Urainthu Pona Unmai
By Rajesh Kumar
()
About this ebook
Many of his detective novels feature the recurring characters Vivek and Rubella. He continues to publish at least five novels every month, in the pocket magazines Best Novel, Everest Novel, Great Novel, Crime Novel, and Dhigil Novel, besides short stories published in weekly magazines like Kumudam and Ananda Vikatan. His writing is widely popular in the Indian state of Tamil Nadu and in Sri Lanka.
Read more from Rajesh Kumar
Vivek Thotrathillai Rating: 5 out of 5 stars5/5Puthiya Abaayam Rating: 4 out of 5 stars4/5Kuttralathil Oru Kutram Rating: 0 out of 5 stars0 ratingsKaruppu Udai Devathai! Rating: 5 out of 5 stars5/5Sorgam Rating: 5 out of 5 stars5/5Vivek, Vishnu, Oru Vidukadhai Rating: 4 out of 5 stars4/5Mathangalil Aval Margazhi Rating: 5 out of 5 stars5/5Uyir Urugum Satham Rating: 5 out of 5 stars5/5Naan Naaneythaan Rating: 4 out of 5 stars4/5Mella Mella Oru Thigil Rating: 5 out of 5 stars5/5Theeratha Dhrogam Rating: 5 out of 5 stars5/5Manidhan Rating: 5 out of 5 stars5/5Sivappai Oru Pournami Rating: 4 out of 5 stars4/5Uyir Meethu Thaagam Rating: 4 out of 5 stars4/5Dinasari Moondru Kolaigal Rating: 4 out of 5 stars4/5Shimla Ramya Rating: 5 out of 5 stars5/5Thavarukkum Thavarana Thavaru! Rating: 5 out of 5 stars5/5Isai Kolai Rating: 5 out of 5 stars5/5Only Vivek! Rating: 5 out of 5 stars5/5Nalliravu Seithi Rating: 4 out of 5 stars4/5Sorry Wrong Number Rating: 4 out of 5 stars4/5Vendru Vaa Vivek Rating: 3 out of 5 stars3/5Vivek, Roopala Thuppariyum Novelgal Thoguthi 1 Rating: 4 out of 5 stars4/5‘Sorry... Konnuttean..!’ Rating: 0 out of 5 stars0 ratingsOru Kulir Kaala Kutram Rating: 5 out of 5 stars5/5Antha 69 Naatkal! Rating: 5 out of 5 stars5/5Nadunishi Thendral Rating: 5 out of 5 stars5/5Oru Everest Thavaru! Rating: 5 out of 5 stars5/5Good Night Krotham! Rating: 5 out of 5 stars5/5
Related to Urainthu Pona Unmai
Related ebooks
Oru Kulirkaala Kutram Rating: 0 out of 5 stars0 ratingsNeela Nira Nimishangal! and Oru Megathin Thaagam! Rating: 0 out of 5 stars0 ratingsNeethana Nejamthana Rating: 0 out of 5 stars0 ratingsThoorathil Theriyum Sorgam Rating: 0 out of 5 stars0 ratingsPuthaithu Vaitha Nila Rating: 0 out of 5 stars0 ratingsThinam Thinam Thigil Thigil Rating: 0 out of 5 stars0 ratingsL Board Murder Rating: 0 out of 5 stars0 ratingsViolet Kanavugal! Rating: 0 out of 5 stars0 ratingsNenjamellam Nerinjimul Rating: 0 out of 5 stars0 ratingsThoonkaatha Thottakkal and Gopuram Maark Kolaikal Rating: 0 out of 5 stars0 ratingsJanuary Iravugal Rating: 0 out of 5 stars0 ratingsEverest