Krotham! Rating: 5 out of 5 stars5/5
Related to Oomatham Pookkal
Related ebooks
Sila Vellai Iravugalum Oru Karuppu Pagalum Rating: 0 out of 5 stars0 ratingsVasantha Kaalam Rating: 0 out of 5 stars0 ratingsMattroru Naal Rating: 4 out of 5 stars4/5Vaanavillin Ettavathu Niram Rating: 5 out of 5 stars5/5Kuttrala Kolai Season Rating: 4 out of 5 stars4/5Kaadhal Raasi..! Rating: 0 out of 5 stars0 ratingsKaadhalal Valarnthean! Rating: 0 out of 5 stars0 ratingsKothikkum Panithuli..! Rating: 4 out of 5 stars4/5Vaanavil Kutram Rating: 5 out of 5 stars5/5வானவில் குற்றம் Rating: 0 out of 5 stars0 ratingsAbaayam! Thodu! Rating: 5 out of 5 stars5/5Vaanavil Kutram Rating: 5 out of 5 stars5/5Sangamithirai Rating: 0 out of 5 stars0 ratingsKaruppu Pournamigal Rating: 5 out of 5 stars5/5Iruttuku Irandu Niram Rating: 0 out of 5 stars0 ratingsMella Mella Oru Thigil Rating: 5 out of 5 stars5/5Vivek Ashok Rajesh Rating: 0 out of 5 stars0 ratingsOru Vaanam Sila Paravaigal Rating: 0 out of 5 stars0 ratingsSorry Wrong Number Rating: 0 out of 5 stars0 ratingsKonjum Kili Rating: 0 out of 5 stars0 ratingsOru Kathavum... Innoru Kathavum! Rating: 0 out of 5 stars0 ratingsIruttil Oru Vaanampaadi Rating: 5 out of 5 stars5/5Virainthu Vaa, Vivek! Rating: 5 out of 5 stars5/5தப்பித்தே ஆக வேண்டும் Rating: 0 out of 5 stars0 ratingsThappithe Aaga Vendum Rating: 5 out of 5 stars5/5Pathinooravathu Avatharam Rating: 4 out of 5 stars4/5Rosap Poovu Lesaai Saavu Rating: 5 out of 5 stars5/5Kangal Seitha Mayam Enna Rating: 0 out of 5 stars0 ratingsIngeydhan Irappargal Rating: 5 out of 5 stars5/5Kann Yethirey Oru Uyir Rating: 5 out of 5 stars5/5
Reviews for Oomatham Pookkal
0 ratings0 reviews
Book preview
Oomatham Pookkal - Rajesh Kumar
http://www.pustaka.co.in
ஊமத்தம் பூக்கள்
Oomatham Pookkal
Author :
ராஜேஷ் குமார்
Rajesh Kumar
For more books
http://www.pustaka.co.in/home/author/rajesh-kumar
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
அத்தியாயம் 21
அத்தியாயம் 22
அத்தியாயம் 23
அத்தியாயம் 24
அத்தியாயம் 25
அத்தியாயம் 26
அத்தியாயம் 27
அத்தியாயம் 28
1
கையில் வெள்ளித் தாம்பூலத் தட்டோடு சிவகணேஷை நெருங்கிய ஸ்வேதா, தட்டை டீப்பாயின்மேல் வைத்துவிட்டு நகர முயன்ற விநாடி –
டாக்டர்! இன்னும் ஒரே ஒரு கேள்வி... இந்த இன்ஸ்டர்வென்ஷனல் கார்டியாலஜி எந்த வகையில் பாதுகாப்பானதுன்னு சொல்றீங்க...?
