Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Yaro Parkkirarkal and Vilaikku Oru Vaanavil
Yaro Parkkirarkal and Vilaikku Oru Vaanavil
Yaro Parkkirarkal and Vilaikku Oru Vaanavil
Ebook406 pages2 hours

Yaro Parkkirarkal and Vilaikku Oru Vaanavil

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Yaro Parkkirarkal and Vilaikku Oru Vaanavil

Read more from Rajeshkumar

Related to Yaro Parkkirarkal and Vilaikku Oru Vaanavil

Related ebooks

Related categories

Reviews for Yaro Parkkirarkal and Vilaikku Oru Vaanavil

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Yaro Parkkirarkal and Vilaikku Oru Vaanavil - Rajeshkumar

    எடுக்கப்படும்.

    யாரோ பார்க்கிறார்கள்!

    1

    அது ஒரு மே மாதத்திய மத்தியான நேரம்.

    கடற்கரைச் சாலையில் இருந்த அந்த மாடிக் கட்டிடத்தின் இரண்டாவது தளத்தில் அந்த பைனான்ஸ் கம்பெனியின் போர்டு பித்தளை எழுத்துக்களில் மின்னிக் கொண்டிருக்க - உள்ளே மானேஜிங் டைரக்டரின் ஏர்கண்டிஷனர் உறுமும் அறைக்குள் டெலிஃபோன் காதுகளை உறுத்தும் டெஸிபிலில் முணுமுணுத்தது.

    ஃபைல் ஒன்றைப் புரட்டிப் பார்த்து பொன்னிறப் பேனாவால் கையெழுத்துப் போட்டுக் கொண்டிருந்த மாலா நிமிர்ந்தாள். இருபத்தைந்து வயதைப் போன மாதம் முடித்துக் கொண்ட மாலாவுக்குச் சற்று ஒடிசலான தேகம். ரோஸ்மில்க் நிறம். பெரிய கண்கள். அளவான நாசிக்குக் கீழே ரோஜா இதழ்களை ஒட்ட வைத்த மாதிரி உதடுகள்.

    மருதாணிப் பூச்சில் குளித்திருந்த வலக் கையை நீட்டி ரிஸீவரை எடுத்துக் காதுக்குக் கொடுத்தாள்.

    ஹலோ...

    என்ன மாலா லஞ்ச் முடிஞ்சுதா...? மறுமுனையில் கணவன் சங்கரின் குரல் கேட்டது.

    ம்... முடிஞ்சது.

    என்ன குரல்ல தெம்பையே காணோம்...?

    காலையிலிருந்து சரியான வேலை... பர்சனல் க்ளார்க் லீவு போட்டுட்டு ஹாஸ்பிடல்ல யாரையோ பார்க்கப் போயிட்டா...! இப்போ எல்லா வேலையும் என் தலைக்கு மேல.

    இருக்கிற... வேலைப் பளுவில இன்னிக்கு நமக்குக் கல்யாண நாள் என்கிறதை மறந்துடாதே...

    மாலா சிரித்தாள்.

    அதை மறக்க முடியுமா...?

    சாயந்தரம் எத்தனை மணிக்கு வீட்லே இருப்பே...?

    அஞ்சு மணிக்கு...

    நோ... நோ... நாலு மணிக்கெல்லாம் நீ வீட்ல இருக்கணும்... நானும் ஷார்ப்பா அதே நாலு மணிக்கு வந்துடுவேன். நாலு மணியிலிருந்து நமக்கு என்னென்ன ப்ரோக்ராம் தெரியுமா...?

    சொல்லுங்க...

    போன்ல வேண்டாம்... நேர்ல சொல்றேன்... ராத்திரி பனிரெண்டு மணி வரைக்கும் ஒரு பெரிய பட்டியலே இருக்கு. டைட் ஷெட்யூல். பை... த... பை... ஃபார் யுவர் இன்பர்மேஷன்... நம்ம கல்யாண நாளை முன்னிட்டு உனக்கு ஒரு ப்ரஸண்ட்... சர்ப்ரைஸா பரிசு ஒண்ணைத் தரப்போறேன்.

