Uchimeethu Vaanidinthu...
5/5
()
About this ebook
Read more from Vidya Subramaniam
Oru Naal Iravu Rating: 0 out of 5 stars0 ratingsUllam Kuliruthadi Rating: 0 out of 5 stars0 ratingsAtchaya Paathiram Rating: 5 out of 5 stars5/5Androru Naal Rating: 3 out of 5 stars3/5Nadhavadivanavale Kannamma Rating: 4 out of 5 stars4/5Muthal Paarvai Rating: 5 out of 5 stars5/5Unakkey Uyiraanen Rating: 2 out of 5 stars2/5Veezhven Endru Ninaithayo? Rating: 4 out of 5 stars4/5Thandanai Rating: 0 out of 5 stars0 ratingsKasthuri Maane... Rating: 4 out of 5 stars4/5Nilavum Malarum Rating: 0 out of 5 stars0 ratingsChinna Chinna Minnalgal Rating: 0 out of 5 stars0 ratingsUdal Inge Uyir Ange Rating: 5 out of 5 stars5/5Ullam Kavarven Rating: 5 out of 5 stars5/5Madhavi Pon Mayil Rating: 5 out of 5 stars5/5Engirundhu Vanthayadi Rating: 5 out of 5 stars5/5Shanthi Nilava Vendum Rating: 0 out of 5 stars0 ratingsSuzhal Rating: 5 out of 5 stars5/5Kundrena Nimirnthu... Rating: 0 out of 5 stars0 ratingsOttrai Roja Rating: 5 out of 5 stars5/5Purusha Nila Rating: 0 out of 5 stars0 ratingsThennangkaatru Rating: 5 out of 5 stars5/5Ennuyire... Rating: 5 out of 5 stars5/5Mann Bommai Rating: 5 out of 5 stars5/5Kaadhal Enbathu... Rating: 5 out of 5 stars5/5Thodaamal Naan Malarvean Rating: 5 out of 5 stars5/5Kanniley Anbirunthal Rating: 0 out of 5 stars0 ratingsAagasa Thoothu Rating: 5 out of 5 stars5/5Shyamala... Rating: 5 out of 5 stars5/5Aagasa Garudan Rating: 5 out of 5 stars5/5
Related to Uchimeethu Vaanidinthu...
Related ebooks
Indru Muthal Aanantham... Rating: 0 out of 5 stars0 ratingsAagayam Arugil Varum Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Solla Vandhean… Rating: 0 out of 5 stars0 ratingsOomai Kuyil Rating: 5 out of 5 stars5/5Vedikkai Manithargal…! Rating: 5 out of 5 stars5/5Shanthi Nilava Vendum Rating: 0 out of 5 stars0 ratingsOru Poo Uthirum Rating: 5 out of 5 stars5/5Kaadhal Kanakku Rating: 0 out of 5 stars0 ratingsSollamaley... Sangeetha Rating: 0 out of 5 stars0 ratingsTheruvil Vizhuntha Maalaigal Rating: 0 out of 5 stars0 ratingsAnandha Alaigal Rating: 0 out of 5 stars0 ratingsMaaresa Maangal Rating: 5 out of 5 stars5/5Asaiye Alai Poley Rating: 0 out of 5 stars0 ratingsSuriyagrahanam Rating: 5 out of 5 stars5/5Vasanthathai Nokki... Rating: 5 out of 5 stars5/5Kadhalai Vittu Vidu...! Rating: 5 out of 5 stars5/5Chinnanchiru Kiliye! Rating: 5 out of 5 stars5/5Nadhiyai Thedi Vandha Kadal Rating: 5 out of 5 stars5/5Kanave Kalaiyadhe! Rating: 5 out of 5 stars5/5Innoru Kaadhal Kathai Rating: 0 out of 5 stars0 ratingsKalyana Raagam Rating: 5 out of 5 stars5/5Kaagitha Odangal Rating: 0 out of 5 stars0 ratingsSavithriyin Kathapaathiram Rating: 4 out of 5 stars4/5Inba Kaatru Veesattum... Rating: 5 out of 5 stars5/5Kakitha Roja Rating: 5 out of 5 stars5/5Ammavukku Oru Veedu Rating: 5 out of 5 stars5/5Concrete Manasugal Rating: 4 out of 5 stars4/5Moondru Mudichu Rating: 5 out of 5 stars5/5Gopura Vaasal Rating: 0 out of 5 stars0 ratingsThandanai Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Uchimeethu Vaanidinthu...
1 rating0 reviews
Book preview
Uchimeethu Vaanidinthu... - Vidya Subramaniam
http://www.pustaka.co.in
உச்சிமீது வானிடிந்து...
Uchimeethu Vaanidinthu...
