Oosi Munai
By Maharishi
()
About this ebook
ஐந்து வயது குழந்தையையும் மனைவியையும் வீட்டை விட்டுத் துரத்திய பிரகதீஸ்வரன், பாசப் பிணைப்பால் இருவரையும் கண்டுபிடிக்க, தேடாத திசையில்லை; சுற்றாத 'ஊரில்லை; வினவாத ஆளில்லை; ஏறி இறங்காத அனாதை ஆஸ்ரமங்களில்லை.
சேர்த்து வைத்திருக்கும் சொத்துக்கு வாரிசில்லையே என்ற ஏக்கத்தால் நிலைகுலைந்து பேதலித்து அலைகிற நேரத்தில், நண்பனின் முயற்சியால், அனாதை ஆஸ்ரமத்தின் உதவியால் கல்லூரியில் படிக்கும் தன் மகளைக் கண்டு பிடித்து விடுகிறான், பிரகதீஸ்வரன் ; மகளோ வெறுப்போடு பார்க்கிறாள். தாயை இழந்து தவிப்பதற்கும் அனாதை இல்லத்தில் தான் அடைக்கலம் புகுந்ததற்கும் தன் தகப்பனார்தானே காரணம் என்ற கடுங்கோபம் அவள் பாசத்தின் குறுக்கே நின்றது.
இதற்கிடையில் சொத்துக்கு வாரிசான மகளைக் கொன்றுவிட்டு, பிரகதீஸ்வரனை மயக்கி கைக்குள் போட்டுக் கொண்டு, சொத்தை அபகரித்துவிடலாம் என்ற திட்டத்தில் செயல்பட்ட அனைவரையும் ஏமாற்றி, அவர்களின் எண்ணத்தில் மண்ணை வாரிப் போட்டு விட்டு, மகளை சொத்துக்கு வாரிசாக்கி விட்டு இறந்து விடுகிறான், பிரகதீஸ்வரன்! இதுவே மகரிஷியின் படைப்பான "ஊசிமுனை".
Read more from Maharishi
Spatikam Rating: 0 out of 5 stars0 ratingsKanneer Thuliyil Kadalosai Rating: 0 out of 5 stars0 ratingsIppadiye Oru Vazhkkai Rating: 0 out of 5 stars0 ratingsBhadrakali Rating: 0 out of 5 stars0 ratingsParvaiyile Sevaganai..! Rating: 0 out of 5 stars0 ratingsNilavukku Yengiyavargal Rating: 0 out of 5 stars0 ratingsVensangu Rating: 0 out of 5 stars0 ratingsGarudanai Kaditha Paambu Rating: 0 out of 5 stars0 ratingsPanisuvar Rating: 0 out of 5 stars0 ratingsKoodu Sellum Paravai Rating: 0 out of 5 stars0 ratingsAndha Poonai Rating: 0 out of 5 stars0 ratingsKaatril Mithantha Padagu Rating: 0 out of 5 stars0 ratingsEera Vizhigal Rating: 0 out of 5 stars0 ratingsThulasi Rating: 0 out of 5 stars0 ratingsVeera Sudhandhiram! Rating: 0 out of 5 stars0 ratingsIlaiuthir Kaalam Rating: 0 out of 5 stars0 ratingsAdharam Madhuram Rating: 0 out of 5 stars0 ratingsKanneer Pugai Rating: 0 out of 5 stars0 ratingsNeruppin Matroru Mugam Rating: 0 out of 5 stars0 ratingsJwalai Rating: 0 out of 5 stars0 ratingsOru Devathaiyin Punnagai Rating: 0 out of 5 stars0 ratingsManam Oru Bridhavanam Rating: 0 out of 5 stars0 ratingsParadesi Kolam Padi Thaandi Vittathu Rating: 0 out of 5 stars0 ratingsSnehamai Oru Kaadhal Rating: 0 out of 5 stars0 ratingsKadalora Pookkal Rating: 0 out of 5 stars0 ratingsPuthiya Poo Rating: 0 out of 5 stars0 ratingsKaatrodu Odiyavan! Rating: 0 out of 5 stars0 ratingsEera Pudavai Rating: 3 out of 5 stars3/5Mara Seeppu Rating: 0 out of 5 stars0 ratings
Related to Oosi Munai
Related ebooks
