Konchi Pesak Koodaathaa
By Devibala
()
About this ebook
Read more from Devibala
Amma Ammamma Rating: 0 out of 5 stars0 ratingsPaatha Poojai Rating: 0 out of 5 stars0 ratingsManmatha Jaadai Rating: 0 out of 5 stars0 ratingsKalyana Thevathai Rating: 4 out of 5 stars4/5Assai Oonjalil Aadum Velaiyil Rating: 0 out of 5 stars0 ratingsSokkuthe Manam Rating: 5 out of 5 stars5/5Charumma Rating: 0 out of 5 stars0 ratingsKathal Varam Rating: 0 out of 5 stars0 ratingsPennaal Mudiyum Rating: 0 out of 5 stars0 ratingsSeetha Rating: 0 out of 5 stars0 ratingsVizhikkul Oru Ulagam Rating: 0 out of 5 stars0 ratingsEn Uyire Vaa Rating: 5 out of 5 stars5/5Vara Pirasaatham Rating: 5 out of 5 stars5/5Veliye Sonnaal Vetkam Rating: 4 out of 5 stars4/5Jodi Thevai Rating: 5 out of 5 stars5/5Azhaiththaal Varuven Rating: 0 out of 5 stars0 ratingsPoorva Jenma Bandham Rating: 0 out of 5 stars0 ratingsSeerum Sirappum Rating: 5 out of 5 stars5/5Poomaalai Poda Vaa 1 Rating: 0 out of 5 stars0 ratingsDeepangal Aarathanai Rating: 0 out of 5 stars0 ratingsAvalukku Peyar Agni Rating: 0 out of 5 stars0 ratingsVarunkaalam Vasantha Kaalam Rating: 0 out of 5 stars0 ratingsVidiyum Varai Rating: 5 out of 5 stars5/5Un Solle Vedham Rating: 0 out of 5 stars0 ratingsSu(sa)gavasam Rating: 0 out of 5 stars0 ratingsIndru Paathi Naalai Meethi Rating: 0 out of 5 stars0 ratingsAasai Oonjalil Rating: 0 out of 5 stars0 ratingsOru Vazhi Paathai Rating: 0 out of 5 stars0 ratingsPoomaalai Poda Vaa 2 Rating: 0 out of 5 stars0 ratingsOru Thai Oru Magan Rating: 5 out of 5 stars5/5
Related to Konchi Pesak Koodaathaa
Related ebooks
Pore Megangal! Rating: 0 out of 5 stars0 ratingsKadaisi Varai Kaadhali Rating: 0 out of 5 stars0 ratingsVaramaga Vandhavan Rating: 0 out of 5 stars0 ratingsKadhali Ilavasam Rating: 0 out of 5 stars0 ratingsKurai Ondrumillai Rating: 0 out of 5 stars0 ratingsJannalora Nila Rating: 0 out of 5 stars0 ratingsDevan Mozhi Rating: 0 out of 5 stars0 ratingsIlakku Rating: 0 out of 5 stars0 ratingsNetruvarai Kaadhali! Rating: 0 out of 5 stars0 ratingsபுது அவதாரம் Rating: 0 out of 5 stars0 ratingsVaadagai Kanavu Rating: 4 out of 5 stars4/5Vaa Vennila... Rating: 5 out of 5 stars5/5Amma Endral Anbu Rating: 0 out of 5 stars0 ratingsGayathri Manthiram Rating: 0 out of 5 stars0 ratingsMothers Touch! Rating: 0 out of 5 stars0 ratingsDhrogam Puthithu! Rating: 0 out of 5 stars0 ratingsSandhya Nee Saagalam! Rating: 0 out of 5 stars0 ratingsKaatraluththa Mandalam Rating: 5 out of 5 stars5/5Tharasu Mul Rating: 0 out of 5 stars0 ratingsNee Eppa Varuvey? Rating: 0 out of 5 stars0 ratingsThapicha Pothum! Rating: 0 out of 5 stars0 ratingsAruke Oru Aabathu Rating: 0 out of 5 stars0 ratingsJeevanaadi Rating: 0 out of 5 stars0 ratingsNaathanaar Rating: 0 out of 5 stars0 ratingsNyabagam Irukkiratha Kanne? Rating: 0 out of 5 stars0 ratingsAvasara Vaarisu Rating: 0 out of 5 stars0 ratingsKaninthuvarum Puthu Varusam Rating: 0 out of 5 stars0 ratingsVaanavil Rating: 0 out of 5 stars0 ratingsThendrale Vaa! Rating: 0 out of 5 stars0 ratingsNaane Varuvean Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Konchi Pesak Koodaathaa
0 ratings0 reviews
Book preview
Konchi Pesak Koodaathaa - Devibala
19
1
"இந்த வெள்ளிக்கிழமையை விட்டா, ஒரு வாரத்துக்கு நாள் நல்லா இல்லை! அதனால வெள்ளிக்கிழமை சௌந்தர்யாவை பெண் பார்க்க வரச் சொல்லிடலாம்!"