Author:
வித்யா சுப்ரமணியம்
Vidhya Subramaniam
For more books
http://www.pustaka.co.in/home/author/vidhya-subramaniam-novels
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
1
வெய்யில் உச்சிக்கு ஏறியிருந்தது. சத்யா நடையை வேகப்படுத்தினாள். அண்ணாசாலை உச்சி வெயிலில் வியர்த்துக் கொண்டிருந்தது. சாலை கடக்க சிக்னலருகில் சற்று நின்று, பச்சை மனிதன் தெரிந்ததும் கடக்க ஆரம்பித்தாள். நடு சாலையில் படார் என்று செருப்பு வார் அறுந்து போயிற்று. இத்தனை நாழி அது தாங்கியதே ஆச்சரியம் தான். அறுந்த செருப்பை குனிந்து கையிலெடுத்துக் கொண்டாள். அருகிலிருந்த மனிதர்கள் இரக்கத்தோடு அவளை பார்த்தபோது அவமானமும் எரிச்சலும் மேலிட்டது. தார் சாலை உள்ளங்காலை சுட்டெரித்தது. பாதம் பொள்ளிப் போயிற்று. ஓடினாள். நிழல் கிடைக்க நின்று சூட்டை தணித்துக் கொண்டாள். வேறு நல்ல செருப்பு வாங்க வேண்டுமென்றால் அறுபது ரூபாயாவது வேண்டும். அறுபது என்பது இப்போதைய நிலையில் யோசிக்க வைக்கும் தொகை.
சத்யா செருப்பு தைப்பவன் யாராவது இருக்கிறார்களா என்று கண்களை சுழல விட்டாள். அந்த இடத்தில் இல்லை. எனவே பார்த்துக் கொண்டே நடந்தாள். அரைமணி நேர நடைக்குப் பிறகு மரத்தபடி ஒன்றின் கீழ் கிழவன் ஒருவன் அமர்ந்திருந்தான். சத்யா அறுந்த செருப்பை அவன் முன் போட்டாள். அவன் அதை ஆராய்ந்து விட்டு உதடு பிதுக்கினான். ரொம்ப போய்டுச்சும்மா. தெச்சாலும் நிக்காது.
பாருங்க பெரியவரே, எப்டியாவது ஒரு பத்து நாள் தாங்கறா மாதிரி தெச்சுக் கொடுங்க. புது செருப்பு வாங்கக் கைல காசில்ல.
கிழவன் சட்டென்று நிமிர்ந்து அவளைப் பார்த்து விட்டு ஏதோ இரக்கம் தோன்றியவனாய் புது தோல் எடுத்து கொஞ்சமாய் வெட்டி அறுந்த செருப்பில் பொருத்தி நன்றாகவே தைத்துக் கொடுத்தான்.
பத்து நாள் இல்ல. பத்து வாரம் தாங்கும். போட்டுக்கம்மா
நன்றி. எவளோ வேணும்?
அஞ்சு ரூபா கொடு தாயி.
ஐந்து! மலைத்தாள் சத்யா. ஆயினும் அவசரத்திற்கு உதவியிருக்கிறான். கஷ்டப்பட்டிருக்கிறான். பேரம் பேசக் கூடாது. இப்படி நினைத்தவள் கைப்பை திறந்து ஐந்து ரூபாய் நோட்டை எடுத்துக்கொடுத்தாள். காலில் செருப்பணிய, தைரியம் வந்தது. கொஞ்ச நாழி இருந்த எரிச்சலும் அவமானமும் பறந்தது. எல்லா கஷ்டமும் இன்னும் கொஞ்ச காலம் தான். விக்னேஸ்வரன் அரபு நாட்டுக்குப் போகும் வரை தான். அதன் பின்னர்... நூறு ரூபாய்க்கு செருப்பு வாங்கிக் கொள்ளலாம். ஆயிரம் ரூபாய்க்கு மாதம் ஒரு புடவை எடுத்துக் கொள்ளலாம். ஆயிரம் ரூபாய்க்கு புடவை எடுத்துக்கொண்டேன் என்று அவனுக்கு கடிதம் எழுதலாம்.
மடச்சி போயும் போயும் ஆயிரம் ரூபாயிலா புடவை எடுப்பார்கள்? ஒரு ஐயாயிரத்திற்கு வாங்கிக் கொள்ள மாட்டாயா மக்கு?- பதில் கடிதம் எழுதி, கூட பணம் அனுப்பி வைப்பான். புடவை என்றில்லை வித விதமாய் நகைகளும் வாங்கி அணியலாம். அரபு நாடு எண்ணை வளம் கொழிக்கும் நாடு. பிச்சைக்காரனும் காரில் போகும் நாடு. இந்திய உழைப்பாளிகள் அதிக அளவில் அங்கே உழைப்பையும் திறனையும் கொட்டிக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் கொஞ்ச நாளில் விக்னேஸ்வரனும் அவர்களில் ஒருவனாகி விடுவான், ஒட்டகத்திற்கு கூட குளிர் வசதிக் கொட்டகை கட்டியிருக்குமாமே. அப்படிப்பட்ட நாட்டில் சாதாரண மனிதனும் சுகவாசியாய்த் தானே வாழ்வான்!