    என்ன பரிசு...?

    நாலு மணிக்குத் தெரியும்... சங்கர் சிரித்துக் கொண்டே ரிஸீவரை வைத்து விட... மாலா மணிக்கட்டில் அப்பியிருந்த தன் வாட்ச்சைப் பார்த்தாள்.

    மணி இரண்டரை.

    'அவர் நமக்குப் பரிசாக ஒன்றைத் தரும்போது நானும் ஏதாவது தர வேண்டாமா...? இது ஏன் எனக்குத் தோன்றாமல் போய்விட்டது?'

    பார்த்துக் கொண்டிருந்த ஃபைலைத் தள்ளி வைத்துவிட்டு எக்ஸிக்யூட்டிவ் நாற்காலியினின்றும் தன்னை உருவிக் கொண்டு எழுந்தாள். இண்ட்டர்காமில் ஒரு பட்டனைத் தட்டிவிட்டு மானேஜரோடு பேசினாள்.

    மிஸ்டர் நாதன்.

    மேடம்...

    என்னோட பர்சனல் வேலையா வெளியே கிளம்பறேன். சாயந்தரம் ஆபீஸிற்கு வரமாட்டேன். ஏதாவது முக்கியமான விஷயமா என்னை டிஸ்கஸ் பண்ண வேண்டியிருக்கா...?

    எதுவும் இல்லை மேடம்... பார்ட்டிக்கு அனுப்பு வேண்டிய ஒரு லெட்டரில் மட்டும் கையெழுத்து போட வேண்டியிருக்கு...

    அந்த லெட்டரை நாளைக்குக்கூட அனுப்பலாமில்லையா?

    அனுப்பலாம் மேடம்...

    சரி... நான் கிளம்பறேன். நாளைக்குக் காலையில பத்து மணிக்குப் பார்க்கலாம்.

    எஸ்... மேடம்...

    மாலா மேஜையின் ஓரத்தில் இருந்த கார்ச் சாவியை எடுத்துக் கொண்டு அறையினின்றும் வெளிப்பட்டாள். வெளியே காத்திருந்த வெப்பக் காற்று அவளுடைய உடம்பை அலம்பியது.

    வராந்தாவில் நடக்கும்போது -- எதிர்ப்பட்ட ஊழியர்கள் குட் ஈவினிங் மேடம் என்று தயக்கமாய் ஒதுங்கி நின்று பவ்யமாய்ச் சொல்ல, மாலா தலையசைப்பால் ஏற்றுக் கொண்டு போர்டிகோவைத் தொட்டாள். காத்திருந்த அந்தக் கடல் வண்ண மாருதிக்குள் தன்னைத் திணித்துக் கொண்டு அதை நகர வைத்து ரோட்டுக்கு வந்தாள். கடற்கரைச் சாலையின் போக்குவரத்தில் கலந்ததும் ஆக்ஸிலேட்டரை மிதித்தாள்.

    பத்து நிமிஷப் பயணம்.

    அடையாறு போகும் வழியில் ரோஹிணி கார்டன்ஸ் வந்ததும் காரின் வேகத்தைக் குறைத்து, போகன்வில்லாஸ் பூக்கள் நிறம் நிறமாய் மண்டிய அந்தச் சின்ன பங்களாவின் காம்பௌண்ட் கேட்டுக்கு முன்பாய் காரை நிறுத்தி நீளமாய் ஹாரன் கொடுத்தாள்.

    அரை நிமிஷ அவகாசத்தில் பங்களாவின் பக்கவாட்டு ஜன்னல் கதவு திறக்கப்பட்டு ஒரு பெண்ணின் முகம் தெரிந்தது.

    மாலா காருக்கு வெளியே தலை நீட்டிக் குரல் கொடுத்தாள். ரமா...! வீட்ல நீ ஃப்ரீயா இருக்கியா?

    என்ன விஷயம்...?