Thottuvidum Uyaramthaan Rating: 0 out of 5 stars0 ratingsMella Varum Boogambam Rating: 0 out of 5 stars0 ratingsOnbathaavathu Thisai Paththavathu Giragam Rating: 0 out of 5 stars0 ratingsAntha 69 Naatkal! Rating: 0 out of 5 stars0 ratingsNenju Porukkuthillaiye Rating: 0 out of 5 stars0 ratingsUdaiyaatha Vennila Rating: 0 out of 5 stars0 ratingsBirunthaa Anbirunthaa Rating: 5 out of 5 stars5/5Thazhambu Naagangal! and Irandavathu Mugam Rating: 0 out of 5 stars0 ratingsMoodu Pani Nilavu Rating: 0 out of 5 stars0 ratingsThapu Thappai Oru Kolai Rating: 0 out of 5 stars0 ratingsSivappu Puraakkal! and Vanna Vanna Thurokangal! Rating: 0 out of 5 stars0 ratingsVer Kooda Poo Pookkum Rating: 0 out of 5 stars0 ratingsOndrum Ondrum Moondru...! Rating: 0 out of 5 stars0 ratingsEllam Poi and Karuppu Thamarai Rating: 0 out of 5 stars0 ratingsVellai Nizhal! Rating: 0 out of 5 stars0 ratingsOru Sanikizhamai Iravu Rating: 0 out of 5 stars0 ratingsKuri… Rating: 0 out of 5 stars0 ratingsNovember Nalliravu Narmatha Rating: 0 out of 5 stars0 ratingsArunthathiyum AaruThottakkalum Rating: 0 out of 5 stars0 ratings
Related categories
Reviews for Urainthu Pona Unmai
0 ratings0 reviews
Book preview
Urainthu Pona Unmai - Rajesh Kumar
http://www.pustaka.co.in
உறைந்து போன உண்மை
Urainthu Pona Unmai
Author:
ராஜேஷ்குமார்
Rajesh Kumar
For more books
http://www.pustaka.co.in/home/author/rajesh-kumar-novels
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
1
கீர்த்தனா...!
கீழே அப்பாவின் குரல் கேட்டு மாடியறையில் கண்ணாடி முன் நின்றிருந்த கீர்த்தனா அவசர அவசர மாய் நெற்றிக்கு ஸ்டிக்கர் பொட்டை ஒட்ட வைத்துக் கொண்டே குரல் கொடுத்தாள்.
இதோ வந்துட்டேன்...
சீக்கிரமா வாம்மா...! நான் உன் கூட ரெண்டு நிமிஷம் பேசிட்டு வெளியே கிளம்பணும்.
கீர்த்தனா கண்ணாடியை விட்டுத் திரும்பினாள். இருபத்தி மூன்று வயதான கீர்த்தனாவின் உடம்பில் இளமை வசந்த விழாவைக் கொண்டாடிக் கொண் டிருந்தது. மஞ்சள் நிற சுடிதாரும், மார்புப் பகுதியை மூடியிருந்த கறுப்பு வண்ண துப்பட்டாவும் அவளுடைய ரோஜா நிற உடம்புக்கு எடுப்பாய் இருந்தது. பெரிய கண்களில் நிறையவே காந்தம்.
மாடிப்படிகளில் இறங்கி ஹாலில் சோபாவில் சாய்ந்து இருந்த அப்பா குமரகுருவுக்கு முன்பாய் வந்து நின்றாள்.
சொல்லுங்கப்பா...
காதோரங்களில் நரைத்து கண்களுக்கு பவர்ஃபுல் ஸ்பெக்ஸ் கொடுத்திருந்த குமரகுரு நிமிர்ந்தார்.
காலேஜ் இன்னிக்கு லீவுதானே?
ஆமாம்பா
மொதல்ல உட்கார்.
எதிரில் உட்கார்ந்தாள்.
குமரகுரு கேட்டார்.
இன்னிக்கு என்ன தேதி...?
செப்டம்பர் 3
பட்டென்று சொன்னாள் கீர்த்தனா.
போன மார்ச் மாசம் 3ம் தேதி நீ என்ன சொன்னே?
என்ன சொன்னேன்...
பதில் கேள்வி கேட்காதே யோசனை பண்ணிப் பாரு... கீர்த்தனா வயசானவன் நான் மறந்தாலும் நீ மறக்க மாட்டியே...?
அவள் யோசித்து விட்டு தலையாட்டினாள்.
