Uyirkaadhal
By Kulashekar T
()
About this ebook
இது டாம் டிக்வரின் “ரன் லோலா ரன்” என்கிற ஜெர்மானிய திரைக்கதையை தழுவி படைக்கப்பட்டிருக்கிற நாவல். புராண காலத்தில் விதியை மதியால் வென்று, சாவித்திரி தன் காதலன் சத்தியவான் உயிரை காப்பாற்றுகிறாள். இங்கே விஞ்ஞான காலத்தில் லோலா தன் காதலன் எபி உயிரை ஒரு பெரிய சிக்கலில் இருந்து முற்றிலும் புதிய உத்தியில் எப்படி காப்பாற்ற யத்தனிக்கிறாள் என்பதை காதல் ததும்ப படம் பிடித்துக்காட்டுகிறது இந்த நாவல்.
இது ஒரு மர்மக்கதையின் சுவாரஸ்யத்தோடு மின்னல் வேகத்தில் பயணிக்கும் வித்யாசமான காதல் கதை. கயாஸ் தியரி முதலான சித்தாந்தங்கள் இதன் பின்புலத்தில் இருந்து இயக்குகின்றன. ஒரே நிகழ்வு மூன்று வெவ்வேறு விதங்களில் மூன்று வெவ்வேறு வித்யாசமான முடிவுகளோடு ஒரே நேரத்தில் அரங்கேறுகின்றன. கதை முடிவடையும் தருணம் மறுபடி துவக்கப் புள்ளிக்குச் சென்று விடுகிறது. மீண்டும்மீண்டும் அதே விளையாட்டை வேறுவிதமாய் ஆடிப் பார்க்கத் தயாராகி விடுகிறது. அதனால் கதையின் மாந்தர்களும் அதில் பங்கெடுத்துக் கொண்டு தானே ஆகவேண்டும். துவங்குகிற கணங்களின் சிறுசிறு மாற்றங்களுக்கேற்ப கதை மாந்தர்களின் பயணிப்பில் மாற்றங்களை சந்திக்கிறார்கள். சரியான கணங்களை நிர்மாணித்து தன் வசப்படுத்துகிறவர்கள்
இந்தக் கதை “ப்ராபபிலிட்டி” அல்லது சாத்தியங்களின் நிலைபாட்டுத்தன்மை குறித்து காதல் மூலம் அலசுகிறது. நழுவ விடும் கணங்கள் வாழ்வியல் போக்கை வெவ்வேறு விதமாக மாற்றியமைத்துக் கொண்டேயிருக்கின்றன. இதன் எளிய உதாரணமாக இந்நாவல் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. இதுவே கோடானுகோடி சங்கிலித்தொடராய் உறவுக்கலப்பின் “பெர்ம்யூட்டேஷன் காம்பினேஷன்” வெளிப்பாடாய் எப்படிப்பட்ட நிகழ்வுகளை ஏற்படுத்தும் என்று வரிசைக்கிரமப்படுத்துவது கொஞ்சம் திகிலான சமாச்சாரம். அதனை உணர்ந்து கொள்ள கொஞ்சம் சுவாரஸ்யான கற்பனை வளம் தேவைப்படத் தான் செய்கிறது. ஒவ்வொரு கணத்தின் மூலத்திற்கு பின்னோக்கிச் சென்று பார்க்கிற ஒரு ஆய்வைபோல, பல்லாயிரம் கோடி கணங்களின் மூலத்திற்கு பின்னோக்கிச் சென்று பார்க்கக்கூடிய ஒரு கணித வழியின் பாதையில் சென்று பார்த்தால் என்ன பிடிபடுமோ அதை சம்பவங்களின் வெளிப்பாடுகளாலேயே கைவசப்படுத்தியிருக்கிறது இந்நாவல்.