    நீ ஃப்ரீயா இருக்கியா இல்லையா?

    ஃப்ரீதான்...

    சரி...வா... எனக்கு ஒரு மணி நேரம் கம்பெனி குடு...

    எதுக்கு...?

    சொன்னாத்தான் வருவியா?

    "என்னோட அத்தை காரணம் கேட்டா சொல்ல வேண்டாமா?'

    சரி... ஷாப்பிங் போறோம்...

    இந்த மத்தியான நேரத்திலா...?

    உன்னால இப்போ வர முடியுமா முடியாதா?

    வர்றேன்... வர்றேன்... கோபிச்சுட்டுக் காரைக் கிளப்பிட்டுப் போயிடாதே...

    டயம் அஞ்சே நிமிஷம்தான்...! அதுக்குள்ளே சேலை மாத்திட்டு வரணும்...

    உள்ளே...வாடி...

    வேண்டாம்... நான் உள்ளே வந்தா நீ லேட் பண்ணிடுவே... சட்டுபுட்டுன்னு வெளியே வா...

    ஜன்னலில் ரமாவின் தலை மறைந்தது. மாலா காரின் ஸ்டியரிங்கில் விரல்களால் தாளம் போட்டபடி யோசித்தாள்.

    'என்ன பரிசுப் பொருள் வாங்கலாம்...?'

    'எது வாங்கினாலும் சரி... அவர் அசந்து போகிற மாதிரி இருக்கணும்.'

    'கோல்ட் ப்ரேஸ்லெட்!'

    'ரேபான் கூலிங்கிளாஸ்...?'

    யோசிப்பில் நிமிஷங்கள் கரைந்து கொண்டிருக்கும் போதே ரமா உள்ளேயிருந்து வந்தாள். இளம் பச்சை நிறத்தில் கம்ப்யூட்டர் சேலை. உயர்த்திப் போட்ட கொண்டை. காற்றுக்குத் தலைமுடி சிலும்ப... காதில் பொன் வளையங்கள் அசைந்தன.

    ம்... போலாமா...?

    ஏறு...

    ரமா அவளுக்குப் பக்கத்து சீட்டை ஆக்கிரமிக்க கார் நகர்ந்தது. உன் அத்தைகிட்ட சொல்லிட்டியா?

    சொல்லிட்டேன்...

    போலீஸ் ட்ரெயினிங் கோர்ஸுக்குப் போன உன்னோட ஹஸ்பெண்ட் வந்துட்டாரா...?

    நாளைக்குக் காலையில்தான் வர்றார்...

    அப்படீன்னா அஸிஸ்டன்ட் போலீஸ் கமிஷனர் பொண்டாட்டியா இருக்கிற நீ அடுத்த ஒரு மாசத்துக்குள்ளே கமிஷனர் பொண்டாட்டி ஆயிடுவேன்னு சொல்லு...

    அவ்வளவு சீக்கிரத்துல ப்ரமோஷன் கிடைச்சுடாது. எப்படியும் ஒரு வருஷமாயிடும்... அதுவும் ப்ரமோஷன் ஆன் ட்ரான்ஸ்பர்லதான் கிடைக்கும்... அது இருக்கட்டும்... இந்த மத்தியான நேரத்துல எதுக்குத் திடீர் ஷாப்பிங்...?

    இன்னிக்குத் தேதி என்ன?

    மே எட்டு.

    ரெண்டு வருஷத்துக்கு முந்தி மே மாசம் எட்டாம் தேதி ஹேமமாலினி கல்யாண மண்டபத்துல என்ன நடந்தது?

    ரமா தன் இடக்கை நெய்ல் பாலீஷ் பூச்சு விரல்களால் நெற்றியில் நோகாமல் அடித்துக் கொண்டாள்.

    அட... உன் கல்யாணம்...

