Aduththa Ilakku
By Rajeshkumar
()
About this ebook
Read more from Rajeshkumar
100-Vathu Pournami Rating: 4 out of 5 stars4/5Dial For Kill Rating: 4 out of 5 stars4/5Raja Ragasiyam Rating: 0 out of 5 stars0 ratingsThirumarana Azhaippithazh Rating: 5 out of 5 stars5/5Sivappu November Rating: 0 out of 5 stars0 ratingsUyir Veelchi Rating: 0 out of 5 stars0 ratingsNanthini Nalai Irakkiral! Rating: 3 out of 5 stars3/5Konjum vanjanai! Rating: 0 out of 5 stars0 ratingsIrapathu Nee Irupathu Naan Rating: 5 out of 5 stars5/5Panchavarna Kili Rating: 0 out of 5 stars0 ratingsKondraal Kondraan Kondren Rating: 5 out of 5 stars5/5Iruttil Parakkum Paravaigal Rating: 0 out of 5 stars0 ratingsVetri Endraal Vivek Rating: 5 out of 5 stars5/5Vidathey Vivek! Vidathey Rating: 4 out of 5 stars4/5Uyir Eduppaan Thozhan Rating: 5 out of 5 stars5/5Piriyamaana Kolaikaran Rating: 5 out of 5 stars5/5June, July, Aaa...! Rating: 4 out of 5 stars4/5Vivek, Vishnu, Oru Vidukathai! Rating: 3 out of 5 stars3/5Rojakkalum Thottakalum Rating: 0 out of 5 stars0 ratingsMaranathin Thethi March 7 Rating: 0 out of 5 stars0 ratingsEngum Vivek! Ethilum Vivek! Rating: 5 out of 5 stars5/5Athiradi Aattam! Rating: 4 out of 5 stars4/5Un Naanum En Neeyum Rating: 5 out of 5 stars5/5Kavanam Vivek Rating: 5 out of 5 stars5/5Neelam Enbathu Niramalla Rating: 0 out of 5 stars0 ratingsVivek Athu Visham Rating: 5 out of 5 stars5/5Naan Nalina Nalliravu Rating: 0 out of 5 stars0 ratingsKaruppu Rattham Rating: 5 out of 5 stars5/5Ore Oru Naal Rating: 5 out of 5 stars5/5Moondru Vinaadi Mugam Rating: 5 out of 5 stars5/5
Related to Aduththa Ilakku
Related ebooks
Otrai Megam Rating: 0 out of 5 stars0 ratingsUllaththaik Killaathey! Rating: 0 out of 5 stars0 ratingsLast Bullet Rating: 0 out of 5 stars0 ratingsKodu Thandathey! Rating: 4 out of 5 stars4/5Dead Line! Rating: 5 out of 5 stars5/5Sivappu Iravu Rating: 0 out of 5 stars0 ratingsOre Oru Naal Rating: 5 out of 5 stars5/5Mugam Illathavan! and Nizhal Por! Rating: 0 out of 5 stars0 ratingsThik Thik December Rating: 0 out of 5 stars0 ratingsMoodu Pani Nilavu Rating: 0 out of 5 stars0 ratingsVinaya Oru Vidukathai Rating: 0 out of 5 stars0 ratingsUlagai Vilai Kel! Rating: 1 out of 5 stars1/5Velvet Killer Rating: 0 out of 5 stars0 ratingsNithyavin Nimishangal Rating: 5 out of 5 stars5/5Mul Munaiyil Mukilaa Rating: 0 out of 5 stars0 ratingsPuthaithu Vaitha Nila Rating: 0 out of 5 stars0 ratingsMatravai Nalliravu 1.05ku Rating: 0 out of 5 stars0 ratingsIraththam Illatha Yuththam Rating: 0 out of 5 stars0 ratingsYamunavin 48 mani neram Rating: 0 out of 5 stars0 ratingsAntha Uyir Piriyum Neram Rating: 0 out of 5 stars0 ratingsNitthiyavin Nimishangal Rating: 0 out of 5 stars0 ratingsPuthiyathaai Oru Puthir Rating: 0 out of 5 stars0 ratingsKuttrangal Kuraivathillai Rating: 5 out of 5 stars5/5Naalaiya Vaanam Rating: 5 out of 5 stars5/5Vivek Ashok Rajesh Rating: 0 out of 5 stars0 ratingsVellai Nizhal! Rating: 0 out of 5 stars0 ratings01.01.2000, Muthal Nimisham Rating: 5 out of 5 stars5/5Karpura Bommaigal Rating: 0 out of 5 stars0 ratingsKaanamal Pona Aagayam Rating: 4 out of 5 stars4/5Thappu+Thappu=Sari! Rating: 3 out of 5 stars3/5
