Oru Nadaipaathai azhugiradhu
5/5
()
About this ebook
Read more from Anuradha Ramanan
Kanmani Un Arugil Rating: 5 out of 5 stars5/5Agini Ambugal Rating: 5 out of 5 stars5/5Koottukulle Sila Kalam Rating: 5 out of 5 stars5/5Velvet Manasu Rating: 5 out of 5 stars5/5Neeyum Nanum Ninaiththaal Rating: 5 out of 5 stars5/5Nizhalukku Yengum Marangal Rating: 5 out of 5 stars5/5Uravai Thedum Paravai Rating: 5 out of 5 stars5/5Oru Nimisam Please Rating: 5 out of 5 stars5/5Kadhalaal Valarnthen Rating: 5 out of 5 stars5/5kadhal Regai Rating: 5 out of 5 stars5/5Uruga Marukkum Meluguvarthikal Rating: 0 out of 5 stars0 ratingsKana Kaanum Kangal Rating: 5 out of 5 stars5/5Unnai Pol Oruthi Rating: 0 out of 5 stars0 ratingsYetho Ariyen Enatharuyire Rating: 5 out of 5 stars5/5Mullodu Oru Roja and Oru Mutrupulli ‘kama’ vagerathu Rating: 0 out of 5 stars0 ratingsVaralama Unnodu Rating: 0 out of 5 stars0 ratingsMaalaiyil Solkiren Vaa Rating: 0 out of 5 stars0 ratings
Related to Oru Nadaipaathai azhugiradhu
Related ebooks
Mundhanai Sirai Rating: 3 out of 5 stars3/5Sonthamendru Vanthathellam Rating: 5 out of 5 stars5/5Gangaikarai Pookkal Rating: 5 out of 5 stars5/5Shyamala... Rating: 5 out of 5 stars5/5Ennuyire... Rating: 5 out of 5 stars5/5Ithazhoram Varalama Rating: 0 out of 5 stars0 ratingsKaadhalikka… Kaathiru Rating: 0 out of 5 stars0 ratingsNettruvarai Nandhavanam Rating: 5 out of 5 stars5/5Neeyum Naanum Oru Veedum Rating: 0 out of 5 stars0 ratingsNilavum Penthaan Rating: 5 out of 5 stars5/5Paarvai Rating: 0 out of 5 stars0 ratingsMouna Kanavu Rating: 5 out of 5 stars5/5Kaadhalikkum Bothimaram Rating: 0 out of 5 stars0 ratingsPoovodum Pottodum Rating: 0 out of 5 stars0 ratingsInnoru Karanam Rating: 0 out of 5 stars0 ratingsAmma Rating: 5 out of 5 stars5/5Varunkaalam Vasantha Kaalam Rating: 0 out of 5 stars0 ratingsDeivam Nindru Kollum Rating: 0 out of 5 stars0 ratingsAvargalukku Puriyathu Rating: 5 out of 5 stars5/5Mogam Ennum Naadakam Rating: 0 out of 5 stars0 ratingsVettai Maan Rating: 0 out of 5 stars0 ratingsMana Oonjal Rating: 0 out of 5 stars0 ratingsNadaimurai Kaaviyam Rating: 5 out of 5 stars5/5Thavam Rating: 5 out of 5 stars5/5Kana Kaanum Kangal Rating: 5 out of 5 stars5/5Veettu Nilakkal Rating: 4 out of 5 stars4/5Unnaruge Ullaval Rating: 0 out of 5 stars0 ratingsAambalai Rating: 5 out of 5 stars5/5Yaar Intha Kalyani? Rating: 4 out of 5 stars4/5Irattai Naakkugal Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Oru Nadaipaathai azhugiradhu
1 rating0 reviews
Book preview
Oru Nadaipaathai azhugiradhu - Anuradha Ramanan
7
1
பத்து நாட்களுக்கு மேலாகிவிட்டது- சித்ரா தன் கணவன் ரகுவிடம் பேசி...
சட்டென இருவரிடையே மிகப் பெரிய விரிசல் விழுந்தாற்போல... பூவும் நாருமாய் பிணைந்து கிடந்த இல்லறம் பூவும் நாரும் வாடி தளர்ந்து போய் விட்டாற் போல...
எத்தனை அன்னியோன்யமான- ஆதர்சமான தம்பதிகள் அவர்கள். கல்யாணமானதிலிருந்து இதுநாள் வரையில் அந்த அன்பிலும் பாசத்திலும் எந்தக் குறையையும் யாரும் கண்டு பிடிக்கவில்லை.
அவன்.... அவள் கண்ணசைவுக்காக தவமிருப்பான். ஆபீசிலிருக்கும் போது குறைந்தது நாலு தரமாவது போன் செய்து அவளிடம் பேச்சு கொடுப்பான்.
சித்ரா என்ன செய்யறே...?
டிபன் பண்ணலாம்னு சமையலறைக்குள்ளே போனேன். உங்க கிட்டேயிருந்து போன். என்ன வேணும்?
