Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Uyir Urugum Sattham
Uyir Urugum Sattham
Uyir Urugum Sattham
Ebook181 pages1 hour

Uyir Urugum Sattham

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Uyir Urugum Sattham

Read more from Rajeshkumar

Related to Uyir Urugum Sattham

Related ebooks

Related categories

Reviews for Uyir Urugum Sattham

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Uyir Urugum Sattham - Rajeshkumar

    ராஜேஷ்குமார்

    தங்கத்தின் மதிப்பு நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டு போவது உங்களுக்குத் தெரியும். அதேபோல் அதே வேகத்தில் இன்னொரு பொருளும் விலை உயர்ந்து கொண்டே போகிறது. அது என்ன பொருள் என்று உங்களுக்குத் தெரியுமா? அதனுடைய இன்னொரு பெயர் ‘லிக்விட் கோல்ட்.’ லிக்விட் கோல்ட் (Liquid Gold) என்று அழைக்கப்படும் அந்தப் பொருளின் உண்மையான பெயர் என்ன? இந்தக் கேள்விக்கு பதில் தெரிந்தவர்கள் உடனடியாய் நாவலைப் படிக்க ஆரம்பித்து விடலாம். பதில் தெரியாதவர்கள் இரண்டாவது அத்தியாயம் வரும் வரை காத்திருக்கவும்.

    1

    திண்டல் ரயில் நிலையத்தில் அந்த பாசஞ்சர் ரயில் நின்ற போது நடுப்பகல் 12 மணி. ஏப்ரலின் முதல்வார வெய்யில் அமிலத்தின் உக்கிரத்தோடு இருந்தது. காற்று காணாமல் போயிருந்தது.

    இருபத்தேழு வயது ரூபனும் இருபத்தி மூன்று வயது வானதியும் ரயிலின் மையத்தில் இருந்த கம்பார்ட்மெண்ட் ஒன்றிலிருந்து இறங்கிக் கொண்டார்கள். சூட்கேஸ்களை கீழே வைத்துவிட்டு பிரயாணக் களைப்பைப் போக்கிக் கொள்வதற்காக, கைகளை உயர்த்தி சோம்பல் முறித்துக் கொண்டிருக்கும் போதே இந்த ஸ்டேஷனில் இவ்வளவு நேரம் நின்றதே பெரிய விஷயம் என்று சொல்கிற மாதிரி ரயில் பிளாட்பாரத்தை விட்டு நகர்ந்தது. வானதி சுற்றிலும் பார்த்துவிட்டு கூப்பிட்டாள்.

    ரூபன்!

    ம்

    நம்ம எடிட்டர் சொன்னது போல் இது ரொம்பவும் சின்ன கிராமம்தான் போலிருக்கு.

    பார்த்தாலே தெரியுதே...!

    செம்மண் கெட்டித்துப் போயிருந்த பிளாட் பாரத்தில் சூட்கேஸ்களோடு மெல்ல நடை போட்டார்கள். முகத்தில் அனல் அடித்தது.

    என்ன வெய்யில்...! ஏதோ சஹாரா பாலைவனத்தில் நடக்கிற மாதிரி இருக்கு.

    ரயிலை அனுப்பி விட்டு இடது கக்கத்தில் பச்சைக் கொடியையும் வலது கக்கத்தில் சிவப்புக் கொடியையும் அதக்கிக் கொண்டு எதிர்பட்ட ஸ்டேஷன் மாஸ்டர் டிக்கெட் கலெக்டராக மாறினார்.

    டிக்கெட் ப்ளீஸ்...!

    அவருடைய கையில் டிக்கெட்டுகளை திணித்து விட்டு ரூபனும் வானதியும் மறுபடியும் நடக்க ஆரம்பித்த போது ரூபனின் செல்போன் நோக்கியா டோனில் கூப்பிட்டது. எடுத்து அழைப்பது யார் என்று பார்த்தான். வானதி கேட்டாள்.

