Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Oru Viyalakkilamai Vidintha Pothu
Oru Viyalakkilamai Vidintha Pothu
Oru Viyalakkilamai Vidintha Pothu
Ebook148 pages46 minutes

Oru Viyalakkilamai Vidintha Pothu

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Oru Viyalakkilamai Vidintha Pothu

Read more from Rajeshkumar

Related to Oru Viyalakkilamai Vidintha Pothu

Related ebooks

Related categories

Reviews for Oru Viyalakkilamai Vidintha Pothu

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Oru Viyalakkilamai Vidintha Pothu - Rajeshkumar

    19

    1

    "அதோ...! அந்த அபார்ட்மென்ட்தான்...!"

    தேனுகா டிரைவர்க்கு அடையாளம் சொல்ல அந்த கால்டாக்ஸி வேகம் குறைத்து ‘மானஸரோவர்’ அபார்ட்மெண்ட்டுக்கு முன்பாய் போய் நின்றது. சுற்றிலும் வேப்ப மரங்கள். காற்றுக்கு அசைந்தன.

    லேட்டாகுமாம்மா...? டிரைவர் கேட்க தேனுகா கீழே இறங்கிக் கொண்டே சொன்னாள்.

    பத்தே நிமிஷம்...!

    தேனுகா அபார்ட்மென்டை நோக்கிப் போனாள். கேரட் நிற மைசூர் சில்க் சேலையில் அழகாய் இருந்த தேனுகாவுக்கு இருபத்தி மூன்று வயது. பி.பி.ஏ. படித்துவிட்டு ஒரு தனியார் கம்பெனியில் பி.ஆர்.ஓ. உத்தியோகம். கோவைவாசியான அவள் இன்று காலைதான் சென்னைக்கு வந்தாள். சென்னை வந்ததற்குக் காரணம்...

    டிடிங்.......! (ஸாரி! தேனுகா அதற்குள் அபார்ட்மென்ட் படிகள் ஏறி சாத்தியிருந்த அந்த கதவுக்கு முன்பாய் நின்று அழைப்பு மணிக்கு வேலை கொடுத்துவிட்டாள். அப்புறம் பேசுவோம்.)

    கதவு மெல்லத் திறந்தது.

    ஒரு தொள தொள மேக்ஸிக்குள் சுலபமாய் நுழைந்திருந்த அந்தப் பெண் தன் பெரிய விழிகளை விரித்து - உதடுகளைக் குவித்து வாவ் என்று கத்தினாள்.

    தேனுகா... நீயாடி...?

    நானே...! உள்ளே நுழைந்தாள் தேனுகா.

    உனக்கு சென்னைக்கெல்லாம் வர வழிகூடத் தெரியுமா...?

    எப்படியோ கேட்டுகிட்டு வந்துட்டேன்...

    இன்னிக்கு சென்னைல மழை பொளந்து கட்டப் போகுது!

    ஏதோ... என்னால் முடிஞ்ச உதவி...! எப்படியிருக்கே ரம்யா...?

    பார்த்தா எப்படி தெரியுது...?

    கொஞ்சம் வெயிட் போட்டிருக்கே... ஹஸ்பெண்ட் நல்லா கவனிக்கிறார் போலிருக்கு...

    கண்ணு வெக்காதே... வா... மொதல்ல வந்து குந்து... சென்னை பாஷைக்குத் தாவினாள் ரம்யா.

    தேனுகா சோபாவுக்கு போய் சாய்ந்தாள்.

    நாஷ்டா ஏதாச்சும் துன்றியா?

    வேண்டாம்மே... வவுறு... பேஜாரா கீது.

    இன்னா சங்கிதி... இம்மாம் தூரம் வந்திருக்கே?

    நா... கண்ணாளம் கட்டிக்கப்போறேன்.

    இன்னாது... கண்ணாளமா?

    ஆமா...

    ரம்யா சென்னை பாஷையிலிருந்து விடுபட்டாள்.

    நிஜமாவா சொல்றே...?

    இதுல பொய் சொல்ல என்ன இருக்கு? தோள்களைக் குலுக்கினாள் ரம்யா. நம்ப முடியவில்லை...! பொறுப்பில்லாத அம்மா, எல்லா கெட்ட பழக்கங்களையும் குத்தகைக்கு எடுத்திருக்கிற அண்ணன். ஊதாரித்தனமான தங்கச்சி. இப்படி ஒரு சூழலில் இருக்கிற உனக்கு எப்படி கல்யாணம் நடக்கும்ன்னு எத்தனையோ ராத்திரி யோசனை பண்ணி தூக்கத்தை இழந்திருக்கேன்...!

    தப்பித் தவறி கடவுள் என்மேல கொஞ்சம் இரக்கப்பட்டுட்டார். இந்தா இன்விடேஷனைப்பிடி...! சொன்ன தேனுகா தான் கொண்டு போயிருந்த ஜிப் பேக்கைப் பிரித்து அழைப்பிதழை எடுத்தாள். மிஸஸ் ரம்யா முரளிதரன் என்று பால்பாயிண்ட் பேனாவால் பெயர் எழுதி நீட்டினாள்.