லோலாவின் மனதிற்குள் அழுத்தமாய் பதிந்திருக்கிற காதலின் நம்பிக்கை புள்ளி, படிப்படியாய் அதன் நம்பிக்கைத் தளத்தை விரிவு கொள்ளச் செய்து, தொடர் தோல்விகள் கடந்து, காதலன் எபி சிக்கியிருக்கும் உயிர்ப்போராட்டத்தில் இருந்து அவனை மீட்டெடுக்கும் சூத்திரம் தேடுகிறது. விதியை மதியால் வெல்ல யத்தனிக்கிறது. இந்த முடிச்சுகளுக்கிடையில் உள்ள கணித சூத்திரத்தின் பின்னணியாக இயங்குகிறது கயாஸ் தியரி. அந்த சித்தாந்தத்தின் நுட்பத்துடன் இந்த நாவல் இருந்தாலும், அதை மிக எளிமையான வடிவில் படைக்கப்பட்டிருப்பது இதன் பிரத்யேகச் சிறப்பு.
லோலா ஆனாலும் அபாரமான காதல் உணர்வு அவளை இந்த அபாயமான விளையாட்டிற்குள் உந்தித் தள்ளுகிறது. சிக்கலுக்குள்ளாக்குகிறது. அவள் தொடர்ந்து அந்த விளையாட்டின் கணங்களை மாற்றியமைத்து, தான் எதிர்பார்க்கிற நிகழ்வை நோக்கி ஓடுகிறாள். எட்டாமல் மயிரிழையில் அவை நழுவுகிறபொழுதுகளில் நம்பிக்கையை விடாமல் துரத்துகிறாள்.
இந்நாவலோடு “முதல் முத்தம்” என்கிற காதல் சிறுகதை கூடுதலாக தரப்பட்டிருக்கிறது. பென் ப்ரையன்ட் எழுதிய “ஆப்ரிகாட்” என்கிற குறுந்திரைக்கதையை தழுவி படைக்கப்பட்ட சிறுகதை. எல்லோருக்குமே முதல் முத்தம் என்பது மறக்க முடியாத ஒன்று தான். அந்த முத்தம் மனதின் ஆழத்தில் அழியாமல் பொறிக்கப்பட்டேயிருக்கும். அப்படிப்பட்ட ஒரு முதல் முத்தம் செய்யும் மாயம் தான் இளமை துள்ளும் இந்த அற்புதமான காதல் சிறுகதை.
நிச்சயம் இரண்டும் உங்கள் இதயத்தை மின்னல் வேகத்தில் திருடிக்கொண்டு விடும் என்பதில் எந்தவித சந்தேகமுமில்லை. இது காதல் மீது சத்தியம்.
நேசத்துடன், தி. குலசேகர்
Read more from Kulashekar T
Vikramadithanukku Vedhalam Sonna Puthir Kathaigal Rating: 5 out of 5 stars5/5A Separation Rating: 0 out of 5 stars0 ratingsWhite Nights - Venmayamana Iravugal Rating: 0 out of 5 stars0 ratingsOru Snegithikkaga... Rating: 0 out of 5 stars0 ratingsBiggboss - Oviya Varaiyum Devathai Padimam Rating: 0 out of 5 stars0 ratingsThe Day I Became A Woman Rating: 0 out of 5 stars0 ratingsCity Lights Rating: 0 out of 5 stars0 ratingsChildren of Heaven Rating: 0 out of 5 stars0 ratingsSpring Autumn Winter Summer Spring Rating: 0 out of 5 stars0 ratingsMr and Mrs Iyer Rating: 0 out of 5 stars0 ratingsBigg Boss 2 Aishwarya Enum Kuzhanthai Manathin Agavulagam Rating: 0 out of 5 stars0 ratingsMulla Kathaigal Rating: 0 out of 5 stars0 ratingsTheeraakkadhal Rating: 0 out of 5 stars0 ratingsBigg Boss 2 - Episode 5 Rating: 0 out of 5 stars0 ratingsFirst Teacher Rating: 0 out of 5 stars0 