Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Oru Thai Oru Magan
Oru Thai Oru Magan
Oru Thai Oru Magan
Ebook215 pages1 hour

Oru Thai Oru Magan

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Devibala, an exceptional Tamil novelist, written over 700 novels, 500 short stories, and script for many television serials. Readers who love the subjects Romance, social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author… he has his tamils readers spread over the globe…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
ISBN9781043465445
Oru Thai Oru Magan

Read more from Devibala

Related to Oru Thai Oru Magan

Related ebooks

Reviews for Oru Thai Oru Magan

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Oru Thai Oru Magan - Devibala

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    ஆசிரியர் அறை

    சுய பரிசோதனை

    ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தல் ஒரு சுய பரிசோதனை தேர்தல் - இதில் யார் வெற்றி பெறுகிறார்களோ, அவரைச் சார்ந்த கட்சிக்கு வரும் பாராளுமன்ற தேர்தல். அடுத்து வரும் சட்டமன்ற தேர்தல்களில் அசாதாரண சூழ்நிலையை உருவாக்கும்.

    இதற்கிடையில் ஆர்.கே.நகர் சட்டமன்ற தேர்தலில் வேட்பாளர்களாக பிரதான கட்சிகள் தவிர சுயேட்சையாக நின்ற நட்சத்திர வேட்பாளர்களான நடிகர் விஷால், அடுத்து ஜெயலலிதா சகோதரர் மகள் தீபாவும் தான்.

    அது என்ன மாயமோ மந்திரமோ மேற்கண்ட இருவரின் வேட்புமனுவும் நிராகரிக்கபட்டு விட்டது. ஒரு வேளை அவர்களும் நின்றிருந்தால் தேர்தல் இன்னும் சுவராஸ்யம் மிகுந்ததாக இருந்திருக்கும்.

    தற்போது சரியான போட்டி எது என்றால் அ.தி.மு.க வேட்பாளர் மதுசூதனன், தி.மு.க வேட்பாளர் மருதுகணேஷ், சசிகலா சகோதரி மகன் தினகரன் ஆகிய மூவருக்கும் தான்.

    அ.தி.மு.க வேட்பாளாருக்காக பிரச்சாரம் செய்ய வந்த அ.தி.மு.க மந்திரியிடம் யாருக்கு வெற்றி வாய்ப்பு என கேட்டதற்கு...

    அ.தி.மு.க. வேட்பாளர் ஒரு லட்சம் ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்றார்.

    அ.தி.மு.க மந்திரிகள் பேசாமல் இருந்தால் நல்லது என நினைக்கிறேன். பேசுகிறேன் பேர்வழி என எதையாவது பேசி மாட்டிக் கொள்கிறார்கள். அதே போல் மேற்கண்ட அ.தி.மு.க அமைச்சர் கூறியது சாத்தியப்படாத ஒன்று. காரணம் கடந்த தேர்தலில் ஜெயலலிதா வேட்பாளராக நின்று ஜெயித்து வந்த இடம். ஜெயலலிதாவே 40 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் தான் வென்றார்.

    சென்ற முறை தி.மு.க.வுடன் காங்கிரஸ் மட்டும்தான் ஆதரவு. இப்போது இரண்டு கம்னியூஸ்ட் கட்சிகள் விடுதலை சிறுத்தை கட்சி ம.தி.மு.க, த.மு.க. என பல கட்சிகள் ஆதரவு ஆட்சி மீது அதிருப்தி கொண்ட மக்கள் ஓட்டு, தினகரன் ஆதரவு ஓட்டு என கூட்டி கழித்துப்பார்த்தால் கணக்கு கொஞ்சம் இடிக்குது. பொதுவா இடைத்தேர்தலில் அதுவும் இரண்டு ஆண்டாக ஆட்சி நடத்தும் ஆளும் கட்சியின் வேட்பாளர் தான் ஜெயிப்பார் இந்த முறை இந்த பார்முலா எடுபடாது என நினைக்கிறேன்.