ஏழெட்டுப் பத்திரிகை நிருபர்களுக்கு மத்தியில் வியர்வை பூத்த முகத்தோடு வசமாகச் சிக்கியிருந்தார் கார்டியாலஜிஸ்ட் அனந்தகிருஷ்ணன். போன மாதம் ஐம்பத்தைந்து வயதை முடித்துக் கொண்ட அனந்தகிருஷ்ணனுக்கு, அந்தக் காலத்து ரங்காராவ் தினுசில் குபீர் உயரத்தோடு கூடிய தோற்றம். முந்திரி நிற சஃபாரி, அவருடைய சதைப்பூச்சான உடம்பைக் கச்சிதமாகக் கவ்வியிருக்க... வீடியோ காமிரா ‘வெளிச்சம்’ கக்கியபோதெல்லாம் அவர் அணிந்திருந்த கோல்ட் ஃப்ரேம் கண்ணாடி ‘நான் இருபத்திரண்டு காரட்’ என்று வாக்குமூலம் கொடுத்தது.
அனந்தகிருஷ்ணன் நிருபர்களைப் பார்த்துக் கையெடுத்துக் கும்பிட்டார். ப்ளீஸ்... கேள்விகள் போதும்... நான் உடனடியா ஆஸ்பிட்டலுக்குக் கிளம்பிப் போயாகணும். அவுட் பேஷண்ட்ஸ் எனக்காக வெயிட் பண்ணிட்டிருக்காங்க. நீங்க வேற ஏதாவது கேள்விகள் என்கிட்ட கேட்க விரும்பினா, ஈவ்னிங் ஆஸ்பிட்டலுக்கு வாங்க...
ஸாரி டாக்டர்!
– வயதான நிருபர் ஒருவர் குறுக்கிட்டார்.
பர்சனலா ஒரே ஒரு கேள்வி மட்டும்... நீங்க போர்டிகோவுக்குப் போய் கார்ல ஏர்றதுக்கு முன்னாடி பதில் சொல்லிடலாம்...
அனந்தகிருஷ்ணன் அந்த நிருபரைப் பார்த்து ஒரு சினிமாஸ்கோப் சைஸ் புன்னகை பூத்தார்.
ம்! கேளுங்க...
இன்னிக்கு நீங்க சிட்டியில் புகழ்பெற்ற ஒரு கார்டியாலஜிஸ்ட். ஒரு ஃபைவ் ஸ்டார் அந்தஸ்துக்குரிய ஆஸ்பிட்டலை வெற்றிகரமா நடத்திட்டுவர்றீங்க. உங்களை மாதிரியே, உங்க மகன் டாக்டர் ஹரேஹூம் ஒரு நல்ல கார்டியாலஜிஸ்ட்னு பேர் எடுத்திருக்கார். ஆனா, உங்க டாட்டர் அல்லி மட்டும் டாக்டருக்குப் படிக்காம, ஏன் ‘லா’ படிச்சு வக்கீல் தொழிலுக்குப் போயிட்டாங்க...
இந்த கேள்விக்கு நான் பதில் சொல்லலாமா நிருபர் சார்...?
கேட்டுக்கொண்டே உள்ளறையிலிருந்து வெளிப்பட்டாள் அல்லி. இருபத்துமூன்று வயது ரோஜா நிற உடம்பு, ஊதா நிற சல்வார் கமீஸூக்குள் காற்றோட்ட மாகச் சிறைப்பட்டிருந்தது. கண்களில் காந்தம், சிரிப்பில் சாந்தம், பேச்சில் வசந்தம்!
நிருபர்கள் அவளைச் சூழ்ந்து கொண்டனர்.
சொல்லுங்கம்மா...
அனந்தகிருஷ்ணனை ஏறிட்டாள் அல்லி.
அப்பா, நீங்க ஆஸ்பிட்டலுக்குப் புறப்படுங்க.... அம்மாவையும அப்படியே காலேஜ்ல ட்ராப் பண்ணிட்டுப் போயிடுங்க. உங்க மீதிப் பேட்டியை நான் பார்த்துக்கறேன்...
என்னை ரிலீஸ் பண்ணிவிட்டதுக்கு ரொம்ப தாங்க்ஸ்... உன்னோட அம்மாவைக் கூப்பிட்டு விடம்மா...
அம்மா எப்பவோ போய் கார்ல உட்கார்ந்தாச்சு... நீங்க புறப்படுங்கப்பா!
