Uravillai Pirivillai
By R.Sumathi
()
About this ebook
Read more from R.Sumathi
Maaya Thottrangal Rating: 0 out of 5 stars0 ratingsSinnakkili Rating: 4 out of 5 stars4/5Eppadi Solvenadi Rating: 4 out of 5 stars4/5Malare Mayangaathe Rating: 0 out of 5 stars0 ratingsKadhal Kalamadi Kanne Rating: 5 out of 5 stars5/5Puthiraaga Oru Poo Rating: 5 out of 5 stars5/5Theeyai Sudum Thendral Rating: 0 out of 5 stars0 ratingsOreedam Nee Tharuvaai Rating: 4 out of 5 stars4/5Kannoram Minsaaram Rating: 0 out of 5 stars0 ratingsInimai Ninaiuvgal Thodarattume Rating: 4 out of 5 stars4/5Kathal Suvadukal Rating: 0 out of 5 stars0 ratingsNiram Maarum Pookkal Rating: 0 out of 5 stars0 ratingsKetkkum Varam Kidaikkum Varai Rating: 0 out of 5 stars0 ratingsYenazhuthaai Ennuyire Rating: 0 out of 5 stars0 ratingsMayakkathirkuriya Manthirame Rating: 5 out of 5 stars5/5En Iniya Ilamaane Rating: 0 out of 5 stars0 ratingsKunguma Kolangal Rating: 0 out of 5 stars0 ratingsPaasa Malargal Rating: 0 out of 5 stars0 ratingsPovomaa Ponnulagam Rating: 5 out of 5 stars5/5Manoratham Rating: 4 out of 5 stars4/5Thendrale Ennai Thodu Rating: 5 out of 5 stars5/5Kaanalai Thedum Kaveri Rating: 0 out of 5 stars0 ratingsEn Malar Madiyile Rating: 4 out of 5 stars4/5Oonjalaadum Nenjam Rating: 4 out of 5 stars4/5Paarvaikal Puthithaa Rating: 0 out of 5 stars0 ratingsNeengatha Ennam Ondru Rating: 5 out of 5 stars5/5Kanavile Vanthu Nilladi Rating: 5 out of 5 stars5/5Manasukkul Varalaamaa Rating: 3 out of 5 stars3/5Thavaminri Kidaitha Varame Rating: 5 out of 5 stars5/5
Related to Uravillai Pirivillai
Related ebooks
Kaayam Patta Idhayam Rating: 0 out of 5 stars0 ratingsIndru Muthal Aanantham... Rating: 0 out of 5 stars0 ratingsKaathil Sollu Kaadhale Rating: 0 out of 5 stars0 ratingsUnnil Vaazhkiren Rating: 5 out of 5 stars5/5En Iniya Kaadhaliye Rating: 0 out of 5 stars0 ratingsKasthuri Maane... Rating: 4 out of 5 stars4/5Poove VenPoove Rating: 0 out of 5 stars0 ratingsUn Uyirai Naanirukka... Rating: 0 out of 5 stars0 ratingsThalattum Poongatru Rating: 0 out of 5 stars0 ratingsAnbulla Maanvizhiye Rating: 0 out of 5 stars0 ratingsNeeyindri Naanillai Rating: 5 out of 5 stars5/5Azhagu Deivam Rating: 0 out of 5 stars0 ratingsUllam Kuliruthadi Rating: 0 out of 5 stars0 ratingsUn Vizhikal Velicham Tharum Rating: 4 out of 5 stars4/5Chittukuruvi Suttu Pazhagu Rating: 0 out of 5 stars0 ratingsNenjil Niraintha Ragam! Rating: 0 out of 5 stars0 ratingsEn Uyir Neethaney Rating: 0 out of 5 stars0 ratingsKadaisi Varai Kaadhali Rating: 0 out of 5 stars0 ratingsKarpoora Jothi Rating: 0 out of 5 stars0 ratingsKaanamal Pona Kanavugal Rating: 0 out of 5 stars0 ratingsTheertha Karaiyiniley Rating: 0 out of 5 stars0 ratingsKannukkoru Vannakkili Rating: 5 out of 5 stars5/5Neeyum Nanum Ninaiththaal Rating: 5 out of 5 stars5/5Kavithai Arangerum Neram Rating: 0 out of 5 stars0 ratingsAnbu Malarkal Rating: 5 out of 5 stars5/5Mattrumoru Maalai Neram Rating: 0 out of 5 stars0 ratingsMupathu Naalum Nilavu Rating: 4 out of 5 stars4/5Ullathil Nalla Ullam Rating: 0 out of 5 stars0 ratingsKan Varaintha Oviyame Rating: 0 out of 5 stars0 ratingsKana Kanum Kangal Rating: 3 out of 5 stars3/5
Reviews for Uravillai Pirivillai
0 ratings0 reviews
Book preview
Uravillai Pirivillai - R.Sumathi
19
1
வெளியே செல்வதற்காக கோசலராமன் படியிறங்கிய அதே நேரம் அவள் வந்தார்.
