Oru Theeppantham Theebamagirathu and Pasparas Pookkal
By Rajeshkumar
()
About this ebook
Read more from Rajeshkumar
Dial For Kill Rating: 4 out of 5 stars4/5Iruttil Parakkum Paravaigal Rating: 0 out of 5 stars0 ratingsKonjum vanjanai! Rating: 0 out of 5 stars0 ratingsThirumarana Azhaippithazh Rating: 5 out of 5 stars5/5Irapathu Nee Irupathu Naan Rating: 5 out of 5 stars5/5Nanthini Nalai Irakkiral! Rating: 3 out of 5 stars3/5Vetri Endraal Vivek Rating: 5 out of 5 stars5/5Raja Ragasiyam Rating: 0 out of 5 stars0 ratingsKondraal Kondraan Kondren Rating: 5 out of 5 stars5/5Vidathey Vivek! Vidathey Rating: 4 out of 5 stars4/5100-Vathu Pournami Rating: 4 out of 5 stars4/5Panchavarna Kili Rating: 0 out of 5 stars0 ratingsSivappu November Rating: 0 out of 5 stars0 ratingsKavanam Vivek Rating: 5 out of 5 stars5/5Vivek, Vishnu, Oru Vidukathai! Rating: 3 out of 5 stars3/5Uyir Eduppaan Thozhan Rating: 5 out of 5 stars5/5Uyir Veelchi Rating: 0 out of 5 stars0 ratingsVivek Athu Visham Rating: 5 out of 5 stars5/5June, July, Aaa...! Rating: 4 out of 5 stars4/5Engum Vivek! Ethilum Vivek! Rating: 5 out of 5 stars5/5Saagaavaram Rating: 4 out of 5 stars4/5Un Naanum En Neeyum Rating: 5 out of 5 stars5/5Rojakkalum Thottakalum Rating: 0 out of 5 stars0 ratingsPiriyamaana Kolaikaran Rating: 5 out of 5 stars5/5Athiradi Aattam! Rating: 4 out of 5 stars4/5Neelam Enbathu Niramalla Rating: 0 out of 5 stars0 ratingsSuspense Rating: 5 out of 5 stars5/5Maranathin Thethi March 7 Rating: 0 out of 5 stars0 ratingsKaruppu Rattham Rating: 5 out of 5 stars5/5Minnalaai vaa vivek Rating: 4 out of 5 stars4/5
Related to Oru Theeppantham Theebamagirathu and Pasparas Pookkal
Related ebooks
January Nilave! Rating: 0 out of 5 stars0 ratingsHongkong Vizhigal and Vidinthal Iravu Rating: 0 out of 5 stars0 ratingsIthu Pothuvazhiyalla Rating: 0 out of 5 stars0 ratingsThaduththaal Kooda Tharuven Rating: 0 out of 5 stars0 ratingsEnna Saththam Intha Neram Rating: 0 out of 5 stars0 ratingsAndha Naal Andha Nimidam Andha Nodi Rating: 0 out of 5 stars0 ratingsKutram Kutrame! Rating: 5 out of 5 stars5/5Raththa Gnayiru Rating: 5 out of 5 stars5/5Rosap Poovu Lesaai Saavu Rating: 5 out of 5 stars5/5Irandil Ontru Rating: 0 out of 5 stars0 ratingsYaro Parkkirarkal and Vilaikku Oru Vaanavil Rating: 0 out of 5 stars0 ratingsYours Murderly Rating: 5 out of 5 stars5/5Uchi Nila! Rating: 0 out of 5 stars0 ratingsHongkong Vizhigal Rating: 0 out of 5 stars0 ratingsVellai Iruttu Rating: 0 out of 5 stars0 ratingsVennilaave Vidai Sollu Rating: 0 out of 5 stars0 ratingsAnu Oru Aacharyam! Rating: 0 out of 5 stars0 ratingsVaikarai Nila Rating: 0 out of 5 stars0 ratingsVellai Roja Karuppu Poonai Rating: 0 out of 5 stars0 ratingsPagal Nera Alligal Rating: 0 out of 5 stars0 ratingsMaranam Unnai Mannikkattum Rating: 5 out of 5 stars5/5Sivappu November Rating: 0 out of 5 stars0 ratingsRoja Mul Kireedam Rating: 4 out of 5 stars4/5Oru Thappu Thaalam Oru Sariyaana Raagam Rating: 5 out of 5 stars5/5Saththamillatha Nayaakara Rating: 0 out of 5 stars0 ratingsEn Nizhalukkum Urakkamillai Rating: 0 out of 5 stars0 ratingsOru Ponmaanaith Thedi Rating: 0 out of 5 stars0 ratingsIthu Sathivelai Rating: 5 out of 5 stars5/5Thee Nila Rating: 0 out of 5 stars0 ratings11 Mani 59 NImidangal 59 Vinaadigal Rating: 5 out of 5 stars5/5
Related categories
Reviews for Oru Theeppantham Theebamagirathu and Pasparas Pookkal
0 ratings0 reviews
Book preview
Oru Theeppantham Theebamagirathu and Pasparas Pookkal - Rajeshkumar
13
1
ஹோட்டல் வைகுந்த்.