Salanam Rating: 0 out of 5 stars0 ratingsManathodu Ondragum Uravaley... Rating: 0 out of 5 stars0 ratingsMara Seeppu Rating: 0 out of 5 stars0 ratingsPanneeril Nanaintha Pookkal Rating: 3 out of 5 stars3/5Theruvil Vizhuntha Maalaigal Rating: 0 out of 5 stars0 ratingsThavari Podum Thalam Rating: 0 out of 5 stars0 ratingsUsha Subramanian Kadhaigal Part - 2 Rating: 5 out of 5 stars5/5Idhayathukkul Irunthukol… Rating: 2 out of 5 stars2/5Endrum Pen... Rating: 0 out of 5 stars0 ratingsNaan Naanavena? Rating: 4 out of 5 stars4/5Meendum Malarum Rating: 0 out of 5 stars0 ratingsThulla Mudiyatha Pulliman Rating: 5 out of 5 stars5/5Kaadhal Thozhugai Rating: 0 out of 5 stars0 ratingsIrandavathu Thenilavu Rating: 0 out of 5 stars0 ratingsMaavilai Thoranam Rating: 0 out of 5 stars0 ratingsPaarvai Ondre Poothumey Rating: 0 out of 5 stars0 ratingsFranceil Prasanna Rating: 0 out of 5 stars0 ratingsIdhayathul Irunthu Kol Rating: 3 out of 5 stars3/5Amma Rating: 0 out of 5 stars0 ratingsInba Kaatru Veesattum... Rating: 5 out of 5 stars5/5Appa Ennai Mannichuduppa Rating: 0 out of 5 stars0 ratingsSahana Oru Sangeetham Rating: 0 out of 5 stars0 ratingsSolai Malaroliyoo! Rating: 4 out of 5 stars4/5Nizhal Suduvathillai Rating: 0 out of 5 stars0 ratingsSontham Illatha Bandham Rating: 3 out of 5 stars3/5Indru Muthal Aanantham... Rating: 0 out of 5 stars0 ratingsMazhai Megam Rating: 0 out of 5 stars0 ratingsKaadhalenum Puyal Rating: 0 out of 5 stars0 ratingsMaalaiyaagatha Pookkal Rating: 4 out of 5 stars4/5Ennai Maranthean Thendrale Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Oosi Munai
0 ratings0 reviews
Book preview
Oosi Munai - Maharishi
http://www.pustaka.co.in
ஊசி முனை
Oosi Munai
Author:
மகரிஷி
Maharishi
For more books
http://www.pustaka.co.in/home/author/maharishi
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
கம்பௌண்ட் சுவர் ஓரமாக ஏராளமான அசோக விருட்சங்கள் அரணாக நின்றன.
அரக்குச்சிவப்பு, வெளிர் சிவப்பு, மஞ்சள் இப்படி ஒரே மரத்தில் ஒரே கிளையில் வர்ணக் கலவைகளை கொட்டிக்கொண்டிருக்கும் வாத நாராயண மரங்கள்.
நடைபாதைக்கென்று இடத்தை விட்டுவிட்டு மீதியை செழுமையான பச்சை நிற புல்வெளிக்கு இடத்தை ஒதுக்கி விட்டு விட்டதால் கபடற்று அவை வளர்ந்திருக்கின்றன.
குட்டையான சிமெண்ட் சுவர் அறைவட்டமாக அதில் கூட நடுநடுவே சட்டிச் செடிகள் உட்கார்ந்திருக்கின்றன
நவீனமான என்று கூறமுடியாவிட்டாலும் பழைய மோஸ்தரில் இல்லாத ஓர் மூன்று மாடி ஹாஸ்டல். சற்று இடைவெளி விட்டு அதன் கல்லூரி.
பெண்களுக்கான பிரத்யேகமானது.
சேலம் ஜங்ஷன் செல்லும் பாதையில் அந்தச் சாலையில் ஒரு கால்வாசியை ஆக்கிரமித்துக் கொண்ட கபில நிறக்கட்டிடம்.
சாலையிலிருந்து பார்த்தால் ஹாஸ்டல் தெரியும். ஹாஸ்டல் ஜன்னல் தெரியும். ஜன்னல் வழியே உள்ள கொடிகளில் தொங்கும் மென்காவும், பிராஸோவும் எல்லாரும், வர்ண பெட்டி கோட்களும் பீடர்பான் மற்றும் நாயுடு ஹாலும் தெரியும். அந்த ராட்சத மரங்களில் கிளைகள் ஜன்னலுக்கும் அதைப் பார்க்கிறவர்களுக்கும் நடுவேயொரு கிழட்டு வாட்ச்மேன்.