என்ன வேணும்னாலும் தருவியா...?
ஷ்... எதிர்த்தாப்பல...
என்ன... என்ன எதிர்த்தாப்பல... என் போட்டோவா...?
ஐயோ அது இல்லீங்க...
பின்னே...?
வசதி இல்லீங்க...
ஏன்... வசதி வேணும்னா டெலிபோனை பெட்ரூமுக்கு தூக்கிட்டு போயேன்...
.......
நான் வேணும்னா ஆபீசுக்கு அரை நாள் லீவு போட்டுட்டு வரட்டுமா... ரொம்ப வசதியா இருக்கும்.
அவள் கையில் ரிசீவரை வைத்துக் கொண்டு மலங்க மலங்க விழிப்பாள்.
எதிர்த்தாற்போல அவளது மாமனார்- பழியாய் அமர்ந்து அவள் முகத்தையே வெறித்துக் கொண்டிருப்பார். அவள் கொஞ்சம் பேச்சை நிறுத்தினாலும் விடாமல் கேள்வி கேட்கத் தொடங்கி விடுவார்.
யாரும்மா அது போன்லே...?
உங்க பிள்ளை தான் மாமா...
யாரு... சின்னவனா, பெரியவனா...?
உங்க மூத்த பிள்ளை தான்.
அவனா...? நான் சிவராமனாக்கும்னு நினைச்சேன். அவன்தான் டிரங்க்கால் போடறேன்னான். இன்னும் காணோம்...
அவர் சூயிங்கத்தை இழுப்பது போல பேச்சை இழுத்துக் கொண்டிருக்கும் பொழுதே ரகுவின் குரல் மறுபடியும்.
சித்ரா... என்ன ஸைலண்ட்டாயிட்டே...?
ஒண்ணும் சொல்ல முடியல்லே...
ஏன்...?
நான் போய் இட்லிக்கு அரைக்கணும்...
நீ ஏன் அரைக்கணும்? அதான் கிரைண்டர் இருக்கு இல்லே...
சரிதாங்க... அந்த மிஷின்லேயும் அரிசி, உளுந்தைக் களைஞ்சு போட்டு ஸ்விட்சை போட்டாத்தானே அரைக்கும்.
இதற்குள் மறுபடியும் கிழவர் குரல் கொடுப்பார்.
என்னம்மா மிஷின் ரிப்பேரா...?
இல்லையே மாமா...
இது மாதிரி சமயத்தில் தான் சித்ரா இரைந்து குரல் கொடுப்பாள்.
மணி ரெண்டாயிடுச்சா மாமா. இருங்க. இதோ ஒரு நிமிஷத்துல காபி கொண்டு வந்துடறேன்..
ரகுவிற்கு மனைவியின் தவிப்பு புரியாததல்ல. அது என்னமோ அவளை இது மாதிரி ரகசியமாய் சீண்டுவதில் அவனுக்கு அலாதி பிரியம்.
என்ன சித்ரா... அப்பா எதிர்த்தாப்பல இருக்காரா... இதை முந்தியே சொல்லக்கூடாதா...
உக்கும்...
அவள் செல்லக் கோபத்துடன் சிணுங்குகிறாளா இல்லை அவன் கேட்டதற்கு பதில் சொல்கிறாளா இரண்டுமே அந்த ‘உக்கும்’வில் இருக்கும்.
இத்தனை பேசியும் பெண்டாட்டியை வருடக்கணக்கில் பிரிந்திருப்பவனைப் போல மாலையில் அரக்க பரக்க ஓடி வருவான்.
சித்ரூ சித்ரூ... உனக்கு ஒரு விஷயம் தெரியுமா...
என்ன?
என்னோட ஒர்க் பண்றானே சிவராமன் அவனுக்கு ரெட்டை குழந்தை பிறந்திருக்கு.
அவருக்கா, அவர் பெண்டாட்டிக்கா...
சித்ரா விஷமத்துடன் சிரிப்பாள். அவன் வயிற்றை பிடித்துக் கொண்டு சிரிப்பான்.
அவள் சமையலறையில் இருந்தால்-அவனும் சமையலறையில்... அவள் கிணற்றடியில் துவைக்கப் போனால் - அவனும் பக்கத்திலேயே புடவையை அலசி பிழிந்து கொண்டு... காரண காரியமில்லாமல் அவள் பின்னாலேயே தாய்ப் பசுவைத் தொடரும் கன்றைப் போல...
அத்தனை சந்தோஷங்களும் எங்கே போயிற்று...?
பத்து நாட்கள் முன்வரையில் இருந்த நிம்மதியைக் குலைத்தது யார்...
சித்ரா மங்கிய விளக்கொளியில் தனக்கும் ரகுவிற்கும் இடையே படுத்துறங்கும் தளிரையே கண்கொட்டாமல் பார்க்கிறாள்.
