Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Oru Maalainera Maranam
Oru Maalainera Maranam
Oru Maalainera Maranam
Ebook142 pages41 minutes

Oru Maalainera Maranam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Oru Maalainera Maranam

Read more from Rajeshkumar

Related to Oru Maalainera Maranam

Related ebooks

Related categories

Reviews for Oru Maalainera Maranam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Oru Maalainera Maranam - Rajeshkumar

    மகிழ்ச்சி.

    1

    எல்லோருமே ஆச்சர்யப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.

    பால் கூப்பனோடு அந்த விடியற்காலை நேரத்தில் பால் பூத்தை நோக்கிப் போய்க் கொண்டிருந்த ரிடையர்ட் ஹெட்மாஸ்டர் கோபாலசாமி - டென்னிஸ் மட்டையோடு ஸ்கூட்டரில் சாஸ்திரி மைதானத்தை நோக்கிப் போய்க் கொண்டிருந்த ‘ஏ’ விஸ் குவார்ட்டர்ஸ் விச்சு என்கிற விஸ்வநாதன் - வாசல் முழுக்க சாணிநீர் தெளித்து நாற்பத்தெட்டு புள்ளிக் கோலம் வைத்துக் கொண்டிருந்த சப் ரெஜிஸ்ட்ரார் சீனிவாசராகவனின் மூன்றாவது புத்திரி ராஜேஸ்வரி - விடிந்து வெளிச்சம் வந்ததுமே, பாடத்தை எடுத்துப் படிக்கச் சொன்ன அம்மாவை ஏமாற்றிவிட்டுப் பட்டமும் நூல் கண்டுமாய் மொட்டை மாடிக்கு வந்துவிட்ட பன்னிரண்டு வயது பாலா - அந்நேரத்திலும் வெற்றிலைப் பாக்கையும், புகையிலையையும் வாயில் அடக்கிக்கொண்டு வக்கீலம்மா வீட் டுக்கு வேலைக்குப் போய்க் கொண்டிருந்த வேலைக்காரி சௌடம்மாள்-

    இப்படி எல்லாருமே அந்தக் காலை நேர ஆகாயத்தைப் பார்த்து ஆச்சர்யப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.

    எங்கிருந்து இவ்வளவு கழுகுகள் வந்தன?

    ஆகாயம் பூராவும் சைபர் சைபராய் வட்டம் போட்டுக் கொண்டு- சின்னச் சின்னக் கறுப்புத் தீற்றல்களாய்- மிதந்தபடி இருந்த அந்த நூற்றுக்கணக்கான கழுகுகள் அனைவரின் வயிற்றிலும் திகில் ஊசிகளாய் இறங்கின.

    பி’ விஸ் குவார்ட்டர்ஸ் வனஜாட்சி ஜன்னல் வழியே ஆகாயத்தை அண்ணாந்து பார்த்துவிட்டு மோவாயில் கை வைத்தபடி, ஸ்டவ்வோடு போராடிக் கொண்டிருந்த தன் கணவன் பக்கமாய்த் திரும்பினள்.

    என்னங்க. இங்கே ஒரு நிமிஷம் வாங்களேன்.

    மூக்கில் படிந்துவிட்ட மசிக்கறையைத் துடைத்து விட்டுக் கொள்ளக்கூட தோன்றாமல் அப்படியே எழுந்து வந்தான், வனஜாட்சியின் கணவன் கோதண்டம்.

    என்ன வனஜாட்சி.???

    ஆகாசத்தைப் பாரித்தீங்களா..? எவ்வளவு பருந்து...!

    நம்ம ஹவுஸிங் யூனிட்டுக்குக் கொஞ்சம் தள்ளி கார்ப்பரேஷன் குப்பைக்கிடங்கு இருக்குல்ல. நாயோ பூனையோ செத்துக் கிடக்கும். அதைக் கொத்தத்தான் இப்படி ஏராளமா சுத்துது.

    வனஜாட்சியின் முகம் மாறியது.

    மொதல்ல இந்த ஏரியாவை விட்டுப் போகணுங்க.. காத்து எந்தப் பக்கத்திலிருந்து அடிச்சாலும் நாத்தம் வருது. இந்தப் பக்கம் குப்பைக் கிடங்கு... அந்தப் பக்கமா சாக்கடை... ராத்திரி நேரத்துல கொசுத் தொல்லை. உங்க கம்பெனியில நல்ல இடமா பார்த்து வீடு கட்டிக் குடுத்திருக்காங்க. இங்கே வீடு கட்டியிருந்ததுக்குப் பதிலா ஒரு சுடுகாட்டிலே கட்டியிருக்கலாம்.

    Enjoying the preview?
    Page 1 of 1