Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Oru Thevathaiyai Thedi... and Vazhnthu Kaatta Vendum
Oru Thevathaiyai Thedi... and Vazhnthu Kaatta Vendum
Oru Thevathaiyai Thedi... and Vazhnthu Kaatta Vendum
Ebook269 pages1 hour

Oru Thevathaiyai Thedi... and Vazhnthu Kaatta Vendum

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Oru Thevathaiyai Thedi... and Vazhnthu Kaatta Vendum

Read more from Rajeshkumar

Related to Oru Thevathaiyai Thedi... and Vazhnthu Kaatta Vendum

Related ebooks

Related categories

Reviews for Oru Thevathaiyai Thedi... and Vazhnthu Kaatta Vendum

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Oru Thevathaiyai Thedi... and Vazhnthu Kaatta Vendum - Rajeshkumar

    9

    சர்ச்சிலிடம் ஒருவர், 2000ஆம் வருடத்தில் உலகம் முழுவதும் பெண்கள் ஆட்சிதானாம்! என்றார்.

    மைகாட்! அப்பவும் அவுங்க ஆட்சிதானா? என்றார் சர்ச்சில்.

    1

    டெலிஃபோன் மணி கோபமாய் வீறிட்டது.

    மேஜை விளக்கின் ஒளி வட்டத்துக்குள் குனிந்து தடிமனான புத்தகத்தை மேய்ந்து கொண்டிருந்த மௌர்யா புத்தகத்தினின்றும் கலைந்து ரிசீவரை எடுத்தாள்.

    ஹலோ...

    நான் தாமோதர் பேசறேன்.

    ஓ... குட்ஈவினிங்... என்ன இன்னிக்கு உங்க குரல் ஒரு மாதிரி இருக்கு...?

    சரியான கோபத்தில் இருக்கேன்...

    உங்க கோபத்துக்குக் காரணம்...?

    தாமோதர் திருப்பிக் கேட்டான்.

    காரணம் உனக்குத் தெரியாதா மௌர்யா...?

    திடீர்ன்னு ஃபோன் பண்ணி நான் கோபமா இருக்கேன்னு சொல்றீங்க... உங்க கோபத்துக்கான காரணத்தை நான் எப்படிச் சொல்ல முடியும்...?

    கோபத்துக்குக் காரணமே நீதான்...

    நான் என்ன பண்ணினேன்?

    எதுவும் பண்ணாம இருப்பதுதான் என்னோட பொறுமையை சோதிக்குது.

    புரியவில்லை... நான் என்ன பண்ணணும்...?

    கல்யாணம்...

    மௌர்யா லேசாய் நெற்றியில் அடித்துக் கொண்டாள்.

    கடவுளே... இதானா விஷயம்...? நான் என்னவோ ஏதோன்னு ஒரு நிமிஷம் குழம்பிப் போயிட்டேன்...

    கல்யாணம்ங்கறது ஒவ்வொரு பொண்ணும் தவமிருக்கிற விஷயம். இதானான்னு அலட்சியமா சொல்றியே?

    ஆமா... கல்யாணத்துக்கு இப்போ என்ன அவசரம்?

    ரொம்ப சரிதான். மொத்தமா அறுபதாம் கல்யாணம் பண்ணிக்கலாம்னு சொல்றியா?

    தாமோதர்?

    பின்னே என்ன மௌர்யா...! நாம காதலிக்க ஆரம்பிச்சு இருநூறு வாரங்களைத் தாண்டியாச்சு. நம்ம காதலுக்கு உங்க வீட்டிலும் எதிர்ப்பு இல்லை. என் வீட்டிலும் இல்லை. ஆனா நீதான் இழுத்தடிச்சிட்டிருக்கே...

    "நான் ஏன் கல்யாணத்தைத் தள்ளிப் போட்டுட்டு இருக்கேன்னு உங்களுக்குத் தெரியாதா?’

    தெரியும்.

    அது நியாயமான காரணம் இல்லையா?

    அது நியாயமான காரணம்ன்னு நான் சொல்லமாட்டேன்.

    ஏன்..?

    அந்தக் காரணம் உனக்கு வேணா நியாயமாப்படலாம். மத்தவங்களுக்கு நிச்சயமா நியாயமாப்படாது.

    மத்தவங்களைப் பத்தி எனக்குக் கவலை இல்லை. நீங்க என்னைப் புரிஞ்சுக்கிட்டாப் போதும்.

    நீ சொல்றது எனக்குப் புரியுது மௌர்யா... ஆனா...

