Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Oru Kulirkaala Kutram
Oru Kulirkaala Kutram
Oru Kulirkaala Kutram
Ebook105 pages38 minutes

Oru Kulirkaala Kutram

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Oru Kulirkaala Kutram

Read more from Rajeshkumar

Related to Oru Kulirkaala Kutram

Related ebooks

Related categories

Reviews for Oru Kulirkaala Kutram

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Oru Kulirkaala Kutram - Rajeshkumar

    எடுக்கப்படும்.

    1

    ராத்திரி 9.20. அந்த ஒதுக்குப்புறமான தெருவில் பனியின் ஈரம் தரையை இலவசமாக மெழுகி விட்டிருந்தது. டைனமோ விளக்கு மங்கலாய் எரிய டி.ஆர்.மகாலிங்கத்தின் பழைய பாடல் ஒன்றை முணுமுணுத்துக் கொண்டு சைக்கிளை மிதித்துக் கொண்டு இருந்த கான்ஸ்டபிள் பொன்னுரங்கத்தின் பார்வையில் அந்தக் காட்சி மோத - திடுக்கிட்டார். சட்டென சைக்கிளை பிரேக் அடித்தார். அங்கேயே நின்று - இருட்டுக்குள் சற்றுத் தொலைவில் தெரிந்த மசமச உருவத்தை உற்றுப் பார்த்தார்.

    குனிந்து எதையோ தேடுகிறவன் போலத் தெரிந்த அந்த உருவம் முதுகைக் காட்டிக் கொண்டு நின்றிருந்தது.

    'என்ன செய்கிறான்?'

    கான்ஸ்டபிள் சைக்கிளை ஸ்டாண்ட் போட்டு விட்டு மெதுவாய் அவனை நெருங்கினார். தூரத்தில் கண் சிமிட்டிக் கொண்டிருந்த தெரு விளக்கின் வெளிச்சம் விட்டு விட்டு அவன் மேல் மின்னலடிக்க கான்ஸ்டபிள் புருவத்தைச் சுருக்கினார்.

    அந்த உருவம் வியர்த்துப் போன முகத்தோடு - சாலையோரம் இருந்த அந்த மேன்ஹோலின் மூடியைத் திறக்க முயன்று கொண்டிருந்தது.

    2

    ஆட்டோவில் நெருக்கியடித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தார்கள், பவித்ராவும், சரண்குமாரும். திருப்பங்களின் போதும், மேடு பள்ளங்களில் ஆட்டோ குலுங்குகிறபோதும் வேண்டுமென்றே அவள்மேல் மெத்மெத்தென்று மோதினான். திடீர் திடீர் என்று எதிர்பாராமல் வழவழ இடுப்பைக் கிள்ளி விட்டு பவித்ராவின் முகம் ரோஸ் பவுடர் போட்ட மாதிரி சிவந்து போவதை ரசித்துப் பார்த்தான். உங்கள் யூகம் சரி.

    அவர்கள் இரண்டு பேரும் புது மெருகு குலைந்து போகாத தம்பதிகள்.

    சரண்குமாரின் முகத்தில் இடம் பிடித்திருந்த அடர்த்தியான மீசையும், தூக்கிச் சீவின ஹேர் ஸ்டைலும், பளிச்சிடும் நிறமும் கூட்டணி அமைத்துக் கொண்டு யாரோ ஒரு கன்னட, நடிகரை ஞாபகப்படுத்தியது. அவனுடைய அசத்தலான பர்சனாலிடியில் மயங்கி காதல் விண்ணப்பம் போட்ட நிறைய பெண்களை சட்டை செய்யாமல் ஒதுக்கி விட்டு அம்மா, அப்பா பார்த்து நிச்சயம் செய்த இந்தப் பவித்ராவை தொண்ணூற்றியொன்பது நாட்களுக்கு முன்னால் மனைவியாய் வரித்துக் கொண்டான்.

    இன்று நூறாவது நாள்.

    பவித்ரா. சர்வ நிச்சயமாய் சரண்குமாருக்காகவே படைக்கப்பட்டவள் போல அழகில் அவனுக்கு ஈடு கொடுத்தாள். லிப்ஸ்டிக் பூசி கொஞ்சம் ரோஸ் பவுடரை அப்பிக் கொண்டால் யார் இந்தப் புதுமுகம் என்று கேட்பவர்களைப் பார்த்து ஆச்சரியப்பட வேண்டியதில்லை. ஊதா வர்ண காட்டன் புடவைக்குள் பளபளவென்று நிரம்பியிருந்தாள். அவ ரிசப்ஷனுக்காக எடுத்த புடவை. அவளுடைய நிறம் தூக்கலானதா அல்லது அவளுடைய காதுகளில் தொங்கும் தங்க ஜிமிக்கிகளின் நிறம் தூக்கலானதா என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடத்தினால் தீர்ப்பு சொல்ல வேண்டியவர் திணறிப் போவார். கல்யாணப் பந்தலிலிருந்து அப்படியே எழுந்து வந்து விட்டவள் போல கை நிறைய வளையல்களும் கழுத்து நிறைய சங்கிலியும், நெக்லேசுமாய் ஜ்வலிப்பாய் இருந்தாள்.

    ஆட்டோ தெருக்களில் பாய்ந்து அந்த உயர்ரக ஓட்டல் வாசலில் அவர்களை உதிர்த்தது.

    இருவரும் இறங்கினார்கள். ஓட்டலின் பெயரை ஆங்கிலத்திலும், தமிழிலும் கட்டிட உச்சியின் இருட்டான பின்னணியில் நியான் சிவப்பாய் எழுத்துக்களைத் திரட்டி உச்சரித்துக் - கொண்டிருந்தது. ஊர் மொத்தமும் ஓட்டலில் வந்து குவிந்து கொண்ட மாதிரி கும்பலோடு இருந்தது ஓட்டல்.

    அசையாமல் விறைப்பாய் நிற்கிற பச்சை யூனிபார்ம் அணிந்த செக்யூரிடி கார்டைக் கடந்தார்கள். முன்புறமிருந்த புல்வெளியின் மத்தியில் நின்று கொண்டிருந்த பெண்ணின் சிலை நீரை இறைத்து தன் கையிலிருந்து கொட்டுவது போல பாவ்லா காட்டிக் கொண்டிருந்தது.

    அகலமான படிக்கட்டுகளில் உயர்ந்து உள்ளே நுழைந்தார்கள். விஸ்தாரமான டைனிங் ஹால். கண்ணுக்கெட்டிய வரை மேஜைகள், ஜனங்கள், சர்வர்கள், சீலிங்கில் மறைந்திருக்கிற ஸ்பீக்கர்களில் பாலமுரளிகிருஷ்ணா மெலிதாகப் பாடிக் கொண்டிருப்பதை யாருமே கவனிப்பதாகத்

    Enjoying the preview?
    Page 1 of 1