Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Oru Dozen Keerthanai Enna Vilai?
Oru Dozen Keerthanai Enna Vilai?
Oru Dozen Keerthanai Enna Vilai?
Ebook163 pages1 hour

Oru Dozen Keerthanai Enna Vilai?

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Bakkiyam Ramasamy is the pseudonym of Ja. Raa. Sundaresan (born June 1, 1932). He was born in Jalakandapuram, Salem district. His pen name is a combination of his mother's name (Bakkiyam) and his father's (Ramasamy). His first breakthrough was the publication of the story Appusami and the African Beauty in Kumudam in 1963. Since then he has published a number of serialized novels, stage plays and short stories featuring the same set of characters. Some of the stories were published under various pen names including Yogesh, Vanamali, Selvamani, Mrinalini, Sivathanal, and Jwalamalini. He also worked as a journalist in Kumudam, eventually retiring in 1990 as its joint editor.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580112303174
Oru Dozen Keerthanai Enna Vilai?

Read more from Bakkiyam Ramasamy

Related to Oru Dozen Keerthanai Enna Vilai?

Related ebooks

Related categories

Reviews for Oru Dozen Keerthanai Enna Vilai?

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Oru Dozen Keerthanai Enna Vilai? - Bakkiyam Ramasamy

    http://www.pustaka.co.in

    ஒரு டஜன் கீர்த்தனை என்ன விலை?

    நகைச்சுவைக் கட்டுரைகள்

    Oru Dozen Keerthanai Enna Vilai?

    Nagaichuvai Katturaigal

    Author:

    பாக்கியம் ராமசாமி

    Bakkiyam Ramasamy

    For more books

    http://www.pustaka.co.in/home/author/bakkiyam-ramasamy-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. ஒரு 'மூவி’ங் ஸ்டோரி

    2. கனவு ரசிகை

    3. தாத்தாக்கள் பலவிதம்

    4. சின்னத்துரை – 'நடிப்புப் புயல் அழகி' ரம்யசுந்தரியின் பேட்டி

    5. எழுதாத காவியம்

    6. எல்லாரும் இந்நாட்டு மன்னர்

    7. ஹாரிங்டன் ரோடில் ஆயாக்கள் சங்கம்

    8. சில நேரங்களில் சில ஊர்கள்...

    9. ஐயோ பாவம் பாண்டு!

    10. மச்சினனுங்க மாறிட்டானுக!

    11. விரதம் ஸ்பெஷல்

    12. ஒரு டஜன் கீர்த்தனை என்ன விலை?

    13. பூனைக் கூட்டமும் நானும்...

    14. மிஸ்டர் மிகையை ஒப்புக்கொள்ளுங்கள்!

    15. பசியால் வாடிய நரியொன்று...

    16. மாறி வரும் தீபாவளிகள்

    17. விளக்குமாறா, வாக்கும் க்ளீனரா? எது பெட்டர்?

    18. ராசி - கொஞ்சம் யோசி

    19. அவள் கீழே இறங்கி நடக்கணும்!

    முன்னுரை

    அனுபவங்களைக் கதைகளாக எழுதுவதைவிடக் கட்டுரைகளாக எழுதுவது சுலபம், சுவாரசியம். அதுவும் நகைச்சுவைக் கட்டுரைகளாகச் சித்திரிக்கும் போது எழுதுகிறவருக்கு ஏற்படும் ஆனந்தம் அலாதி. (படிக்கிறவர்களுக்கு? அது அவர்களைத்தான் கேட்க வேண்டும்.)

    கறந்த பால் கறந்தபடி என்பதுபோல நடந்த சம்பவத்தை அப்படியே தருவது ஒரு ரகம். அதில் நகைச்சுவை கலப்பது, பாலில் ஏலக்காய், குங்குமப்பூ, பாதாம், சேர்ப்பது போல.

    இந்தக் கட்டுரைகள் அனைத்திலும் எனது கண்ணோட்டம் சற்று மிகைப்படுத்தப்பட்டிருந்தாலும் நகைச்சுவை கருதி அதை நீங்கள் மன்னித்து விடலாம்.

    — பாக்கியம் ராமசாமி.

    ***

    1. ஒரு 'மூவி’ங் ஸ்டோரி

    உலகத்தில் உள்ள ஜீவராசிகளில் மூஞ்சூறு மிக வித்தியாசமான குணாதிசயங்களை உடையது. ரசகுல்லா வேறு, குலோப் ஜாமுன் வேறு என்பது போல், மூஞ்சூறு வேறு, எலி வேறு.

    வெள்ளைக்காரக் குழந்தைகளும் பெரியவர்களும் 'மூ'வை எப்படித்தான் செல்லப்பிராணிகளாக வளர்க்கிறார்களோ,

    (அந்தப்பெயரை அடிக்கடி எழுதவே கை கூசுகிறது. படிக்க அருவறுப்பாகிறது. ஆகவே, 'மூ' என்றே அதைக் குறிப்பிடுவோமாக.)