    என்ன... உன்னோட ஃப்ரண்ட் நேச்சுரோபதி டாக்டர் தயாபரனா?

    அவனேதான்...! என்று புன்முறுவலித்த ரூபன் தன் செல்போனை காதுக்கு ஒற்றினான்.

    ஹலோ தயா, இப்பத்தான் ரயிலை விட்டு இறங்கினோம்.

    வெல்கம் டூ திண்டல்! நான் ஸ்டேஷனுக்கு வெளியே வெயிட் பண்ணிட்டிருக்கேன்.

    பெரிய சென்ட்ரல் ஸ்டேஷன்...! வெயிட் பண்ணிட்டிருக்கானாம்.

    என்னோட கிராமத்துக்கு இதுதான் சென்ட்ரல் ஸ்டேஷன். சரி பயணம் எப்படியிருந்தது...?

    நோ ப்ராப்ளம்...! வானதியும் கூட இருந்ததால ஜாலியா பேசிட்டே வந்துட்டேன். ம்... உன்னை நான் பார்த்துட்டேன். ஸ்டேஷனுக்கு வெளியே ஒரு வேப்பமரத்துக்கு கீழே சாயம் போன மாருதி 800 கார் நிக்குது. அதுதானே!

    அடப்பாவி...! அது சாயம் போன கார் இல்லடா. அதனோட ஒரிஜினல் கலரே அப்படித்தான்!

    இப்படியொரு கலரை நான் இதுவரைக்கும் பார்த்ததே இல்லை.

    என்ன கிண்டலா.... வா... பேசிக்கிறேன்!

    ஸாரிடா! ரூபன் சிரித்துக் கொண்டே தன் செல்போனை அணைத்தான். வானதி கேட்டாள்.

    என்ன சொல்றார் உன்னோட ஃப்ரண்ட்?

    அவனோட காரை கமண்ட் பண்ணிட்டேன். கோபம்!

    ரூபன்! நீயும் தயாபரனும் ஒரே காலேஜில் படிச்சதாய் சொன்னே...! நீ ஜர்னலிஸ்ட் ஆயிட்டே. அவர் மட்டும் எப்படி நேச்சுரோபதி டாக்டராய் மாறினார்?

    நேச்சுரோபதி முறையில் மருத்துவம் பார்க்கிறது அவங்க பரம்பரைத் தொழில். கும்பகோணம், தஞ்சாவூர் பகுதியில் இவங்க வைத்தியத்துக்கு நல்ல வரவேற்பு இருந்துட்டு வருது. தயாபரனோட தாத்தா ராமரத்னம், அப்பா கோபால்சாமி ரெண்டு பேரோட மறைவுக்குப் பின்னாடி தயாபரன் தனக்கு வந்த பேங்க் வேலையை வேண்டாம்ன்னு பரம்பரைத் தொழிலை பண்ணிட்டு வர்றான்.

    இருவரும் அந்த பழமையான ஸ்டேஷனை விட்டு வெளியே வந்தார்கள். வேப்பமர நிழலில் காரோடு நின்றிருந்த தயாபரன் ஒரு புன்னகையோடு இரண்டு பேர்களையும் நெருங்கினான்.

    வார்ம் வெல்கம் ஃபார் போத் ஆஃப் யூ... சொன்னவனின் வயிற்றில் ரூபன் குத்தினான்.

    என்னடா...! நேச்சுரோபதி டாக்டரான நீயே தொப்பை போட்டு இருக்கே...? எக்சர்சைஸ் பண்றதே இல்ல போலிருக்கு...

    தயாபரன் சிரித்தான். டேய்... ரூபன்...! இந்தத் தொப்பை எங்க குடும்பத்து ஜீன் காரணமாய் வர்ற தொப்பை. இந்தியா முழுவதும் பாதயாத்திரை போய்ட்டு வந்தாலும் சரி இந்தத் தொப்பை கரையாது... இதனால எனக்கு எந்த பிரச்னையும் இல்லை!

    கட்டிக்கப் போகிற பொண்ணுக்கு பிரச்னையாய் இருக்குமே!