    இன்னிக்கு ரெண்டாவது வெட்டிங் அனிவர்ஸரி. என்னோட கணவருக்கு ஏதாவது ப்ரஸன்ட் பண்ணனும்னு நினைச்சேன். மனசுக்கு ஏதும் தோணலை... அதான் உன்கிட்டே வந்தேன்... என் கணவர் அசந்து போகிற மாதிரி என்ன ப்ரசன்ட் பண்ணலாம். சொல்லு?

    அசந்து போற மாதிரி...?

    ஆமா...

    சொன்னா கோபிச்சுக்கமாட்டியே...?

    மாட்டேன்... சொல்லு...

    இல்லே... உனக்குக் கோபம் வரும்.

    வராது... சொல்லு...

    வேண்டாம்...

    இப்ப... நீ... சொல்லப் போறியா... இல்லையா?

    சரி... சொல்றேன். உன்னோட கணவர் சந்தோஷத்துல பூரிச்சு போகணும்ன்னா... ஒரு பொருளைக் கொடுத்தா போதும்.

    சொல்லு... வாங்கிடுவோம்.

    ஜானி வாக்கர். ஃபாரின் விஸ்கி பாட்டில்.

    மாலாவின் முகம் சட்டென்று நிறம் மாற ரமா புன்னகை செய்தாள். 'இதுக்குத்தான் வேண்டாம்னு சொன்னேன்."

    பரவாயில்லே.

    என் மேல கோபமா?

    சேசே...! நீ சொன்னது வாஸ்தவமான வார்த்தை. ஜானிவாக்கர் பாட்டிலை வாங்கி கொடுத்தா அவர் படற சந்தோஷத்துக்கு அளவே இருக்காது.

    அவரோட குடிப்பழக்கத்தை நிறுத்தறதுக்கு ஏதோ முயற்சிகள் எடுத்துகிட்டிருக்கிறதா போன தடவை சந்திச்சப்ப சொன்னியே... ஏதாவது பலன் கிடைச்சதா?

    காரை ஒரு வளைவில் திருப்பிக் கொண்டே உதட்டைப் பிதுக்கினாள் மாலா. ஒரு பலனும் கிடைக்கலை... அப்படியேதான் இருக்கார். அவ்வளவு சுலபத்துல திருத்த முடியும்னு எனக்குத் தோணலே... கொஞ்சம் கொஞ்சமாத்தான் அவரை மாத்தணும்.

    மாலா...

    ம்...

    இந்தத் தடவை வெட்டிங் அனிவர்ஸரிக்கு உன்னோட கணவரும் உனக்கு ஏதாவது ப்ரஸ்ன்ட் பண்ணுவார் இல்லையா...?"

    ஆமா...

    அவர் ப்ரஸன்டா எந்தப் பொருள் கொடுத்தாலும் வாங்காதே.

    வாங்காமே...?

    அவர்கிட்ட சொல்லு...

    என்னன்னு...?

    உங்ககிட்டயிருந்து ப்ரசன்ட்டேஷனா எந்தப் பொருளும் வேண்டாம். எனக்கு நீங்க சந்தோஷத்தைத் தர விரும்பினா ஒரே ஒரு வாக்குறுதியை மட்டும் எனக்கு பிரசன்ட்டேஷனா குடுங்க போதும்னு சொல்லு...

    வாக்குறுதியா?

    ம்... இனிமே குடிக்க மாட்டேன் என்கிற வாக்குறுதியை...

    அவர் தரமாட்டார்.

    கேட்டுப்பாரு...

    கல்யாண நாளும் அதுவுமா இன்னிக்கு சண்டை போடச் சொல்றியா...?

    போட்டாலும் தப்பில்லை...

    அவரோட மூடு எப்படியிருக்குன்னு தெரிஞ்சுக்கிட்டு கேட்டுப் பார்க்கிறேன்...

    அடையாறு சிக்னலுக்குப் பக்கத்தில் இருந்த அந்தப் பெரிய டிபார்ட்மெண்ட்டல் ஸ்டோர்க்கு முன்பாகக் காரை நிறுத்தினாள் மாலா.

