Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Athiradi Maatram
Athiradi Maatram
Athiradi Maatram
Ebook140 pages51 minutes

Athiradi Maatram

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Devibala, an exceptional Tamil novelist, written over 700 novels, 500 short stories, and script for many television serials. Readers who love the subjects Romance, social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author… he has his tamils readers spread over the globe…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
ISBN9781043465438
Athiradi Maatram

Read more from Devibala

Related to Athiradi Maatram

Related ebooks

Reviews for Athiradi Maatram

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Athiradi Maatram - Devibala

    13

    1

    உடம்பு முழுக்க வியர்க்க, படுக்கையை விட்டு குபீரென எழுந்தாள் ஸ்ரேகா!

    மின் விசிறி அணைக்கப்பட்டிருந்தது. கவனிக்கவில்லை!

    அம்மா! பவர்கட்டா?

    ஸ்ரேகா குரல் கொடுக்க, அம்மா விசாலம் உள்ளே வந்தாள்.

    இல்லையே?

    பின்ன ஃபேன் சுத்தலை?

    விசாலம் திரும்பிப் பார்த்தாள்.

    அணைச்சிருக்குடி!

    கோவிந்தன் உள்ளே வந்தார்.

    நான்தான் அணைச்சேன். விடிஞ்சாச்சு இல்லை? இன்னமும் ஃபேன் சுத்தறது எதுக்கு? ஏற்கனவே கரண்ட் பில் தாறுமாறா ஏறியிருக்கு. செலவைக் குறைக்கணும். வாஷிங்மெஷின் ரெண்டு தடவை எதுக்குப் போடறீங்க. கொஞ்சம் துணிகளை கையால தோச்சா, கை தேஞ்சு போயிடுமா?

    விசாலம் கடுப்புடன் உள்ளே வந்து, குருமாவுக்கான காய்களை மைக்ரோவேவ் அடுப்பில் வைக்க,

    எதுக்கு விசாலம் மைக்ரோ வேவ்? கரண்ட் இழுக்கும்.

    என்னங்க பேசறீங்க? எதுக்கு இதையெல்லாம் வாங்கி வச்சோம்? அடுப்புல வச்சா காஸ் செலவாகும்னு சொல்லுவீங்க? வேலை செய்ய வேண்டாமா?

    அந்தக் காலத்துல எங்கம்மாவெல்லாம் அம்மில அரைச்சுத்தான் அடுப்புல சமைச்சாங்க!

    ஸ்ரேகா எழுந்து வந்தாள்.

    அப்பா! அவங்களுக்கு வேற வழியில்லை. செஞ்சாங்க. இப்ப அந்த அவசியம் இல்லையே?

    ஏன் இல்லை? சம்பாதிக்கற பணத்தை தாறுமாறா செலவழிச்சா, குடும்பம் தெருவுலதான் நிக்கும்!

    ஸ்ரேகா பேச வாய் திறந்தாள்!

    விசாலம் அவள் கைகளை ரகசியமாகப் பிடித்தாள். அதில் ‘பேசாதே’ என்ற குறிப்பு இருந்தது.

    அம்மா! வந்தனா எங்கே?

    மாடில ஒக்காந்து படிக்கறா! அடுத்த வாரம் செமஸ்டர் பரீட்சை அவளுக்கு!

    இன்னிக்கு என்ன டிபன்?

    பூரி பண்ணட்டுமா?

    கோவிந்தன் உள்ளே புகுந்தார்.

    எண்ணெய் செலவு எதுக்கு? இந்த மாச மளிகை பட்ஜெட் எகிறியிருக்கு. இட்லி பண்ணு! ஒடம்புக்கும் நல்லது! செலவும் குறைச்சல்!

    இதப்பாருங்க! விலைவாசி ஏறுது!

    அதுக்குத்தான் சொன்னேன் - செலவைக் குறைக்கணும்னு!

    ஸ்ரேகா கடுப்பாகி விட்டாள்.

    சரி! நான் கோயிலுக்குப் போயிட்டு வந்திர்றேன்!

    கோவிந்தன் புறப்பட்டுப் போக, அவரது குடும்பம் பற்றி சொல்லி விடலாம்.

    கோவிந்தனுக்கு வயது ஐம்பத்தி நாலு! ஆரம்பம் முதலே ஒரு இடத்திலும் உருப்படியாக வேலை பார்க்காத ஆசாமி! சேர்ந்த மாதிரி 2 வருடங்கள் ஓரிடத்தில் நிலைத்ததில்லை. முன்கோபம், வறட்டு ஜம்பம், தேவையில்லாத பேச்சு என எல்லாம் உண்டு. ஒரு இடத்திலும் நிலைத்து நின்றதில்லை.

    விசாலம் பட்டதாரி!