    மூவரும் சிரித்து காரில் ஏறினார்கள். தயாபரன் காரை நகர்த்தினான். இரண்டு பக்கமும் வயல்கள் சூழ்ந்திருக்க, நடுவில் கோணல் மாணலாய் வளைந்து போன செம்மண் ரோட்டில் கார் மிதமான வேகத்தில் பயணித்தது. தொலை தூரத்தில் தென்னை மரங்கள் கூட்டம் கூட்டமாய் மாநாடு போட்டிருந்தன.

    வானதி கேட்டாள். மிஸ்டர் தயா! இந்த ஊர்ல தட்சிணாமூர்த்தி கோயில் ரொம்பவும் விசேஷம்ன்னு சொன்னாங்க. அந்தக் கோயில் எங்கே இருக்கு..?

    பக்கத்துலதான் இருக்கு சிஸ்டர்! இந்த ஊர்ல நாலைஞ்சு நாள் தங்கி இருக்கப் போறீங்க... நான் எல்லாக் கோயில்களுக்கும் கூட்டிட்டுப் போகப் போறேன். டோண்ட் வொர்ரி... இந்த ஏரியாவில் எந்த ஊருக்குப் போனாலும் சரி, ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்குள்ளே ஒன்பது கோயில் இருக்கும். எல்லாத்தையும் பார்த்துடலாம். எல்லாமே பிரசித்தி பெற்ற சக்திவாய்ந்த கோயில்கள்.

    ரூபன் குறுக்கிட்டான்.

    கோயில்கள் இப்ப முக்கியமில்லை! நானும் வானதியும் இந்த ஊர்க்கு வந்தது கோயில்களை பார்க்கிறதுக்காக இல்லை. நீ லெட்டரில் எழுதியிருந்தியே அந்த மேட்டர்க்காக..! அதை மொதல்ல பார்க்கணும். அதுதான் முக்கியம்.

    எனக்குத் தெரியாதா என்ன...? பார்த்துடலாம்.

    "இதோ பார் தயா... நானும் வானதியும் உதவியாசிரியர்களாய் வேலை பார்க்கிற பத்திரிகை ‘உரைகல்’ சாதாரண பத்திரிக்கை கிடையாது. தமிழ் மக்களோடு இணைந்து விட்ட ஒரு உணர்வு பூர்வமான பத்திரிக்கை அது. அந்தப் பத்திரிக்கையில் சினிமா நடிகர்களுக்கும் நடிகைகளுக்கும் இடம் கிடையாது. சிறுகதைகள், தொடர் கதைகள் கிடையாது. ராசி பலன்களுக்கு இடமில்லை. எல்லாமே அறிவுபூர்வமான செய்திகள். வெளியுலகத்துக்கு தெரியாத விஷயங்கள். நீ எனக்கு எழுதிய கடிதத்தில் இந்த கிராமத்தைப் பற்றி குறிப்பிட்டிருந்த ஒரு விஷயம் என்னையும் வானதியையும் திகைக்க வைத்தது. எடிட்டர்கிட்டே அந்த லெட்டரைக் காட்டினோம். படிச்சுட்டு அதிர்ந்து போயிட்டார். உடனடியாய் எங்க ரெண்டு பேரையும் இந்த கிராமத்துக்கு புறப்பட்டு போகச் சொல்லிட்டார்."

    "உன்னோட ஆர்வம் எனக்குப் புரியுது ரூபன். நீ இந்த கிராமத்துக்குள்ளே காலடி வெச்சு இன்னும் ஒரு மணி நேரம் கூட ஆகலை. மொதல்ல என்னோட வீட்டுக்குப் போவோம். லஞ்ச் சாப்பிடுவோம். நீயும் வானதியும் சாயந்தரம் அஞ்சு மணி வரைக்கும் ரெஸ்ட் எடுங்க. அதுக்கப்பறம் அந்த வீட்டுக்கு

    Enjoying the preview?
    Page 1 of 1