நெஞ்சுக்குள் பாறையைத் தூக்கி வைத்தாற்போல இந்தத் தளிர் சுமையாய் கனக்கிறது.
ப்ரியா....
நாலு வயசு. வண்டு கண்களும்... குண்டு கன்னங்களும்... யார் பார்த்தாலும் அள்ளி அணைக்க வேண்டும் போன்ற துருதுருப்பும்...
பத்து நாள் முன் வரையில் சித்ராவுமே இந்த சிறுமியை இடுப்பில் தூக்கி வைத்துக் கொண்டு அலைந்தவள்தான்.
எங்க ப்ரியா டான்ஸ் ஆடினா இன்னிக்கெல்லாம் பார்த்துட்டே இருக்கலாம்.
வீட்டுக்கு வருபவர்களிடமெல்லாம் சொல்லி சொல்லி மாயந்து போனவள் தான்.
ப்ரியா சிவராமனின் ஒரே மகள்.
சித்ரா, ரகுவை மணந்து அந்த வீட்டுக்குள் அடியெடுத்து வைத்து ஆறு வருஷங்களாகிறது. இத்தனை மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு ஒரு சின்ன கரும்புள்ளி போல ஒரேயொரு குறையை மட்டும் இறைவன் அவர்களுக்கு வைத்து விட்டான்.
ஆறு வருஷங்களில் ஒரு சின்ன ரகுவையோ சின்ன சித்ராவையோ தன் வயிற்றில் சுமக்கும் பேறு அவளுக்குக்கிடைக்கவேயில்லை.
ஆனால்-
ரகு- சித்ராவின் திருமணத்துக்குப்பின் இரண்டு வருடங்கள் கழித்துதான் ரகுவின் தம்பி சிவராமனுக்கும் நிர்மலாவுக்கும் திருமணமாயிற்று...
சரியாய் பத்தே மாதங்களில் லட்டு மாதிரி ப்ரியா பிறந்து விட்டாள்.
தனக்கு இந்த பேறு கிடைக்கவில்லையே என்கிற வருத்தம் சித்ராவுக்குள் இருந்தாலும் ஓரகத்தியின் மீது பொறாமை ஏதும் இல்லை.
அவரவர்களுக்கு எப்பொழுது, எது கொடுப்பினையோ அது தான் கிடைக்கும்.
எத்தனை பாங்காய் அன்று நடந்து கொண்டாள் இந்தப் பெண்.
தாய் தந்தையற்ற அநாதைப் பெண்ணான நிர்மலாவின் பிரசவத்தைக் கூட ஒருத்தியாய் சமாளித்தாளே.
ஊரார் அவளை மலடி என்று முணுமுணுத்தாலும் புகுந்த வீட்டில் ஒரு ஈ எறும்பு கூட அவளை ஒரு வார்த்தை சொன்னதில்லை.
ஆரம்பத்தில் சித்ராவும் இது பற்றி கவலைப்படவில்லை. ஜிங்கென்றுதான் வளைய வந்தாள்.
‘எனக்கு நிகர் யார்...’
கண்ணாடியின் முன் நிற்கும் பொழுதெல்லாம் இந்தக் கேள்வி மனசுக்குள் குதிக்கும்.
கல்யாணமான புதிசில் உடனேயே வயிற்றை சாய்த்துக் கொண்டு நிற்க விரும்பாதவளாய் - அவள் இது பற்றி கணவனிடம் நிறைய பேசியிருக்கிறாள்.
ஏன்னா
உம்
உங்க அம்மாவுக்கு சட்டுபுட்டுனு ஒரு பேரனை பார்க்கணும்னு ஆசையாம். உங்களுக்கு?
சேச்சே... என்ன நீ? இப்பத்தான் எனக்கு வயசு இருபத்தெட்டாறது. அதுக்குள்ளே எனக்கு ஒரு பேரன் வேணும்னு பைத்தியக்காரத்தனமா ஆசைப்படுவேனா... இன்னும் பிள்ளையே பிறக்கலை. அப்புறம் தானே பேரன்.
அவன் வேண்டுமென்றே அவளை சீண்ட, அவள் சிணுங்க...
இந்த இடக்குதானே வேண்டாங்கறது... உங்க எண்ணம் எப்படியோ... என்னைப் பொறுத்தவரைக்கும் கல்யாணமான அடுத்த வருஷமே பிள்ளை பெத்துக்கறவங்க ரொம்பவும் துரதிஷ்டசாலிங்க... குறைஞ்சது ரெண்டு வருஷமாவது புருஷனும் பெண்டாட்டியுமா தனிச்சு வாழ்க்கையை என்ஜாய் பண்ண வேண்டாமா...
குழந்தை இருந்தா - அந்த வாழ்க்கையிலே சந்தோஷமே இருக்காதுன்னு நினைக்கறயா சித்ரா...
"நான் அப்படி சொல்லலை.. புதுசா கல்யாணமானவங்க ஒருத்தரையொருத்தர்