ஸாரிப்பா எனக்கு ஞாபகம் இல்லை
நிஜமாவே உனக்கு ஞாபகம் இல்லையா...? இல்லே ஞாபகம் இல்லாத மாதிரி நடிக்கிறியா...?
என்னப்பா... நீங்க...? எனக்கு ஞாபகம் இருந்தா சொல்ல மாட்டேனா...?
சரி சரி நானே சொல்லிடறேன்...
என்றவர் குரலைத் தாழ்த்திக் கொண்டார். போன மார்ச் மாதம் 3ம் தேதி ஒரு ராத்திரி நேரம் இதே சோபாவில் எதிர் எதிரே நீயும் நானும் உட்கார்ந்து பேசிட்டு இருக்கும்போது நீ என்ன சொன்னே தெரியுமா...? அப்பா எனக்கு இப்ப கல்யாணம் வேண்டாம். ஆறு மாசம் கழிச்சு பேசிக்கலாம். அப்ப நீங்க என்ன முடிவு எடுத்தாலும் 'ஓ.கே.' சொல்லிடறேன்னு சொன்னே. ஞாபகம் இருக்கா...?
கீர்த்தனா புருவங்களை உயர்த்தினாள்.
ஓ அதுவா...?
அதுவேதான்...! இப்ப அந்த கெடு முடியுது. பேசலாமா...?
அய்யோ அப்பா...! அது ஒரு பேச்சுக்கு சொன்னது. என்னோட கல்யாணத்துக்கு இப்ப என்னப்பா அவசரம்? நான் எம்.எஸ்.சி, முடிக்க வேண்டாமா...? இன்னும் ஒரு வருஷம் போகட்டுமே?
நோ வாய்தா... உன்னோட படிப்பு இன்னும் ஆறு மாசம் தான் இருக்கு. கல்யாணத்தைப் பண்ணிக்கோ... அதுக்கப்புறம் படி. யார் வேண்டாம்ன்னு சொன்னது?
கீர்த்தனா ஒரு விநாடி யோசித்தாள். 'இனி அப்பா கன்வின்ஸ் ஆக மாட்டார். பேசாமல் தலையை ஆட்டிட வேண்டியதுதான். மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தால் அதில் எப்படியும் ஒரு வருஷம் ஓடிவிடும், அப்பாவுக்கும் எனக்கும் பிடித்த மாதிரி மாப்பிள்ளை அமைவதற்குள் நாட்கள் ஓடிவிடும்...!
குமரகுரு அவளுடைய தோளைத் தொட்டார்.
என்னம்மா யோசனை?
சரிப்பா... நான் கல்யாணம் பண்ணிக்கறேன்...! மெதுவா நிதானமா மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிங்க...
என்னது...! மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிக்கிறதா...? சரியா போச்சு. நான் மாப்பிள்ளை பார்த்துட்டேன்மா,
"மாப்பிள்ளை பார்த்துட்டீங்களா?! கீர்த்தனா அதிர்ந்து போனவளாய் அப்பாவைப் பார்த்தாள்,
ஆமாம்மா...? இதோ மாப்பிள்ளையோட போட்டோ
சொன்னவர் டீபாயின் மேல் ஒரு ப்ரவுன் கவரை எடுத்து உள்ளேயிருந்து போஸ்ட் கார்டு சைஸ் போட்டோ ஒன்றை உருவி அவளிடம் நீட்டினார்.
கீர்த்தனா போட்டோவை வாங்கிப் பார்த்தாள். போட்டோவில் ஒரு இளைஞன் டை கட்டிக் கொண்டு அழகாய் சிரித்தான். சுருண்ட கேசம் தலைகொள்ளாமல் அடர்த்தியாய் தெரிந்தது. கண்களில் கூர்மை.
