Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Uyarndhavargal
Uyarndhavargal
Uyarndhavargal
Ebook114 pages58 minutes

Uyarndhavargal

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Sivasankari (born October 14, 1942) is a renowned Tamil writer and activist. She has carved a niche for herself in the Tamil literary world during the last four decades with her works that reflect an awareness on social issues, a special sensitivity to social problems, and a commitment to set people thinking.

She has many novels, novellas, short stories, travelogues, articles and biographies to her credit. Her works have been translated into several Indian languages, English, Japanese and Ukrainian. Eight of her novels have been made into films, having directed by renowned directors like K. Balachander, SP Muthuraman and Mahendran. Her novel 'Kutti' on girl child labour, filmed by the director Janaki Viswanathan, won the President's Award. Sivasankari's novels have also been made as teleserials, and have won the national as well as regional 'Best Mega Serial' awards.

As a multi-faceted personality, she has won many prestigious awards including Kasturi Srinivasan Award, Raja Sir Annamalai Chettiyar Award, Bharatiya Bhasha Parishad Award, 'Woman of the year 1999-2000' by the International Women's Association, and so on.

'Knit India Through Literature' is her mega-project involving intense sourcing, research and translations of literature from 18 Indian languages, with a mission to introduce Indians to other Indians through culture and literature.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580101803311
Uyarndhavargal

Read more from Sivasankari

Related to Uyarndhavargal

Related ebooks

Reviews for Uyarndhavargal

Rating: 5 out of 5 stars
5/5

1 rating1 review

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

  • Rating: 5 out of 5 stars
    5/5
    Unable to write anything due to river in the eyes

Book preview

Uyarndhavargal - Sivasankari

http://www.pustaka.co.in

உயர்ந்தவர்கள்

Uyarndhavargal

Author:

சிவசங்கரி

Sivasankari

For more books

http://www.pustaka.co.in/home/author/sivasankari-novels

Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

All other copyright © by Author.

All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

பொருளடக்கம்

அத்தியாயம் 1

அத்தியாயம் 2

அத்தியாயம் 3

அத்தியாயம் 4

அத்தியாயம் 5

அத்தியாயம் 6

அத்தியாயம் 7

அத்தியாயம் 8

1

மாநிறம், தீர்க்கமான மூக்கு, வெட்கம் கலந்த பயத்தில் இங்கும் அங்கும் துறுதுறுக்கும் கண்கள். எட்டணாவின் விளிம்பைப் போல அலைஅலையாய் நெளிந்த தலைமுடியிலிருந்து பிரிந்து வந்து நெற்றியில் சுருண்டு விளையாடும் முடிக்கற்றை. என்றோ இடப்பட்டு இன்று நகங்களில் மட்டும் சிகப்பு அர்த்தசந்திரனாய் காணப்பட்ட மருதோன்றி சாயம். பிஞ்சு விரல்கள்.

சற்றுத் தள்ளி, நாற்காலியில் அமர்ந்து, விழிகளைத் தாழ்த்தி அரைக்கண் பார்வையில் பார்த்தபோது குருமூர்த்தியின் மனசு கிளுகிளுத்தது.

நிறம் சற்று கம்மியாக இருந்தபோதிலும், பெண் அழகுதான். இல்லை என்று யாரும் சொல்ல மாட்டார்கள்.

கொஞ்சம் ஒடிசல். அதனால் என்ன?

பக்கத்தில் இருக்கும் அப்பா பார்த்தாலும் பரவாயில்லை என்று தைரியத்தை வரவழைத்துக்கொண்டு இன்னொரு முறை தலை உயர்த்தி குருமூர்த்தி அவளை ஏறிட்டான்.

காலை மடித்து, பாதம் பதுங்கும் முயல்குட்டியாய் சற்றே வெளிப்பட, அமர்ந்திருப்பவளின் மென்மையான கையைப் பற்றி, அந்த வழவழப்பான விரல்களைக் கன்னத்தில் அழுத்திக்கொண்டால் எப்படி இருக்கும்?