    ஆர்.கே.நகர் தேர்தல் டிசம்பர் 21-ல் நடக்கிறது. அன்றே தான் 2ஜி ஊழல் குற்றசாட்டின் வழக்கு தீர்ப்பும் வருகிறது. இன்றைக்கு எழுதிவைத்துக் கொள்ளுங்கள். 2ஜி ஊழல் வழக்கின் தீர்ப்பு யாரும் எதிர்பார்க்காத ஒன்றாக இருக்கும். இந்த தீர்ப்பால் தி.மு.க. இன்னும் அதிக சுறுசுறுப்பு அடையலாம்.

    அன்புடன்,

    ஜி.அசோகன்.

    எந்த மதம் வேண்டாம்!

    ஜப்பான் நாட்டின் தேசியதினத்தை சார்ந்து உலகமெங்கும் உள்ள ஜப்பான் தூதரகங்களில் அந்த நகரின் முக்கிய நபர்களை அழைத்து விருந்து கொடுப்பார். கடந்த 10 ஆண்டுகளாக என்னையும் அழைப்பார்கள். இந்த வருடமும் அழைத்தார்கள். சென்று வந்தேன். நிகழ்ச்சியை சென்னையில் உள்ள ஜப்பான் தூதரகத்திலும் நடத்தியிருக்கிறார்கள். இந்த வருடம் நவம்பர் 29ஆம் தேதி மாலை 7 மணி முதல் 9 மணி வரை சென்னையில் பிரபல ஐந்து நட்சத்திர ஹோட்டலான தாஜ்கொரமண்டலில் நடத்தினார்கள். நிகழ்ச்சியில் முதலில் நமது தேசிய கீதத்தை ஜப்பான் நாட்டு மக்கள் பாடினார்கள்.. அடுத்து அவர்களின் ஜப்பான் தேசிய கீதத்தை பாடினார்கள். அதன் பின்னர் கடந்த வருடம் நடந்த முக்கிய சாதனை செய்திகளை ஜப்பானிய தூதர் ஆங்கிலத்தில் உரையாற்றினார். அவர் அதனைச் சார்ந்த விஷயம் வீடியோ காட்சி காட்டுவார்கள். நிகழ்ச்சி முடிந்ததும் ஜப்பான் நாட்டு உணவுகள் மற்றும் இந்திய உணவுவகைகள், பரிமாறுவார்கள். அங்கே வந்தவர்களில் அனேகமாக நான்தான் கொஞ்சமாக சாப்பிட்டிருப்பேன்.

    மறுநாள் நவம்பர் 30ஆம் தேதி பகல் 12.55க்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து இன்டிகோ விமானத்தில் ஓடிசா மாநில புவனேஷ்வர் நகர் விமான நிலையத்திற்கு சென்று அங்கிருந்து புகழ்பெற்ற ஆதிகடவுளான ஜெகநாதர் கோயில் உள்ள புரிக்கு செல்ல வேண்டும்.

    ஓ! புரிக்கு எதற்கு பயணம் என கேட்பது புரிகிறது. இந்திய மொழி பத்திரிகையாளர்கள் சங்கம் 78 ஆண்டுகள் பழமையானது. இதில் அகில இந்திய தலைவராக டில்லியில் பல பத்திரிகைகள் நடத்தும் டெல்லி பிரஸ் பதிப்பக உரிமையாளர் திரு.பரேஸ்நாத் உள்ளார். நான் தமிழக தலைவராகவுள்ளேன். இதன் ஆண்டு உறுப்பினர்கள் கூட்டம் நடந்தது. அதற்கு செல்ல வேண்டும். காலையில் 9.10.30 மணியில் சென்னையில் மிகப்பெரிய ஸ்ரீ வாரி கல்யாணமண்டபத்தில் ஒரு திருமணம் அதை முடித்துக் கொண்டு நான் என் வீட்டிற்கு வந்து என் உடைகளை எடுத்துக் கொண்டு விமான நிலையம் சென்ற போது நேரம் 12.45 மதியம் 12.55க்கு புறப்பட வேண்டிய விமானத்திற்கு 12.45க்கு சென்றால் எனக்காக இருக்குமா விமானம். விமானத்தை தவற விட்டு விட்டேன். அன்று இரவு முக்கிய நிகழ்ச்சி நான் போயே ஆகணும். விமானப் பயணம் போகிறவர்கள் வெளிநாட்டு பயணிகள் என்றால் அதிகப்பட்சம் மூன்று மணி நேரம் முன்னதாக சென்றால் பரபரப்பு இல்லாமல் பயணிக்கலாம். உள் நாட்டு பயணம் என்றால் குறைந்த பட்சம் ஒரு மணி நேரம் முன்னதாக செல்வது சாலச் சிறந்தது. என்பதை பட்டறிந்த நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