என்னம்மா...! போட்டோவைப் பார்த்தியா... மாப்பிள்ளை எப்படியிருக்கார். போட்டோவில் இருக்கிறதைக் காட்டிலும் நேர்ல இன்னமும் அழகாய் இருப்பாராம். தரகர் சொன்னார். பையன் பேரு அஸ்வினிகுமார். ஒரு பெரிய ஐ.டி. கம்பெனியில் சீஃப் ப்ரோக்ராம் ஆபீசராய் இருக்கார். நல்ல குடும்பம். நீ போட்டோவைப் பார்த்து ஓ.கே. சொன்னா போதும், பெண் பார்க்க அவர்களை வரச் சொல்லிடலாம்,
அப்பா...
என்னம்மா...!
நீங்க ரொம்பவும் அவசரப்படறீங்க...
இதோ பாரம்மா...! நா ஒண்ணும் அவசரப்படலை. உன்னோட அம்மா மட்டும் உயிரோடு இருந்திருந்தா ரெண்டு வருஷத்துக்கு முன்னாடியே உனக்குக் கல்யாணம் நடந்து இப்போ ஒரு குழந்தைக்கு அம்மாவாகி இருப்பே... தெரியுமா...!
அப்பா... நான் என்ன சொல்ல வர்றேன்னா..?
நீ ஒண்ணையும் சொல்லாதேம்மா... இந்தப் பையனை எனக்குப் பிடிச்சிருக்கு... உனக்குப் பிடிச்சிருக்கா இல் லையா?
அது... வந்து...
உன்னோட அபிப்பிராயத்தைச் சொல்லம்மா.
உங்களுக்குப் பிடிச்சிருந்தா எனக்கும் பிடிச்ச மாதிரி தான்ப்பா.
இப்பத்தான் நீ என் பொண்ணு!
என்று சொல்லி சிரித்தவர் கண்ணைச் சிமிட்டிக் கொண்டே கேட்டார்.
அப்படீன்னா… பெண் பார்க்க வரச் சொல்லிடலாமா?
கீர்த்தனா 'சரி' என்கிற மாதிரி தலையசைத்துக் கொண்டிருக்கும்போதே அவளிடம் இருந்த செல்போன் ரிங்டோனை வெளியிட்டது. எடுத்து அழைப்பது யாரென்று பார்த்தாள்.
ஒரு புது எண் டிஸ்ப்ளேயில் பளிச்சிட்டது.
'யாராக இருக்கும்?'
கீர்த்தனா யோசித்துக் கொண்டு இருக்கும்போதே குமரகுரு கேட்டார்.
போன்ல யாரம்மா...?
தெரியல்லேப்பா... சொன்னவள் செல்போனை காதுக்குப் பொருத்தி மெல்ல குரல் கொடுத்தாள்.
எஸ்...
மறுமுனையில் ஒரு ஆண்குரல்.
யார் பேசறது. மிஸ் கீர்த்தனா?
எஸ்.
நான் அஸ்வினிகுமார்...
அஸ்வினிகுமர...
நான் யார்ன்னு தெரியலையா கீர்த்தனா...? என்னோட போட்டோவை இன்னும் நீங்க பார்க்கலையா...? தரகர் கொண்டு வந்து கொடுத்திருப்பாரே...?
கீர்த்தனாவுக்கு சட்டென்று நெற்றி வியர்த்து வாய் ஈரம் இல்லாமல் உலர்ந்து போயிற்று.
நீ.. நீ... நீங்க..?
எஸ்... உங்களுக்காக பார்க்கப்பட்ட மாப்பிள்ளை. நீங்க என்னோட போட்டோவைப் பார்த்து இருப்பீங்க., என்னைக் கல்யாணம் பண்ணிக்க நீங்க 'எஸ்' சொல்லுவீங்களோ
நோ சொல்வீங்களோ எனக்குத் தெரியாது. அதுக்குள்ளே கொஞ்சம் அதிகப்பிரசங்கித்தனா மாய் போன் பண்ணிட்டேன். வெரி... ஸாரி...
அ... அ... அப்பாகிட்ட பேசணுமா...?
இல்ல... இல்ல... உங்ககிட்டதான் பேசணும்...
ஒரு நிமிஷம்...!
ப்ளீஸ்... டேக் யுவர் வோன் டைம்.
