Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Oru Sanikkilamai Iravu
Oru Sanikkilamai Iravu
Oru Sanikkilamai Iravu
Ebook187 pages1 hour

Oru Sanikkilamai Iravu

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Oru Sanikkilamai Iravu

Read more from Rajeshkumar

Related to Oru Sanikkilamai Iravu

Related ebooks

Related categories

Reviews for Oru Sanikkilamai Iravu

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Oru Sanikkilamai Iravu - Rajeshkumar

    அமர்க்களமாயிருந்தான்.

    1

    ஸ்டீல் விங்க்ஸ் ஃபேக்டரியின் மேனேஜிங் டைரக்டர் திவாரி வாரத்திற்கு ஒரு தடவை பம்பாயிலிருந்து கோயமுத்தூர் வந்து ஃபேக்டரியைப் பார்த்து விட்டுப் போவார். ப்ராக்ரஸ் சார்ட்டுகளைப் பார்த்துவிட்டு ‘அச்சா’ என்று இந்தியில் பாராட்டி - லேசாய் தங்கப்பல் தெரியப் புன்னகை செய்வார். தமிழைக் கொஞ்சம் குதறிக் குதறிப் பேசுவார். (உ - ம்) ‘இங்கே வா’க்கு ‘இன்க்கே வா.’ உனக்கு என்பதற்கு ‘உன்க்கு.’

    அன்றைக்கும் வந்திருந்தார்.

    கணேஷ்குமார் ஏழெட்டு ஃபைல்களை அவருடைய டேபிளில் பரப்பிக்கொண்டு பென்சிலை நகர்த்தி எதையோ சொல்லிக் கொண்டிருக்க - தள்ளு கதவுக்கு வெளியே அந்தக் குரல் கேட்டது. ஆபீஸ் அட்டெண்டர் கலியமூர்த்தி யாரையோ துரத்திக் கொண்டிருந்தான்.

    ரெண்டு மணி நேரத்துக்கு முதலாளியைப் பார்த்து யாரும் பேச முடியாதும்மா. முக்கியமான டிஸ்கஷன்ல இருக்கார். போயிட்டு மத்தியானத்துக்கு மேலே வா.

    அவராண்டை நான் அவசரமாப் பேசணுமய்யா. சேட்டுகிட்ட விஷயத்தைச் சொல்லுங்கய்யா. அவர் கண்டீசனா என்னைக் கூப்பிட்டுப் பேசுவாரு.

    அடச்சீ போம்மா...! ஒரு வாட்டி சொன்னா மூளையிலே உறைக்காதா? அவரை இப்பப் பார்த்துப் பேச முடியாதுன்னு சொல்றேன், நீ பாட்டுக்கு அதை காதில் வாங்கிக்காமே பேசிட்டே போறியே... அப்பாலே ஒத்தி நில்லு.

    உள்ளேயிருந்து திவாரி - தன்னுடைய மூக்குக் கண்ணாடியைக் கழற்றி மேஜையின் மேல் வைத்துக் கொண்டே கணேஷ்குமாரிடம் கேட்டார்.

    யாரது?

    தெரியலை ஸார்.

    கலிய்ய மூர்த்தி... அழுத்தமாய்க் கூப்பிட்டார் திவாரி.

    ஸார்...

    கலியமூர்த்தி தான் அணிந்திருந்த வெள்ளை யூனிபார்மை இழுத்துவிட்டுக் கொண்டு உள்ளே வந்தான்.

    அன்க்கே... என்னா கல்ட்டா?

    லேபர் ராமசாமியோட அம்மா வந்திருக்கா ஸார்.

    எதுக்கு?

    தெரியலை ஸார்... என்னவோ உங்களைப் பார்த்து பேசணுமாம்...

    உள்ர வரச் சொல்லு மேன்.

    சரி ஸார்.

    கலியமூர்த்தி வெளியே போக - அந்த அறுபது வயதுக் கிழவி உள்ளே வந்தாள். உலர்ந்து போன திராட்சை மாதிரியான உடம்பு. கைகள் குச்சி குச்சியாய்த் தெரிய - ரவிக்கை அணியாத விலாப்புறத்தில் எலும்புகள் வரிவரியாய்த் தெரிந்தன. கட்டியிருந்த அழுக்கு சேலையில் லேசாய் ஒரு நாற்றம் கிளம்பி - திவாரியின் மூக்கு நுனியோடு விளையாட ஆரம்பித்தது.