    எவ்வுயிரையும் தன் உயிர்போல் நினை என்று கூறிய மகான் 'மூ' வைப் பார்த்திருக்க மாட்டார் என்று தோன்றுகிறது.

    பார்த்திருந்தால் எவ்வுயிரையும் - 'மூ' நீங்கலாக - தன் உயிர் போல் நினை என்றுதான் கூறியிருப்பார்.

    சே! அது ஒரு பிராணியா? அதைப் பார்த்தாலே குமட்டுகிறது. எங்கிருந்தாவது தலையை நீட்டி ரோஸ் நிற உதட்டை ஆட்டிக் காட்டிவிட்டு மறையும்போது நமக்கு எவ்வளவு கோபம் கொந்தளிக்கிறது. அதனுடைய மார்க்கமே சாக்கடை மார்க்கம்.

    'மூ' வை அத்தனை சுலபமாக விரட்ட முடியாது. அதைக் கூண்டு வைத்துப் பிடிக்க இயலாது.

    பத்தாயிரம் வீரப்பன்கள் நின் கீழ் ஆவரோ அம்மா! என்று தமிழ்ப் புலவர்களால் பாடப்பட வேண்டிய பிராணி அது.

    சாம்பல் நிறத்தில் வழுவழு என்று - எலும்பே கிடையாதோ? - உவ்வே - மூக்கு முதுகு எல்லாம் ஒரே சீர். ஒரு மேடு கிடையாது, பள்ளம் கிடையாது.

    எலி மாதிரி தனியாக அழகான வால் உண்டா? ஊஹும், முதுகே வால். வாயே முகம். முகமே வாய் - சித்த வைத்தியர்கள், மருந்தே உணவு உணவே மருந்து என்பது போல.

    அது சஞ்சரிக்கும் இடம் வீடு முச்சூடும்.

    ஒரு சின்னச் சந்துகூட இல்லாமல் வீடு கட்ட முடியுமா? பாத்திரங்கள் என்று கீழே வைக்காமல் குடித்தனம் நடத்த முடியுமா?

    சுவர் ஓரமாக ஒரு பீரோ, அலமாரி, டி. வி. என்று வைப்பது தவறா? சோபாவைச் சுவர் ஓரமாகத்தானே போட வேண்டும்?

    பெரிய பங்களா மாதிரி என்றால் சோபாக்களை ஒரு ஹாலில் போடலாம்.

    மிடில் கிளாஸ் மாதவன்கள் சுவரோரமாகத்தானே போட வேண்டியிருக்கிறது.

    எப்படியோ ஒரு 'மூ' வந்து நண்பர் சுதர்ஸனத்தின் வீட்டில் புகுந்து விட்டது.

    ராத்திரியில் நிம்மதியாகத் தூங்கி ஒரு வாரம் ஆகிறது! பயந்து சாகிறோம். அதைப் பிடிக்கிற ஆள் யாராவது இருந்தால் சொல்லு. நூறு ரூபாகூடக் கொடுத்து விடுகிறேன் என்று மனம் வெம்பி சுதர்ஸனம் சொன்னான்."

    எலிக்கூண்டு டிரை பண்ணினாயோ? என்றேன்.

    ஓ! கம்பி சந்துலே தப்பிப் போயிடறது

    எலிப்பொறி டிரை பண்றதுதானே!

    அய்யோ! பொறின்னா 'சத்தாக்' என்று ஆட்டம் குளோஸ்! சவூதி அரேபியா வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு. ரொம்பக்குரூரம். அந்த வெட்டுகிற பொறியெல்லாம் வேண்டாம். கொஞ்சம் நல்ல முறையிலே முயற்சி பண்ணி அதைத் துரத்திட்டால் போதும் என்றான் பயந்தாங்கொள்ளி சுதர்ஸனம்.

    சுதர்ஸனத்தின் மாமா கிராமத்திலிருந்து வந்திருந்தார். ஏழு பெண்களுக்குக் கல்யாணம் முடித்து மகிழ்ச்சியோடிருக்கும் தீரர் அவர். அவரால் இதுவரை முடியாத காரியமே இல்லை என்று சுதர்ஸன் சொல்லுவான்.

    மாமாவிடம் ‘மூ' பிரச்சனையை விடு! என்றேன்.

    மூன்று நாளாக மாமா முயற்சி செய்து கொண்டிக்கிறார். வீடு ஒரே அமர்க்களம். மாமா சமையலறையைத் துவம்சம் செய்யறது தாங்கலை. 'மூ’வை விரட்டுகிறேன் பார் பேர்வழி என்று ஊறுகாய் ஜாடியெல்லாம் உடைத்துவிட்டார். ஒரு வருஷத்து மாங்கா வடு - கிடைக்குமாடா? அந்த மாங்கா வடுத்தண்ணி மறுபடி - சுதர்ஸனம் குரல் தழதழத்தது.

    அவனுடைய மனைவிக்கு ஏற்கனவே இடுப்புப் பிடிப்பு. குனிகிற சமாசாரமென்றால் அழுவாள்.