கௌண்ட்டரில் அமர்ந்திருந்தார் ஜானகிராமன். கிருதா ஓரங்களில் மட்டும் நரை துவங்கியிருக்க - அவரை நாற்பது வயதுக்கு மதிக்கலாம் போலிருந்தார். நெற்றியில் திருநீற்றுப்பட்டை அடித்து புருவங்களின் மத்தியில் குங்குமப் பொட்டு இட்டிருந்தார். அவர் தலைக்கு மேலே பெரிய சைசில் சாமி படங்கள் வாடாத மாலைகளோடும்... ஊதுபத்தி வாசத்தோடும் இருந்தன.
காலை டிபனுக்கும்... மத்தியான லஞ்ச்சுக்கும்... இடைப்பட்ட மந்த நேரம் முடிந்து ஹோட்டல் சூடு பிடிக்க ஆரம்பித்தது. கல்லாவில் காசை வாங்கிப் போட்டபடியே பரபரவென்று மீல்ஸ் டோக்கன் தர ஆரம்பித்திருந்தார் ஜானகிராமன்.
சர்வர்கள் சுறுசுறுப்பாய் மேஜைகளுக்கு இடையே நகர்ந்தார்கள். சில்வர் பாத்திரங்கள் ஒன்றோடு ஒன்று மோதும் ஓசைகள் வாசல் வரை கேட்டது.
ஒரு கிலோ ஸ்வீட்... அப்புறம்... அரை கிலோ காரம் வேணும்...
பழக்கமான குரல் கேட்டு நிமிர்ந்தார் ஜானகிராமன்.
எதிரே ராகவன் நின்றிருந்தார். பால்ய நண்பர். அவருடைய சம வயதுக்காரர். ஆனால் காலை நேர உடற்பயிற்சி ராகவனைக் கொஞ்சம் வயது குறைத்துக் காட்டியது.
ஜானகிராமன்... பிசி போலிருக்கு...
இயந்திரத்தனமாய் மீல்ஸ் டோக்கன் கிழித்துக் கொடுத்துக் கொண்டே - பதில் சொன்னார் ஜானகிராமன்.
லஞ்ச் டைம் இல்லையா... அதான்... அப்புறமா கொஞ்ச நேரம் ஈ ஓட்ட வேண்டியிருக்கும்... அதிருக்கட்டும்... எங்கே ஒரு வாரமா ஆளைக் காணோம்...?
வெளியூர் போயிருந்தேன்...
ஆபீஸ் வேலையாப் போனியா...?
இல்லை... சொந்த வேலைதான்...
எந்த ஊருக்குப் போயிருந்தே...?
பூர்வீகத்துக்குத்தான்...
நிலபுலனெல்லாம் பார்த்துட்டு வரப் போனியா...?
ஜானகிராமன் சிரித்துக்கொண்டே கேட்டதும் - ராகவன் முறைத்தார்.
இந்தக் கிண்டல்தானே வேண்டாம்கிறது...? ஒரு கிளார்க் உத்தியோகம் இருக்கப் போக, ஏதோ பஞ்சப் பாட்டுப் பாடாம வாழ்க்கை ஓடிட்டிருக்கு... நிலபுலனெல்லாம் இருந்தா எவன்கிட்டேயும் கையைக் கட்டி நிக்காம விவசாயத்தைப் பார்த்துட்டு ராஜ வாழ்க்கை வாழலாமே...
