Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kalyaana Varam
Kalyaana Varam
Kalyaana Varam
Ebook111 pages52 minutes

Kalyaana Varam

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Vidhya Subramaniam born in 1957. She was introduced in Mangaiyar Malar through a story Mudhal Konal in 1982. She has written more than 100 short stories and novels. She has got lots of rewards in her 27 years of career. Rewards like Anandhachari Arakattalai Virudhu for her essay Thennang Kaatru, Tamilnadu government award for her Vanathil Oru Maan short stories, Bharat State Bank's first prize for her Aagayam Arugil Varum essays, Kovai Lilly Deivasigamani Virudhu for her Kanniley Anbirunthal short stories. Beyond the Frontier has her outstanding short stories which are translated to english. Anthology of Tamil Pulp Fiction also has her 2 short stories.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580105703124
Kalyaana Varam

Read more from Vidya Subramaniam

Related to Kalyaana Varam

Related ebooks

Reviews for Kalyaana Varam

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kalyaana Varam - Vidya Subramaniam

    http://www.pustaka.co.in

    கல்யாண வரம்

    Kalyaana Varam

    Author:

    வித்யா சுப்ரமணியம்

    Vidhya Subramaniam

    For more books

    http://www.pustaka.co.in/home/author/vidhya-subramaniam-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    1

    வங்கியில் கூட்டம் அதிகமாக இருந்தது. அய்யப்பன் கவுண்டரில் செலான் நிரப்பிக் கொடுத்து டோக்கனை வாங்கிக் கொண்டு, ஒன்றோடொன்று இணைந்திருந்த பிளாஸ்டிக் சேர்களில் ஒன்று காலியாக, அதில் அமர்ந்து கொண்டு தன் டோக்கன் எண் எப்போது எலக்ட்ரானிக் திரையில் பளிச்சிடும் என்று அரை நிமிடத்திற்கொரு முறை திரும்பிப் பார்த்தான். காலை நேரச் சுறுசுறுப்பில் இருந்தது வங்கி. ப்ரிப்கேஸ் சகிதம் வந்திருந்த இளைஞர்களும், கூந்தல் பரந்த யுவதிகளும், வழுக்கைத் தலை ரிடயர்டு கிழவர்களும் செலான் எழுதித் தர யாராவது அகப்படுவார்களா என்று அலைபாயும் கண்களோடு வந்த மடிசார் புடவை மாமியும், சத்தமாய்ச் சந்தேகம் கேட்டுக் கொண்டிருந்த காய்கறிக்காரி என எல்லோரையும் பார்த்துக் கொண்டிருந்ததில் பொழுதுபோயிற்று.

    போர்டில் அவன் டோக்கன் நம்பர் பளிச்சிட சட்டென்று எழுந்து கவுண்டர் அருகில் போனான்.

    ஹன்ட்ரட்ஸ் குடுத்துடவா?

    ஐநூறுக்கு மட்டும் டென்ஸ் மத்ததெல்லாம் ஹன்ட்ரட்ஸ் குடுங்க.

    கவுண்டரிலிருந்து நோட்டுகள் கை மாற சற்றுத் தள்ளி நின்று எண்ணினான். சரியாக இருந்தது. கையிலிருந்த சின்ன லெதர் பேகிற்குள் பணத்தைப் பத்திரமாய் வைத்துக் கொண்டு வெளியில் வந்தான். வங்கிக்கு வெளியில் டிராபிக் ஜாமாகியிருந்தது. கார்களும் டூவீலர்களும் ஆமை வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்தது. அய்யப்பன் ஒரு காருக்கு இடுக்கில் நுழைந்து ரோடைக் கடக்க முயன்றான். சைக்கிள் காரன் ஒருவன் குறுக்கே வர அவனுக்கு இடம்விட்டுச் சற்று ஒதுங்கி ஒரு வழியாய் எதிர் திசைக்கு வந்ததும் தான் கவனித்தான். அக்குளில் இடுக்கி வைத்திருந்த லெதர் பையைக் காணவில்லை.

    தெய்வமே...! உள்ளுக்குள் அணுகுண்டு வெடித்தாற் போல் நிலைகுலைந்து போனான்.

    என் பை.. பை... குழறலாய் வாயில் வந்த வார்த்தைகள் டிராபிக் சத்தத்தில் அமுங்கிப் போயிற்று. விழிகள் பிதுங்கிச் சிவந்து வாய் கோண, முகம் வியர்க்க சுற்று முற்றும் பார்த்தான். போகிற வருகிற எல்லார் கையிலும் தன் பையைத் தேடினான். வாங்கிய இரண்டே நிமிடத்தில் பதினைந்தாயிரம் ரூபாய் பணத்தைப் பறிகொடுத்துவிட்டு அவன் விழி பிதுங்கி நிற்பது தெரியாமல் மனிதர்கள் அவசரமாய்ச் சென்று கொண்டிருந்தார்கள்.

    அய்யப்பன் அதிர்ச்சியில் உடல் தள்ளாட ஒரு கடை வாசலில் உட்கார்ந்து தலையைப் பிடித்துக் கொண்டான்.

    இன்னா அய்யரே உடம்புக்கென்ன? தல சுத்துதா? சோடா வாங்கியாரச் சொல்லவா.

    கடைக்காரன் அவனுக்குத் தெரிந்தவன் தான் அவசரமாய்க் கிட்டே வந்து கேட்டான்.

    நாடார்... என்... பை... யாரோ...

    பையக்காணுமா... எங்கவிட்ட...?