    இருவரும் இறங்கிக்கொண்டு உள்ளே நடந்தார்கள். கூட்டம் அறவே இல்லை. ஐஸ்க்ரீம் பார்லருக்குப் பக்கத்தில் நான்கைந்து கல்லூரி மாணவிகள் நின்று கோன் ஐஸ்க்ரீம் சப்பிக் கொண்டிருக்க, ஆடியோ வீடியோ கடையொன்றில் 'மஸ்தானா... மஸ்தானா...' கேட்டுக் கொண்டிருந்தது.

    என்ன ப்ரசன்ட் வாங்கலாம் சொல்லு...?

    உள்ளே போய்ப் பார்க்கலாம் வா...

    கிடத்தட்ட ஒரு மணி நேரத்தைச் செலவழித்துக் ‘கோல்ட் பென் செட்' ஒன்றை வாங்கி கொண்டு காருக்குத் திரும்பினார்கள் மாலாவும் ரமாவும்.

    நல்ல செலக்ஷன்... உனக்குப் பிடிச்சதா?

    ம்... ஆனா விலைதான் கொஞ்சம் ஜாஸ்தியோன்னு மனசுக்குப் படுது...

    விலையைப் பத்தி கவலைப்படாதே... மனசுக்குப் பிடிக்கிறதுதான் முக்கியம்... சரி... வா... வந்து எனக்கு ஐஸ்க்ரீம் வாங்கி குடு. கிஃப்ட் ஆர்ட்டிகிளைச் செலக்ட் பண்றதுக்குள்ளே தொண்டையும் நாக்கும் காகிதம் மாதிரி உலர்ந்து போச்சு...

    மாலா புன்னகையோடு ரமாவின் கண்னத்தைத் தட்டினாள். உனக்கு ஐஸ்க்ரீம் தானே வேணும்...?

    ஆமா...

    என் வீட்டுக்குப் போய்ச் சாப்பிடலாம்... நட...

    வீட்ல ஏது ஐஸ்க்ரீம்...?

    நேத்து ராத்திரி நானே ப்ரிப்பேர் பண்ணினேன். ஃப்ரிஜ்ல வைச்சிருக்கேன். பாதாம் பிஸ்தாவை எக்கச்சக்கமா போட்டு அசத்தியிருக்கேன்...

    வீட்டுக்குப் போனா லேட்டாயிடும்...

    எதுக்கு லேட்...? கார் இருக்கு. பத்தே நிமிஷத்துல போயிடலாம்.

    மணியைப் பார்த்தியா...? மூணே முக்கால்.

    இருக்கட்டுமே...

    மூணரை மணிக்குள்ளே வந்துடறதா என்னோட அத்தைகிட்ட சொல்லிட்டு வந்திருக்கேன்...

    உன்னோட அத்தை ஒண்ணும் சொல்லமாட்டாங்க...

    நீ விடமாட்டியே...?

    ம்... ம்... ஏறு... ஏறு.

    ரமா காருக்குள் நுழைந்தாள். லேட் பண்ணக்கூடாது மாலா...

    ஐஸ்க்ரீம் சாப்பிட்டதும் உன்னைத் துரத்திடறேன் போதுமா...?

    கார் புறப்பட்டது.

    உன் கணவர் இப்போ வீட்லதான் இருக்காரா?

    இல்லை... கம்பெனியில்... பட் நாலு மணிக்கெல்லாம் புறப்பட்டு வர்றதா சொல்லியிருக்கார்...

    உன்னோட பைனான்ஸிங் கம்பெனி எப்படியிருக்கு?

    என் கணவரோட மானேஜ்மெண்ட்ல நடக்கிற கம்பெனியைக் காட்டிலும் லாபகரமாயிருக்கு... கோயமுத்தூர்ல புதுசா ஒரு ப்ராஞ்சை ஓப்பன் பண்ணலாம்ன்னு இருக்கேன்...

    குட்... குட்.