    உனக்கு என்னம்மா வேணும்...? மூக்கைத் தேய்த்துக் கொண்டே கேட்டார் திவாரி.

    அய்யா சேட்டு மவராசரே... எம்புள்ள மேலே இரும்பு வுளுந்து அவன் செத்துப் போயி ஆறுமாச்சய்யா... அவனுக்குச் சேரவேண்டிய பணம் இன்னும் என்ற கையிக்கு வந்த பாடில்லைய்யா... கேட்டா... இப்ப வா... நாளைக்கு வா, நாளன்னிக்கு வான்னு சொல்லி நாளைத் தாட்டிகிட்டே போறாங்கய்யா. எம்புள்ள உசிரோட இருந்திருந்தா... என்னோட வயிறு காயாமே பார்த்துக்குவான். நா... இன்னிக்கு தேதியில சாப்புட்டு மூணு நாளாச்சய்யா... பணத்த வாங்கிக் குடுக்க ஏற்பாடு பண்ணுங்கய்யா.

    திவாரி கணேஷ்குமாரிடம் திரும்பினார்.

    வாட் ஈஸ் திஸ்...

    கணேஷ்குமார் அந்தக் கிழவியை ஒருதரம் முறைத்துப் பார்த்துவிட்டுச் சொன்னான். ஸார்... ஆறு மாசத்துக்கு முன்னாடி - க்ரேன்ல கர்டரை வெச்சுத் தூக்கி நகர்த்தறப்போ... கர்டர் நழுவி விழுந்து ராமசாமின்னு ஒரு லேபர் செத்துப் போனான்.

    ஆமாம். நியாபகம் இருக்கி.

    அந்த ராமசாமியோட அம்மாக்காரிதான் இந்தக் கிழவி. செத்துப் போன ராமசாமியோட பி.எப். பணம், ஈ.எஸ்.ஐ. பணம் எல்லாமே சேர்த்துக் கிட்டத்தட்ட முப்பதாயிரம் ரூபா இருக்கு ஸார். ராமசாமிக்கு கல்யாணமாகலைன்னாலும் இல்லீகலா ஒரு ஒய்ப்பும் ரெண்டு குழந்தைகளும் இருக்காங்க. அம்மாக்காரியும் இந்தப் பணத்தைக் கேக்கிறா. அந்த இல்லீகல் ஒய்ப்பும் பணத்தைக் கேக்கிறா. யார்க்கு ஸார் பணத்தைத் தர்றது?

    ஆளுக்குப் பாதிப் பாதியா பிரிச்சுக் குடுத்துட வேண்டியது தானே?

    அப்படியும் சொல்லிப் பார்த்தேன் சார். இந்தக் கிழவி சரின்னு ஒத்துக்கிட்டா. ஆனா அந்த இல்லீகல் ஒய்ப் ஒத்துக்க மாட்டேன்னு சொல்லிட்டா. அந்தப் பெண்ணோட அண்ணன்காரன் ஒருத்தன் பாப்பநாய்க்கன்பாளையத்துல பெரிய ரௌடியாம். அவன் வேற வந்து வந்து மிரட்டிட்டுப் போறான் ஸார்.

    போலீஸுக்கு இன்ஃபார்ம் பண்ணலாமே...!

    அவன் அடுத்த தடவை வர்றப்ப அப்படித்தான் ஸார் பண்ணணும்...

    சரி, மொதல்லே இந்த அம்மாவுக்கு ஏதாச்சும் பணத்தைக் குடுத்து அனுப்பிட்டு - அப்புறமா போலீசை வெச்சு செட்டில் பண்ணிடுங்க.

    சரி ஸார்.

    கணேஷ்குமார் அந்தக் கிழவியைக் கூட்டிக்கொண்டு வெளியே வந்தான். காத்திருந்த கலியமூர்த்தியிடம் சொன்னான்.

    கலியமூர்த்தி, இந்தக் கிழவியை அக்கௌண்ட் செக்ஷனுக்கு கூட்டிக்கிட்டுப் போய் - கேஷியர் கிட்டே சொல்லி வவுச்சர்லே கையெழுத்தை வாங்கிட்டு ஒரு ஐந்நூறு ரூபாயைக் குடுக்கச் சொல்லு...