ratingsMathilukal Rating: 0 out of 5 stars0 ratingsTaxi Rating: 0 out of 5 stars0 ratingsCharulatha Rating: 0 out of 5 stars0 ratingsTitanic - Oru Kaadhalin Varalaru Rating: 0 out of 5 stars0 ratingsUnnil Ennai Kaangirean Rating: 0 out of 5 stars0 ratingsBigg Boss 2 - Episode 3 Rating: 0 out of 5 stars0 ratingsIdharku Peyarthan Kaadhala... Rating: 0 out of 5 stars0 ratingsT. Kulashekar Stories Rating: 0 out of 5 stars0 ratingsNinaivellam Poovasam! Rating: 0 out of 5 stars0 ratingsThulli Thiriyum Ninaivalaigal - Part 1 Rating: 0 out of 5 stars0 ratingsWhite Balloon Rating: 0 out of 5 stars0 ratingsNee Mattum Rating: 0 out of 5 stars0 ratingsBigg Boss 2 - Episode 12 Rating: 0 out of 5 stars0 ratingsThe Road Home Rating: 0 out of 5 stars0 ratings
Related to Uyirkaadhal
Related ebooks
Kannadi Meengal Rating: 0 out of 5 stars0 ratingsPoo Malarum Kaalam Rating: 2 out of 5 stars2/5Kaadhal Iravu Rating: 5 out of 5 stars5/5Ore Kadal Rating: 0 out of 5 stars0 ratingsCity Lights Rating: 0 out of 5 stars0 ratingsRun Lola Run Rating: 0 out of 5 stars0 ratingsThe Apartment Rating: 0 out of 5 stars0 ratingsAinthum Moondrum Onpathu Rating: 1 out of 5 stars1/5Devadas - Azhiyaa Kaadhal Rating: 0 out of 5 stars0 ratingsTitanic - Oru Kaadhalin Varalaru Rating: 0 out of 5 stars0 ratingsDeivam Nindru Kollum Rating: 0 out of 5 stars0 ratingsThe Road Home Rating: 0 out of 5 stars0 ratingsT. Kulashekar Stories Rating: 0 out of 5 stars0 ratingsCast Away Rating: 0 out of 5 stars0 ratingsAnthareen Rating: 0 out of 5 stars0 ratingsIngey Etharkkaga? Rating: 0 out of 5 stars0 ratingsCelluloid Chozhan! Rating: 0 out of 5 stars0 ratingsSpring Autumn Winter Summer Spring Rating: 0 out of 5 stars0 ratingsMr and Mrs Iyer Rating: 0 out of 5 stars0 ratingsMathilukal Rating: 0 out of 5 stars0 ratingsEnnattavarkkum Iraiva Pottri! Rating: 0 out of 5 stars0 ratingsYali Rating: 0 out of 5 stars0 ratingsBookmarks Rating: 0 out of 5 stars0 ratingsIthu Yengal Bharatham Rating: 0 out of 5 stars0 ratingsPon Vilangu Rating: 0 out of 5 stars0 ratingsRajapudhana Ilavarasi Rating: 3 out of 5 stars3/5Avan Aanathu Rating: 0 out of 5 stars0 ratingsOru Ilakkiyavathiyin Kalaiulaga Anubavangal Rating: 4 out of 5 stars4/5Charulatha Rating: 0 out of 5 stars0 ratingsMuthal Parisu Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Uyirkaadhal