    ரமா! என் வாழ்க்கை எவ்வளவோ சுபிட்சமா இருந்தாலும் மனசுக்குள்ளே ஒரு முழுமையான சந்தோஷம் இல்லை. காரணம் என் கணவரோட குடிப்பழக்கம்... ராத்திரி எட்டு மணியானாப் போதும் பாட்டிலும் கையுமா உட்கார்ந்துடறார்... நல்லவேளை, பகல் நேரத்துல அதைத் தொடறதில்லே.

    அந்தப் பயமாவது இருக்கே...!

    பயத்துக்குக் காரணம் பிசினஸ் மேல இருக்கிற அக்கறை...

    கார் இப்போது அடையாறு பகுதியைப் புறக்கணித்து விட்டு வேளச்சேரி போகும் சாலையில் திரும்பியது.

    சரி, எத்தனை நாளைக்கு இப்படி ரெண்டு பேராகவே இருக்க உத்தேசம்...? மூணாவது நபரைக் கொண்டு வர்றதுக்கு முயற்சி எடுத்துக்கறீங்களா இல்லையா...?

    மாலா வெட்கத்துடன் சிரித்தாள். அந்த முயற்சி நடந்துட்டுத்தான் இருக்கு...

    நல்ல வேளை...! உன் புருஷன் அந்த விஷயத்தையே மறந்துட்டாரோன்னு நினைச்சேன்...

    கார் இரண்டு குறுக்குத் தெருக்களைக் கடந்து பின் எதிர்ப்பட்ட ஒரு நிசப்தமான தெருவுக்குள் நுழைந்து காம்பௌண்ட் கேட்டுக்கு முன்பாய் நின்றது.

    மாலா இறங்கி டம்பப்பையில் இருந்த சாவிக்கொத்தை எடுத்து, காம்பௌண்ட் கேட்டின் பூட்டுக்கு விடுதலை கொடுத்தாள். கேட்டை விரிய திறந்து வைத்துவிட்டுக் காரை உள்ளே கொண்டு போனாள்.

    போர்டிகோவில் காரை நிறுத்திவிட்டு இருவரும் இறங்கினார்கள். மாலா போர்டிகோ படியேற வாசல் கதவை அடைகாத்த பூட்டுக்கு... சாவியைக் கொடுக்க, ரமா கேட்டாள்.

    சாவியை நீ வெச்சிட்டிருக்கியே... உன்னோட கணவர் சீக்கிரமா வந்துட்டா... அவர் எப்படி வீட்டுக்குள்ளே போவார்...?

    அவர்கிட்டேயும் இதே மாதிரி சாவிக் கொத்து ஒண்ணு இருக்கு... வீட்டுக்கு மொதல்ல வர்றவங்க திறந்துக்க வேண்டியதுதான்.

    கதவைத் திறந்து கொண்டு உள்ளே போனாள் மாலா. ரமா பின் தொடர்ந்தாள்.

    ஹால் வந்தது.

    உட்கார்டி...

    மாலா! லேட் பண்ணிடாதே... நாலு மணிக்கெல்லாம் நான் வீட்டுக்குப் போயாகணும்...

    ஏன்தான்...இப்படிப் பறக்கிறியோ...? கொஞ்சம் முன்னே பின்னே போனா உன்னோட அத்தை ஒண்ணும் சொல்லமாட்டாங்க. வேணும்ன்னா போன் பண்ணிச் சொல்லிடட்டுமா...?

    அதெல்லாம் வேண்டாம்...மொதல்ல நீ ப்ரிப்பேர் பண்ணின ஐஸ்க்ரீமை எடுத்துக் கொடு. விழுங்கிட்டு போறேன்.

    இதோ... நிமிஷத்துல கொண்டு வர்றேன்... சொன்ன மாலா பக்கத்து அறைக் கதவைத் திறந்து கொண்டு ஃப்ரிஜ் இருந்த திசையை நோக்கி நடந்தாள்.

    ஜன்னல்கள் சாத்தியிருந்ததால் அறை முழுக்க ஒரு அறையிருட்டு பரவியிருந்தது.