    சரி ஸார்.

    கலியமூர்த்தி கிழவியைக் கூட்டிக்கொண்டு வராந்தாவின் கடைசியில் இருந்த அக்கௌண்ட் செக்ஷனை நோக்கிப் போக - கணேஷ்குமார் மறுபடியும் திவாரியிடம் வந்தான். திவாரி பைப்பில் புகையிலையை அடைத்து - தீக்குச்சியால் பற்ற வைத்துக் கொண்டிருந்தார்.

    என்னா கெள்வி போய்ட்டாளா?

    அக்கௌண்ட் செக்ஷனுக்கு அனுப்பி வச்சிருக்கேன் ஸார். கூட அட்டெண்டர் கலியமூர்த்தி போயிருக்கான்.

    வா கணேஷ்குமார். இப்படி வந்து உட்கார்... அவர் நாற்காலியைக் காட்ட - கணேஷ்குமார் வந்து உட்கார்ந்தான்.

    திவாரி கையிலிருந்த பைப்பை வாயில் திணித்துக் கொண்டே மெல்லிய குரலில் கேட்டார். அந்த ராமசாமி செத்துப் போனதிலே யார்க்கும் டவுட்ஸ் வரலியே?

    வரலை ஸார்.

    போலீஸ் சைட்?

    வரலை ஸார். அதை ஒரு பக்கா ஆக்ஸிடெண்ட்டாய்க் காட்டிட்டோம். லேபர் வெல்ஃபேர் ஆஸிலேயும் ஆக்ஸிடெண்ட்தான்னு ரிப்போர்ட் எழுதியிருக்காங்க.

    அச்சா!

    திவாரியின் தங்கப்பல் உதடுகளின் சந்தில் சொற்பமாய் மின்னியது. பைப்பை மெலிதாய் உறிஞ்ச புகை வெளிப்பட்டது. கணேஷ்குமார் சொன்னான்.

    தொழிலாளர்களைத் தூண்டிவிட்டு யார் ஆதாயம் தேட முயன்றாலும் அவங்களுக்கு ராமசாமியோட கதிதான் கிடைக்கும்.

    2

    அந்த வெள்ளிக்கிழமை லேசான பனியோடு விடிந்து கொண்டிருந்தது.

    கிழக்கு வானம் பூராவும் சூரியன் ஆரஞ்சு வண்ண டிஸ்டெம்பர் பூசிக்கொண்டிருக்க பெருவிரலால் குங்குமத்தை எடுத்து தீற்றின மாதிரி அடிவானம் தெரிந்தது. பாக்டரி குவார்ட்டர்ஸைச் சுற்றிலும் அடர்த்தியாய் வளர்ந்திருந்த மரங்களில் குருவிப் படைகள் காச் மூச்சென்று கத்திக் கொண்டு பறக்க - வீட்டு வாசலில் சாணநீர் தெளித்து கோலம் போட்டுக் கொண்டிருந்தாள் ஹரிதா.

    கோலத்தை போட்டுவிட்டு - உள்ளே போனால் ஹரிதா. ஆதர்ஷ் கண் விழித்துக் கட்டிலில் எழுந்து உட்கார்ந்திருந்தான்.

    அட, அதுக்குள்ளாற எந்திரிச்சுட்டீங்களா? அவனை நெருங்கினாள்.

    உம்...

    மணி ஆறுதானே ஆச்சு?

    ஆதர்ஷ் அவள் பக்கமாய்த் திரும்பினான். முகம் ஏராளமான வியர்வையில் இருந்தது. பற்கள் வலியை மென்று கொண்டிருக்க - கண்களில் நீர் தெரிந்தது.

    திடுக்கிட்டுப் போனாள் ஹரிதா.

    என்னங்க... ஏன் என்னவோ மாதிரி இருக்கீங்க? அவனுடைய தோள்களைப் பற்றிக்கொண்டு கட்டிலிலேயே உட்கார்ந்தாள் ஹரிதா. நெற்றியில் கை வைத்தாள்.

    ஹ... ஹ... ஹரிதா. அவன்

    Enjoying the preview?
    Page 1 of 1