0 ratings0 reviews
Book preview
Uyirkaadhal - Kulashekar T
http://www.pustaka.co.in
உயிர்க்காதல்
Uyirkaadhal
Author:
தி. குலசேகர்
T. Kulashekar
For more books
http://www.pustaka.co.in/home/author/kulashekar
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
1. உயிர்க்காதல்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
அத்தியாயம் 21
அத்தியாயம் 22
அத்தியாயம் 23
அத்தியாயம் 24
அத்தியாயம் 25
அத்தியாயம் 26
அத்தியாயம் 27
அத்தியாயம் 28
2. முதல் முத்தம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
1. உயிர்க்காதல்
ஒர் அறிமுகம்
இதுவரை இவரின் மூன்று சிறுகதை தொகுப்பு நூல்களை கவிஞர் மீராவின் அன்னம் பதிப்பகம்
பிரசுரித்திருக்கிறது. பிரபல மாத இதழ்களில் ஏழு நாவல்கள் வெளிவந்திருக்கிறது. இவரின் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகளை தி. குலசேகர் கதைகள்
என்கிற பெயரில் சந்தியா பதிப்பகம்
வெளியிட்டிருக்கிறது. மேலும் ஆகச்சிறந்த ஐந்து உலகத் திரைக்கதைகளை ஆக நாவல்வடிவில் இவர் எழுதியிருக்கும் நூல்களையும் வெளியிட்டிருக்கிறது. இவர் எழுதும் உலகின் மிகச் சிறந்த திரைக்கதைகளை நாவலாக ஆழி பதிப்பகம்
தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. சாப்ளின், கலைவாணர் முதலான முக்கியமான திரைக்கலைஞர்களின் வாழ்க்கை வரலாற்று நூல்கள் எழுதியிருக்கிறார்.
இயக்குநர் சந்தோஷ் சிவனின் டெரரிஸ்ட்
மல்லி' ஆகிய திரைப்படைப்புகளுக்கு எழுத்து வடிவம் கொடுத்து நூலாக்கியிருக்கிறார்.
தாமரை இதழில் இவர் எழுதிய திரை விமர்சனங்கள் நுட்பம் மிகுந்தவை. இவரின்
சமூகநீதிக் காவலர் டபிள்யு.பி.ஏ. சௌந்திரபாண்டியன் வாழ்க்கை வரலாறு" நூல் எழுதியிருக்கிறார்.
இவரது ஒரு சிநேகிதிக்காக
தொகுப்பில் உள்ள பல சிறுகதைகள் வங்கமொழியில் மொழி பெயர்க்கப்பட்டு, பிரேமாந்தர்' இதழில் பிரசுரிக்கப்பட்டிருக்கிறது.
வானம்பாடி நூல் குறித்த கட்டுரையை
எனக்குப் பிடித்த புத்தகம் என்கிற தலைப்பில்
தினமணிக்கதிரில் பூர்ணம் விஸ்வநாதன் எழுதியிருக்கிறார். இவரது
மனதில் ஒரு பிரார்த்தனை" சிறுகதை காவ்யா பதிப்பகம் வெளியிட்ட 'நெல்லைச் சிறுகதைகள்' தொகுப்பு நூலில் இடம் பெற்றிருக்கிறது.
புதிய பார்வை- நீலமலை தமிழ்ச்சங்கம்
இணைந்து நடத்திய சிறுகதைப் போட்டியில் மூன்றாவது பரிசு பெற்றிருக்கிறார், ஆறுதல் பரிசு, மூன்றாம் பரிசு, முதல் பரிசு என தினமலர் நடத்திய டி.வி.ஆர் நினைவு சிறுகதைப் போட்டிகளில் தொடர்ந்து மூன்று முறை பரிசுகள் பெற்றிருக்கிறார். நேசங்களுடன்' சிறுகதை நூலுக்கு
லில்லி தேவசிகாமணி நினைவு இலக்கிய சிறப்புப் பரிசு" பெற்றிருக்கிறார்.