சத்யா லேசாய் புன்னகைத்துக் கொண்டாள். அம்மாவை நினைத்துக் கொண்டாள்.
லவ் பண்றயாடி நாயே?
என்ன தப்பு அதுல?
எதிர்த்தா பேசற? கெட்ட கேட்டுக்கு உனக்கு காதல் கேக்குதோ?
அப்படி என்ன கேடுகெட்டு போய்ட்டேன்?
அம்மா பதில் சொல்லாமல் விழித்துப் பார்த்தாள்.பிறகு லேசாய் முகம் மாற்றி நாளைக்கு அவனை அழச்சுக்கிட்டு வா நான் பார்க்கணும் என்றாள்.
வரேன். ஆனா புண்படுத்தறா மாதிரி பேசின... அம்மான்னு பார்க்கமாட்டேன்.
பணக்காரனா?
இல்ல.
என்ன வேலை செய்யறான்?
"எலக்ட்ரீஷியன்
அம்மா பெரிதாக சிரித்தாள். ஒரு வேளை கஞ்சி ஊத்துவானா?
என்றாள் நக்கலாக.
உன் புருஷன் உனக்கு ஊத்தினதை விட அதிகமாவே ஊத்துவான்.
சத்யா அதே நக்கலோடு பதில் சொன்னாள். அம்மா முகம் சிறுத்துப் போயிற்று. புருஷனுக்கும் அவனுக்கும் எந்த விஷயத்திலும் ஒத்துப்போகவில்லை. அவன் மேற்கில் நின்றால்.. இவள் கிழக்கில் நின்றாள். அவனுக்கு ரேஸ் உண்டு, சீட்டு உண்டு, லேசாய் குடியும் உண்டு. போதாதா. வீடு யுத்தகளமாயிற்று மாற்றி மாற்றி சொல்லால் அடித்துக் கொண்டார்கள். அவள் பேச்சு தாங்காமல் பிடரியை பிடித்து இழுத்து சில நேரம் அறைந்திருக்கிறான். ஒரு நாள் இரவு குடித்து விட்டு தாறுமாறாய் விழுந்து கிடந்தவன் மிதி வண்டி என்று ஏற அதே இடத்திலேயே உயிரை விட்டான். சத்யாவுக்கு அப்போது பத்து வயது. பள்ளிக்குப் போய்க் கொண்டிருந்த பெண்ணை பணமில்லை என்று சொல்லி பாதியில் படிப்பை நிறுத்தினாள் அம்மா. பக்கத்தில் தெரிந்த வீடுகளுக்கு பத்துப் பாத்திரம் தேய்க்க அனுப்பினாள். எக்ஸ்போர்ட் கார்மென்ட்ஸ் கம்பெனி ஒன்றில் தானும் நாள் கூலிக்கு வேலை செய்தாள். அம்மாவுக்கு சம்பளம் முன்னூறு வந்தது. சத்யாவுக்கு வீட்டு வேலை செய்ததில் மாதம் நூற்றி எழுபது கிடைக்க ஒரு வேளை சாப்பாடு சிரமமின்றி கிடைத்தது. சத்யா தன் ஆசைகளை அடக்கப் பழகிக் கொண்டாள், பதினாறு வயதில் வீட்டு வேலை செய்ய கூச்சமாக இருந்தது. வாலிபப் பசங்களின் பார்வை தாங்க முடியாமல் போயிற்று. எனக்கும் உன் கம்பெனிலயே வேலை வாங்கிக் குடும்மா என்றாள் ஒரு நாள். பார்க்கறேன் முதலாளி கிட்ட கேட்டுப் பார்க்கறேன். அதுவரை இந்த வேலை செய்
சொன்னபடியே அம்மா ஒரே வாரத்தில் அவளை வேலைக்கு அழைத்துச் சென்றாள். அதற்கடுத்த வாரத்தில் வேலையை விட்டு நின்றாள் சத்யா. ஏண்டி என்று கேட்ட அம்மாவை முறைத்துப் பார்த்தாள். கையைப் பிடிச்சு இழுக்கறான் அந்த முதலாளிக் கிழவன்
என்றாள்.
அவ்ளோதானே?
அம்மா அலட்சியமாகக் கேட்டதும் வியந்து போனாள்.
இதெல்லாம் பார்த்தா ஆகாது. நாலு காசு பார்த்தா தான் ஒரு வேளை சாப்ட முடியும். எந்த பொம்பளைக்கு இந்த கஷ்டம் இல்லன்ற? பொறுத்துக்கறவ தான் பொம்பளை.
எதைப் பொறுத்துக்கறவ? இதையெல்லாமா?
சீறினாள் சத்யா.
ஏழைன்னு அவ்ளோ இளக்காரமா?
பணக்காரின்னா இப்படி கையைப் பிடிச்சு இழுத்துடுவானா தைரியமா? அது இருக்கட்டும். உன் கையைப் பிடிச்சு இழுத்திருக்கானா? சும்மா இருந்தயா நீ...?
அம்மா