கோசலராமனின் நண்பர் முருகவேல் அவரைக் கண்டதும் கோசலராமனின் முகம் மலர்ந்தது.
வா... முருகவேல். நானே உன் வீட்டுக்குத்தான் வரலாம்னு கிளம்பினேன். நீ வந்துட்டே இருந்தாலும் நீ ரொம்ப கஞ்சண்டா.
முருகவேல் சிரித்தார். பெரிய மீசை. ஓய்வூதியம் வாங்கும் வயது. நரைத்த தலை. வயதான தோற்றத்திற்குரிய அத்தனை அம்சமும் அவரிடம் இருந்தது. கோசலராமனை தனியா வர்ணிக்க வேண்டிய அவசியம் இல்லை. அவரும் அப்படியே நண்பரின் நிலையில்தான் இருந்தார்.
யாருடா கஞ்சன்?
முருகவேல் கேட்டபடியே அருகே வந்தார்.
நீதான்.
எதனால அப்படி சொல்றே?
பின்னே... என்ன? நான் உன் வீட்டுக்கு வந்தா எங்கே காபிக்கு பால் போய்டுமோன்னு நான் அங்கே வர்றதுக்கு முந்தியே இங்கே வந்திட்டியே.
"போடா... நீதான் கஞ்சன். அன்னைக்கே என்ன சொன்னே? நீ எனக்காக அனாவசியமா வீட்டுக்கு வராதே. சேதியை நன்னே வைத்துக் கேட்டுக்கறேன்னு சொன்னே. இதிலேர்ந்து என்ன தெரியுது? நான் வந்தா உன் வீட்டு காபிக்கு தண்டம்னு நினைச்சிட்டே அதானே. அதனால தான் என் வீட்டுக்கு வர்றே? முருகவேல் சீறினார்.
இதானே வேணாங்கறது? பாவம் வயசான காலமாச்சே. நீ வீணா என் வீட்டுக்கு நடந்து கஷ்டப்பட வேண்டாமேன்னு நானே வந்து என்னன்னு கேட்டுக்கறேன் அப்படின்னு சொன்னேன். ஒரு நண்பன்ங்கற முறையில் நான் உன் மேல உள்ள அக்கறையினாலே அப்படி சொன்னா என்னமோ இப்படி பேசறியே... அதான்டா... நல்லதுக்கே காலம் இல்லை
என்றார் கோசல்ராமன்.
என்ன யார்... அது? யார் கூட இப்படி வாசல்ல நின்னு சத்தம் போடறீங்க?
என்ற குரலோடு வந்தாள் ஞானாம் பிகை.
ஞானாம்பிகை கோசாரமானின் தர்மபத்தினி. வந்தவள் வாசலில் நின்று கணவரோடு உறக்கப் பேசி கொண்டிருந்த முருகவேலைக் கண்டதும்.
வாங்கண்ணே...
என்றாள்.
நான் வந்து கால் மணி நேரம் ஆகுது. நீ வந்துதான் வான்னு கூப்பிட வேண்டியிருக்கு. ஒரு மகிழ்ச்சியான செய்தியோட வந்த என்னை வாசல்ல நிக்க வச்சி என்னென்ன பேசறான் தெரியுமா?
என்றபடியே உள்ளே வந்தார்.
முருகவேலும் கோசலராமனும் சோபாவில் அமர்ந்தனர். உட்கார்ந்ததும் கேட்டார் கோசரமன்.