அனந்தகிருஷ்ணன் நிருபர்களிடம் விடைபெற்றுக் கொண்டு, போர்டிகோவில் நின்றிருந்த காண்டாஸவை நோக்கிப் போனார்.
காரின் பின் ஸீட்டில் அவருடைய மனைவி உமையாள் சாய்ந்திருந்தாள். நாற்பத்தேழு வயது. உயர்த்திப் போட்ட நரைக்கொண்டை. நெற்றியின் மையத்தில் வைகறைச் சூரியனின் சிவப்பில் குங்குமப் பொட்டு. வைர மூக்குத்தி டாலடிக்கும் நாசியின்மேல் வெள்ளி ஃப்ரேமிட்ட கண்ணாடி. கழுத்தில் மெலிதாக ஒரு செயின்.
டிரைவிங் இருக்கைக்கு வந்து சாய்ந்து, இக்னீஷியனை உசுப்பிய கணவரைக் கோபமாகப் பார்த்தாள் உமையாள்.
என்னங்க... பேட்டி கொடுக்க ஒரு நேரம் காலமே கிடையாதா...? இந்தக் காலை நேரத்துல நீங்க ஆஸ்பிட்டலுக்குப் போகணும். நான் காலேஜூக்குப் போகணும். நீங்க ஆஸ்பிட்டலுக்குக் கொஞ்சம் லேட்டா போனாக்கூடப் பரவாயில்லை... ஏன்னா, பேஷண்ட்டுகளைப் பார்த்துக்கிறதுக்கு அங்கே ஹரேஷ் இருக்கான். ஆனா, என்னோட நிலைமை அப்படியா...? ஒரு காலேஜ்ல புரொபசரா வேலைபார்க்கிற நான், நேரத்துல காலேஜ்ல இருக்க வேண்டாமா...?
அனந்தகிருஷ்ணன் காரை நகர்த்தினார்.
நான் என்ன பண்ணட்டும் உமை...? போன வாரமே ஏற்பாடு பண்ணிய பிரஸ்மீட் இது. இன்ஸ்டர்வென்ஷனல் கார்டியாலஜியைப் பத்திப் பொது மக்களுக்குத் தெரிய வைக்கிறதுக்காக ஏற்பாடு பண்ணிய இந்த பிரஸ்மீட். எனக்கு இருந்த வேலைப்பளுவினால தள்ளித் தள்ளிப் போய்... இன்னிக்குத் தான் நடந்து முடிஞ்சிருக்கு!
என்னங்க... நான் ஒரு கேள்வி கேட்கட்டுமா...?
கேளு....
நீங்களும் நம்ம ஹரேஷூம் இப்படி உழைக்கணுமா...?
வேற வழியில்லை... மெட்ராஸ் சிட்டில நிறைய பேருக்கு ஹார்ட் ப்ராப்ளம்ஸ் இருக்கு. எனக்கும் ஹரேஷூக்கும் நல்ல கார்டியாலஜிஸ்ட்ஸ் என்கிற பேர் இருக்கு. இந்த ரெண்டும் சேரும்போது உழைக்காம இருக்க முடியுமா...?
இதோ பாருங்க... உங்க டாக்டர் தொழிலையும் கவனிச்சிட்டு, அப்படியே நம்ம குடும்ப விஷயங்களையும் அப்பப்பப் பார்த்துக்கங்க... ஹரேஷூக்கும் அல்லிக்கும் வயசாயிட்டே போகுது. அவங்களுக்கு நல்ல இடத்துல சம்பந்தம் பேசி முடிக்கணும்...
அதெல்லாம் உன்னோட டிபார்ட்மெண்ட்... அது சரி, நீ ஏதோ ஒரு செமினார் விஷயமா டெல்லிக்குப் போகணும்னு சொல்லிட்டிருந்தியே... அது என்னிக்கு...?
சரியாப் போச்சு!
– தலைக்குமேல் இரண்டு கைகளையும் வைத்துக் கொண்டாள் உமையாள்.