கற்பனை தாளமாட்டாத சிலிர்ப்பை உள்ளுக்குள் வாரி இறைத்தது. குருமூர்த்தி அவசரமாய் தலையைத் திருப்பி அப்பா வெங்கடாசலத்திடம் கவனத்தைச் செலுத்த முயன்றான்.

போண்டாவையும் மைசூர்பாகையும் தின்று முடித்து தட்டிலேயே கையைக் கழுவிக்கொண்ட வெங்கடாசலம், 'என்ன?' என்பதுபோல் ஒரு தரம் குருமூர்த்தியை நிமிர்ந்து பார்த்தார். பின், பெண்ணின் தந்தை சுந்தரேசன் பக்கமாய் திரும்பி, தொண்டையை செருமிக்கொண்டார்.

அப்ப, நாங்க புறப்படறோம். இன்னும் பத்து நாளுக்குள்ள என் மகளும் ஒரு நடை வந்து பாத்திட்டுப் போயிட்டா, சட்டு புட்டுனு முடிச்சிடலாம்... என்ன இருந்தாலும் ஒரு பொம்பளையோட அபிப்ராயத்தையும் கேட்டுடறது நல்லது இல்லையா? என் சம்சாரம் இருந்தா கவலை இல்ல... மகராசி, எப்பவோ போய்ச் சேர்ந்திட்டா. மருமக, பெரிய மகனோட சம்சாரம் இருக்கறாதான்... ஆனாலும் அவ எதிலயும் ரொம்பப் பட்டுக்கிடமாட்டா. அவளும் சரி, மகனும் சரி- ' நீங்க பாத்து செஞ்சா சரி'னு சொல்லிடு வாங்க...

அண்ணன் சங்கரனும் அண்ணி புஷ்பாவும் குடும்பத்தில் எந்த நல்லது கெட்டதிலும் பங்கெடுக்க விரும்பாமல், சுயநலத்தோடு தள்ளியிருப்பதைப் புது மனிதர்கள் எதிரில் விட்டுக்கொடுக்க விரும்பாமல் அப்பா சமாளிப்பது சின்னதாக சிரிப்பைத் தோற்றுவிக்க, கஷ்டப்பட்டு குருமூர்த்தி அதை அடக்கிக் கொண்டான்.

மக கமலா கோயமுத்தூர்ல இருக்கானு பேரே ஒழிய, திரும்பிப் பார்த்தா அப்பா, அப்பானு கூப்பிட்டுக்கிட்டு வந்து நிப்பா... மாப்பிள்ளை ராஜாமணியும் தங்கமானவரு... நேத்து மெட்ராஸுக்கு வந்திட்டு, இன்னிக்குப் பெண் பார்க்க எங்ககூட கமலாவும் வர்றதாதான் இருந்துச்சு... ஆனா பாருங்க, திடும்னிட்டு என் பேரன் ரவி மேல ஆத்தா விளையாட வந்திருக்காளாம்... 'நல்ல காரியத்த நிறுத்த வேணாம், நீங்களும் தம்பியும் போய் பார்த்திட்டு வந்திடுங்க… ரவிக்கு ரெண்டு தரம் தலைக்கு ஊத்தினப் புறம் நா வந்து பாத்துக்கறேன்'னு கடுதாசி போட்டுட்டா... அதான் பத்து நாள் கழிச்சு நல்ல விதமா முடிச்சிடலாம்னு சொன்னேன்...

அவர் பேசியதிலிருந்து அப்பாவுக்கும் பிள்ளைக்கும் பெண் பிடித்து விட்டது என்பது தெளிவாகப் புரிய சுந்தரேசன் அத்தனை பற்களையும் காட்டிக்கொண்டு சப்தமில்லாமல் சிரித்தார்.

அதுக்கென்னங்க... உங்க விருப்பம் போல ஆகட்டும். ஆக்கப் பொறுத்தவங்களுக்கு, ஆறப்பொறுக்கறதா கஷ்டம்!