என்னாச்சு நான் சொன்ன விஷயம்? ஏதோ மகிழ்ச்சியான செய்தின்னு சொன்னே மாப்பிள்ளைப் பார்த்துட்டியா?
என்று ஆவலாய் கேட்டார் கோசல்ராமன்.
டேய்... கோசலா, ஒரு மாப்பிள்ளை பார்த்திருக்கேன். பார்க்க பையன் நல்லாயிருப்பான். ஸ்டேட் பாங்க்ல உத்யோகம் பார்க்குறான். நல்ல பையன். போட்டோவைப் பாரேன்
என தன்னுடைய மேல் சட்டைப் பையிலிருந்து ஒரு புகைப்படத்தை எடுத்து நீட்டினார்.
அதை வாங்கிப் பார்த்தார் கோசலராமன்.
பையன் நன்றாக இருந்தான். ஆண்மைக்குரிய லட்சணங்கள் அழகு சேர்ந்தன. அழகான கேசம். அம்சமான மீசை. அன்பான பார்வையோடு கண்கள். கூரிய மூக்கு. ஒரு வித குதூகல சிரிப்போடு உதடுகள். அழகான பொன்னாய் பார்க்கும் போது ஒரு ஆண்டவனின் முகம் எப்படி மலருமோ அப்படி மலர்ந்திருந்தது.
பையன் நல்லாத்தான் இருக்கான். பாங்க்ல உத்யோகம் பேர் என்ன?
சைலேந்திரன்?
குடும்பம்?
அம்மா, அப்பா, ஒரே தங்கை
ஞானாம்பிகை நான்கைந்து முறுக்குகளையும் காபியும் கொண்டு வந்து... கொடுத்தாள்.
ம்... எவ்வளவு எதிர்பார்ப்பாங்க
கேட்டா கோசலராமன்.
எவ்வளவு எதிர்ப்பதால் என்னடா? உன்னால செய்யமுடியாதா? பிரிந்தவனி உனக்கு ஒரேய பொண்ணு.
போதுண்டா. நீயே
சொல்லிக் கொடுத்திட்டு வந்திடுவே போலிருக்குகே. மாப்பிள்ளையை பாருடான்னா... நீ மாப்பிள்ளை வீட்டுக்காரனாவே ஆயிடுவே போலிருக்கே" என்றார்...
ஏன்டா... உன்னால செய்ய முடியாதா?
அதைப் பத்தி இப்ப என்ன? எவ்வளவு எதிர்பார்க்க றாங்க?
அதையெல்லாம் நான் எதுவும் கேட்கலை. தெரிஞ்சவன் மூலமா இந்த வரன் வந்தது. சொன்னேன். அவ்வளவுதான்.
நமக்கு ஒத்து வரணுமே.
ம்... பையனை எனக்குப் பிடிச்சுருக்கு. ஞானாம்பிகை போட்டோவைப் பாரு
என அவளிடம் புகைப்படத்தை நீட்டினார்.
வாங்கிப் பார்த்த அவள் உடனே.
ம்... நல்லாயிருக்கான். வராகி சொல்லுங்க
என்றாள்.
அப்புறம் ஒரு விஷயம். நாளை பின்னே மறைச்சுட்டியேன்னு கேட்கப்படாது பாரு...
முருகவேள் இழுக்க கோசலராமனும், ஞானாம்பிகையும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு விட்டு அவரைப் பார்த்தனர்.
என்ன?
மாப்பிள்ளைப் பையனோட தங்கை ஒருத்தி இருக்கறதா சொன்னேன்ல.
ஆமா!
அவ கல்யாணம் ஆணவ.
பிரச்சனை விட்டுது.
கல்யாணம் ஆணவதான். தற்சமயம் புருஷனோட இல்லை.
ஐய்யய்யோ...
இங்கதான் வீட்டோட இருக்கா.
எதனால?
தெரியலை, ஏதாவது ஒரு காரணம் இருக்கும், காரணம் இல்லாமலா புருஷன் வீட்டை விட்டுட்டு வந்து ஒருத்தி அம்மா வீட்ல இருப்பா?
அவ போய்டுவாள்ல புருஷன் வீட்டுக்கு
ஞானாம்பிகை கவலையாய்க் கேட்டாள்.
போய்டுவாளாம். ஏதோ பிரச்சனையாம்.