கோபிச்சுக்காதே... சும்மா ஒரு ஜோக்குக்காக அப்படிக் கேட்டேன்... இப்படி எதையாவது சொன்னாத்தானே என்ன வேலையா ஊருக்குப் போனன்னு நீ வாயைத் திறந்து சொல்லுவே...
சற்றே கவலை தெறிக்கும் குரலில் ராகவன் சொன்னார்.
தங்கச்சி சுகந்தா விஷயமாத்தான்...
ஜானகிராமனும் ஸீரியஸ் ஆனார்.
வரன் பார்க்கறதுக்காகப் போயிருந்தியா ராகவன்...?
ஆமா... இந்தப் பக்கம் உள்ளவங்க எல்லாம் இஷ்டத்துக்கு வரதட்சணை கேக்கறாங்க... சொந்த ஊர்ப் பக்கம் போய் சொல்லி வெச்சிட்டு வரலாமேன்னு போனேன்... ஆளுங்க கொஞ்சம் கிராமியத்தனமா இருப்பாங்க... சிட்டியில வளர்ந்த சுகந்தாவுக்கு அந்த கல்ச்சர்... ஆளுங்க... பிடிக்காதுதான்... ஆனா, வரதட்சணை குறைவா கேப்பாங்க... எப்படியாவது சுகந்தாவைச் சம்மதிக்க வெக்கணும்...
ராகவன்... நான் சொல்றேன்னு தப்பா நினைச்சுக்கமாட்டியே...?
சொல்லு...
சுகந்தாவோட விருப்பம்தான் முக்கியம்... வரதட்சணையைப் பார்த்துட்டு இஷ்டமில்லாத இடத்தில் தள்ளி அவ வாழ்க்கையை நரகம் ஆக்கிடாதே...
அவளோட சம்மதம் இல்லாம நான் கல்யாண ஏற்பாடு செய்யமாட்டேன். ஆனா, இந்த வரதட்சணை விவகாரம்தான் என்னைக் கசக்கிப் பிழியுது... ஒவ்வொருத்தரும் டிமாண்ட் பண்றதைப் பார்த்தா எப்படி அவளைக் கரை சேர்ப்பேன்னே தெரியலை... கல்ச்சரா முக்கியம்...? மனுஷங்க மனசுதானே முக்கியம்...?
நீ சொல்றது சரிதான் ராகவன்... ஆனா, பொண்ணுங்களுக்குன்னு மனசுக்குள்ளே சில கனவுகள் இருக்கும்... தனக்கு வரப் போறவன் இப்படி இப்படி இருக்கணும்ன்னு மனசுக்குள்ளே ஒரு பெயிண்ட்டிங் வெச்சிருப்பாங்க... நிர்ப்பந்தத்துக்காக அதுக்கு எதிர் மாறான ஒருத்தரைக் கல்யாணம் பண்ணிக்க வேண்டி வந்தா வாழ்க்கையே பாழாயிடும்...
நீ என்னைத் தப்பா புரிஞ்சிருக்கே ஜானகிராமன்... நான் அவளை கம்ப்பெல் பண்ணப் போறதில்லை... என் சக்திக்கு உட்பட்ட மாப்பிள்ளையைக் கொண்டுவந்து நிறுத்தறேன்... பிடிச்சது பிடிக்கலைன்னு கடைசி முடிவை அவதான் சொல்லணும்...
கம்ப்பெல்ஷன் நேரடியா வரணும்ன்னு அவசியமில்லை... மறைமுகமாகக் கூட வரலாம்... கிராமத்து மாப்பிள்ளை அவளுக்குப் பிடிக்காதுன்னு தெரிஞ்சிருந்தும் அப்படி ஒருத்தர் முன்னால அவளை நிறுத்தினா என்ன அர்த்தம்...?
வேற வழியில்லை ஜானகிராமன்... இன்னிக்கு கிராமத்திலிருந்து ஒரு வரன் வர்றாங்க... அதுக்காத்தான் ஸ்வீட், காரம் வாங்கிட்டுப் போக வந்தேன்...
ஜானகிராமன் ஒரு சர்வரிடம் சொல்ல - எடை நிறுத்து பாலிதீன் கவரில் போட்டுக் கொண்டு வந்தார் அவர்.
எவ்வளவு...?