சுபாஸ்ரீ தன் அறையில் உட்கார்ந்து கொண்டிருந்தாள்.
அவளை எல்லாரும் ஜர்னலிஸம் படிக்கும்படி கூறியிருந்தார்கள். அவளுக்கும் அதில் அளவற்ற விருப்பம் உண்டு.
அதைச் சிறந்த முறையில் அறிமுகப்படுத்தும் முக்கிய நூல்கள் சில அவள் அருகில் கிடந்தது.
அறை வாயிலில் தூரமாக வந்து நின்ற வார்டன் ஹம்சாவின் நிழல் அவள் மேல் பட்ட போது அவள் நிமிர்ந்து பார்த்தாள்.
வெண்மைநிறப் புடவை. நல்ல பச்சையில் பார்டர். அகலமான முகம். அழகின் முதிர்வு. வாரி முடிந்த கேசம். கழுத்துக்குப் பின்னால் அடர்த்தியாகத் தெரிந்தது.
முன் கைகளைக் கோத்துக் கொண்டு நின்றாள். எப்பொழுது யாரிடம் நின்றாலும் தியான மண்டபத்தில் நிற்பது போன்ற போஸ்தான்.
கண்கள் திறந்திருக்கின்றனவா மூடியிருக்கின்றனவா என்று தெரியவில்லை.
ஹம்சா தன்னைத்தான் பார்க்கிறாள் என்பது புரிந்துவிட்டது.
கிட்டத்தட்ட நாற்பது வயதைத் தாண்டிவிட்ட ஹம்சா சுபாவுக்குத் தெரிந்த நாளாக ஓர் அனாதையே.
அந்த மகளிர் விடுதியில் வந்து சேர்ந்து படித்து முன்னேறி அங்கேயுள்ள பள்ளியில் ஆசிரியராக இருந்து அதன் பின் அங்கிருந்து பெண்கள் விடுதியில் வார்டனாக நியமிக்கப்பட்டாள்.
தனக்கு ஐந்தாறு வயதாகும் போதிலிருந்தே ஹம்சா வைத் தெரியும் சுபாவுக்கு.
அவள் தன் தாயார் திருவேணியுடன் அங்கே வந்து அடைக்கலம் புகுந்த காலமாக அவளை அங்கே பார்க்கிறாள்.
அவள் அன்று பார்த்தது போலவே இருக்கிறாள்.
இருபது வயதில் அவள் எப்படி இருந்தாளோ அதேபோல இன்றைய நாற்பதாவது வயதிலும் அப்படியே இருக்கிறாள். சற்றே மெலிந்த தேகம்தான். நீண்ட முகம். கண்கள் மிகப் பெரியவை.
தலை கொள்ளாமல் கேசத்தை அவள் பின்னி விட்டுக்கொண்டு பார்த்ததே இல்லை,
விடுதியின் முற்றத்தில் நின்று கொண்டு நீண்ட கேசத்தை சிக்கில்லாமல் கோதுவதை சுபா வேடிக்கை பார்த்துக் கொண்டே உட்கார்ந்திருப்பாள் சின்ன வயதில்.
ஹம்சா எப்பொழுதும் அமைதியானவள்.
அந்த மகளிர் அனாதை விடுதியில் மிகச் சிறந்த பாடகி அவள்.
தரையில் உட்கார்ந்து தம்பூரைத் தோளில் சாய்த்து முக்காடிட்ட முகத்தை தம்பூரின் தண்டின் மேல் சாய்த்து கண்களை மூடி உட்கார்ந்து ராமகிருஷ்ண பரமஹம்சரின மேலும், சங்கரரின் மேலும் பாடல்களைப் பாட ஆரம்பித்து விட்டால் அந்தச் சூழ்நிலையே அபூர்வமான தெய்வீக கலையை எட்டிவிடும். அவ்வளவு குறைவு. மிகச் சிறந்த ஹிந்திப் பாடகிகளின் குரலினிமையைக் கொண்டுள்ள அவளுடைய பாடல்கள் பல நாட்கள் அந்த அனாதை விடுதியில் பல இரவுகள் ஒலித்து அவள் கேட்டிருக்கிறாள்.