Related categories
Reviews for Aduththa Ilakku
0 ratings0 reviews
Book preview
Aduththa Ilakku - Rajeshkumar
ராஜேஷ்குமார்
ரூ 1300 கோடி புதையல்: இந்த 2011 - இல் ஒட்டு மொத்த உலகமும் உச்சரித்துக் கொண்டு இருக்கும் ஒரு வார்த்தை எது தெரியுமா? ‘எஸ்.எஸ். கெயர் சோப்பா!’ இது ஒரு சொகுசு கப்பலின் பெயர். இந்த கப்பல் கடந்த 70 ஆண்டுகளாக கடலுக்குள் மூழ்கிக் கிடந்தது. அதை இப்போது கண்டு பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு கடந்த செப்டம்பர் மாதம் 26ஆம் தேதிதான் அது முழ்கிக் கிடக்கும் இடத்தைக் கண்டுபிடித்து இருக்கிறார்கள். இவ்வளவு கஷ்டப்பட்டு கண்டுபிடிக்க காரணம் அதனுள் இருக்கும் 1300 கோடி ரூபாய் மதிப்புள்ள வெள்ளிக் கட்டிகள். இந்த எஸ்.எஸ். கெயர் சோப்பா கப்பல் எப்படி கடலுக்குள் மூழ்கியது தெரியுமா...? இரண்டாவது அத்தியாயத்தின் ஆரம்பத்துக்கு வாருங்கள்.
1
கும்பகோணம் ரயில்வே ஸ்டேஷனில் சதாப்தி எக்ஸ்ப்ரஸ் நின்றபோது மத்தியானம் இரண்டு மணி. அது ஏப்ரல் மாதத்தின் ஆரம்பம் என்பதால் வெய்யில் நடுமண்டையில் இறங்கி ஐம்பத்தி ஐந்து வயதான ஞானவேலையும் ஐம்பது வயதான செல்லத்தையும் கிறுகிறுக்க வைத்தது.
செல்லம்...
ரயிலை விட்டு இறங்கி சூட்கேஸோடு நடந்து கொண்டிருந்த ஞானவேல் தோளில் போட்டிருந்த மேல் துண்டால் வழுக்கையில் அரும்பியிருந்த வியர்வையை ஒற்றிக் கொண்டே கூப்பிட்டார்.
ம்...
கூல்ட்ரிங் ஏதாவது சாப்ட்றியா?
வேண்டாங்க... ரயில்ல சாப்பிட்டதே நெஞ்சை கரிக்கிற மாதிரி இருக்கு.
ரயிலைவிட்டு இறங்கிய கும்பலோடு கலந்து இருவரும் ஸ்டேஷனின் எக்ஸிட் வாசலை நோக்கி நடந்தார்கள். செல்லம் ஈனஸ்வரத்தில் கூப்பிட்டாள். கண்களில் ஈரப்பசை தெரிந்தது.
என்னங்க...
சொல்லு...
பட்டீஸ்வரம் ஜோஸியர் சரியா சொல்லிருவாரா?
சொல்லிருவார்...
எனக்கென்னமோ பயம்மாயிருக்குங்க...
என்ன பயம்...?
நம்ம பொண்ணு அபூர்வா உயிரோடு கிடைப்பாளா...?
இதோ பார் செல்லம்...! நீயோ நானோ பயப்படற மாதிரி அபூர்வாவுக்கு ஒண்ணும் ஆயிருக்காது. இப்ப நாம பார்க்கப் போகிற பட்டீஸ்வரம் ஜோஸியர் பலராமய்யர் ஜோதிடக் கலையில் ரொம்பவும் பிரசித்தமானவர். காணாமே போன நிறைய பேரை அவர் கண்டுபிடிச்சு குடுத்து இருக்கார். போலீஸ் டிபார்ட்மெண்ட்ல இருக்கிற பெரிய பெரிய ஆட்களே இவரைத் தேடி வர்றார்ன்னா பார்த்துக்கோயேன்...!
இப்படி சொல்லித்தான் சமயபுரத்தில் இருக்கிற ஒரு ஜோசியர் கிட்டே கூட்டிட்டுப் போனீங்க... அவரும் அபூர்வாவோட ஜாதகத்தைப் பார்த்துட்டு அவளோட உயிர்க்கு எந்த ஆபத்தும் இல்லை. உங்க பொண்ணு ஏதோ ஒரு மனக்குழப்பத்தில் இருக்கா...! இன்னும் ஒரு வாரத்துக்குள்ளே அவ வீடு திரும்பிடுவான்னு சொன்னார். அவர் சொல்லி பத்து நாள் ஓடிப்போச்சு... நம்ம பொண்ணு திரும்பி வர்றதுக்கான அறிகுறியே தெரியலை. எனக்கென்னமோ இந்த ஜோஸ்யர்கள்கிட்ட போறதைக் காட்டிலும் கோயிலுக்கு போய் அந்த தெய்வத்துகிட்டே முறையிடலாம்...