    வேகமாய் நடந்தவள் சட்டென்று தடுமாறிக் கால் இடறி எதன்மீதோ விழுந்தாள்.

    எ...என்ன...இது...?

    கைநீட்டித் தொட்டுப் பார்த்தவள் உடம்பு ஒரு அதிர்ச்சிக்கு உட்பட தொண்டையினின்றும் ஓர் அலறல் பீறிட்டது.

    ஏ...ஏ...ரமா...ஆ...ஆ...ஆ...!

    பதற்றமாய் ரமா ஓடிவந்தாள்.

    எ...எ...என்ன...மா...மாலா?

    அறைக்குள் நுழைந்தவளின் பார்வை நிலைகுத்திப் போயிற்று.

    ஒரு பெண்ணின் உடல் ரத்த வெள்ளத்தில் குப்புற விழுந்து கிடக்க பக்கத்தில் மாலா பிரமை பிடித்தவள் போல் உட்கார்ந்திருந்தாள்.

    2

    ரமாவின் கண்கள் திக்கித்துப் போயிருக்க உடம்பின் சகல பாகங்களிலும் வியர்வை உடைப்பெடுத்துக் கொண்டது. பிரமை பிடித்துப் போய் உட்கார்ந்திருந்த மாலாவின் தோள்பட்டையைப் பிடித்து நடுங்கும் கைகளால் உசுப்பினாள்.

    மா...லா...

    ...

    மாலா... இரண்டாவது உசுப்பலுக்குப் பின் மாலாவின் பார்வை கலக்கமாய் ரமாவிடம் திரும்பியது,

    ர...மா...

    யா...யார்டி...இது...?

    தெ... தெரியலையே... பூட்டின வீட்டுக்குள்ள இப்படி வந்து விழுந்து கிடக்கிறாளே...?"

    ரமா கீழே விழுந்து கிடந்த அந்தப் பெண்ணின் இடது தோள்பட்டையைப் பற்றி இழுத்து மல்லாத்தினாள்.

    முகம் கருஞ்சிவப்பு நிறத்தில் சிதைந்து போயிருந்தது. கண், காது, மூக்கு, வாய் என்று அவயவங்களை இனம் பிரிக்க முடியாத அளவுக்கு முகம் உருகி வழிந்த சதையால் மெழுகப்பட்டிருந்தது.

    காற்றில் அமில நெடி.

    பொசுங்கிய சதை நாற்றம்.

    மாலா பயத்தில் நடுங்கி கொண்டிருக்க ரமா சட்டென்று ஒரு ஆசுவாசத்துக்கு வந்தாள்.

    இதோ பார் மாலா... இப்ப பயப்படறதுக்கோ பதட்டப்படறதுக்கோ நேரமில்லை. மொதல்ல வாசல் கதவைச் சாத்திட்டு வர்றேன். நீ உடனடியா உன்னோட கணவருக்கு ஃபோன் பண்ணி வீட்டுக்கு வரச் சொல்லு... சொன்ன ரமா எழுந்து போய் வாசல் கதவையும் பக்கவாட்டு ஜன்னல்களையும் சாத்திவிட்டு வந்தாள்.

    மாலா, இறந்து கிடந்த அந்தப் பெண்ணின் உடலை வெறித்துப் பார்த்துக் கொண்டே உட்கார்ந்திருக்க - ரமா அவளைத் தொட்டாள்.

    ஃபோன் பண்ணலையா?

    ரமா...எனக்குத் தலையெல்லாம் சுத்துது. என்னால எழுந்திரிக்க முடியும்னு எனக்குத் தோணலை... நீயே என்னோட கணவருக்கு ஃபோன் பண்ணி உடனே வரச் சொல்லு...

    நம்பர்...?

    மாலா சொல்ல, ரமா டெலிபோனின் ரிஸீவரை எடுத்துக் கொண்டு டயலில் எண்களைத் தட்டினாள்.

    மறுமுனையில் ரிங் போய் ரிஸீவர்

    Enjoying the preview?
    Page 1 of 1