Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Oru Gram Thurogam
Oru Gram Thurogam
Oru Gram Thurogam
Ebook197 pages1 hour

Oru Gram Thurogam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajeshkumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Oru Gram Thurogam

Read more from Rajeshkumar

Related to Oru Gram Thurogam

Related ebooks

Related categories

Reviews for Oru Gram Thurogam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Oru Gram Thurogam - Rajeshkumar

    29

    1

    ஏதோ ரகசியம் பேசுகிற மாதிரி அந்த ஞாயிற்றுக்கிழமையின் விடியற்காலை பொழுது ஸ்லோமோஷனில் விடிந்து கொண்டிருக்க ஓஸோன் - நிரம்பிய வங்கக் கடற்காற்று சென்னை நகரை அலம்பி சுத்தம் செய்து கொண்டிருந்தது. கடல் பரப்புக்கு மேல் பீட்ரூட் நிற சூரியனின் பத்து சதவிகித மொட்டைத்தலை தெரிய, அதன் வெளிச்ச உபயத்தில் கிழக்கு திசை பூராவும் பரவியிருந்த மேகங்கள் தத்தம் தலைகளில் தங்க கிரீடங்களைத் தரித்துக் கொண்டன.

    ஆஹா… என்றான் விவேக்.

    ரூபலா பட்டுப்புடவை சரசரக்க, மல்லிகைப்பூ மணக்க மணக்க உள்ளேயிருந்து வந்தாள்.

    என்ன இயற்கை காட்சியா...?

    ஆமா... ரூபி...! வந்து பாரு... பத்து செகண்ட்டுக்கு ஒரு தடவை சீன் மாறிட்டே இருக்கு.

    ரூபலா இடுப்பில் தன் இரு கைகளையும் வைத்துக் கொண்டு முறைத்தாள்.

    என்னங்க...! இயற்கை காட்சிகளை ரசிக்கிற நேரமா இது...? செங்கல்பட்டுல கல்யாணம். முகூர்த்தம் ஆறரை மணிக்கு. மணி இப்ப அஞ்சோமுக்கால். நாம் செங்கல்பட்டு போய்ச் சேர்றதுக்குள்ளே உங்க ஃப்ரண்ட்டோட தங்கச்சி கல்யாணம் முடிஞ்சுடும்...

    இதோ கிளம்பிட்டேன்! நீ புடவை கட்டிக்கிறதுக்காக உள்ளே போனா, எப்படியும் ரூமிலிருந்து வெளியே வர ஒரு மணி நேரமாயிடும்ன்னு நினைச்சேன். பரவாயில்ல இன்னிக்கு ஐம்பது நிமிஷத்துக்குள்ளேயே வந்துட்டே...

    நான் என்னங்க பண்ணட்டும். எந்தப் பட்டுப்புடவையைக் கட்டிக்கிறதுன்னு யோசிச்சு முடிவு எடுக்கவே அரை மணி நேரம் ஆயிடுச்சு. அப்புறம் செலக்ட் பண்ணின புடவைக்கு மேட்சா ப்ளவுஸ் தேடி எடுக்கிறதுக்குள்ளே போதும் போதும்ன்னு ஆயிடுச்சு.

    சரி... கிளம்பலாமா?

    நான் ரெடி... விவேக் மாருதி ஜென்னின் சாவியை மேஜைமேலிருந்து எடுத்துக் கொண்டு போர்ட்டிகோவை நோக்கி நகர முயல...

    அதுவரைக்கும் மௌனவிரதம் அனுஷ்டித்துக் கொண்டிருந்த டெலிஃபோன் கனைக்க ஆரம்பித்தது. விவேக் டெலிஃபோனை நோக்கி திரும்பி நடக்க, ரூபலா மறித்தாள்.

    வேண்டாங்க, ஃபோனை அட்டெண்ட் பண்ணாதீங்க.

    ஏன்?

    இவ்வளவு காலையில உங்களுக்கு ஃபோன் வந்தா அது கேஸாத்தான் இருக்கும்! அது கேஸாயிருந்துட்டா நாம கல்யாணத்துக்கு போறது. கான்ஸலாயிடும். ஃபோனை அட்டெண்ட் பண்றது ரிஸ்க். நாம் பாட்டுக்கு கிளம்பி போய்க்கிட்டே இருப்போம்.

    நோ... ரூபி! ஒரு க்ரைம் ப்ராஞ் ஆபீஸரோட ஒய்ஃப், இப்படி பேசக்கூடாது. எனக்கு காரணம் இல்லாமல் டிபார்ட்மெண்ட்லிருந்து ஃபோன் வராது. நீயே போய் ஃபோன் எடுத்து யார்னு கேளு... என்னோட டிபார்ட்மெண்ட் பீப்பிளாயிருந்தா ரிஸீவரை என்கிட்ட கொடு...

    ரூபலா போய் ரிஸீவரை எடுத்தாள்.

    ஹலோ...

    யாரு... ரூபலா சிஸ்டரா?

    ஆமா...

    சிஸ்டர் செங்கல்பட்டிலிருந்து நான் ஜெகந்நாதன் பேசறேன்.

    ஓ... நீங்களா! குட்மார்னிங்.