அமெரிக்கன் கல்லூரியில் முதுகலை ரசாயணம் படித்துக் கொண்டிருக்கையில், தூத்துக்குடி ஸ்பிக் நிறுவனத்தில் பணி கிடைத்து, அங்கே இருந்த காலங்களில் உலக திரைப்படங்கள் மற்றும் இலக்கிய பரிட்சயமேற்பட்டு, படித்தும், எழுதியும் கொண்டிருந்தவர், பின் திட்டமிட்டபடி திரைப்படத்துறைக்கு வந்து தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டிருக்கிறார். இதழியலில் முதுகலை பட்டயப்படிப்பும் படித்திருக்கிறார்.
விளம்பரப்படம், டெலிஃபில்ம், நெடுந்தொடர் மற்றும் ஆவணப்படங்களில் பணியாற்றியிருக்கிறார். அதில் தமிழகத்தின் பல மாவட்டங்களில் வாழும் பழங்குடியினர் வாழ்க்கை வரலாறு பற்றிய ஆவணப்படம் குறிப்பிடத்தக்கது. குமுதம் டாட் காம் இணையதள தொலைக்காட்சிக்காக பல துறைகளை சார்ந்த பிரபலங்களின் நேர்காணலை இயக்கியிருக்கிறார். நடிகை ரோகினி தொகுத்து வழங்க கேப்டன் தொலைக்காட்சிக்காக உலக சினிமா
என்கிற தொடர் நிகழ்ச்சியை எழுதி, இயக்கியிருக்கிறார்.
இயக்குநர்கள் கே.பாக்யராஜ், ராஜன் சர்மா, ரேவதி, வஸந்த் ஆகியோரிடம் துணை இயக்குநராக பணி புரிந்திருக்கிறார். இயக்குநர் பார்த்திபனிடம் இணைஇயக்குநராக பணிபுரிகிறார். திரை மொழியின் மீதும், இலக்கியத்தின் மீதும் தீராத காதல் கொண்டிருப்பவர். அந்த அடர்த்தியான காதல் புருவம் உயர்த்த வைக்கிற படைப்புகளை தொடர்ந்து வழங்கச் செய்யும்.
எடிட்டர் மெயில் டாட் காம்
உலகின் மிகச்சிறந்த காதல் திரைக்கதைகளை தழுவி ரொமான்டிக் நாவல்களாக
விதவிதமாய் சுவாரஸ்யமாய் தொடர்ந்து மெட்ரோ நாவலில் எழுத இருக்கிறேன். ட்ரான்ஸ்கிரியேட்டிவ் லிட்ரேச்சர் வகையில் படைக்கப்படும் அவை ஒவ்வொன்றும் காதலின் புதிய சாளரம் திறந்து விடும். இளமை பிரவாகமெடுத்து ததும்பும். காதலின் புதியபுதிய அகராதியாக உருவெடுக்கும். இதயத்தில் நிரந்தர இடம் பிடித்துக்கொண்டு எண்ணும்போதெல்லாம் குதூகலமாய், சிலிர்ப்பாய், பரவசிப்பாய் உங்களை மஜா பண்ணிவிடும். இதோ கதகதப்பாய் அந்த வரிசையின் முதல் நாவல்.
இது டாம் டிக்வரின் ரன் லோலா ரன்
என்கிற ஜெர்மானிய திரைக்கதையை தழுவி படைக்கப்பட்டிருக்கிற நாவல். புராண காலத்தில் விதியை மதியால் வென்று, சாவித்திரி தன் காதலன் சத்தியவான் உயிரை காப்பாற்றுகிறாள். இங்கே விஞ்ஞான காலத்தில் லோலா தன் காதலன் எபி உயிரை ஒரு பெரிய சிக்கலில் இருந்து முற்றிலும் புதிய உத்தியில் எப்படி காப்பாற்ற யத்தனிக்கிறாள் என்பதை காதல் ததும்ப படம் பிடித்துக்காட்டுகிறது இந்த நாவல்.
