Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Jeevanaadi
Jeevanaadi
Jeevanaadi
Ebook132 pages40 minutes

Jeevanaadi

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.

Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580100603737
Jeevanaadi

Read more from Devibala

Related to Jeevanaadi

Related ebooks

Reviews for Jeevanaadi

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Jeevanaadi - Devibala

    http://www.pustaka.co.in

    ஜீவநாடி

    Jeevanaadi

    Author:

    தேவிபாலா

    Devibala

    For more books

    http://www.pustaka.co.in/home/author/devibala-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    1

    பையன் பேரு வினய். இருபத்தி ஏழு வயது நடக்குது. இதோ போட்டோ பாருங்க.

    மாமா சங்கரன் புகைப்படம் தர, அம்மா மோகனாவும், அப்பா ராஜப்பாவும் படத்தைப் பார்த்தார்கள்.

    சினிமா கதாநாயகன் போல அத்தனை வசீகரமாக இருந்தான்.

    நல்ல கலர். தன்மை ததும்பும் முகம். சிரிக்கும் கண்கள். கன்னத்தில் விழும் குழி.

    ஸ்நேகா! இங்கே வாம்மா. இதைப்பாரு.

    ஸ்நேகா வந்தாள் பார்த்தாள்.

    எப்படீம்மா இருக்கான். அம்மா கேட்டாள்.

    ஸ்நேகா எதுவும் பேசவில்லை.

    முக அழகை மட்டும் வச்சு நானும், என் பொண்ணும் எந்த ஒரு முடிவுக்கும் வர மாட்டோம். ராஜப்பா சொல்ல,

    மாமா எம்.டெக்.எம்.பி.ஏ. படிச்சவன். வெளிநாட்டுக்கு போய் எம்.எஸ். பண்ணினவன். கம்பெனி டாப் ரேங்க். கிட்டத்தட்ட மாசம் மூணு லட்சத்துக்கு மேல் சம்பளம். சொந்த வீடு, கார் எல்லாம் இருக்கு. அப்பா பிசினஸ்மேன். அம்மா அட்வகேட். ஒரு அண்ணன் டாக்டர், அடுத்தவன் ஆடிட்டர், சகோதரிகளே இல்லை. அடிக்கடி வெளிநாட்டுப் பயணம். என்ன தகுதி வேணும் இதுக்கு மேல?

    ராஜப்பா திரும்பி மகளை பார்த்தார்.

    ஸ்நேகா மறுபடியும் படத்தை பார்த்தாள்.

    மாமா! எந்த கெட்ட பழக்கமும் அவருக்கு இருக்க கூடாது.

    கெட்ட பழக்கம்னா?

    சிகரெட், மது, போதை மருந்து, பெண் தொடர்பு, சூது, ரேஸ், இத்யாதிகள். இதுல ஒண்ணை கூட நான் மன்னிக்க மாட்டேன். சரியா?

    மாமா எழுந்து கொண்டார்.

    அம்மாடி! இவங்கப்பா கூட எனக்கு நெருங்கின பழக்கம். குடும்பமே கண்ணியமான குடும்பம். சமூகத்துல பெரிய நிலையில் இருக்கறவங்க. அவ்ளோ தான் எனக்குத் தெரியும்.

    மாமா! சமூகத்துல உச்சில இருக்கிறவங்களுக்கு இன்னிக்கு எல்லா பழக்கங்களும் இருக்கு.

    அப்படி ஏன் நினைக்கணும்?

    கேட்டுக்கங்க மாமா!

    ஸ்நேகா! நான் இப்படி சொல்றேன்னு கோவப்படாதே. சிகரெட் புடிச்சா குற்றமா? ஒரு சமயம், பார்ட்டி அது இதுன்னு வரும்போது ட்ரிங்க் சாப்பிடறது பெரிய குற்றமில்லை.

    அப்படியா மாமா? இதெல்லாம் சின்னதா ஆரம்பிக்கிறது தான் பெரிசா மாறும். ஒரு பெண் கூட பழகினா என்ன? நட்பு தப்பான்னு கேள்வி வரும். சூதாட்டத்தை பிசினஸ்னு சொல்லும். மாமா எல்லா தப்புக்களையும் நியாயப்படுத்தலாம். ஆனா நான் அதை ஒப்புக்க மாட்டேன். எங்கப்பாவுக்கு எந்த ஒரு கெட்ட பழக்கமும் இல்லையே மாமா?

    ராஜப்பா, பெருமிதத்துடன் மகளைப் பார்த்தார்.

    நல்லா விசாரிங்க. எனக்கொரு கோடீஸ்வரனும், பேரழகனும் புருஷனா வாய்க்கணும்னு ஆசையில்லை. சுமாரா இருந்தாலும் ஒரு நல்லவன் வாய்ச்சா போதும் மாமா. நாமெல்லாம் மிடில் கிளாஸ் தான். ஆனா ஒழுக்கம் தான் நமக்கு பெருமை. எங்கப்பா மாதிரி எனக்கொரு புருஷன் வேணும்.

    சரி! நான் விசாரிக்கிறேன்.

    ராஜப்பா எழுந்தார்.

    சங்கரா நான் துர்க்கைக்கு ராகு கால விளக்கேத்தணும். நீ இருந்து சாப்பிட்டு போ.

    சரி மாமா.

    அப்பா நானும் உங்க கூட வர்றேன்.

    ஸ்நேகாவும் புறப்பட்டு போனாள்.

    என்னக்கா இது? இந்த வரனை நான் பார்க்கட்டுமா? வேணாமா? மோகனா பெருமூச்சு விட்டாள்.

