Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Oru Kodi Roobai Punnagai
Oru Kodi Roobai Punnagai
Oru Kodi Roobai Punnagai
Ebook117 pages32 minutes

Oru Kodi Roobai Punnagai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajeshkumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Oru Kodi Roobai Punnagai

Read more from Rajeshkumar

Related to Oru Kodi Roobai Punnagai

Related ebooks

Related categories

Reviews for Oru Kodi Roobai Punnagai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Oru Kodi Roobai Punnagai - Rajeshkumar

    28

    1

    பம்பாய் தூர்தர்ஷனின் செய்தி அறிக்கை நேரம்.

    நெற்றி வகிட்டில் தடவிய குங்குமம், வலது பக்க மூக்குத்தி, இடதுபக்க மாராப்பு, நெற்றியில் மாங்காய் ஸ்டிக்கர் பொட்டு, கழுத்தில் மெலிதாய் மின்னும் ஒரு செயின், உதட்டில் ஒரு கட்டாய புன்னகை - இவைகளின் கலவையோடு அந்தப் பெண் செய்தி வாசித்துக் கொண்டிருந்தாள்.

    லஞ்ச ஒழிப்பு காரியக் கமிட்டியின் தலைவர் அரசாங்கத்துக்கு அறிக்கையை சமர்ப்பிக்காமல் தாமதப்படுத்துவதற்கு காரணம் அவர் ஒரு பெரிய தொகையை லஞ்சமாய் பெற்றுக் கொண்டார் என்று எதிர்க்கட்சித் தலைவர் மக்களவையில் இன்று குற்றம் சாட்டினார். ஐந்து நாள் நல்லெண்ண பயணமாக பிரதமர் இன்று ஜெர்மனிக்கு புறப்பட்டுச் சென்றார். டெல்லியில் இன்று குண்டு வெடித்ததில் ஏழு பேர் காயமடைந்தனர். டென்னீஸ் இறுதி பந்தயத்தில் ஸ்டெபியும் மோனிகாவும் மோதுகிறார்கள். இந்திய கிரிக்கெட் அணிக்கு புதிய கேப்டனாக வாசுதேவ் தேர்ந்து எடுக்கப்பட்டிருக்கிறார்.

    ராத்திரிக்கான டிஃபனை தயாரிப்பதில் மும்முரமாய் சமையலறையில் ஈடுபட்டிருந்த சுபத்ரா சட்டென்று நிமிர்ந்தாள். மராட்டிய பெண்களுக்கே உரித்தான மந்தகாச அழகு. போனஸாய் பொன்னிறம். அடர்த்தியான கூந்தலை அலட்சியமாய் தூக்கி கொண்டை போட்டிருந்தாள்.

    செய்தி அறிக்கையின் கடைசி வரிகளை மறுபடியும் மூளை படித்துக் காட்ட பார்த்துக் கொண்டிருந்த சமையல் வேலையை அப்படியே தள்ளி வைத்துவிட்டு - ஒரு கன்றுக் குட்டியின் துள்ளலோடு வெளியே வந்து மாடிப்படிகளில் தாவி ஏறினாள்.

    வெறுமனே சாத்தியிருந்த மாடியறைக் கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தாள். மராட்டியில், என்னங்க? என்று கூப்பிட்டுக் கொண்டே - கட்டிலில் குப்புறப்படுத்திருந்த தன் கணவன் வாசுதேவை நெருங்கினாள்.

    லுங்கிபனியன் அணிந்து திரண்ட புஜங்களோடு படுத்திருந்த வாசுதேவ்க்கு பக்கத்தில் மூச்சு வாங்கிக் கொண்டு, ‘தொப்’பென்று உட்கார்ந்தாள்.

    என்னங்க...?

    ம்...

    எட்டரை மணிக்கே தூக்கமா....? எந்திரிச்சு உட்கார்ங்க... உங்களுக்கு ஒரு நல்ல செய்தியை கொண்டு வந்திருக்கேன்...

    சுபி... டோண்ட் டிஸ்டர்ப்... ம்... காலையிலிருந்து சாயந்தரம் வரைக்கும் ப்ராக்டீஸ் பண்ணினதில் உடம்பெல்லாம் காயம்பட்ட மாதிரி இருக்கு... தலை வேற விண்ன்னு இருக்கு...

    சுபத்ரா சிரிப்போடு - தன் வெல்வெட் உடம்பை கணவன் மேல் கவிழ்த்தாள். உஷ்ணமான உதடுகளை அவன் காதருகே வைத்தாள்.

    இப்ப... நான் சொல்லப் போகிற ந்யூஸைக் கேட்டா... உங்க உடம்பில் இருக்கிற டயர்டெல்லாம் காணாமல் போய் என்னைத் தூக்கி ரெண்டு ரவுண்ட் சுத்துவீங்க...

    சொ...சொல்லு... கொட்டாவி விட்டுக்கொண்டே மல்லாந்து படுத்தான் வாசுதேவ். கண்களை மூடியே இருந்தான்..