கீர்த்தனா குமரகுருவிடம் திரும்பினாள். குரலைத் தாழ்த்திக் கொண்டு பேசினாள். அப்பா! போனில் அந்த மாப்பிள்ளை வரன் அஸ்வினிகுமார். என்னோடு பேசணு மாம்...
குமரகுரு புன்னகையோடு எழுந்தார். நீ அவர்கிட்ட ஃப்ரீயா பேசம்மா... நான் என்னோட ரூமுக்குப் போறேன்.
அவர் கிளம்பிப் போய்விட கீர்த்தனா சில விநாடிகள் யோசனையாய் இருந்து விட்டு செல் போனுக்கு உதட்டைக் கொடுத்தாள்.
ம்... சொல்லுங்க... என்ன விஷயம்?
என்னோட போட்டோவைப் பார்த்தீங்களா.
பார்த்தேன்...
எப்படி...? நான் பரவாயில்லையா...?
பார்த்தேன்... ஒரு பத்து நிமிஷத்துக்கு முன்னாடி தான் தரகர் கொண்டு வந்து கொடுத்தார்.
எப்படி...? நான் பரவாயில்லையா?
மார்க் போடட்டுமா?
ம்...
100க்கு 99 மார்க்.
உங்களுக்கும் அதே மார்க்.
"தேங்க்யூ... கீர்த்தனா...! எனக்கு இந்த பஜ்ஜி சொஜ்ஜியோடு பெண் பார்க்கிற படலம் பிடிக்காது. உங்களுக்கு என்னையும் எனக்கு உங்களையும் பிடிச் சிருந்தா தனியா சந்திச்சு மனம் விட்டுப் பேசணும். உங்க விருப்பு வெறுப்புகள் என்னோட விருப்பு வெறுப்புகள் ரெண்டையும் லிஸ்ட் பண்ணனும், நாம ரெண்டு பேரும்
கல்யாணம் பண்ணிகிட்டா எதிர்காலத்தில் பிரச்சனைகள் இல்லாமே டைவர்சுன்னு கோர்ட்டுக்குப் போகாமே வாழ முடியுமான்னு நிதானமாய் யோசிச்சுப் பார்த்து முடிவு எடுக்கணும்... ரெண்டு பேர்க்கும் ஒத்து வராதுன்னு ஆரம்பத்திலேயே தோணிட்டா பரஸ்பரம் 'பை' சொல்லி பிரிஞ்சிடணும், என்னோட பாலிசி இது."
எனக்கும் இந்த பாலிசி பிடிச்சிருக்கு...
"அப்படின்னா நாம ரெண்டு பேரும் சந்திச்சு பேசுனா என்ன?
பேசலாமே!
"எங்கே பேசலாம்... 'வென்யூ' எதுன்னு நீங்களே மென்ஷன் பண்ணுங்க...!
ஏதாவது ஒரு ரெஸ்டாரெண்ட்.
அடையார்ல க்ரீன் ஃபாரஸ்ட்ன்னு ஒரு ரெஸ்டாரண்ட் இருக்கு. கும்பல் அதிகம் இல்லாத ஒரு டீஸண்டான ரெஸ்டாரெண்ட் இருக்கு. அங்கே மீட் பண்ணலாமா...?
சாயந்தரம் ஏழு மணிக்கு...?
ஓகே... அந்த ரெஸ்டாரெண்ட்ல ஒரு டேபிள் ரிசர்வ் பண்ணிட்டு உங்களுக்கு இன்ஃபார்ம் பண்றேன். நீங்க உங்க ஃபாதர்கிட்டே பர்மிஷன் வாங்கிட்டு வாங்க...
நீங்க சொன்னாலும் சொல்லாமே போனாலும் நான் என்னோட ஃபாதர் கிட்டே பர்மிஷன் வாங்கிட்டுத்தான் வருவேன்.
தட்ஸ் குட். ஏழு மணிக்கு மீட் பண்ணுவோம்.
சாயந்தரம் ஏழு மணி. க்ரீன் ஃபாரஸ்ட்