எவ்வளவா...? உதைப்பேன். இங்கே நீ காசு கொடுத்து எதையாவது வாங்கியிருக்கியா...? தங்கச்சி சுகந்தாவுக்கு நீதான் எல்லாம் செய்வியா...? நானும் என்னால முடிஞ்சதை செய்வேன்... பிகு பண்ணிக்காம எடுத்துட்டுப் போ...
புன்னகைத்துக் கொண்டே ராகவன் விடை பெற்றார்.
அதே விநாடி -
ஈரக்கையை கர்ச்சீப்பினால் துடைத்துக் கொண்டே ஹோட்டலுக்குள் இருந்து ஜானகிராமன் அருகே வந்து நின்றான் அந்த இளைஞன்.
டிபன் சாப்பிட்டதற்கான பில்லை நீட்டினான்.
ஜானகிராமன் பில் தொகையைக் கண்ணில் வாங்கியபடியே - அவன் பணம் தருவதற்காகக் காத்திருக்க மெல்லிய குரலில் சொன்னான் அவன்.
ரொம்பப் பசியா இருந்தது... சாப்பிட்டேன்... என் கையில் காசில்லை... நான் செஞ்சது தப்புத்தான்... இந்தத் தப்புக்காக நீங்க என்ன பனிஷ்மென்ட் கொடுத்தாலும் வாங்கிக்கறேன்...
2
ஜானகிராமன் அந்த இளைஞனை முழுசாய்க் கண்ணில் வாங்கினார்.
ஆறடி உயரத்திற்கு வளர்ந்திருந்த அவன் காரட் நிறத்தில் இருந்தான். வான் ஹுசைன் ரெடிமேட் உடைகள் அவனைக் கவ்வியிருந்தன.
அடர்த்தியான மீசை, பணக்காரக்களை அவன் முகத்தில் இயல்பாகவே படர்ந்திருந்தது. அவனைப் பார்த்தால் பஞ்சத்தில் அடிபட்டுத் திருட்டுத் தனமாகச் சாப்பிட்டவன் போலத் தெரியவே இல்லை.
மெல்லக் குரலை வெளியிட்டார் ஜானகிராமன்.
உன்னைப் பார்த்தா பெரிய இடத்துப் பையன் மாதிரி இருக்கே...?
அவன் தலையாட்டினான்.
ஆமா ஸார்... நான் பெரிய இடத்துப் பிள்ளை தான்... ஆனா, அங்கிருக்கிறவங்களுக்கு ரொம்பச் சின்ன மனசு...
நீ என்ன சொல்றே...?
கார், பங்களான்னு வசதியான குடும்பத்தில்தான் நான் பிறந்தேன்... ஆனா இப்போ அந்த வீட்டைவிட்டு வெளியேறி வந்துட்டேன்...
கோபிச்சிகிட்டு வந்துட்டியா...?
ஆமா... கையிலிருந்த காசை வெச்சு ரெண்டு நாள் சமாளிச்சேன்... இன்னிக்கு கையில் காசில்லை... ஆனா வயித்துக்குத் தெரியுமா...? பசி சுண்டியிழுத்தது... சாப்பிட்டேன்... நீங்க குடுக்கற தண்டனையை வாங்கிக்கறேன்...
அதெல்லாம் இருக்கட்டும்... உன் பேர் என்ன...?
யோகேஷ்...
வீட்டில் என்ன மனஸ்தாபம்...?
எனக்கு அந்த வீட்டில் மரியாதையே இல்லை ஸார்...
அப்பாவோ, அம்மாவோ ஏதாவது கோபமா பேசிட்டாங்களா...?
என்கிட்டே எப்பவுமே எல்லாருமே சிடுசிடுன்னுதான் பேசுவாங்க... ஒரு மனுஷனால அந்த மாதிரிப் பேச்சுக்களை எத்தனை நாளைக்குத்தான் தாங்கிக்க முடியும்...?
அப்படி என்ன பேசிட்டாங்க...?
தண்டச்சோறுன்னு பேசறாங்க ஸார்... நானும் எவ்வளவோ இடத்தில் வேலைக்கு முயற்சி பண்ணிப் பார்த்துட்டேன்... என்னோட படிப்புக்கு ஏத்த உத்தியோகம் கிடைக்கலைன்னா அதுக்காக நான் என்ன செய்ய முடியும்...? அதனால என்னை வார்த்தையாலேயே குத்திக் கிழிக்கிறாங்க ஸார்...
