Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

January Nilave!
January Nilave!
January Nilave!
Ebook107 pages43 minutes

January Nilave!

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Rajesh Kumar is an extremely prolific Tamil novel writer, most famous for his crime, detective, and science fiction stories. Since publishing his first short story "Seventh Test Tube" in Kalkandu magazine in 1968, he has written over 1,500 short novels and over 2,000 short stories.

Many of his detective novels feature the recurring characters Vivek and Rubella. He continues to publish at least five novels every month, in the pocket magazines Best Novel, Everest Novel, Great Novel, Crime Novel, and Dhigil Novel, besides short stories published in weekly magazines like Kumudam and Ananda Vikatan. His writing is widely popular in the Indian state of Tamil Nadu and in Sri Lanka.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580100403069
January Nilave!

Read more from Rajesh Kumar

Related to January Nilave!

Related ebooks

Reviews for January Nilave!

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    January Nilave! - Rajesh Kumar

    http://www.pustaka.co.in

    ஜனவரி நிலவே!

    January Nilave!

    Author:

    ராஜேஷ் குமார்

    Rajesh Kumar

    For more books

    http://www.pustaka.co.in/home/author/rajesh-kumar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    1

    அம்மா... மேகலை...!

    கஜபதி குரல் கொடுத்துக் கொண்டே அறைக்குள் நுழைய - கண்ணாடி முன் நின்று முகத்துக்கு பௌடர் ஒற்றிக் கொண்டிருந்த அந்த இருபத்தி மூன்று வயது சித்தன்ன வாசல் ஓவியம் திரும்பிப் பார்த்தது.

    என்னப்பா...?

    ஒரு நிமிஷம் கீழே வந்துட்டுப் போம்மா...

    எதுக்கு...?

    கல்யாணத்தரகர் வந்து அரைமணி நேரமாய் வெயிட் பண்ணிட்டிருக்கார். கைவசம் பத்துப் பதினஞ்சு போட்டோக்கள் வெச்சிருக்கார். எல்லாமே நல்ல இடத்து வரன்கள். நீ வந்து பார்த்து ஏதாவது டிக் பண்ணிட்டா பரவாயில்லைம்மா...

    மேகலை திரும்பி நின்று இடுப்பில் கை வைத்து அப்பா கஜபதியை முறைத்தாள்.

    அப்பா...! நான் உங்களுக்கு எவ்வளவு தடவை சொல்லியிருக்கேன். எனக்கு மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் பண்ணி வைக்க வேண்டியது உங்களுடைய கடமை. நீங்க யாரைப் பார்த்து கை நீட்டறீங்களோ அந்த மாப்பிள்ளைக்கு நான் கழுத்தை நீட்டத் தயார்...

    இதோ பாரம்மா... இந்த டயலாக்கெல்லாம் பேசறதுக்கும் கேட்கிறதுக்கும் நல்லாயிருக்கும். இந்தக் காலத்துல ஒரு சின்னக் குழந்தைகூட தனக்குப் பிடிச்ச பொம்மையை செலக்ட் பண்ணுது. இது உன்னோட வாழ்க்கைப் பிரச்னை. காலம் பூராவும் வாழ வேண்டிய துணையை நீதான் செலக்ட் பண்ணணும்,

    அப்பா...! நான் என்ன சொல்ல வர்றேன்னா...?

    நீ ஒண்ணையும் சொல்ல வேண்டாம்மா... உனக்கு இந்த வருஷத்துக்குள்ள ஒரு கல்யாணத்தைப் பண்ணிப் பார்த்து அடுத்த வருஷம் ஒரு பேரனையோ பேத்தியையோ மடியில போட்டுக் கொஞ்சணும்ன்னு ஆசை... தரகர் எத்தனையோ போட்டோக்களைக் கொண்டு வந்து காட்டியிருக்கார். அந்தப் போட்டோக்களையெல்லாம் நானே பார்த்து வேண்டாம்னு ரிஜக்ட் பண்ணியிருக்கேன். ஆனா இன்னிக்குத் தரகர் கொண்டு வந்து இருக்கிற எல்லா வரன்களுமே டாப். படிப்பிலேயும் சரி, அழகு அந்தஸ்திலேயும் சரி ஒருத்தரை ஒருத்தர் மிஞ்சுகிற மாதிரி இருக்காங்க. தரகர் மொத்தம் பதினஞ்சு போட்டோ கொண்டு வந்தார். அதுல பதினோரு பேரை செலக்ட் பண்ணியிருக்கேன். நீ அந்தப் பதினோரு பேர்ல ஒருத்தரை செலக்ட் பண்ணிக் கொடுத்துட்டா நான் கல்யாண வேலைகளைப் பார்க்க ஆரம்பிச்சுடுவேன். மேகலை சிரித்தாள்..

