Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Oru Roja Ithazhum Sila Raththa Thuligalum
Oru Roja Ithazhum Sila Raththa Thuligalum
Oru Roja Ithazhum Sila Raththa Thuligalum
Ebook131 pages35 minutes

Oru Roja Ithazhum Sila Raththa Thuligalum

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Oru Roja Ithazhum Sila Raththa Thuligalum

Read more from Rajeshkumar

Related to Oru Roja Ithazhum Sila Raththa Thuligalum

Related ebooks

Related categories

Reviews for Oru Roja Ithazhum Sila Raththa Thuligalum

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Oru Roja Ithazhum Sila Raththa Thuligalum - Rajeshkumar

    எடுக்கப்படும்.

    1

    வானிலை நிலையத்தின் அதிகாரிகளை ஏமாற்றிவிட்டு - சென்னையை இருபத்திநாலு மணி நேரமும் விடாமல் நனைத்துக் கொண்டிருந்தது மழை.

    ராத்திரி மணி ஒன்பது. ஹாரிங்க்டன் ரோடு, கடைசி பங்களா. அழகான - ஆறடி உயர - விஜய் பாபு குளிர்க்கு இதமாய் ஸ்வெட்டர் அணிந்துக் கொண்டு மேஜையின் மேலிருந்த கார் சாவியை எடுத்தபடி போர்டிகோவுக்கு வந்தான். போர்டிகோ வராந்தாவில் நாற்காலிகளைப் போட்டு உட்கார்ந்தபடி பேசிக் கொண்டிருந்த அவனுடைய அப்பா வராக மூர்த்தியும் அம்மா ரஞ்சிதமும் நிமிர்ந்தார்கள் ஆச்சர்யமாய் ரஞ்சிதம் கேட்டாள்.

    டேய்... எங்கேடா புறப்பட்டே... இந்த மழையில...?

    மேரேஜ் இன்விடேஷனை கொடுக்கத்தான்...

    யாருக்கு...?

    என் ஃப்ரெண்ட் ஜெயகோபாலுக்குத் தான்... இந்நேரம் போனாத்தான் அவனை க்வார்ட்டர்ஸில்... பிடிக்க முடியும்...

    ஆவடியில் தானே அவன் இருக்கான்...?

    ஆமா...

    இன்விடேஷனை போஸ்ட்ல அனுப்பிட்டு... போன்ல கூப்பிட்டு விட வேண்டியது தானே...? இதுக்காக மெனக்கெட்டு இந்த சிணுங்கற மழையில் போகணுமா...?

    வராகமூர்த்தி குறுக்கிட்டார். ரஞ்சிதம்! நீ பேசறது... நல்லாயிருக்கா...? யார் யாரை நேர்ல போய் கூப்பிடணும். யார் யாருக்கு போஸ்ட்ல இன்விடேஷன் அனுப்பணும்ன்னு அவனுக்குத் தெரியாதா... என்ன...? டேய்... விஜய் நீ கிளம்புடா...

    அப்பான்னா... அப்பாதான்...

    ஆனா... ஒரு கண்டிஷன். போய்ட்டு ஒரு மணி நேரத்துக்குள்ளே திரும்பிடணும்... ஐ... மீன்... பத்து மணி அடிக்கும்போது... கார் காம்பௌண்ட் கேட்டுக்குள்ளே நுழையணும்... ஆவடியில்... இறங்கி நடக்கும்போது... மழையில் அதிகம் நனையாதே... கல்யாணம் நெருங்கிட்டு வரும்போது... காய்ச்சல் கீய்ச்சல்ன்னு விழுந்துட்டா... சிரமமா போயிரும்...

    "கார் இருக்கும்போது நான் ஏன்ப்பா மழையில் நனையப் போறேன்... ஒரு சொட்டு ஈரமில்லாமே... உன்முன்னாடி வந்து நின்னாப் போதும் இல்லையா? சொல்லிக்கொண்டே போர்டிகோவில் நின்றிருந்த காரை நோக்கிப் போனான்... விஜய்பாபு.

    தூறிக் கொண்டிருந்த மழையில் – காரை காம்பௌண்ட் கேட்டுக்கு வெளியே கொண்டுவந்து வேகம் எடுத்த போது - நேரம் 9.05. வானம் அட்டைக்கறுப்பில் கனமாய் தெரிந்தது. காரின் முன்புறக் கண்ணாடியில் - மழைத்தூறல் வேகமாய்ப்பட்டு நனைக்க - வேப்பர்கள் இயங்கியது.