அப்பாகிட்டே ரெண்டு லட்சமோ மூணு லட்சமோ வாங்கித் தொழில் துவங்கலாமே...?
அப்பாவே ஃபாக்டரி வெச்சிருக்கார் ஸார்... அதிலே ஆயிரம் பேருக்கு வேலை குடுக்கறார்...
அப்புறம் என்னப்பா...? அந்த ஃபாக்டரி பொறுப்புக்களைப் பகிர்ந்துகிட்டாலே போதுமே...
அடுத்தவன்கிட்டே போய்க் கையைக் கட்டி ஒரு மூணு வருஷம் வேலை செய்... அப்போதான் உனக்கு நிர்வாகம்ன்னா என்னன்னு தெரியும்னு சொல்றார்... ஆனா என்னோட துரதிருஷ்டம்... எனக்கு எந்த வேலையும் கிடைக்கலை... தண்டச் சோறுங்கற வார்த்தையை எத்தனை நாளைக்குத்தான் காதில் கேட்டுட்டிருக்க முடியும்...? ஒரு வைராக்கியத்தோட வீட்டை விட்டுக் கிளம்பி வந்துட்டேன்...
சில பேருக்கு கண்டிப்பை எப்படிக் காட்டறது, அன்பை எப்படிக் காட்டறதுன்னு தெரியாதுப்பா... நீ அவசரப்பட்டு...
வேண்டாம் ஸார்... நீங்க என்னைச் சமாதானப்படுத்தறதா நினைச்சிக்கிட்டு எங்க வீட்டில உள்ளவங்க பேசின பேச்சுக்களை நியாயப்படுத்திப் பார்க்காதீங்க... ஒரு கௌரவமான வேலை கிடைச்சு... சொந்தக்காலில் நிக்கற வரைக்கும் நான் அவங்களைத் திரும்பிக்கூடப் பார்க்கமாட்டேன்... அதுக்கப்புறமாக்கூட அவங்களா வலிய வந்து பேசினாத்தான் பேசுவேன்... இல்லைன்னா நான் யாரையும் கண்டுக்கப் போறதில்லை... அவங்க யாரோ... நான் யாரோ...
உன்னோட வைராக்கியத்தை நான் பாராட்டறேன்... அதே சமயம் இப்போ உன் அப்பாகிட்டே நான் பேச விரும்பறேன்...
தாராளமாப் பேசுங்க...
எனக்கு அவரோட போன் நம்பர் வேணும்...
டெலிபோன் டைரக்டரியைப் புரட்டிப் பாருங்க... யோகேஷ் இண்டஸ்ட்ரீஸ்ன்னு கொட்டை எழுத்தில் போட்டிருக்கும்... ஃபாக்டரியை என் பேரில்தான் வெச்சிருக்கார்... ஆனா எனக்கு அங்கே வேலை இல்லை...
ஜானகிராமன் டைரக்டரியைப் புரட்ட - சற்றே பெரிய எழுத்துக்களில் வெளியாகி இருந்த அந்த எண்கள் பளிச்சென்று கண்ணுக்குக் கிடைத்தன.
இப்போ அவர் வீட்டில் இருப்பாரா... ஃபாக்டரில இருப்பாரா...?
லஞ்ச்சுக்காக வீட்டுக்கு வந்திருப்பார்...
ஜானகிராமன் எண்களை அழுத்தினார்.
மறுமுனையில் ரிங் போய் ரிசீவர் எடுக்கப்பட்டது. யாரோ ஒரு பெண்ணின் குரல் ரிசீவரில் கேட்டது.
யோகேஷோட அப்பா வேணும்...
நீங்க யாரு ஸார்...? என்ன விஷயம்...?
அவர்கிட்ட கொஞ்சம் பர்சனலா பேசணும்...
எதைப்பத்தி...?
யோகேஷைப் பத்தித்தான்...
ஒரு நிமிஷம் இருங்க...
காத்திருந்தார் ஜானகிராமன்.
முக்கால் நிமிஷ மவுன விரதத்துக்குப் பிறகு - ரிசீவர் கரகரத்த தடிமனான குரலில் வாய் திறந்தது.
ஹலோ...
ஸார்... நீங்க யோகேஷின் அப்பாவா...?
ம்...
"என் பேர்