செல்லம்...! ஒரு உண்மையை நீ புரிஞ்சுக்கணும். ஜோஸ்யர்களும் மனிதர்கள்தான். சமயபுரம் ஜோதிடர் நம்ம பொண்ணு அபூர்வாவோட ஜாதகத்தைப் பார்க்கும் போது ஏதாவது தப்பு பண்ணியிருக்கலாம். நமக்கு நேரம் சரியில்லாத போது எல்லாமே சரியாய் நடக்கணும்ன்னு எதிர்பார்க்கிறது தப்பு... இப்ப நாம பார்க்கப் போகிற பட்டீஸ்வரம் ஜோஸியர் துர்க்கையோட அருள் பெற்றவர். அவர் எது சொன்னாலும் பலிக்கும். நம்ம பொண்ணு அபூர்வா கண்டிப்பாய் உயிரோடு கிடைப்பா..
பேசப் பேசவே ஞானவேலின் கண்கள் நீரில் பளபளத்தது. மனைவிக்குத் தெரியாமல் தோளில் போட்டிருந்த துண்டால் கண்களை ஒற்றிக் கொண்டார்.
இருவரும் ஸ்டேஷனை விட்டு வெளியே வந்தார்கள். ஸ்டேஷனுக்கு வெளியே ஆட்டோக்களும், டாக்ஸிக்களும் மரநிழலில் காத்திருக்க - ஞானவேல் ஒரு டாக்ஸியை நோக்கிப் போனார். டிரைவிங் சீட்டில் உட்கார்ந்து நாளிதழைப் புரட்டிக் கொண்டிருந்த அந்த டிரைவர் எழுந்து வந்தார்.
எங்கே ஸார் போகணும்?
பட்டீஸ்வரம்
கோயிலுக்கா?
இல்லேப்பா... அங்கே பலராமய்யர்ன்னு ஒரு ஜோசியர் இருக்கார்... அவர் வீட்டுக்குப் போகணும்...
ஓ... ஜோஸியர் வீடா...? அது ஊரைவிட்டுத் தள்ளி ஒரு தென்னந்தோப்புக்குள்ளே இருக்கே... ரேட் கூட வரும் ஸார்...
இதோ பாரப்பா... உன்கூட பேரம் பேசிட்டு இருக்கிற மன நிலையில் நாங்க இல்லை. ஒரு முக்கியமான விஷயமாய் ஜோஸியரைப் பார்க்கிறதுக்காக கோயமுத்தூரிலிருந்து வந்திருக்கோம். நியாயமான ரேட்டை வாங்கிக்க...
ஞானவேல் சொல்லிவிட்டு டாக்ஸியின் பின்பக்கக் கதவைத் திறந்து கொண்டு உள்ளே போனார். அவரைத் தொடர்ந்து செல்லமும் ஏறி உட்கார்ந்தாள்.
டாக்ஸி புறப்பட்டது. தெருக்களில் வேகம் எடுத்தது. ஐந்து வருடங்களுக்கு முன்பு பார்த்த கும்பகோணம் இப்போது லேசாய் மாறியிருந்தது. சாலையோர கட்டிடங்கள் தங்களுடைய உயரங்களை உயர்த்தியிருந்தது. காற்று வெய்யிலில் சூடாகி முகங்களில் மோதியது.
செல்லம் ஞானவேலின் தோளைத் தொட்டாள்.
என்னங்க...! வீட்டுக்கு போன் பண்ணி நாம கும்பகோணம் வந்து சேர்ந்துட்டதை சுஜா கிட்டயோ, சுதா கிட்டயோ சொல்லிடுங்க
நான் நினைச்சேன்.. நீ சொல்லிட்டே!
சொன்னவர் தன் சட்டைப்பாக்கெட்டிலிருந்து செல்போனை எடுத்து எண்களை அழுத்திவிட்டு காதுக்கு ஒற்றிக் கொண்டார். மறுமுனையில் ரிங் போயிற்று. அடுத்த சில விநாடிகளில் மகள் சுஜாவின் குரல் கேட்டது.
அப்பா! கும்பகோணம் போய் சேர்ந்துட்டீங்களா?
ம்... இப்பத்தான்...
அம்மா எப்படியிருக்காங்க... ஜர்ணியில் ஒண்ணும் பிரச்னையில்லையே...?