காலங்காலமாய் காதலுக்கு தான் எத்தனைஎத்தனை தடை. இருந்தும் தளராமல் அத்தனையையும் சமாளித்து புதிதுபுதிதாய் காதல் பரிணமித்து சமூகபுரட்சிக்கு வித்திட்டும், வாழ்விற்கு புதியஅர்த்தம் சேர்த்தவண்ணமும் இருக்கிறது. அப்படியரு சுவாரஸ்யமான காதல் தான் இந்த நாவல்.
திரைக்கதையில் உற்று கவனிக்க முடியாமல் நழுவவிடும் பல நுட்பங்களை அதை இலக்கியமாக நாவல் வடிவில் படிக்கையில் கவனித்து முழுமையாய் அனுபவிக்க முடியும். தமிழ், ஆங்கில மொழிகளில் இல்லாத காரணத்தினால் தவறவிடப் பட்டுக்கொண்டிருக்கும் உலகின் அற்புதமான பல காதல் படைப்புகள் இம்முயற்சியின் மூலம் தமிழுக்குள் முற்றிலும் புதிய வடிவில் வந்து மேலும்மேலும் செழுமை கொள்ளும் என்கிற நம்பிக்கை தான் இந்த முயற்சிக்கான வித்து.
காதல் வழியே மனிதநேயம் பற்றிய கேள்விகளை இந்த நாவல் பலவிதமான கோணங்களில் எழுப்புகிறது. உண்மையென நாம் அறிந்திருப்பதாக எதைஎதையெல்லாம் நம்ப வைக்கப்பட்டிருக்கிறோம் என்கிற கேள்வியையும் கூடுதலாய் எழுப்புகிறது. அதன்மூலம் இந்த சமூகஅரசியல் தந்திருக்கிற ரெடிமேட் விடைகளுக்குள் இருந்தும் புதியபுதிய கேள்வியை உருவாக்கி நம்முன் நிறுத்துகிறது.
இது ஒரு மர்மக்கதையின் சுவாரஸ்யத்தோடு மின்னல் வேகத்தில் பயணிக்கும் வித்யாசமான காதல் கதை. கயாஸ் தியரி முதலான சித்தாந்தங்கள் இதன் பின்புலத்தில் இருந்து இயக்குகின்றன. ஒரே நிகழ்வு மூன்று வெவ்வேறு விதங்களில் மூன்று வெவ்வேறு வித்யாசமான முடிவுகளோடு ஒரே நேரத்தில் அரங்கேறுகின்றன. கதை முடிவடையும் தருணம் மறுபடி துவக்கப் புள்ளிக்குச் சென்று விடுகிறது. மீண்டும்மீண்டும் அதே விளையாட்டை வேறுவிதமாய் ஆடிப் பார்க்கத் தயாராகி விடுகிறது. அதனால் கதையின் மாந்தர்களும் அதில் பங்கெடுத்துக் கொண்டு தானே ஆகவேண்டும். துவங்குகிற கணங்களின் சிறுசிறு மாற்றங்களுக்கேற்ப கதை மாந்தர்களின் பயணிப்பில் மாற்றங்களை சந்திக்கிறார்கள். சரியான கணங்களை நிர்மாணித்து தன் வசப்படுத்துகிறவர்கள் எதிர்கொள்ளும்சோதனைகளை சாதனைகளாக்குகிறார்கள். சராசரிதனமான செக்குமாட்டு வாழ்க்கையின் குறியீடாக அவள் அம்மாவின் செயல்பாடுகள் அமைத்திருப்பது ஊடுகதையாக சொல்லப்படுகிறது. மொத்தத்தில் அந்த துணிச்சல்மிக்க இளம்பெண் லோலா நிகழ்த்தும் சாகசம் எப்படிப்பட்ட அனுபவத்தைத் தருகிறது என்பதை உணர உடனே இந்நாவலை ஒரே மூச்சில் படித்து முடிக்க வேண்டியது அவசியம்.