    ‘இந்த இன்விடேஷன் டிஸ்ரிப்யூஷன் வேலையை அடுத்த இரண்டு நாட்களுக்குள் முடித்து விட வேண்டும்... கல்யாணத்திற்கு முன் நான்கைந்து நாட்களாவது ஃப்ரீயாக இருக்கவேண்டும். இன்றைக்கு ஜெயகோபாலைப் பார்த்து கொடுத்துவிட்டால்... நாளைக்கு டி.நகர் சர்க்கிள்... மறுநாள் அடையார் சர்க்கிளைப் பார்த்து... இன்விடேஷனை டிஸ்ட்ரிப்யூட் பண்ணிட வேண்டியது தான்...’

    யோசனையாய் காரைச் செலுத்திக் கொண்டுவந்தவன் – ஈகா தியேட்டர் சந்திப்பில் சிவப்பு சிக்னலைப் பார்த்ததும் பிரேக்கை அழுத்தினான். கார் மஞ்சள் கோட்டையொட்டி நின்றது.

    அம்பர்க்காக காத்திருந்தான்.

    அந்த விநாடிகளில்தான் - அந்த பியட்கார் - அவனுடய மாருதியையொட்டி வந்து பக்கவாட்டில் நின்றது.

    விஜய்பாபு திரும்பிப் பார்த்து – ட்ரைவிங் சீட்டில் இருந்த இளம் பெண்ணைப் பார்த்ததும் கண்களை விரித்தான். உதடுகள் தன்னிச்சையாய் பிரிந்து -

    பிரதிமா - என்று கத்தியது.

    குரல் கேட்டு அவளும் கலைந்து திரும்பினாள். குபீரென்ற மலர்ச்சிக்கு போனாள். ஹாய்... விஜய் பாபு நீங்களா? பம்பாயிலிருந்து எப்ப வந்தீங்க...?

    நானும் ஃபேமிலியும்... இப்ப பம்பாயிலேயே இல்லை... ஏஜென்ஸி பிஸினெஸை மாத்திக்கிட்டு... மூணு வருஷத்துக்கு முன்னாடியே மெட்ராஸ் வந்துட்டோம்... நீ... இப்ப... திருவனந்தபுரத்தில் இல்லையா...?

    இல்லை... மெட்ராஸ் வந்து ஆறுமாசமாச்சு... சிக்னல்ல க்ரீன் விழுந்தாச்சு... என் கார்க்குப் பின்னாடியே வாங்க... பக்கத்து தெருவுலதான் என்னோட வீடு... ஒரு பத்து நிமிஷம் பேசிட்டு போலாம்...

    விஜய்பாபு பதில் சொல்வதற்கு முன்னே - பிரதிமாவின் கார் கிளம்பியது. ஈகா தியேட்டர்க்கு பக்கத்து ரோட்டில் கிளம்பியது.

    பியட்டை பின் தொடர்ந்தது மாருதி.

    இரண்டு நிமிஷ பயணம்.

    மூன்றாவது குறுக்குத் தெருவில் பியட் நுழைந்து - மழைநீர் தேங்கி குழிகளாகியிருந்த ரோட்டில்... கார் தத்தி தத்திப் போய் - அந்தச் சிறிய பங்களாவின் முன் நின்றது. பிரதிமா தூறுகிற மழையை பொருட்படுத்தாமல் - காரை விட்டு இறங்கிப் போய் - காம்பௌண்ட் கேட்டை திறந்து வைத்துவிட்டு மறுபடியும் கார்க்கு வந்து - உள்ளே செலுத்திக் கொண்டு போனாள். விஜய்பாபுவும் பின் தொடர்ந்து போய் காரை நிறுத்தி விட்டு கீழே இறங்கினான்.

    அழகான சிறிய பங்களா. சுற்றிலும் நிறைய குரோட்டன்ஸ் தொட்டிகள். பிரதிமா அவனை நெருங்கினாள்.

    வாங்க விஜய்பாபு...

    வீடு... அற்புதமா இருக்கு...

    "சொந்தவீடுன்னு நினைச்சுக்காதீங்க... திஸ்...

    Enjoying the preview?
    Page 1 of 1