    ஆனா என்ன... நான் சொல்லும் போதெல்லாம் சரிசரின்னு தலையாட்டிட்டு இப்போ வேதாளம் முருங்கை மரத்தில் ஏறினதுக்கு என்ன காரணம்?

    காரணம் என்னோட அம்மா

    அவங்களா? அவங்க என்ன சொன்னாங்க?

    ‘நீங்க ரெண்டு பேரும் மனசில் என்னதான் நினைச்சிட்டு இருக்கீங்க? கல்யாணம் பண்ணிக்கலாம்னு உங்க மனசில் அபிப்ராயம் இருக்கா இல்லையா?’ன்னு கேட்டாங்க...

    நீங்க என்ன சொன்னீங்க?

    ‘நான் ரெடியா இருக்கேன். மௌர்யாதான் காலத்தைக் கடத்திட்டிருக்கா’ன்னு சொன்னேன்...

    தாமோதர்... பெரியவங்க அப்படித்தான் அவசரப்படுத்துவாங்க. எதையாவது சொல்லி நீங்களா சமாளிக்கறதை விட்டுட்டு... இப்படி என்னைப் போட்டுக் குடுத்துட்டீங்களே...

    சமாளிச்சு சமாளிச்சு... எனக்கு தாவு தீர்ந்து போச்சு... என்னோட அம்மா... அதாவது உன்னோட வருங்கால மாமியார்- பக்கத்தில்தான் நிக்கறாங்க. அவங்கதான் டயல் பண்ணி ரிசீவரை என் கையில் குடுத்து ரெண்டில் ஒரு முடிவை அவகிட்ட கேளுன்னு சொன்னாங்க. நான் இப்போ ரிசீவரை அவங்ககிட்டேயே தந்துடறேன். நீயாச்சு... அவங்களாச்சு...

    தாமோதர்... தாமோதர்...

    மௌர்யா கத்தக் கத்தவே - ரிசீவர் கை மாறியது. சில குழப்ப சப்தங்களுக்குப் பின் - உமையாம்பிகையின் கணீர்க் குரல் கேட்டது.

    ஹலோ...

    சொல்லுங்க அத்தே... நான் மௌர்யா பேசறேன்...

    உமையாம்பிகையின் குரல் காட்டமாய் ஒலித்தது.

    அத்தையா...? தாமோதரோட கையால தாலியை வாங்கிட்டு அப்புறமா அத்தை முறை வெச்சுக் கூப்பிடு. அது வரைக்கும் என்னை அத்தைன்னு கூப்பிடாதே... எனக்குப் பத்திட்டு வருது...

    இல்லை அத்தை...

    ஷ்... மிஸஸ் உமையாம்பிகைன்னு வேணாலும் கூப்பிட்டுக்கோ... ஆனா நீ அத்தைங்கற வார்த்தையை சொல்ல வேண்டாம்.

    கோபமா இருக்கீங்க போலிருக்கு.

    பின்னே இருக்காதா...? கல்யாண விஷயத்தில் அசட்டையா இருக்காதேடி... என் பையனாவே இருந்தாலும் பொதுவான கருத்தைச் சொல்லித்தான் ஆகணும். ஆம்பளைங்க மனசு எப்பவும் ஒரே மாதிரி இருக்காது.

    உங்க பையனோட மனசைப் பத்தி உங்களைவிட எனக்கு நல்லாத் தெரியும் அத்தை... ஹண்ரட் பர்சண்ட் அக்மார்க் முத்திரை குத்தின சுத்தமான மனசு அவருக்கு...

    ஓஹோ.. அந்த தைரியத்தில்தான் இழுத்தடிச்சிட்டு இருக்கியோ..? என்னோட மனசு மாறிடுச்சுன்னா என்ன செய்வே..?

    அத்தே?

    இப்போ தாமோதரை உங்க வீட்டுக்கு அனுப்பி வெக்கறேன். முதல்ல அவன் உன்னைப் பார்ப்பான். நீ ரெண்டில் ஒரு முடிவைச் சொல்லலைன்னா உங்க அப்பாவை பார்த்துப் பேசுவான். ரெண்டு பேர் கிட்டே இருந்தும் ஒரு உறுதியான முடிவு வரலைன்னா.. அப்புறமா நீ என்னை கோவிச்சுக்காதே..

    அத்தே..

    மௌர்யா கூப்பிடக் கூப்பிட - மறுமுனை படக்கென்று மவுனம் சாதித்தது.