    அடுத்த மாசம் இருபத்தேழாம் தேதி வியாழக்கிழமை கல்யாணம். இடம் கோயமுத்தூர் ஸ்ரீராமலிங்க சௌடேஸ்வரி கல்யாண மண்டபம். நீயும் உன் வீட்டுக்காரரும் ரெண்டு நாளைக்கு முன்னாடியே வந்துடணும்.

    ஷ்யூர்... ஷ்யூர்...! மாப்பிள்ளை என்ன பண்றார்?

    ‘விருட்சம்’ என்கிற ஒரு கம்ப்யூட்டர் சாஃப்ட்வேர் கம்பெனியில் மார்க்கெட்டிங் ஆபீஸரா இருக்கார். பேரு ஹர்ஷவர்த்தன்...

    பேர் வித்தியாசமாயிருக்கு.

    ஆளும் வித்தியாசமானவர்தான்...! வசதியான இடத்திலிருந்து வந்த பெண்ணையெல்லாம் வேண்டாம்ன்னு சொல்லிட்டு என்னைத்தான் கல்யாணம் பண்ணிக்குவேன்னு வீட்ல ஒத்தக்கால்ல நின்னு, உண்ணாவிரத போராட்டமெல்லாம் நடத்தி ஜெயிச்சிருக்கார்...!

    சரியான ‘க.மு.பொ.’ன்னு சொல்லு.

    அதென்ன ‘க.மு.பொ!?

    கல்யாணத்துக்கு முன்னாடியே பொண்டாட்டி தாசன்!

    ஏய்... ரம்யா...!

    டேக் இட் ஈஸி...! சரி... என்ன சாப்பிடறே...? ஏதாவது ஸ்நாக்ஸ் கொண்டு வரட்டுமா...?

    அதெல்லாம் வேண்டாம். ஒரு டம்ளர் ஃப்ரிஜ் வாட்டர் கிடைக்குமா...?

    ஒரு பாட்டிலே தர்றேன்...! ரம்யா எழுந்து போய் ஃப்ரிஜ்ஜைத் திறந்து குளிர்ச்சியால் வியர்த்துப் போயிருந்த மினரல் வாட்டர் பாட்டிலைக் கொண்டு வந்தாள்.

    உனக்கு கல்யாணமாகி ரெண்டு வருஷம் இருக்குமா... ரம்யா...?

    சரியா ஒண்ணே முக்கால் வருஷம்.

    இந்தியாவோட ஜனத்தொகையை நீ எப்போ உயர்த்தப்போறே...?

    அடுத்த வருஷம்...!

    லேட் பண்ணிடாதே...! சொந்தக்கார பெண்கள் உன் முதுகுக்குப் பின்னாடி முணுமுணுக்க ஆரம்பிச்சுடுவாங்க.

    தேனுகா ஃப்ரிஜ் வாட்டரை வயிற்றுக்குக் காண்பித்துவிட்டு எழுந்தாள். என்னோட கல்யாணத்துக்கு கண்டிப்பா வரணும். ஐநூறு கிலோமீட்டர் மெனக்கெட்டு ட்ராவல் பண்ணி சென்னைக்கு வந்திருக்கேன். ‘விஷ் யூ ஏ ஹேப்பி மேரீட் லைஃப்’ன்னு டெலிகிராம் அடிச்சுட்டு இங்கேயே உட்கார்ந்துக்காதே...!

    என்ன தேனுகா...! என்னை இவ்வளவு சீப்பா எடை போட்டுட்டே... நானும் என்னோட கணவரும் கண்டிப்பா உன்னோட கல்யாணத்துல இருப்போம்.

    தேங்க்யூ...!

    மத்தியானம் லஞ்ச் சாப்பிட்டு போலாமில்லையா?

    சரியா போச்சு.... என்னோட சொந்தத்துல இன்னும் ஏழெட்டு பேரை அழைக்க வேண்டியிருக்கு...! அடையாறு, நங்கநல்லூர், வில்லிவாக்கம்ன்னு திசைக்கு ஒருத்தர் வீடு கட்டிகிட்டு உட்கார்ந்துகிட்டிருக்காங்க. கீழே கால்டாக்ஸி நிக்குது. வரட்டுமா...?

    கால்ல சக்கரத்தை கட்டிக்கிட்டு வந்திருக்கே. இனி உன்னை நிறுத்த முடியாது. அட்வான்ஸ் கங்க்ராட்ஸ்...!

    தேங்க்யூ... சொல்லிக்கொண்டே படிகள் இறங்க முயன்ற தேனுகா சட்டென்று நின்றாள்.

    பார்த்தியா... மறந்தே போனேன்...!

    என்ன...?

    தீப்தா இன்னும் அம்பத்தூர் பவ நகரில்தானே குடியிருக்கா...?

    "தெரியலையே...! ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி பீச்சுல ஒரு தடவை பார்த்தது. அதுக்கப்பறம் அவளைப் பார்க்கவேயில்லை. காலேஜ் டேஸ்ல நாம மூணு பேரும் எவ்வளவு க்ளோஸ் ஃப்ரண்ட்ஷிப்போடு இருந்தோம். பட், தீப்தா கல்யாணத்துக்குப் பின்னாடி ஒரேடியா மாறிட்டா. ஒரு போன் பண்ணி பேசறதுகூட கிடையாது. நானே போன் பண்ணி பேசினாலும் ஒரு பிடிப்பு

    Enjoying the preview?
    Page 1 of 1