அன்றிலிருந்து இன்று வரை அவளுடைய நிழல் அவள்.
இப்பொழுதும் அவளுடைய நிழல்தான் அவள் மேல் பட்டுக் கொண்டிருக்கிறது.
தூரமாக நிற்கும் அவளைப் பார்க்கும் போதே ஒரு ராகத்தின் சாயலாகவோ அல்லது புத்தியின் பாவனையால் உலகம் முழுவதையும் ஆன்மாவில்லயித்து மறையச் செய்ய வேண்டும் - என்கிற ஓர் அருள் மொழியின் மொத்த உருவமாகவோ வெளிப்படுவாள்.
சுபஸ்ரீ திரும்பிப் பார்த்தாள்.
வார்டன் ஹம்ஸா புன்னகையுடன் நின்று கொண்டிருந்தாள்.
வா ஹம்ஸா...
சுபஸ்ரீ எழுந்து சென்று அவளை வரவேற்ற போது அவள் அறைக்குள் நுழையாமல் நீண்ட நடைபாதையில் உள்ள கைப்பிடிச் சுவற்றில் சாய்ந்து நின்று கொண்டாள்.
என்ன விஷயம்...
ஹம்ஸாவின் அசாதாரணமான மெளனமும், புன்ன கையும், பார்வையும், சுபாவுக்கு வேடிக்கையாக இருந்தது.
அருகில் வந்து நின்ற சுபாவின் தோள் மேல் கையை வைத்து மற்றொரு கையால் அவளுடைய கரத்தைப் பிடித்துக் குலுக்கினாள்.
உன்னுடைய சொந்த ஊர் ஒரத்த நாடுதானே.
ஆமாம்...
தஞ்சாவூரிலிருந்து பட்டுக்கோட்டை போகும் வழியில் பதினான்கு மைலில் உள்ளது.
உறவினர்களாலும், கணவனாலும் கைவிடப்பட்ட உன் தாயாருக்கு இந்த மகளிர் மன்றம் ஆதரவு கொடுத்தது எனக்குத் தெரியும்.
பழைய கதை என்றாலும் மறக்க முடியாத கதை!
உன் தாயாருடன் நீ இங்கே வரும்போது உனக்கு ஐந்து வயது இருக்கும்... பதினைந்தாவது வயதில் உன் தாயார் காலமானார். ஏன் சுபஸ்ரீ உனக்கு உன் உறவினர் களில் யாரையேனும் நினைவிருக்கிறதா...
இல்லை...
யார் உன் தந்தை என்பதாவது நினைவிருக்கிறதா!
நினைவில்லாமல் என்ன! அந்த முரட்டுக்காளை போன்ற கடுகடுப்பான முகம் இன்னும் எத்தனை யுகமானாலும் நினைவிலிருந்து போகாது.
என் தாயாரை அடிக்க வரும் போது அவர் முகம் எப்படி சிவந்திருக்கும். எவ்வளவு அடிகளை என் தாயார் பொறுத்துக் கொண்டிருப்பாள் தெரியுமா? அன்று மட்டு மல்ல இதோ இன்றும் கூட நான் அவரை மனப்பூர்வமாக வெறுக்கிறேன். வாழ்க்கையில் இன்னும் எவ்வளவு கஷ்டங்கள் வந்தால் கூடப் பரவாயில்லை. அம்மாதிரி மனிதரிடமிருந்து விடுதலை கிடைத்ததையே ஒரு பெரிய பாக்கியமாக அன்று என் அம்மா நினைத்தது போலவே இன்று நானும் நினைக்கிறேன்.
சுவர் கட்டைகளில் குருவிகள் கூட்டம் கூட்டமாக வந்து உட்கார்ந்தன. அவர்கள் அருகில் வந்தவுடன் கூட்டமாக கோடு போல பறந்து எதிர்புறம் போய் உட்கார்ந்தன; அமானுஷ்யமான அந்தப் பெரிய கட்டிடத்தில் அதன் சப்தம் எதிரொலியாய்க் கேட்டது.
எனக்கு நன்றாக நினைவிருக்கிறது ஹம்ஸா, அப்படி யொன்றும் எங்கள் குடும்பம் ரொம்ப