இந்தக் கதை ப்ராபபிலிட்டி
அல்லது சாத்தியங்களின் நிலைபாட்டுத்தன்மை குறித்து காதல் மூலம் அலசுகிறது. நழுவ விடும் கணங்கள் வாழ்வியல் போக்கை வெவ்வேறு விதமாக மாற்றியமைத்துக் கொண்டேயிருக்கின்றன. இதன் எளிய உதாரணமாக இந்நாவல் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. இதுவே கோடானுகோடி சங்கிலித்தொடராய் உறவுக்கலப்பின் பெர்ம்யூட்டேஷன் காம்பினேஷன்
வெளிப்பாடாய் எப்படிப்பட்ட நிகழ்வுகளை ஏற்படுத்தும் என்று வரிசைக்கிரமப்படுத்துவது கொஞ்சம் திகிலான சமாச்சாரம். அதனை உணர்ந்து கொள்ள கொஞ்சம் சுவாரஸ்யான கற்பனை வளம் தேவைப்படத் தான் செய்கிறது. ஒவ்வொரு கணத்தின் மூலத்திற்கு பின்னோக்கிச் சென்று பார்க்கிற ஒரு ஆய்வைபோல, பல்லாயிரம் கோடி கணங்களின் மூலத்திற்கு பின்னோக்கிச் சென்று பார்க்கக்கூடிய ஒரு கணித வழியின் பாதையில் சென்று பார்த்தால் என்ன பிடிபடுமோ அதை சம்பவங்களின் வெளிப்பாடுகளாலேயே கைவசப்படுத்தியிருக்கிறது இந்நாவல்.
தன் வாலிப வயதில் மேற்கொண்ட தற்கொலை முயற்சிக்கான கணத்தின் பிசகால் எண்பது வயதிற்கும் மேலாக வாழ்ந்து பல உலகத்தரமான திரைப்படங்களை படைக்க நேர்ந்துவிட்ட அகிரா குரசேவாவின் வாழ்வியல் விளையாட்டுகூட ஆயிரமாயிரம் பெர்ம்யூட்டேஷன் காம்பினேஷனின் ஏதோ ஒரு துல்லியப்புள்ளியில் சாத்தியம் கொண்டு விட்ட சாத்தியம் என்று சொல்லலாம். அதைப்பற்றி புரிந்துகொள்ள கொஞ்சமாய் கயாஸ் தியரி பற்றி பார்ப்பது உதவும்.
ஒரு துவக்க கணத்தில் நிகழ்த்தப்படும் சின்னச்சின்ன மாற்றங்கள், அதன் நீண்ட பயணிப்பின் முடிவில் மிகப் பெரிய ஒரு மாற்றத்திற்கான அடித்தளம் அடிகோலுகிறது. தி ஸ்லைடிங் டோர்ஸ்
12 பி
ஃபைனல் டெஸ்டினேஷன்
பட்டர்ஃபிளை எஃபெக்ட்
கயாஸ் தியரி
போன்ற திரைக்கதைகள் இந்தச் சித்தாந்தத்தின் பின்னணியில் கட்டமைக்கப் பட்டப்பட்டவை. ஒரு இரும்புக் குண்டை ஒரு மலை உச்சியிலிருந்து கீழே உருட்டிவிடும்போது என்கிற ஒரு நிகழ்வு அதையே திரும்பதிரும்ப செய்கிறபோது, ஒவ்வொரு முறையும் அது வெவ்வேறு திசையில் வெவ்வேறு தூரம் பயணித்து வெவ்வேறு விளைவுகள் நிகழ்த்தி விடக்கூடும் என்பதை அவரவர் கற்பனைக்கேற்ப விரித்துப் பார்த்து புரிந்து கொள்ளலாம். ஒரு முறை எதிரில் வரும் விலங்கை நசுக்கி ஒரு விறகுவெட்டும் பெண்ணை காப்பாற்றலாம். இன்னொரு முறை விளைபயிரை சேதப்படுத்தலாம். பிரிதொரு முறை புதிய