நாளைக்கு ராத்திரி பத்து மணி ஃப்ளைட்ல எனக்கும் அல்லிக்கும் டிக்கெட் புக் பண்ணிக் கொடுத்ததே நீங்கதானே...? ஆஸ்பிட்டல்ல இருக்கிற இருநூத்து சொச்ச பேஷண்ட்ஸோட கேஸ் ஹிஸ்டரிகளையும் ஸ்பஷ்டமா ஞாபகம் வெச்சிட்டிருக்கிற நீங்க, என்னோட டெல்லிப் பயணத்தைப் மட்டும் எப்படி மறக்கலாம்...?
ஸாரி... ஸாரி...
உங்களுக்கு வாழ்க்கைப் பட்ட நாளிலிருந்து இந்த ஸாரியைப் பத்து மில்லியன் தடவை கேட்டுட்டேன். எங்களை வழியனுப்பி வைக்கிறதுக்காக நாளைக்கு ஏர்போர்ட்டுக்காவது வருவீங்களா, மாட்டீங்களா...?
ஆஸ்பிட்டலுக்குப் போய், என்னோட புரோக்ராம் சார்ட்டைப் பார்க்கணும்...
பார்க்க வேண்டியதே இல்லை. நிச்சயமா அந்த நேரத்துக்கு ஒரு பைபாஸ் சர்ஜரி இருக்கும்...
– உமையாள் முன்வரிசைப் பற்களைக் கடித்துக் கோபமாகச் சொல்லிக் கொண்டிருக்கும்போதே , அவள் வேலை பார்க்கும் கல்லூரியின் காம்பௌண்ட் வந்தது.
உமையாள் இறங்கிக்கொண்டாள். அனந்த கிருஷ்ணன் வெளியே தலையை நீட்டிச் சொன்னார்.
சாயந்திரம் என்னை எதிர்பார்க்காதே உமை... ஹரேஷ் வந்து உன்னை பிக் -அப் பண்ணிக்குவான்...
ஊமையாள் தலையாட்டிவிட்டு நடக்க,
அனந்தகிருஷ்ணன் காரைத் தன் ஆஸ்பிட்டல் இருந்த திசை நோக்கி விரட்டினார்.
பதினைந்து நிமிடப் பயணம்... ஐந்து மாடிகளோடு தெரிந்த ‘உமையாள் ஆஸ்பிட்டல்’ பார்வைக்குக் கிடைத்தது.
போர்டிகோவில் காரைச் சொருகிவிட்டுப் பளபளக்கும் மார்பிள் வராந்தாவில் நடை போட்டவரின் காதுகளில், விதவிதமான டெஸிபல்களில் ஆஸ்பிட்டல் ஊழியர்களின் குட்மார்னிங்குகள் வந்து விழுந்தன.
எல்லோருக்கும் தலையசைத்துப் புன்சிரிப்பைக் கொடுத்தபடியே வேகநடை போட்டு, வராந்தாவின் கோடியில் இருந்த தன்னுடைய பிரத்தியேக அறைக்குள் நுழைந்தார். அறை மெலிதாக ஏர்கண்டிஷன் காற்றைச் சுவாசித்துக் கொண்டிருந்தது.
அனந்தகிருஷ்ணன் எக்ஸிக்யூடிவ் நாற்காலிக்கு உடம்பைக் கொடுத்துக் கொண்டே மேஜையின் மேல் சின்னதாக சம்மணம் போட்டு உட்கார்ந்திருந்த கம்ப்யூட்டருக்கு மின்சார உயிர் கொடுத்து விட்டு ஒரு பட்டனைத் தட்டி கம்ப்யூட்டர் பாஷையில் கேட்டார்.
‘இன்றைக்கு என்னுடைய என்கேஜ்மெண்ட்ஸ் என்னென்ன...?"
மானிட்டர் திரை உடனே ‘உள்ளேன் ஐயா’ என்கிற பள்ளிக்கூட மாணவன் மாதிரி பவ்யம் காட்டி அவருடைய அன்றைய தின வேலைகளை வரிவரியாகப் போட்டுக் காட்டியது.