    எனக்கே புரியலடா தம்பி. ஸ்நேகா இப்படி ஏதாவது சொல்லி வர்ற வரன்களையெல்லாம் தட்டிக் கழிக்கிறா. எனக்கு பயம்மா இருக்கு.

    நீ பேசுக்கா. உன் பொண்ணுக்கு 25 வயசு முடியப் போகுது.

    ஆமாண்டா. எதுக்கெடுத்தாலும் அப்பா மாதிரி இருக்கணுமாம். தாங்க முடியல. ஒரு கெட்ட பழக்கமும் அவருக்கு இல்லை தான். ஆனா குடும்பத்தை தாங்கிப் புடிக்கிற கம்பீரமே இல்லையே? எந்த வேலையில உன் மாமா நிலையா இருந்திருக்கார்? முன் கோபம், பிடிவாதம், வெட்டி ஜம்பம், வறட்டு வேதாந்தம், ஒழுக்கம் பற்றின பிரசங்கம்... ஊர்ல இவர் மட்டும் தான் யோக்யன். மற்ற எல்லாரும் அயோக்யன்னு நெனப்பு. எந்த ஒரு வேலையில நிலைச்சார்? என்ன சேர்த்து வச்சார்? நான் இப்பவும் வேலைக்கு போய் நிரந்தரமா மாசம் நாப்பதாயிரம் சம்பாதிக்கிற காரணமாத்தான் குடும்பம் நடக்குது. ஸ்நேகா எம்.காம். படிச்சு நல்ல உத்யோகத்துக்கு வர இவரா காரணம்? ஒரு நாளைக்கு எட்டு கோவில். அர்ச்சனை, அபிஷேகம், ராகு கால பூஜைனு எப்பவும் பக்தி பழமா அலைஞ்சா, குடும்பம் உருப்படுமா சங்கரா?

    அக்கா!

    நான் கஷ்டப்பட்ட நேரத்துல எல்லாம் நீ தான் தாங்கிப் புடிச்சே. இப்பக்கூட ஸ்நேகாவுக்கு வரன் தேடி நீதான் அலையறே. பெத்த பொண்ணை வாழ வைக்கணும்னு அவர் துடிக்கிறாரா? முடிஞ்சா, அவ மனசை கலைச்சு, வர்ற வரனையெல்லாம் தட்டி விடறார்.

    கோவப்படாதேக்கா.

    எப்படீடா ஆத்திரப்படாம இருக்க முடியும்? அவளுக்காக நகை, பாத்திர பண்டங்கள்னு எல்லாத்தையும் நான் தான் செத்துச் செத்து சேர்த்து வச்சிருக்கேன். பணமும் பேங்க்ல இருக்கு. நாளைக்கு கல்யாணம் நிச்சயமானா, என்ன செலவாகும்னு இவருக்குத் தெரியுமா? கைல என்ன இருக்கு? பற்றாக்குறை எவ்ளோ? அதை சரிக்கட்ட எத்தனை கடன் வாங்கணும்னு கணக்கு தெரியுமாடா?

    அக்கா நீ எதுக்கு டென்ஷன் ஆகற? உனக்கு ஒரு பிரச்சனைன்னா நான் இல்லையா?

    எத்தனை காலம்டா நீ தாங்கிப் பிடிப்பே? உனக்கும் குடும்பமும், குழந்தைகளும் இல்லையா? நீ எப்பவும் என்னையே தாங்கிட்டு நிக்க முடியுமா?

    அக்கா! இப்ப வீரியத்தை விட நமக்கு காரியம் தான் பெரிசு.

    இல்லைடா தம்பி. எரிச்சல் வருது. ஸ்நேகாவுக்கு இப்ப அழகு, இளமை, நல்ல படிப்பு, உத்யோகம் எல்லாம் இருக்கு. வயசு கூடிப் போனா, இந்த எதுவுமே எடுபடாது. அடிபட்டு போகும். அது புரியுதா இவருக்கு?

    நியாயம் தான்.

    இவ படிச்சவதானே? யோசிக்க வேண்டாம்? இது வாழ்க்கைப் பிரச்சனை. அப்பனோட சேர்ந்து வறட்டு சித்தாந்தம் பேசறா. அப்பா மாதிரி ஒழுக்கமாம். இது ஒழுக்கமில்லை. உதவாக்கரைத்தனம். ஒரு நாளைக்கு ஒன்பது கோயிலுக்கு போய் குடும்பத்தை தெருவுல நிறுத்தறதை விட அதை தாங்கிப் புடிக்கற ஆம்பிளைக்கு எந்தக் கெட்ட பழக்கம் இருந்தாலும் அதை மன்னிக்கலாம். உத்தமனா இருந்துட்டு, சோத்துக்கு சிங்கியடிச்சு என்ன லாபம்?

    அக்கா.

    ஆமாண்டா. குடும்பம் நடத்த இங்கே எனக்கு முழி பிதுங்குது. இந்த ஆள் உத்தமன்னு மகள் விளம்பரம் குடுத்துட்டு அலையறா. ரெண்டு பேரையும் நாறடிச்சிட்டு நான் வீட்டை விட்டு வெளியே போனாத்தான் புத்தி வரும்.

    மோகனாவுக்கு நெற்றியில் நரம்புகள் புடைத்தன.

    வியர்த்து, கண்கள் சிவக்க, படபடப்பு அதிகமானது.

    அக்கா! நீ முதல்ல உட்காரு.

    அவளைப் பிடித்து

    Enjoying the preview?
    Page 1 of 1