    இருபது வயதில் ஒரு பள்ளிக் கூடத்தில் டீச்சராக பொறுப்பேற்றவள். இன்று ஐம்பது வயது. முப்பது வருஷ சர்வீஸ்! அரசாங்கப் பள்ளிக்கூடம் ஒன்றில் பள்ளி துணை முதல்வர். நல்ல சம்பளம், மரியாதை, புத்திசாலித்தனம். பொறுப்பில்லாத கோவிந்தனின் குடும்பத்தை இன்றுவரை தாங்கிப் பிடிக்கும் பொறுப்பான மனைவி! விசாலத்தின் வருமானத்தில்தான் குடும்பமே ஓடுகிறது!

    மூத்த மகள் ஸ்ரேகா - அழகான பெண்! புத்திசாலி! எம்.காம். முடித்துவிட்டு தனியார் நிறுவனமொன்றில் 2 வருடங்களாக வேலை. நல்ல சம்பளம்! இப்போது இருபத்தி நாலு வயசு. பொறுப்பான பெண். அவள் தலையெடுத்த பிறகுதான் விசாலத்துக்குக் கொஞ்சம் நிம்மதி. ஸ்ரேகாவும் அம்மாவின் குடும்ப பாரத்தில் கணிசமாக பங்கெடுத்துக் கொள்ளத் தொடங்கி விட்டாள்.

    அடுத்தவள் வந்தனா - 19 வயது. பொறிஇயல் கல்லுாரியில் 2வது வருடம் படிக்கும் பெண். பள்ளியில் மெரிட்டில் வந்து அண்ணா பல்கலைகழகத்தின் கீழ் இயங்கும் ஒரு பொறிஇயல் கல்லுாரியில் சேர்ந்து விட்டாள்!

    இதுதான் குடும்பம்!

    கோவிந்தனால் குடும்பத்துக்கு எந்த ஒரு லாபமும் இல்லை. ஆனால் ஜபர்தஸ்து மட்டும் போகாது. அதிகாரம் தூள் பறக்கும். அதிரடியான பேச்சு, எந்த நேரமும் கோபம். வாய்க்கு வகையாக வேளா வேளைக்கு வேண்டும். வெள்ளையும் சொள்ளையுமா வெளியே ஊர்வலம், பந்தா - ஆனால் அறிந்தவர், தெரிந்தவர் அத்தனை பேருக்கும் கோவிந்தனின் நிஜமான நிறம் தெரியும்!

    விசாலம் 25 வருட தாம்பத்ய வாழ்க்கையில் இன்றுவரை கோவிந்தனை எதிர்த்ததில்லை!

    கோவிந்தன் ஒரு உதவாக்கரை என்று ஸ்ரேகா பிறந்த ஒரு வருடத்தில் தெரிந்து விட்டது!

    தன் பிறந்த வீட்டுக்குக் கூடத் தெரியாமல் விசாலம் அதை மூடி மறைத்தாள்.

    மாமியாரின் தொந்தரவு! நாத்தனார்களின் அடாவடித்தனங்கள்!

    உதவாக்கரை கோவிந்தனை ஆதரிக்கும் அவன் வீட்டு மனிதர்கள்.

    விசாலம் சகலமும் சகித்துக் கொண்டாள்.

    வீட்டு வேலைகளையும் பார்த்தபடி, பள்ளிக்கூட பணிகளையும் நிறைவேற்றிக் கொண்டிருந்தாள்.

    ஸ்ரேகா வயிற்றில் இருந்த போது விசாலம் பட்டபாடு அந்தக் கடவுளுக்குத்தான் தெரியும்.

    மசக்கை உபத்ரவம்!

    ஒரு நாள் பள்ளிக் கூடத்துக்கு லீவு போட முடியாது! வீட்டிலும் வேலை முழி பிதுங்கும்!

    பிரசவத்துக்குக்கூட அவளை பிறந்த வீட்டுக்கு கோவிந்தன் அனுப்பவில்லை. ஆனால் செலவு மட்டும் பிறந்த வீட்டார் செய்யும் நிலை!

    ‘உனக்கு இப்படி ஒரு நிலையா விசாலம்?’ என அம்மா கதறி விட்டாள்.

    ஸ்ரேகா பிறந்து மூன்றே மாதங்களில் விசாலம் வேலைக்குச் சேரும் நிலை. குழந்தையை பராமரிக்க மாமியார் தயாராக இல்லை. வேலையும் விட முடியாது!

    தினமும் காலை நாலு மணிக்கு எழுந்து வீட்டு வேலைகளை முடித்து, சீக்கிரமே புறப்பட்டு, குழந்தையை தன் அம்மா வீட்டில் விட்டுவிட்டு பள்ளிக்கூடம் வர வேண்டும்! மாலையில் குழந்தையை எடுத்துக் கொண்டு வீடு திரும்பி, அதையும் பராமரித்து, வீட்டு வேலைகளையும் கவனிக்க வேண்டும்.

    உள்ளூர் நாத்தனார்கள் இருவர் பாதி நாட்கள் இங்கேதான்! அவர்களுக்கு வடித்துக் கொட்ட வேண்டும்!

    விசாலம் பட்டபாடு கொஞ்ச நஞ்சமில்லை!

    ஒரு கட்டத்தில் அம்மா, நாத்தனார் வீட்டுக்குப் போய், 4 வருடங்கள்

    Enjoying the preview?
    Page 1 of 1