‘இன்று வெள்ளிக்கிழமை...
காலை 10 மணியிலிருந்து 11 மணி வரை வெளி நோயாளிகளைப் பார்ப்பது.
காலை 11 மணியிலிருந்து 12 மணி வரை ரவுண்ட்ஸ் போகும் நேரம்.
மதியம் 12 மணியிலிருந்து 2 மணி வரை பகல் ஆபரேஷன் தியேட்டர்.
மதியம் 2 மணியிலிருந்து 2.30 மணி வரை பகல் உணவுக்கான நேரம்.
மதியம் 3 மணியிலிருந்து 6.00 மணி வரை அறுவை சிகிச்சைகள் குறித்து ஹரேஷோடு டிஸ்கஸ் செய்ய வேண்டிய நேரம்.
மாலை 6 மணியிலிருந்த இரவு 8 மணி வரை வெளிநோயாளிகளைப் பார்க்கும் நேரம்.
இரவு 8 மணியிலிருந்து மறுநாள் காலை 6 மணிக்குள் நீங்கள் இறக்க வேண்டிய நேரம்...’
கம்ப்யூட்டரின் மானிட்டர் திரையை உன்னிப்பாக பார்த்துக் கொண்டே வந்த அனந்தகிருஷ்ணன் ஸ்லோமோஷனில் அதிர்ந்து கம்ப்யூட்டர் காட்டிய கடைசி வரியை மறுபடியும் ஒரு தடவை படித்தார். உதடுகள் நடுக்கத்தோடு முனகின.
‘இரவு எட்டு மணியிலிருந்து மறுநாள் காலை ஆறு மணிக்குள் -
நீங்கள் இறக்க வேண்டிய நேரம்...’
********
மாணிக்கவாசகம் அறைவாசலில் நின்று கொண்டு குரல் கொடுத்தார்.
சிவகணேஷ்! ரெடியாயிட்டியா...?
இதோ, ஒரே ஒரு நிமிஷம் டாடி...
இரண்டு நிமிடத்துக்குப் பிறகு, சிவகணேஷ் என்கிற அந்த இளைஞன் ஜீன்ஸ் பேகி ஷர்ட்டோடு வெளியே வந்தான். கண்களில் குளிர்கண்ணாடி தொற்றியிருந்தது.
நான் ரெடி டாடி...
மாணிக்கவாசகம் மகனைப் பத்து விநாடி பார்வையில் நனைத்துவிட்டுச் சற்றே எரிச்சலான குரலில் கேட்டார்.
ஏண்டா, ஒரு முக்கியமான பிஸினஸ் விஷயமா ஒருத்தரைப் பார்க்கப் போறோம். இப்படியா டிரஸ் பண்ணிட்டு வர்றது...?
ஏன்... இந்த டிரசஸூக்கு என்ன டாடி...?
உன்கிட்ட நூத்தம்பது செட் டிரஸ் இருக்கு. அதுல, ஐம்பது ஃபுல் சூட் செட். அந்த ஐம்பதுல ஒரு செட்டைப் போட்டுட்டு வரக்கூடாதா...?
"ஃபுல் சூட் போட்டுப் போட்டு அலுத்துப் போச்சு டாடி... அதான், ஒரு சேஞ்சுக்கு இப்படி ஒரு டிரஸ்... ஏன் டாடி, இந்த டிரஸ் உங்களுக்குப் பிடிக்கலையா...?
பிடிக்கலை! போய் ஒரு நல்ல ஃபுல் சூட்ல வா... அப்பத்தான் எனக்குப் பிடிக்கும்...
ஓ.கே டாடி! ஊங்களுடைய கட்டளைக்கு அடிபணிகிறேன்...
- சிவகணேஷ் தன் தலையைத் தாழ்த்தி நாடகப் பாணியில் சொல்லிவிட்டு, அறைக்குள் நுழைந்து பத்து நிமிடம் கழித்து வெளிப்பட்டான்.