ஒரு பிரச்னையும் இல்லை... இப்பத்தான் ரயிலைவிட்டு இறங்கி ஜோஸ்யர் வீட்டுக்கு கால்டாக்ஸியில் போயிட்டிருக்கோம்.
மத்தியானம் சாப்பிட்டீங்களா?
ம்... ட்ரெய்ன்ல தயிர்சாதம் சாப்பிட்டோம்.
அப்பா! கோயில்கள் இருக்கிற ஊர்க்கு போயிருக்கீங்க... நீங்க திரும்பி வரும்போது அக்கா வீட்ல இருப்பா...!
அந்த நம்பிக்கையில்தான் நானும் அம்மாவும் கும்பகோணத்துக்கு புறப்பட்டு வந்திருக்கோம்.
அப்பா...! ஜோஸியரைப் பார்த்த கையோடு உடனே ஊருக்கு புறப்பட்டு வந்துடாதீங்க. ரெண்டு நாள் தங்கியிருந்து எல்லாக் கோயில்களையும் பார்த்துட்டு வாங்க... பட்டீஸ்வரம் துர்க்கையம்மன் ரொம்பவும் பவர்ஃபுல். அக்கா பேர்க்கு அர்ச்சனை பண்ணுங்க...
சரி...! நீயும் சுதாவும் வீட்ல பத்திரமாய் இருங்க.
அப்பா! உங்களுக்கும் அம்மாவுக்கும் எங்களைப் பத்தின கவலையே வேண்டாம். பக்கத்து ப்ளாட் சித்ரா மாமி, எதிர் பிளாட் பார்வதி மாமி எல்லாரும் எங்க மேல கேர் எடுத்துக்கறாங்க...
போலீஸ் ஸ்டேஷனிலிருந்து ஏதாவது தகவல் வந்ததா?
இன்ஸ்பெக்டர் போன் பண்ணி அக்காவோட லேட்டஸ்ட் போட்டோ கிடைக்குமான்னு கேட்டார்..
ஆல்பத்துல இருக்குமே?
ம்... இருந்தது. ஒரு கான்ஸ்டபிள் வந்தார். எடுத்து குடுத்துட்டேன்.
இன்ஸ்பெக்டர் ஏதாவது சொன்னாரா?
அக்காவைத் தேடி கண்டுபிடிக்கிறதுக்காக ஒரு தனி போலீஸ் படை மும்முரமான தேடுதல் வேட்டையில் இருக்காம்..
இதையேதான் ஒரு வாரமாய் சொல்லிட்டிருக்காங்க..
சொல்லும் போதே ஞானவேலுக்கு அழுகையில் தொண்டை அடைத்தது.
அப்பா...! தைரியமாய் இருங்க... நீங்க அழுது அம்மாவையும் அழ வெச்சுடாதீங்க... நீங்க ரெண்டு பேரும் கும்பகோணத்திலிருந்து திரும்பும் போது அக்கா வீட்ல இருப்பா...
சரி...! ரெண்டு பேரும் சாப்பிட்டீங்களா?
இப்பத்தான் சாப்பிட்டோம்
சுதா என்ன பண்றா?
பக்கத்துலதான் இருக்கா... பேசச் சொல்லட்டுமா?
வேண்டாம்... நான் ராத்திரி பேசறேன்...
எந்த ஹோட்டல்ல தங்கப் போறீங்கப்பா?
ஹோட்டல் டெம்பிள் சிட்டி. ஜோஸ்யரைப் பார்த்த பின்னாடிதான் ரூம் போடணும்...
அப்பா...!
என்ன?
ஜோஸியரைப் பார்த்ததுமே அவர் என்ன சொன்னார்ன்னு எனக்கு போன் பண்ணுங்கப்பா...
என்னம்மா இது...? நீ சொல்லணுமா...? கண்டிப்பா போன் பண்றேன்...!
பேசிவிட்டு செல்போனை அணைத்தார் ஞானவேல்.
டாக்ஸியை ஓட்டிக் கொண்டிருந்த டிரைவர் திரும்பிப் பார்க்காமலேயே கேட்டார். என்ன ஸார்.... வீட்ல ஏதவாது பிரச்னையா...? யாராவது காணாமே போயிட்டாங்களா?
ஆமா... என் பெரிய பொண்ணு.
"பயப்படாதீங்க ஸார்...! இந்த ஜோஸ்யர் பலராமய்யர் ரொம்பவும் கெட்டிக்காரர். ஜோதிடத்தை கரைச்சு குடிச்சிருக்கார். பொண்ணு எப்ப கிடைப்பாள்ன்னு துல்லியமாய் சொல்லிடுவார். வெளியூரிலிருந்து நிறைய பேர் வர்றாங்க ஸார்.