    அவஸ்தையோடு அவள் தன் கையிலிருந்த ரிசீவரை அதன் இடத்துக்குக் கொடுத்தாள்.

    மேஜை விளக்கை சரியாய் திருப்பிக் கொண்டு மீண்டும் புத்தகத்தில் கவனத்தைப் பதிக்க முயன்றாள்.

    "Age of Cholas’

    பொன்னிற எழுத்துக்கள் தடிமனான அந்தப் புத்தகத்தின் பக்கவாட்டில் மின்னியது.

    ......According to the - radioCarbondating...

    எழுத்துக்களை உதடுகள் மட்டுமே படித்தன.

    மனசு ஒன்ற மறுத்தது.

    எவ்வளவு நேரம்..?

    பைக் சத்தம் கேட்டதும் கலைந்தாள் மௌர்யா.

    சற்று நேரத்தில் மாடிப் படிகளில் காலடியோசை கேட்டதைத் தொடர்ந்து தாமோதர் அறைக்குள் உற்பத்தி ஆனான்.

    வாட்டர் ப்ளூ நிறத்தில் ஜீன்ஸ். சற்றே தொள தொளப்பான ஃபிட்டிங்ஸ் அவனைக் கவ்வியிருந்தது. இலவம்பஞ்சு வெண்மையில் காட்டன் டி சர்ட்டை மேலே அணிந்து இருந்தான்.

    ஹாய் தாமோதர்...

    ம்...

    உக்காருங்க...

    ம்...

    என்ன சுரத்தே இல்லாம எல்லாத்துக்கும் வெறும் உம்?

    நீதான் மவுனம் சாதிச்சு... என்னையும் வாயைத் திறக்க விடாம பண்ணிட்டிருக்கியே...

    தாமோதர்... கல்யாணத்தை நான் தள்ளிப் போடறதுக்கான காரணத்தை உங்ககிட்டே நான் தெளிவா எடுத்துச் சொல்லியிருக்கேன். நீங்களும் ஒத்துக்கிட்டிருக்கீங்க...

    உன்னோட பிடிவாதத்தாலே வேற வழியில்லாம அரைகுறை மனசோட ஒத்துக்கிட்டிருந்தேன். இப்போ அம்மா துளைச்செடுக்கும்போது என்னால அவங்களுக்கு எந்த சமாதானமும் சொல்ல முடியலை.

    அவங்களுக்கு புரியற மாதிரி நீங்க எடுத்துச் சொல்லி இருக்கலாம்...

    எதையும் காது கொடுத்துக் கேக்கற நிலையில் அம்மா இல்லை. இன்னும் ரெண்டு மாசத்துக்குள் நம்ம கல்யாணம் நடக்கணும் நினைக்கறாங்க...

    ரெண்டு மாசத்துக்குள்ளேயா...

    எஸ்! இன்னும் சரியாச் சொல்லப் போனா... ரெண்டு மாசத்துக்குள்ளே... என்னோட கல்யாணம் நடந்தாகணும்ங்கறதில் ரொம்ப தீவிரமா இருக்காங்க. அதனால்தான் இன்னிக்கே... இப்பவே உன்னை ரெண்டில் ஒரு முடிவைச் சொல்லச் சொல்லியிருக்காங்க...

    அதென்ன ரெண்டு மாசக் கெடு...?

    இன்னும் ரெண்டு மாசத்துக்குள்ளே எனக்குக் கல்யாணம் நடக்கலைன்னா.. அதுக்கப்புறம் அஞ்சு வருஷத்துக்கு என் ஜாதகத்தில் கல்யாண யோகமே இல்லையாம்...

    யார் சொன்னது..?

    அம்மா என்னோட ஹாரஸ்கோப்பை பிரபல ஜோதிடர் ஒருத்தர்கிட்டே காட்டினப்போ அவர் சொல்லியிருக்கார். அதிலிருந்து அம்மா என்னை நச்சரிக்க ஆரம்பிச்சிட்டாங்க...

    இருபத்தொண்ணாம் நூற்றாண்டில் காலடி எடுத்து வைக்கப் போற இந்த கம்ப்யூட்டர் யுகத்தில் ஜோதிடம் ஜாதகம்ன்னு பிதற்றலா இருக்கலாமா தாமோதர்...?