நீல நிற ஃபுல் சூட்டில் அமர்க்களம் காட்டினான்.
இது எப்படியிருக்கு டாடி...?
1
க்ளாஸிக்!
கிளம்பலாமா...?
ம்! புதுசா எந்த ஒரு பிஸினஸை ஆரம்பிக்கிறதா இருந்தாலும் உங்கம்மா படத்துக்கு மாலை போட்டுட்டுக் கிளம்பறதுதான் என்னோட வழக்கம். இது உனக்காக ஆரம்பிக்கப்போற பிஸினஸ். அந்த ரோஜா மாலையை எடுத்து அம்மா படத்துக்குப் போட்டுட்டுக் கண்ணை மூடிப் பிரார்த்தனை பண்ணிக்க...
சிவகணேஷ் அந்தப் பெரிய ஹாலில் மாட்டியிருந்த அம்மாவின் ஆளுயர போட்டோவுக்கு மாலையை அணிவித்து விட்டு, நெடுஞ்சாண்கிடையாகக் கீழே விழுந்து வணங்கினான். மாலையிலிருந்து விழுந்த ரோஜா இதழ்களைச் சிரத்தையாகப் பொறுக்கி, கோட் பாக்கெட்டில் போட்டுக் கொண்டு அப்பாவோடு நடந்து போர்டிகோவுக்கு வந்தான்.
அந்த பெரிய போர்டிகோவில் ஏழு வெளிநாட்டு கார்கள் டிரைவர்களோடு காத்திருக்க, மாணிக்கவாசகம் மகனை ஏறிட்டார்.
எந்த கார்ல போகலாம்...?
உங்க இஷ்ம் டாடி...
சியாரா...
சரி!
மாணிக்கவாசகம் கையசைக்க, பக்கத்தில் வெண்ணெய்க் கட்டி மாதிரி சியரா வந்து நின்றது.
ஏறிக்கொண்டார்கள்.
டீரைவரின் போகவேண்டிய இடத்தைச் சொல்லிவிட்டு மாணிக்கவாசகம் ஸீட்டில் நன்றாகச் சாய்ந்து உட்கார்ந்தார். சாலைக்கு கார் வந்து வேகம் பிடித்ததும் சிவகணேஷ் மெல்லிய குரலில் டாடி...
ம்...
இப்பவாவது சொல்றீங்களா...?
எதை...?
புது பிஸினஸ் விஷயமா யாரைப் பார்க்கப் போறோம்...?
ரெண்டு நாள் பொறுத்துக்கிட்டே... இனி ஒரு அரை மணி நேரம் பொறுத்துக்க முடியாதா என்ன...?
சரி... என்ன பிஸினஸ்...? அதையாவது சொல்லுங்க...
நோ... நோ... யூ ஹேவ் டு வெயிட்!
போங்க டாடி...
சிவகணேஷ் சலித்துப் போய்க் கண்களை மூடிக்கொண்டான்.
இருபது நிமிடப் பயணத்தில், அந்தப் பெரிய பங்களா வந்தது. போர்டிகோவிலேயே சில பெண்கள் பட்டுப் புடவைகளோடு தெரிந்தார்கள்.
கார் உள்ளே போய் இயக்கங்களை அறுத்துக் கொண்டு நின்றதும் பட்டு வேட்டி அணிந்த ஒரு நடுத்தர வயது நபர் ஓடோடி வந்து கதவைத் திறந்து விட்டுக் கைகளை குவித்தார்.
நமஸ்காரம்! வரணும்...
மாணிக்கவாசகம் காரிலிருந்து இறங்க, திகைத்த முகத்தோடு சிவகணேஷ் தொடர்ந்து இறங்கினான்.
வாங்கோ... வாங்கோ...
அந்த பட்டு வேட்டி நபர், பைலட் மாதிரி முன்னால் போக... சிவகணேஷ் தன் அப்பாவின் கையைப் பற்றி மெல்லிய குரலில் கேட்டான்.
