Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Oru Kili Mayanguthu
Oru Kili Mayanguthu
Oru Kili Mayanguthu
Ebook113 pages41 minutes

Oru Kili Mayanguthu

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Vidhya Subramaniam born in 1957. She was introduced in Mangaiyar Malar through a story Mudhal Konal in 1982. She has written more than 100 short stories and novels. She has got lots of rewards in her 27 years of career. Rewards like Anandhachari Arakattalai Virudhu for her essay Thennang Kaatru, Tamilnadu government award for her Vanathil Oru Maan short stories, Bharat State Bank's first prize for her Aagayam Arugil Varum essays, Kovai Lilly Deivasigamani Virudhu for her Kanniley Anbirunthal short stories. Beyond the Frontier has her outstanding short stories which are translated to english. Anthology of Tamil Pulp Fiction also has her 2 short stories.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN9789352852277
Oru Kili Mayanguthu

Read more from Vidya Subramaniam

Related to Oru Kili Mayanguthu

Related ebooks

Reviews for Oru Kili Mayanguthu

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Oru Kili Mayanguthu - Vidya Subramaniam

    https://www.pustaka.co.in

    ஒரு கிளி மயங்குது

    Oru Kili Mayanguthu

    Author:

    வித்யா சுப்ரமணியம்

    Vidya Subramaniam

    For more books

    https://www.pustaka.co.in/home/author/vidya-subramaniam-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    1

    ஸ்வப்னா கல்லூரிக்குள் நுழைந்தபோது வழக்கமாக தோழிகள் அனைவரும் சந்திக்கும் மரத்தடி காலியாக இருந்தது. இன்னும் யாரையும் காணவில்லை. ஒருக்கால் பயந்து விட்டார்களா? மரத்தடியிலிருந்த சிமெண்ட் மேடையில் கையிலிருந்த புத்தகங்களை வைத்துவிட்டு அருகில் கர்ச்சீப்பை விரித்து அதன் மேல் தானும் உட்கார்ந்து மிடியை இழுத்து சரி பண்ணிக் கொண்டாள். சிறிதுநேரம் சுற்றிச் சுற்றிப் பார்த்தாள். பிறகு காலில் போட்டிருந்த பாயிண்ட் ஷூவைத் தளர்த்தி, கீழே உதறினாள். மணிக்கட்டைத் திருப்பி மணி பார்த்தாள். இன்னும் யாரையும் காணாதது எரிச்சலைக் கிளப்பியது. அணில் ஒன்று சற்றுத் தள்ளி குத்துக் காலிட்டு உட்கார்ந்து எதையோ கொறித்தபடி அவளை நிமிர்ந்து பார்க்க, ‘ஹாய் செல்லம், குட்மார்னிங்’ என்று சிரிக்க அது பயந்து ஓடியது.

    கல்லூரி மணி கூட அடிக்கப் போகிறது. சில மாணவர்கள் இவள் தனியே அமர்ந்திருப்பதைக் கண்டு ஏதோ கமெண்ட் அடித்துச் சென்றதை இவள் சட்டை செய்யவில்லை. ஆயினும் எரிச்சல் வந்தது.

    ஹாய் ஸ்வப்னா! வந்தாச்சா நீ? சாரி, கொஞ்சம் லேட்டாயிடுச்சு என்றபடி வந்த சசியைப் பார்த்ததும் கொஞ்சம் ஆறுதல் ஏற்பட்டது.

    என்னடி, யாரையும் இன்னும் காணோம், எல்லாரும் பயந்துட்டாங்களா?

    யார் கண்டா? நான் பயப்படலப்பா. ஸ்வப்னா சிரித்தாள். ரெக்கார்டு நோட்டிலிருந்து நாலாக மடிக்கப்பட்ட அந்தப் பேப்பரை எடுத்து சசியிடம் காட்டினாள்.

    அடி சக்கை! எழுதியே கொண்டு வந்தாச்சா? எங்க, காட்டு பாப்போம்?

    ஹக்காங், அதுதான் முடியாது.

    ஏய் ஏய், யாருக்கு எழுதியிருக்கன்னாவது சொல்லுடி

    சரி, நீ யாருக்கு எழுதப் போற?

    அது ரகசியம்

    அப்போ இதுவும் ரகசியம்தான்

    எனக்கு தெரியும். நீ அந்த ப்ரகதீஷுக்குதான் எழுதியிருப்ப

    ஸ்வப்ன நமுட்டுச் சிரிப்புச் சிரித்தாள்.

    முதல்நாள் அவள் புத்தியில் ஒரு விளையாட்டு தோன்றியது. அதனைத் தனது நான்கு தோழிகளிடமும் லன்ச் சப்பிட்டுக்கொண்டே சொன்னாள். அந்த விளையாட்டு அவர்களுக்கும் பிடித்திருந்தது.

    ஏண்டி, இது ஏதாவது விபரீதமாச்சுன்னா? நித்யா கேட்டாள்.