    உங்க வாழ்க்கையோட குறிக்கோள் எதுன்னு போன வாரம் ஒரு பத்திரிகை நிருபர் கேள்வி கேட்டபோது நீங்க அதுக்கு என்ன பதில் சொன்னீங்க...?

    அ... அது... வந்து... வாசுதேவ் தூக்கக் கலக்கத்தில் ஞாபகப்படுத்திக் கொள்ள முயல - சுபத்ராவே சொன்னாள்.

    இந்திய கிரிக்கெட் குழுவுக்கு காப்டனாகணும். அது தான் என் வாழ்க்கையோட குறிக்கோள்ன்னு சொன்னீங்களே...?

    ஆ... ஆமா...

    நீங்க காப்டனாயிட்டீங்க...

    அடுத்த விநாடி - விருட்டென்று எழுந்து உட்கார்ந்தான் வாசுதேவ். கண்களில் வண்டி வண்டியாய் ஆச்சர்யம்.

    சு... சுபி... நீ... என்ன சொல்றே...?

    இப்ப... ரெண்டு நிமிஷத்துக்கு முந்தி எட்டரைமணி ந்யூஸ்ல அனௌன்ஸ் பண்ணிட்டாங்க...

    பாப்... ரே...!

    சுபத்ராவின் முகத்தை இரண்டு கைகளாலும் ஏந்தி பிடித்தான் வாசுதேவ். உடம்பெல்லாம் சந்தோஷம் துள்ளியது.

    நல்லா கேட்டியா...?

    கேட்டேன்... கேட்டேன்...

    இது... எப்படி சாத்தியம்...? கிரிக்கெட் போர்டில் இருக்கிற பாதி பேர்க்கு என்னைப் பிடிக்காதே...

    சுபத்ரா கணவனின் தலைக் கேசத்தை கொஞ்சலாய் கோதிவிட்டாள். திறமைசாலிகளை ரொம்ப நாளைக்கு அடக்கி வைக்க முடியாதுங்கிறது... உங்க விஷயத்துல சரியா போச்சு... ஆமா... இவ்வளவு ஸ்வீட்டா... ஒரு ந்யூஸை கொண்டு வந்து உங்க காதுல போட்டிருக்கேன். எனக்கு என்ன... தரப் போறீங்க...?

    இப்போதைக்கு... இது... வாசுதேவ் சொல்லிக் கொண்டே சுபத்ராவின் அழகான முகத்தை வசதியாய் பற்றிக்கொண்டு - அவளுடைய ரோஜா இதழ் உதடுகளில் மெல்ல முத்தமிட்டான். அதே விநாடி –

    பக்கத்தில் இருந்த டெலிபோன் அலறியது. வாசுதேவ் புரண்டு படுத்து ரிஸீவரை எடுத்தான்.

    ஹலோ

    மறுமுனையில் கிரிக்கெட் போர்டு மானேஜர் கல்யாண்கர் கோர்டே பேசினார்.

    வாசுதேவ்...! வாழ்த்துக்கள்! டி.வி. நியூஸ் கேட்டீங்களா...?

    கேட்டேன் ஸார்... என்னால நம்ப முடியலை... எப்படி இந்த திடீர் முடிவு...?

    போர்டுல ரெண்டு நாளா பேசி முடிவு எடுத்திருக்காங்க... பத்து நிமிஷத்துக்கு முந்திதான் டி.வி. ஸ்டேஷனுக்கு ந்யூஸ் கொடுத்தாங்க...

    ஐ... குட் நாட் கண்ட்ரோல் மை... ஃபீலிங்ஸ் ஸார்

    அவர் சிரித்தார், வாழ்க்கையில் இப்பேர்ப்பட்ட அதிர்ஷ்டங்கள் திடீர்ன்னுதான் வரும்... கிரிக்கெட் போர்டு உங்களை நம்பி ஒரு பெரிய பொறுப்பைக் கொடுத்திருக்கு... அந்த பொறுப்பை’ வெற்றிகரமா நிறைவேத்தி காட்ட வேண்டியது உங்க பொறுப்பு... உங்க கிரிக்கெட் போட்டியில் கோப்பையை ஜெயிக்காமே போனாலும் பரவாயில்லை... அட்லீஸ்ட் செமி பைனல்ஸ் வரைக்குமாவது நம்ம இந்தியா வரணும் டோண்ட் வொர்ரி ஸார்... கோப்பையையே ஜெயிச்சுட்டு வர்றேன்...

    குட்... நாளைக்குக் காலையில் பத்து மணி சுமார்க்கு போர்ட் க்ளப் மீட்டிங் ஒண்ணு அரேன்ஞ்ச் பண்ணியிருக்கு... ப்ளேயர்ஸோட நீங்க அதுல கலந்துக்கணும்...

    வர்றேன்... ஸார்

    காப்டனாயிட்டீங்க..... பார்ட்டி என்னிக்கு அரேன்ஞ்ச் பண்றீங்க...?

    "கூடிய சீக்கிரமே... ஒரு ஃபைவ்

    Enjoying the preview?
    Page 1 of 1