என்ன டாடி இதெல்லாம்...?
இன்னும் உனக்குப் புரியலையா...?
புரியலையே!
உனக்குப் பொண்ணு பார்க்க வந்திருக்கோம். இது பொண்ணோட வீடு...
டா... டி....!
முன்னாடி போனாரே... அவர்தான் பொண்ணோட அப்பா! ஹைகோர்ட் ஜட்ஜாயிருந்து ரிடையரானவர். அவருக்கு ஒரே பொண்ணு. பேர் ஸ்வேதா. அழகுப் போட்டியில் இரண்டு வருடத்துக்கு முந்தி ‘மிஸ் மெட்ராஸ்’ பட்டமும் இந்த வருடம் ‘மிஸ் சவுத் இந்தியா’ பட்டமும் வாங்கின பெண்!
- மாணிக்கவாசகம் சொல்லச் சொல்ல
சிவகணேஷ் கண்கள் விரிந்தன.
ரியலி...?
பின்னே... பொய் சொல்லியா உன்னைக் கூட்டிட்டு வருவேன்...?
போங்க டாடி! பொண்ணு பார்க்கப் போறோம்னு நீங்க சொல்லியிருந்தா, இன்னும் கொஞ்சம் அமர்க்களமா டிரஸ் பண்ணிட்டு வந்திருப்பேன்.!
கல்யாண பேச்சை எடுத்தாலே நீ நழுவி நழுவி ஓடிட்டிருந்தே... அதான், உன்கிட்ட சொல்லமலேயே இப்படி ஒரு ஏற்பாட்டைப் பண்ணினேன். ஸ்வேதா பொண்ணு இல்லை. ஒரு சொர்ண விக்கிரகம்! பார்த்தியனா, ‘இதே நிமிடம் தாலி கட்டட்டுமா டாடி’னு என்கிட்ட கேட்பே...
டாடி! சத்தமே இல்லாம, இவ்வளவு பெரிய ஏற்பாட்டைப் பண்ணியிருக்கிற நீங்க உண்மையிலேயே கில்லாடி தான்!
பாராட்டுப் பத்திரம் வாசிக்கற வேலையெல்லாம் வீட்ல போய் வெச்சுக்கலாம்! அதோ... நகைக்கடை மாதிரி ஜொலிக்கிற அந்த அம்மாதான் உன்னோட வருங்கால மாமியார்! வணக்கம் சொல்லு...
சிவகணேஷ் எல்லோரையும் பார்த்துப் பொதுவாகக் கைகுவித்துக் கொண்டே அப்பாவோடு ஹாலுக்குள் நுழைந்தான்.
சோபாவில் அமர்த்தப்பட்டான்.
பெரியவர்களின் சில நிமிடச் சம்பிரதாயப் பேச்சுகளுக்குப் பின் யாரோ குரல் கொடுத்தார்கள்.
நல்ல நேரம் முடியறதுக்கு முந்தி, பொண்ணு கையில தாம்பூலத் தட்டைக் கொடுத்து அனுப்புங்க...
குரல் வந்த அடுத்த இரண்டாவது நிமிடம்...
உள்ளறையிலிருந்து ஸ்வேதா தாம்பூலத் தட்டோடு வெளிப்பட்டாள்.
ஸ்வேதாவுக்கு நிஜமாகவே பொன்நிறம். கத்தரிப்பூ நிறப் பட்டுச் சேலைக்குள் ஒரு குட்டிச் சூரியனைப் போல் ஜொலித்தாள்.
கையில் வெள்ளித் தாம்பூலத் தட்டோடு சிவகணேஷை நெருங்கிய ஸ்வேதா, தட்டை டீப்பாயின்மேல் வைத்துவிட்டு நகர முயன்ற விநாடி –
சிவகணேஷ் எழுந்து நின்று குரல் கொடுத்தான். சிஸ்டர்! ஒரு நிமிஷம்...
எல்லோரும் திகைக்க, சிவகணேஷ் தன்