    அதெல்லாம் ஒண்ணும் ஆகாது. இது என்ன மாசம்? ஏப்ரல் மாசம். அதனால யாரும் எதுவும் சொல்ல முடியாது. நம்மகிட்ட எத்தனையோ பசங்க வழியறாங்க. அதுல ஒர்த்தனுக்கு நாம லவ் லெட்டர் எழுதப் போறோம்

    அதது பாவம், ராவெல்லாம் தூங்காம புரளும். பதில் கடிதம் எழுதிக் கொடுக்கும். அப்போ ‘சும்மா தமாஷ்தான் ப்ரதர்,! டேக் இட் ஈஸி. ஒன் மூஞ்சிக்கு நெஜமாவா காதல் கடிதம் எழுதுவாங்க?’ண்னு வாரிட வேண்டியதுதான்

    ஓகே. அப்ப நாளைக்கே குடுத்துடுவோம்டி. பத்துநாள் ஸ்டடி ஹாலிடேஸ்ல நல்லா தவிக்கட்டும். ஸ்வப்னா குஷியாய்ப் பேசினாள்.

    சரி சரியென்று தலையாட்டிச் சென்ற நால்வரில் சசியைத்தவிர மற்ற மூவரையும் காணவில்லை.

    விட்டுவிட்டு மாணவ மாணவிகள் வருவதும் போவதுமாக கல்லூரி களைகட்டியிருந்தது.

    சசி ஒரு பேப்பரை எடுத்து சற்றுத் தள்ளி அமர்ந்து எழுதத் தொடங்கினாள்.

    ஏய், வந்துட்டாடி!

    யாரு?

    ப்ரீதாதான். ஏண்டி லேட்டு, பயந்துட்டயா?

    நானா? பயமா? அப்பிடீன்னா? ப்ரீதா ஜாக்கெட்டுக்குள்ளிருந்து அதை வெளியே எடுத்து முகத்தில் விசிறிக் கொண்டாள்.

    அட, இவளும் எழுதிட்டாடி! எப்போ எழுதினடி? ராவோட ராவா எழுதினயா?

    ம்

    யாரும் பார்க்கலையா?

    சுத்தி காலேஜ் புக்ஸ் பிரிச்சு வெச்சுக்கிட்டு எழுதினா யாருக்குடி சந்தேகம் வரும்? அது சரி பூர்ணியும் நித்யாவும் வரலையா?

    அதோ வந்துட்டே இருக்காங்களே.

    எங்கடி?

    அதோ வராங்க பாரு!

    தூரத்தில் அவள் காட்டிய திசையில் சிகப்பு நிற சுரிதாரில் பூர்ணியும், மஞ்சள் நிற மிடியில் நித்யாவும் வந்து கொண்டிருந்தனர்.

    என்னடி சசி! முடிச்சாச்சா? ஏண்டி காவியமா எழுதிட்ருக்க.. சீக்கிரம் முடியா!

    விளையாட்டுக்கே இப்டி விழுந்து விழுந்து எழுதறாளே! நிஜமானா எப்டி எழுதுவாடி இவ.. யப்பா?

    சசி கடிதத்தை எழுதி முடித்தாள். நித்யாவும் பூர்ணியும், நெருங்கி வந்தனர்.

    ஏண்டி, நீங்களும் எழுதணுமா எழுதியாச்சா?

    எழுதிட்டோமே என்றனர் பூர்ணியும் நித்யாவும்.

    ஓ.கே! இன்னிக்கு ஈவினிங்குக்குள்ள அவங்கவங்க ஆளுக்கு எப்டியாவது சேத்துடுவோம். பத்து நாள் ஹாலிடேஸ்க்கு அப்புறம் பாரேன், அதது ரோமியோ கணக்கா வந்து வழியப்போறதை!

    ஸ்வப்னா கண்சிமிட்டிச் சிரித்தாள்.

    2

    க்ரிச் க்ரிச் என்ற சப்தத்தோடு கிணற்றிலிருந்து நீர் இறைத்துக் கொண்டிருந்த ஜமுனா வாளி மேலே வந்ததும் கிணற்றுத் திட்டில் வாளியை வைத்துவிட்டு பாத்திரம் தேய்த்துக் கொண்டிருந்த அம்மாவிடம் கேட்டாள்.

    ஏம்மா, சந்துரு பாஸ் பண்ணிட்டா டில்லி மாமா நிச்சயம் வேலை வாங்கி குடுத்துருவாரில்ல?

    ஏண்டி திடீர்னு சந்தேகம்? போனவாரம் கூட கடுதாசி வந்துச்சே, படிக்கலையா? வேலை ரெடி. இவன் பாஸ் பண்ணணும். சர்ட்டிபிகேட்டோட போகணும். வேலைல உக்காரணும். எடுத்த எடுப்புல ரெண்டாயிரம் கிடைக்குமாம்.

    ஜமுனா மனசுக்குள் கணக்குப் போட்டாள். தங்கப் போவது மாமா

    Enjoying the preview?
    Page 1 of 1