    அதன் பின் என் சொந்த செல்வாக்கை பயன்படுத்தி இண்டிகோ நிர்வாகியிடம் வருந்தி கேட்டுக் கொண்டதால் ரூ.மூன்றாயிரம் தண்டம் கட்டி அடுத்த விமானத்தில் புறப்பட்டேன். பொதுவாக விமானத்தை விட்டு விட்டு அடுத்த விமானத்தை எதிர்பார்த்தால் அதன் கட்டணம் அதிகபட்சமாக பத்தாயிரம் முதல் இருபத்தி ஐந்தாயிரம் வரை கூட தண்டம் கட்ட வேண்டும். நீங்க எந்த மதமோ வேண்டுமானாலும் இருங்க ஆனா தாமதம் மட்டும் வேண்டாம்.

    ஒருவழியாக மதியம் மூன்று மணிக்கு விமானத்தில் ஏறி அமர்ந்தேன். அந்த விமானம் புவனேஷ்வர் சென்று புரிக்கு எப்படி சென்றேன் என்னன்ன பார்த்தேன் என சொல்ல ஆசைதான் ஆனா இடப்பற்றாக்குறை எனவே மீதியை அடுத்த இதழில் எழுதறேன்...!

    சென்ற இதழில் எழுத்துச் சித்தர் பாலகுமாரினின் ‘யானைப் பாலம்’ நாவல் உங்களின் ஏகோதிபத்ய ஆதரவை பெற்றது மிகுந்த மிகழ்ச்சியை தருகிறது. படிக்கும் பழக்கம் படிப்படியாக குறைந்து விடுமோ என பயந்திருந்த நமக்கு பாலகுமாரனின் நாவலை தேடி தேடி படிப்பதைப் பார்த்தால் படிக்க ஆள் இருக்கிறது என்ற மகிழ்ச்சி வருகிறது.

    அண்ணே! நான் கிருஷ்ணகிரி மாவட்ட நூலக சூப்பிரண்ட்ன் அருள்செல்வன் பேசறேன். அண்ணே! என் அன்புக்குரிய, மரியாதைக்குரிய அய்யா! பாலகுமாரின் ‘யானைப் பாலம்’ நாவலை தந்ததற்கு நன்றிண்ணா!

    அண்ணே! அண்ணே! நான் திருவல்லிக்கேணி சிட்டியூனியன் வங்கி உதவி மேலாளர் ரவிச்சந்திரன் பேசறேன். நானும் மூணு வருஷமா கேட்டேன். எழுத்து சித்தர் பாலகுமாரன் நாவலை.. இப்பதான் நேரம் வந்திருக்கு. இதை ஜனவரி முதல் தேதி இதழா கொடுத்திருந்தா புத்தாண்டு பரிசு எடுத்துக் கொண்டு இருப்போம்.

    அசோகா.. நான் தான் பாலகுமாரன்.

    அண்ணா வணக்கம்! சொல்லுங்கண்ணா....

    அசோகா.. நம்ம வாசகர்கள் ஆர்வத்தை பார்த்தா ரொம்ப சந்தோஷமா இருக்குப்பா.

    பாலா அண்ணா.. சொன்ன தப்பா எடுத்துக்க மாட்டீங்களே!

    சொல்லு... அசோகா...

    ஜனவரி முதல் இதழக்கு ஒரு புது நாவல் கொடுத்தா அது பாக்கியம்...!

    நல்ல கேளு அசோகா.. நீ கேட்டு நான் எப்ப இல்லன்னு சொல்லி இருக்கேன். சரி இந்த ‘தரை’ இது நாவல் பெயர், எவ்வளவு சீக்கிரம் எழுத முடியுமோ அவ்வளவு சீக்கிரம் எழுதி தர்றேன். நான்...

    Enjoying the preview?
    Page 1 of 1