குழைந்து, நெளிந்து பேசியவர், குரலைத் தழையவிட்டார்.

பாயில் காணப்பட்ட பிசிறுகளை நிரடிக்கொண்டு மெதுவாகப் பேசினார்.

நா சாதாரண க்ளார்க்கா இருந்து ரிடையர் ஆனவன். அஞ்சு பொண்ணுங்க... அஞ்சு பெத்தா அரசனும் ஆண்டி ஆவான்னு சொல்லுவாங்க... பெரியவங்க செஞ்ச புண்ணியம், நா இன்னமும் தெருவுக்கு வராம மானமா வாழ்ந்திட்டு இருக்கேன்... பொண்ணுங்க கண்ணுக்கு லட்சணமா இருக்கக்கொண்டு, 'இதக் கொண்டா, அதக் கொண்டா'ன்னு அடாவடி பண்ணாதவங்களா முதல் நாலு மாப்பிள்ளைங்களும் அமைஞ்சிட்டாங்க... மாலதிதான் கடைசி... ஏதோ என்னால முடிஞ்சத செஞ்சி, அவளையும் நல்ல விதமா கரையேத்திட்டேன்னா, அப்பாடானு உக்காந்திடுவேன்! தெரியாத்தனத்துல வரிசையா பெத்தாச்சு... ஆனாலும் அதுங்களுக்கு நல்ல வழி காட்டி, வாழ்க்கையை அமைச்சுக் கொடுக்கறது நம்ப பொறுப்புதானே? உங்க சம்பந்தம் எங்களுக்குக் கிடைச்சதுன்னா, அதை பூர்வஜன்ம பாக்கியமாதான் எடுத்துப்பேன்... உங்க மக வந்து பாத்து முடிவு எடுக்கறது பத்தி சந்தோஷம்... ஆனா, சீர்வரிசையா என்னென்ன எதிர்பார்க்கறீங்கனு கோடி காட்டிட்டா நா தயார் பண்ணிக்க வசதியா இருக்கும்...

கடைசி வார்த்தைகளை மென்று விழுங்கி சுந்தரேசன் பேச, வெங்கடாசலம் மீசையை வழித்துவிட்டுக்கொண்டு இதமாகப் புன்னகைத்தார்.

எனக்கு ஒரே ஒரு மகதான்... ஆனாலும் வசதி அத்தனை இல்லாத காரணத்தால் அவள் ஒருத்தருகிட்ட ஒப்படைக்கறதுக் குள்ள நா பட்ட பாடு, அந்தப் பெருமாளுக்குத்தான் தெரியும்... அனுபவிச்ச கஷ்டங்களை மறந்திட்டு, மகனுக்கு மருமக தேடறப்போ சீர், செனத்தின்ற பேர்ல பெத்தவங்கள வசமா கறக்க ஆசைப்பட்டேன்னா, அப்புறம் நா மனுஷனாப் பொறந்ததுக்கு அர்த்தமே இல்ல... என் மகனை நா உங்களுக்கு விற்கப் போறதில்லிங்க... மாறா, எங்க கஷ்ட, நஷ்டங்களப் பகிர்ந்துகிட்டு சுமைகளை சுமக்க உங்க மகளை எங்க வீட்டுக்கு மருமகளா நீங்க அனுப்பப் போறீங்க... உங்களுக்குப் பிரியமானதை, முடிஞ்சத உங்க மகளுக்கு செஞ்சு நீங்க அனுப்புங்க, போதும்! என் மகன் கை நிறைய சம்பாதிக்கறான், பெண்டாட்டிய அருமை பெருமையா வச்சுக் காப்பாத்த அவனுக்கு வக்கு இருக்கு... அவ்வளவுதான்! இது விஷயமா பேச வேற ஒண்ணுமே இல்ல...

பேசிய கையோடு வெங்கடாசலம் எழுந்து நின்றார்.

இரண்டு கைகளையும் கூப்பினார்.

Enjoying the preview?
Page 1 of 1