கோசலராமன் யோசித்தார்.
எத்தனை வருஷமா இருக்கா?
ஒன்றரை வருஷமா.
"இன்னுமா பிரச்சனை தீரலை. எனக்கென்னவோ சந்தகமாயிருக்கு. இவ புருஷன் வீட்டுக்கே போகலைன்னா...?
அவ போகலைன்னா நமக்கென்ன?
வேண்டாண்டா. இந்த இடம் வேண்டாம். வாழ வெட்டியா ஒருத்தி இருக்கற வீட்ல பொண்ணு கொடுத்த நாளைக்கு ஏதாவது பிரச்சனை வரும். அவள் வீட்லேயே இருக்கறதாலே வம்பு. வேண்டாம் இந்த இடம் விட்டுடு...
சட்டென அவர் இப்படி சொல்ல முருகவேலின் மனம் முறிந்ததைப் போலானது.
அவர் ஞானாம்பிகையைப் பார்த்தார்.
ஆமாண்ணா, நாத்தனார் கொடுமையே நாட்ல தங்க முடியலை. அதுவும் வீட்டோட இருக்கற நாத்தனார்னா ரொம்ப பிரச்சனை. வாய்க்காரியோ என்னமோ? என் பொண்ணு சாது. வேண்டான்னா. விட்டுடலாம். வேற இடம் பாருங்க.
சரி...உங்களுக்கு இஷ்டமில்லைன்னா விட்டுடுவோம்.
உங்க பொண்ணு எனக்கும் பொண்ணு மாதிரிதான். வற்புறுத்தவா போறேன். வேற இடம் பார்க்குறேன்."
அவர் சொல்லி முடித்த அதே நேரம் அலுவலகத்திலிருந்து வந்த பிரிந்தவனி காலணிகளை கழற்றி விட்டு உள்ளே வந்தாள்.
பிருந்தாவனி காலணிகளை கழற்றி விட்டு உள்ளே வந்தாள்.
2
பிருந்தாவனி அழகாக இருந்தாள். உயர்த்தி பின்னிய ஒற்றைப் பின்னல். வட்ட முகத்தில் மாலை நேரப் புன்னகை இருந்தது. நெரிசலில் திணிக்கப்பட்டு துப்பப்பட்டதால் உடலும் தலையும் களைந்திருந்தது. காலையில் ஒப்பனையில் செல்பவளை மாலையில் உண்மையான அழகில் ரசிக்கலாம். உண்மையான அழகு அவளுக்கு சற்று அதிகமாவே இருந்தது.
சீர் செய்யப்பபட்ட புருவங்களுக்கு கீழே சிரிக்கும் விழிகள், சிறிய முத்து மூக்குத்தி பளீரிடும் நேரான மூக்கு. சிவந்த உதடுகள். எந்த ஆணின் மனதிற்குள்ளும் மதிப்பெண் போடும் ஆசையை ஏற்படுத்தும் தோற்றம்.
தொலைக்காட்சி தொடர் தயாரிக்கும் கம்பெனி ஒன்றில் வேளைப் பார்க்கிறாள். கை நிறைய சம்பளம். கவலை இல்லாதவள். வீட்டிற்குள் ஒரே பெண். ஒரு தம்பியும் உண்டு அவளுக்கு அடுத்த வருடமே பிறந்தவன். பார்த்தால் அண்ணன் போலிருப்பான். தற்சமயம் வேலை தேடி அலைந்து கொண்டிருப்பவன்.
பிருந்தாவனி முருகவேலைப் பார்த்ததும் முகத்தில் புன்னகையை கூடுதலாக ஏற்றினாள். வெண் முத்துப் பற்களைக் காட்டி சிரித்தாள்.
வாங்க மாமா...
என்றாள்.
"நான் வர்றது இருக்கட்டும். இப்படியே உங்க அப்பனுக்கு எத்தனை நாளைக்கு சம்பாதிச்சுக் கொட்டிக்கிட்டிருப்பே...
என்ன மாமா நீங்க...?
அவள் சிரித்தாள்.
வாம்மா இப்படி உட்கார்
என்றார் முருகவேல் பிருந்தாவனி தன்னுடைய தோளில் தொங்கிய பையை எடுத்து தன் அருகிலேயே வைத்துக் கொண்டு