    "கம்ப்யூட்டரையே ஜோதிடம் பாக்கறதுக்கு உபயோகப்படுத்தறாங்க... அதுவும் ஒரு சயன்ஸ்தாங்கறது அவங்க வாதம். சில நம்பிக்கைகளை எவ்வளவு காலமானாலும் மாத்த முடியாது. அம்மாவுக்கு இதிலெல்லாம் நம்பிக்கை ஜாஸ்தி. வேற வழியே இல்லை. ரெண்டு மாசத்துக்குள்ளே ஒரு நாளில் நம்ம கல்யாணத் தேதியை உறுதி பண்ணணும்ங்கறதில் அம்மா உறுதியா இருக்காங்க. ஒரு டேட் நாம் சொல்லியே ஆகணும்.

    என்னோட லட்சியத்தில் நானும் உறுதியா இருக்கேன் தாமோதர். நான் எங்கேயும் போயிட மாட்டேன். இன்னும் கொஞ்ச நாள் போகட்டும். ப்ளீஸ்... இப்போ நான் எப்படி டேட் சொல்ல முடியும்...

    உன்னோட லட்சியம் என்னன்னு இன்னொரு தடவை சொல்லு.

    என்னோட அக்கா சிட்டியில பிரபல டாக்டர். செயற்கை முறை கருத்தரிப்பில் ஒரு புது உத்தியைக் கண்டுபிடிச்சு... சாதனை பண்ணி இருக்காங்க. அண்ணன் பாபா அட்டாமிக் ரிசர்ச் சென்ட்டரில் சயன்டிஸ்ட்டா இருக்கார். அவரும் ரேடியோ ஆக்டிவ் மெட்டீரியல்ஸின் ஸேஃப் டிஸ்போஸ்க்கு ஒரு வழிமுறையைக் கண்டுபிடிச்சு அவரோட துறையில் பேர் சொல்லும்படி வெற்றிக் கொடி நாட்டியிருக்கார். அதே மாதிரி என்னோட துறையில் நானும் ஒரு சாதனை பண்ணிக் காட்டணும்ங்கற துடிப்போட இருக்கேன். அதுக்கப்புறம்தான் கல்யாணம்.

    கல்யாணம் பண்ணிட்டு சாதனை பண்ணேன். உன்னை யார் வேண்டாம்ன்னு சொல்லப் போறாங்க...? நான் உனக்கு எந்த முட்டுக்கட்டையும் போடப் போறதில்லை...

    அதெல்லாம் சொல்றதுக்கு நல்லா இருக்கும். பிராக்டிகலா ஒத்துவராது. என்னோட அக்காவும், அண்ணனும் சாதிச்சு பேர் வாங்கின பிறகுதான் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க...

    அவங்க ரெண்டு பேருமே சயன்ஸ் மேஜர். அந்தத் துறையில் சாதிக்க எவ்வளவோ வழி முறைகள் இருக்கு. நீ ஹிஸ்டரி சப்ஜெக்ட்டை மேஜரா எடுத்துப் படிச்சிட்டிருக்கே... என்ன சாதிக்க முடியும் மௌர்யா?

    இந்த மாதிரி ஏளனப் பேச்சை ஒழிக்கணும்ன்னுதான் நான் வெறியோட இருக்கேன். என்னோட துறையிலும் சாதிக்க எவ்வளவோ இருக்கு.

    எந்த ஒரு லட்சியத்துக்கும் ஒரு தெளிவான பாதை இருக்கணும். சாதிக்கணும்ன்னு சொல்றே. எதை சாதிக்கணும்ங்கற தெளிவு உனக்கு இன்னும் வரலையே?

    என்னோட சாதனைக்கு எந்த விஷயத்தை எடுத்துக்கறதுங்கற குழப்பமும் தேடலும் எனக்குள்ளே இத்தனை நாள் இருந்தது வாஸ்தவம்தான். ஆனா இப்போ நான் தெளிவாயிட்டேன். நான் சாதனை புரிய ஒரு வாய்ப்பு இப்போ எனக்கு கிடைச்சிருக்கு...

    சொல்லிக் கொண்டே அந்த வார இதழை எடுத்து அவன் முன்னே போட்டாள் மௌர்யா.

    அவள் புரட்டிக் கொடுத்த பக்கத்தில் கொட்டை எழுத்துக்களில் தலைப்பு வாசகங்கள் கண்ணில் அறைந்தன.

    எட்டுக்கோடி டாலர் அந்நியச் செலாவணி!

    அலட்சியம் காட்டுகிறதா அரசாங்கம்?

    தலைப்புக்குப்

    Enjoying the preview?
    Page 1 of 1