அழுத்தமாக முகுந்தன் சொல்ல,
அவளை ஒரு வார்த்தை கேட்டுட்டு சொல்லிடலாமா?
அவ குழந்தை! அவளை என்ன கேக்கறது?
அப்படி இல்லீங்க. கட்டிக்கப் போறவ அவ. படிச்ச, உத்யோகம் பாக்கற பொண்ணு! அவ சம்மதம் இல்லாம, அவ விஷயத்துல நாமே முடிவெடுக்கறது நல்லதுங்களா?
இதப்பாருடி! இது கல்யாணம். பெரியவங்கதான் முடிவெடுக்கணும். புரியுதா?
சாந்தா பேசவில்லை.
முகுந்தன் பிடிவாதக்காரர். அவர் நினைத்தது நடந்தாக வேண்டும். மற்றவர் உணர்வுகளை, கருத்துக்களை மதிக்கும் பழக்கம் என்றுமே அவருக்கு இருந்ததில்லை. எதிர்த்தால் ரகளை ஆகி விடும். சொல்லிச் சொல்லி காட்டுவார். தனக்குத்தான் உலக ஞானம் மொத்தமும் என்ற அகந்தை உச்சந்தலை வரை உண்டு.
சாந்தா அவரிடம் போராடித் தோற்று விட்டாள்.
சௌந்தர்யா ஒரே மகள்!
அவள் எந்த ஒரு கருத்தையும் உரக்கச் சொல்ல மாட்டாள். அப்பா சொன்னால் மறுக்கவும் மாட்டாள். கூடுமானவரை அவளை சுதந்திரமாகத்தான் விடுவார் முகுந்தன்.
சிலசமயம் முட்டிக் கொள்ளும்!
படிப்பு, உத்யோகம் என சகலமும் தேர்ந்தெடுத்துக் கொண்டவள் சௌந்தர்யா! கல்யாண வாழ்க்கையில் மற்றவர் கருத்துக்கு சம்மதிப்பாளா?
போதாக்குறைக்கு முகுந்தனுக்கு நாள், நட்சத்திரம், ஜாதக நம்பிக்கை கழுத்து வரை உண்டு. அதை மீறி எதையும் செய்ய மாட்டார்.
மாலை அலுவலகம் முடிந்து சௌந்தர்யா வந்து விட்டாள்.
சாப்பிடும் போது சாந்தா பேச்சை எடுத்தாள்.
வெள்ளிக்கிழமை முடியாது!
ஏன் முடியாது?
எங்க ஆபீஸ்ல ஆடிட்டிங்! நான் லீவு போட்டா, மெமோ குடுத்துடுவாங்க!
உனக்கு உடம்பு சரியில்லை... போக முடியுமா?
நான் நல்லாத்தானே இருக்கேன்?
திடீர்னு காய்ச்சல் வந்ததா நான் ஃபோன் பண்றேன்!
அப்படி ஒரு அவசியம் என்னப்பா?
இந்த வெள்ளியை விட்டா ஒரு வாரத்துக்கு நாள் சரியில்லை. அடுத்த வாரம் அந்தப் பையன் சிகாகோல வேலைல சேரணுமாம். லீவு இல்லையாம். இப்ப பேசி முடிவெடுத்துட்டா, அவன் கல்யாணத்துக்கு வருவான்!
அப்பா! எவனோ ஒருத்தனோட வசதியை நாம எதுக்குப் பாக்கணும்? வேற வரன் உலகத்துல இல்லையா?
நம்ம ஜோசியர் சொன்னது என்னான்னா...
ஸாரிப்பா. எனக்கு நேரமில்லை. வெள்ளிக்கிழமை கண்டிப்பா நான் வீட்ல இருக்க முடியாது!
அவள் எழுந்து போய்விட்டாள்.
சாந்தா, முகுந்தனைப் பார்த்தாள்.
என்னடீ? உன் மகளை தயார்படுத்திட்டியா?
நிறுத்துங்க. நான் அவளுக்கு அம்மா. அவ நல்லா வாழணும்னு உங்களை விடக் கூட எனக்கு அக்கறை இருக்கும். புரிஞ்சுக்க முயற்சி பண்ணுங்க!
சரி! சாயங்கால நேரம் வர முடியுமான்னு கேக்கறேன்!
அவரும் விடுவதாக இல்லை. ஜோசியர் சொன்னதால் இந்த வரனை முடித்தே தீர வேண்டும் என நிற்கிறார்.
மறுநாள் மாலை உற்சாகமாக வந்தார்.
வெள்ளிக்கிழமை ஆபீஸ் முடிஞ்சு, நீ வழக்கம்போல வீட்டுக்கு வந்துடுவே இல்லை?
ஏழு மணியாகும்!
தப்பில்லை. நான் அவங்களை ஏழரைக்கு வரச் சொல்லியிருக்கேன். சம்மதம் சொல்லிட்டாங்க!
ஏன்பா! நானே களைச்சுப் போய் வருவேன். அந்த நேரத்துல பெண் பாக்க வர்றது தேவைதானா?