    மாமா அவளை பத்து நிமிஷத்துக்கு ஒரு தரம் சமையலைறையை ஒழித்துக் கொடுக்கச் சொல்லி உத்தர விட்டவாறிருந்தார்.

    'மூவுக்கு உடம்பு பூரா மூளை. சர்வ வியாபி."

    சமையல் அறையைக் காலி செய்யும்போது இது மட்டும் அங்கே இருக்க அதுக்கென்ன பைத்தியமா? ஹாலுக்கு எப்போதோ ஓடியிருக்கும்.

    சத்தியமாக பீரோ பின்னால்தான் போச்சு என்று கற்பூரத்தை அணைக்கத் தோன்றும். ஆனால் அங்கே போய்விட்டு எப்படியோ ஷூ ரேக்கின் அடியில் போயாயிற்று.

    மிகப்பழைய காலத்தில் நாடியா என்றொரு ஸ்டண்ட் நடிகை.

    அவளை எதிரிகள் துரத்தி வருவார்கள். குதிரையில் அவள் வேகமாகச் சென்று தப்பிப்பது வழக்கம்.

    துரத்திவரும் எதிரிகளிடமிருந்து ஒரு சவுகரியமான இடத்தில் நின்று கொண்டு 'ஹேய்!' என்று உற்சாகக் குரல் கொடுப்பாள்.

    உடனே துரத்தும் பட்டாளம் அந்த இடத்துக்கு ஓடும். அவள் இன்னொரு இடத்துக்கு ஓடி மறைவாள். பிறகு அங்கிருந்து வெளிப்பட்டு 'ஹேய்!' என்று ஒரு குரல். பட்டாளம் உடனே அந்த இடத்துக்கு விரைய அவள் ஓட...

    நண்பர் வீட்டுக்கு வந்த 'மூ' வும் ஒரு நாடியாதான்.

    ஏதோ ஒரு இடத்தில் ஒளிந்துகொண்டு சும்மா இருக்கக் கூடாதா?

    புத்தக அலமாரிக்கு அடியிலமர்ந்து கொஞ்சமாகத் தலையை நீட்டிவிட்டுச் சரேலென உள் வாங்கிக் கொள்ளும்.

    ஒரு கோலைக் கொண்டு வந்து, அலமாரிக்கு அடியில் குத்தினால் அது அங்கே இருந்தால்தானே!

    சமையலறைக்குள் அதுபோய் எண்ணெய், நெய் வைக்கும் அலமாரிக்குள் நுழைந்திருக்கும். நான் இங்கு இருக்கிறேன் என்பதாகத் தலையை அங்கிருந்து நீட்டி நீட்டிக் காட்டும்.

    'மூ’விடம் சில நல்ல பண்புகள் உண்டு. அது எலி போல அநாகரிகமாகத் துணிகளைக் கடிக்காது. காகிதத்தைக் குதறாது.

    கீச் கீச் என்று ஒரு சத்தம் கொடுக்கும்.

    பூனைகீனை வளர்க்கிறதுதானே! என்று நண்பர் ஒருத்தர் சொன்னார்.

    நண்பர் வீட்டில் ஒண்ணுக்கு ரெண்டாக பூனை இருக்கிறது. ஆனால் பூனை மகா சமிதியில், பூனைகள் 'மூ'வைப் பிடிப்பதில்லை என்று தீர்மானம் போட்டு உறுதியாக அந்த பாலிஸி கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

    ஆட்சிகள் மாறினாலும் தலைமை மாறினாலும் அந்தக் கொள்கையில் மாறுதல் ஏதும் கிடையாது.

    கண்ணெதிரே 'மூ' போனாலும் பூனைகள் பார்த்துக் கொண்டே இருக்கிறதே தவிர அதன்மீது பாய்வதில்லை.

    சுதர்ஸனத்தின் மாமாவுக்கும் தோல்விதான். 'மூ’வைப் பிடிக்கவில்லை.

    எங்க கிராமத்திலேயெல்லாம் இந்தப் பிரச்சனை கிடையாது. ஆந்தைகள் லபக்குனு பிடித்துவிடும் என்றார்.

    ஒரு ஆந்தை வேணும்னா வளர்த்துப் பாரேன் என்றதும் சுதர்ஸனமே ஆந்தை மாதிரி விழித்தவாறு, இங்கே பட்டணத்து ஃபிளாட்டில் ஆந்தைக்கு எங்கே போவது? கிளி மாதிரி வீட்டுக்குள் ஆந்தை வளர்க்க முடியுமா என்ன? அது மாதிரி கத்தினால் எல்லா பிளாட்டுக்காரர்களும் அலறி அடித்துக் கொண்டு எழுந்து கலாட்டா செய்வார்கள் என்றான்.

    எதிர் வீட்டில் ஒரு சமையல்கார மாமி இருந்தாள். நல்ல தாட்டியான சரீரம்.

    அந்த வீட்டிலிருந்த 'மூ’வை அவள் ஒரு தரம் மிதித்து விட்டாளாம். அது அங்கேயே சுருண்டு பரலோகம் போய்ச்

    Enjoying the preview?
    Page 1 of 1