    இல்ல... பணத்தோட... யாரோ பிடுங்கிண்டு…

    அட ராமா..! என்ன சொல்ற அய்யரே... எவ்ளோ பணம் வெச்சிருந்த?

    பதினஞ்சாயிரம்... இப்பதான் பாங்க்லேர்ந்து எடுத்துண்டு... அய்யப்பன் முகத்தை மூடிக்கொண்டு சின்னக் குழந்தை மாதிரி கேவியழ நாடார் பதற அவர்களைச் சுற்றிக் கூட்டம் கூடியது. ஆளாளுக்கு விஷயம் கேட்டு உச்சுக்கொட்டி பரிதாபப்பட்டபடி நடந்தார்கள்.

    பையப் பிடுங்கினது கூடவா தெரியல? என்னா அய்யரே பச்சப் புள்ளையாட்டம் சொல்றயே!

    நிஜமாவே தெரியல நாடார் கிராஸ் பண்ணி வந்தப் பறம் தான் பையில்லங்கறதே உறைச்சுது!"

    ஒரு வேளை எங்கனா விழுந்திருக்குமோ. டேய் பசங்களா ஒடுங்கடா எங்கனா பை கிடக்குதான்னு போய் பாருங்க.

    கடை பையன்கள் ஓடினார்கள்.

    அது சரி அப்படியே விழுந்திருந்தாலும் அது அங்கேயே இருக்குமா என்ன? எவனாவது தூக்கிட்டுப் போயிருந்தா? யாரோ சொன்னார்கள்.

    கவலைப்படாதே அய்யரே உழைச்ச பணம் அவ்ளோ சுலபமா போய்டாது. நாடார் சமாதானப் படுத்தினார், கடைப் பையன்கள் உதட்டைப் பிதுக்கியபடி திரும்பி வந்தார்கள்.

    ஒரு வேளை கீழே கிடைக்கும் என்ற நப்பாசை சிதறிப் போயிற்று.

    போலீஸ்ல ஒரு கம்ப்ளெயிண்ட் எழுதிக் கொடுத்துடு அய்யரே. உடனே போ அவங்க உடனே தேடினா ஆளைப் பிடிச்சுடலாம். இந்த ஏரியால தான் எங்கனா இருப்பான். போலீஸ்காரங்களுக்கு தெரியும் எவன் எடுத்திருப்பான்னு. சீக்கிரம் போ. நாடார் அவனை எழுப்பினார்.

    போலீஸா... அங்கெல்லாம் போய் பழக்கமில்லையே,

    பணம் தொலைச்சு மட்டும் பழக்கமா?

    இல்ல...

    "அப்பறம் என்ன? நமக்கு வேணும்னா போகத்தானே வேணும். சீக்கிரம் போங்க.'

    கூட்டம் தங்கள் கடமை முடிந்துவிட்டதுபோல் கலைய. நாடார் - கல்லாப்பெட்டியில் அமர்ந்து கொண்டு வியாபாரத்தை கவனிக்க ஆரம்பித்தார்.

    அய்யப்பன் எழுந்தான். போலீஸ் ஸ்டேஷன் நோக்கி நடந்தான். பணம் தொலைந்த அதிர்ச்சியில் இன்னும் கால்கள் நடுங்கியது. ஒன்றா இரண்டா பதினைந்தாயிரம்! மாமாவின் பிஎஃப் லோன். அம்மாவின் ஆபரேஷனுக்கு கட்ட வேண்டிய பணம். ஆஸ்பத்திரியில் அவனுக்காக அத்தனை பேரும் காத்திருப்பார்கள். பணம் தொலைந்து விட்டது என்றால்... தாங்குவார்களா? எப்படி சொல்லப் போகிறேன்? அய்யப்பன் சின்னக் குழந்தை மாதிரி அழுது கொண்டே ஸ்டேஷனுக்குள் நுழைந்தான்.

    ***

    என்னடா சொல்ற... மாமா முகம் வெளிறக் கேட்டார்

    அய்யப்பன் சாஷ்டாங்கமாய் அவர் காலில் விழுந்து கதறினான்.

    பணத்தை கோட்டை விட்டுட்டேன் மாமா..

    என்னடா இது சினிமாக்கு டிக்கெட் கிடைக்கலன்னு கேஷூவலா சொல்றாப்பல சொல்றயே எங்க விட்ட?... கடவுளே. நா என்ன செய்வேன் இப்பொ? மாமா பித்துப் பிடித்தாற்போல் தலையில் கை வைத்துக் கொண்டு உட்கார்ந்தார்.

    அய்யு நிஜமாதான் சொல்றயா?

    அய்யப்பன் திரும்பினான். பவித்ரா, மாமாவின் பெண் தான் கேட்டாள்.

    என்ன பவித்ரா...விளையாடற நேரமா இது? அதுவும் அம்மாமி உசிரோடயா.

    எப்டி தொலைஞ்சுது பணம்?

    அய்யு நடந்ததைச் சொன்னான்.

    போ... அய்யு... எப்படியாவது பணத்தைக் கண்டு பிடி. இல்ல கடன் வாங்கு. எங்கம்மா ஆபரேஷன் நடக்கணும். இல்லாட்டி அம்மாவை மட்டுமில்ல அப்பாவையும் சேர்த்து இழந்துடுவேன் நான். அங்க பாரு, அப்பா நெஞ்சைப் பிடிச்சுண்டு உக்காந்திருக்கறதைப் பார்த்தா எனக்கு பயம்மா இருக்கு.

    Enjoying the preview?
    Page 1 of 1