என்ன நீ? உன் வசதிக்கு தகுந்த மாதிரி நான் ஏற்பாடு பண்றேன். அந்தக் குடும்பமும் தயாரா இருக்கு. இதுக்கு மேல என்ன செய்ய முடியும்?
அப்பா! இந்த வரன் அமைஞ்சா நான் வெளிநாடு போகணுமில்லையா?
அதுல என்ன சந்தேகம்? உன் புருஷன் இருக்கற இடத்துலதானே நீ இருக்கணும்?
எனக்கு வெளிநாட்டுக்குப் போக விருப்பமில்லை!
இப்ப சொல்லுவே. செட்டில் ஆனா சரியாகும்!
இல்லைப்பா. என்னைப் புரிஞ்சுக்குங்க! எனக்கு இந்த வரன் வேண்டாம்!
இதப்பாரு சௌந்தர்யா! நீ படிச்ச படிப்புக்கு நாளைக்கு வெளிநாட்ல சுபலமா வேலை கிடைக்கும். பணத்தை ரெண்டு பேருமா அள்ளலாம். நான் தொலைநோக்குல வாழ்க்கையை பாக்கறேன். நீ சின்னப் பொண்ணு. புரியாது! எங்க கூடவே நீ காலம் முழுக்க இருக்க முடியுமா? வேண்டாம்னு தோணறது, நாளைக்கு மனசுக்குப் பிடிக்கும். பிடிவாதம் கூடாது!
அதில்லைப்பா... என்னைக் கொஞ்சம் பேச விடுங்க!
அவர் படக்கென எழுந்து விட்டார்.
இதப்பாரு! உன் அப்பா நான்! உனக்கொரு வாழ்க்கையை அமைச்சுத் தர்றது என் கடமை. நீ வேண்டாம்னு தீர்மானமா இருந்தா அப்புறம் உன் சங்கதி எதுலேயும் நான் தலையிட மாட்டேன்!
அப்பா... நான்...
இதப்பாரு சாந்தா! என்னைப் பற்றி அவளைவிட உனக்கு நல்லாத் தெரியும். உன் மகளுக்குச் சொல்லி வை!
சரக்கென உள்ளே அவர் போக,
என்னம்மா இது? இவர் சர்வாதிகாரியா? இவர் காட்டின எடத்துல நான் கழுத்தை நீட்டணுமா? நான் அடிமையா?
மெதுவாப் பேசுடி!
நிறுத்தும்மா. நீ வேணும்னா காலம் முழுக்க அடிமையா அவர் காலடில கிட! எனக்கந்த அவசியம் இல்லை!
அப்படியெல்லாம் சொல்லாதேம்மா!
வெள்ளிக்கிழமை சாயங்காலம் நான் வீட்டுக்கே வர மாட்டேன்! என் ஸ்நேகிதி வீட்டுக்குப் போறேன். ஒரு வாட்டி இவரோட மூக்கு உடைஞ்சாதான் புரியும்!
சாந்தா பதறி விட்டாள்.
அப்படியெல்லாம் சொல்லிடாதேம்மா! அப்புறம் குடும்பத்துல நிம்மதி போயிடும். உங்கப்பா ரொம்ப மூர்க்கமானவர்!
நான் அதைவிட! பெண் வாழ்க்கையை விட, குடும்ப நிம்மதிதான் உனக்கு முக்கியமா? நான் யாருனு வெள்ளிக்கிழமை காட்டறேன் பாரு!
சௌந்தர்யா சரக்கென உள்ளே போய் விட்டாள்.
இரண்டு பேரிடமும் பேச முடியாமல் சாந்தா பொறியில் அகப்பட்ட எலியைப் போல தவித்தாள்.
வெள்ளிக்கிழமையும் வந்து விட்டது.
2
காலையில் எழுந்து குளித்து யாரிடமும் பேசாமல், டிபனும் சாப்பிடாமல் சௌந்தர்யா ஆபீசுக்குப் போய் விட்டாள்.
இதை முகுந்தன் கவனித்தார்.
உன் பொண்ணு வேணும்னே கலாட்டா பண்றாளா? அவளா செய்யறாளா, இல்லைனா நீ தூண்டி விடறியா?
ரொம்ப நல்லாருக்குங்க! அவதான் பிடிவாதக்காரி. இது அவ வாழ்க்கை! நீங்களாவது விட்டுப் புடிக்கக் கூடாதா? இது பழைய காலம் இல்லீங்க. எல்லாத்துக்கும் பெண்கள் தலையசைக்க மாட்டாங்க...
என்ன சொல்ற?
"பிள்ளைங்க தோளுக்கு மேலே உசந்துட்டா தோழமைதான் மனசுல இருக்கணும். அதிகாரப்படுத்தினா எதையும் சாதிக்க முடியாது. அவமானத்துலதான் முடியும். ஒரு மனைவியா இருக்கறதால மனசுல பட்டதைச் சொல்லிட்டேன். அப்புறம் உங்க