    அந்தப் பதினோரு பேர்ல நீங்களே ஒருத்தரைப் பார்த்து செலக்ட் பண்ணிடுங்களேன்.

    இதோ பாரம்மா..! இந்தக் கல்யாண விஷயத்துல உன்னோட சந்தோஷம்தான் முக்கியம். நானாப் பார்த்து ஒரு மாப்பிள்ளையை செலக்ட் பண்றதைக் காட்டிலும் நீ செலக்ட் பண்றதுதான் எனக்கு சந்தோஷத்தைக் கொடுக்கும். ஒரு ரெண்டு நிமிஷம் கீழே வந்துட்டுப் போம்மா...

    சரி... நடங்கப்பா... சொன்ன மேகலை துப்பட்டாவை எடுத்து மேலே போர்த்திக் கொண்டு அறையினின்றும் வெளிப்பட்டாள். இருவரும் இறங்கி கீழே இருந்த ஹாலுக்கு வந்தார்கள்.

    சோபாவின் ஓரமாய் பவ்யமாய் உட்கார்ந்திருந்த தரகர் எழுந்து நின்று மேகலைக்கு ஒரு கும்பிடு போட்டார்.

    குழந்தே! நல்லாயிருக்கியாம்மா..?

    ரொம்ப ரொம்ப நல்லாயிருக்கேன்... நீங்க எப்படி இருக்கீங்கய்யா?

    உங்க மாதிரியான மனுஷாளோட பழக்கம் இருக்கும் போது என்னோட சௌக்கியத்துக்கு என்னம்மா குறைச்சல்...?

    தரகர் சொல்லிக் கொண்டே தன்னுடைய மஞ்சள் பையைப் பிரித்து உள்ளேயிருந்து ஆல்பம் சைஸில் இருந்த ஃபைல் ஒன்றை எடுத்தார்.

    அம்மா! இன்னிக்கு நான் கொண்டு வந்திருக்கிற வரன்கள் எல்லாமே பேஷான வரன்கள். இதுல ஏழெட்டு வெளிநாட்டு வரன்களும் இருக்காங்க... அய்யாவும் நீயும் பார்த்து எந்த வரனை ஓ.கே. பண்ணினாலும் உடனடியாய் பேச்சை ஆரம் பிச்சுடலாம்...

    தரகர் நீட்டிய ஆல்பத்தை வாங்கிக் கொண்ட மேகலை சோபாவுக்கு சாய்ந்து உட்கார்ந்து அதைப் புரட்ட முயன்ற போது பக்கத்தில் உட்கார்ந்திருந்த கஜபதியின் சட்டைப் பாக்கெட்டில் இடம் பிடித்து இருந்த செல்போன் தன்னுடைய ரிங்டோனை வெளியிட்டது. எடுத்து 'அழைப்பது யார்' என்று பார்த்தார்.

    ஒரு புது நம்பர்.

    குரல் கொடுத்தார்.

    யாரு..?

    நீங்க பூர்ணா க்ரூப்ஸ் கஜபதிதானே?

    ஆமா...! நீங்க...?

    நான் செளந்தரபாண்டியனின் பர்சனல் செக்ரட்ரி ராம பாஷ்யம் பேசறேன்.

    எந்த செளந்தரபாண்டியன்...?

    என்ன மிஸ்டர் கஜபதி... இப்படிக் கேட்கறீங்க...? செளந்தர பாண்டியன் என்கிற பேரை நான் சொன்ன மாத்திரத்தில் உங்களுக்கு அவரைப் பற்றின எல்லா விஷயங்களும் ஞாபகத்துக்கு வரவேண்டாமா? பழைய கோட்டை மங்கலம் ஜமீன் பரம்பரையில் வந்த செளந்தரபாண்டியனைத்தான் சொல்றேன்.

    கஜபதி சோபாவினின்றும் எழுந்து பவ்யமாய் நின்று விட்டார். "எ... எ... என்னது...! பழைய கோட்டை மங்கலம் ஜமீன் பரம்பரை

    Enjoying the preview?
    Page 1 of 1