    குட்மார்னிங்! என்ன சிஸ்டர். விவேக்கும், நீங்களும் இன்னும் மெட்ராஸிலிருந்து அசையவேயில்லை போலிருக்கு.

    இதோ கிளம்பிட்டோம்.

    நல்லா கிளம்பினீங்க போங்க. இந்நேரம் நீங்க ரெண்டு பேரும் செங்கல்பட்டுல இருந்திருக்கணும்...

    ஸாரி! அவர் ஒரு கேஸ் விஷயமா போய்ட்டு ரொம்பவும் லேட்நைட்ல வந்தார்.

    சரி... சிஸ்டர்... சீக்கிரமா புறப்பட்டு வாங்க. மேற்கொண்டும் லேட் பண்ணிடாதீங்க.

    இதோ கிளம்பியாச்சு. ரூபலா ரிஸீவரை வைத்துவிட்டு விவேக்கை

    ஏறிட்டாள்.

    செங்கல்பட்டிலிருந்து உங்க ஃபிரண்ட் ஜெகந்நாதன்.

    அதுக்குள்ள பயந்துட்டே. சிரித்த விவேக் கார் சாவியோடு போர்ட்டிகோவுக்கு வந்தான். ரூபலா வீட்டைப் பூட்டிக் கொண்டு வர இருவரும் புறப்பட்டார்கள்.

    வைகறை இருட்டு இன்னமும் பாக்கியிருக்க, கார்ப்பரேஷனின் சோடியம் வேப்பர் விளக்குகள் கண்களை மூடாமல் கடமையைச் செய்து கொண்டிருந்தன. பிளாட்ஃபாரத்தில் கான்வாஸ் பூட்ஸ்களோடு தொப்பைகள் நடந்தன, மில்க் பூத்களில் ரிடையர்டு பேர்வழிகள் கையில் பால் கூப்பனோடு தெரிந்தார்கள், சென்னை விழித்துக் கொண்ட கால்களோடு உற்சாகமாய் இருக்க, கார் காற்றுக்கு நேர்வகிடு எடுத்தபடி பறந்து கொண்டிருந்தது.

    ரூபி கிஃப்ட் பாக்கெட்டை மறக்காம எடுத்து வெச்சுக்கிட்டியா?

    மறப்பேனா? நீங்க குளிச்சிட்டு இருக்கும்போதே அது கார்க்கு வந்தாச்சு...

    கார் கிண்டியையும், குரோம்பேட்டையையும் தாண்டியது.

    என்னங்க! அங்கிள் கோகுல்நாத் கல்யாணத்துக்கு வருவார் இல்லே...?

    சரியா போச்சு! அவர் நேத்திலிருந்து கல்யாண வீட்லதான் இருக்கார், மாப்பிள்ளை வீட்டுக்காரங்களுக்கும், பொண்ணு வீட்டுக்காரங்களுக்கும் அவர் செம தோஸ்த். கல்யாண வீட்டைவிட்டே இன்னிக்கு சாயந்தரம்தான் வெளியே வருவார்...

    ரூபலா ஏதோ பேச முயன்ற விநாடி...

    ஹைவேஸ் ரோட்டில்... வேகமாய் பீறிட்டுக் கொண்டிருந்த காரின் வேகம் சட்டென்று குறைந்து ஊர்ந்தது.

    என்னங்க... என்னாச்சு?

    எதிர்ல பாரு...

    ரூபலா பார்த்தாள். மங்கலான அந்தக் காலை நேர வெளிச்சத்தில் ரோட்டின் இடது பக்கமாய் ஒரு போலீஸ் ஜீப்பும், தலையில் சுழலும் சிவப்பு விளக்கோடு ஒரு ஆம்புலன்ஸ் வேனும் தெரிந்தன. கூடவே காக்கி யூனிஃபார்ம்களின் நடமாட்டம்.

    ரூபலா விவேக்கின் தோளைத் தொட்டாள்.

    என்னங்க...

    ம்...

    அங்கே ஏதோ பிரச்சினை போலிருக்கு...

    பிரச்சினை இல்லேன்னா போலீஸ் வராதே!

    காரை நிறுத்தாதீங்க. போய்ட்டே இருக்கலாம்.

    ஒரு அஞ்சு நிமிஷம் இறங்கி என்னான்னு பார்த்துட்டுப் போயிடலாம்.

    வேண்டாங்க, நாம் ஒரு கல்யாணத்துக்கு போய்க்கிட்டிருக்கோம்.

    நீ கார்லயே இரு. பிரச்சினை என்னான்னு போலீஸ்கிட்ட என்கொயரி பண்ணிட்டு உடனே வந்துடறேன்.

    ரூபலா தன் இரண்டு கைகளையும் தலைமேல் வைத்துக் கொண்டாள். இன்னிக்கு நாம் கல்யாணத்துக்குப் போன மாதிரிதான்...

    விவேக் இறங்கி நடந்தான். ஆள் நடமாட்டம் அறவே அற்ற நெடுஞ்சாலை அது. ரோட்டின் இரண்டு பக்கங்களிலும் பார்த்தீனிய செடிகள் மண்டிய நாற்பதடிக்கும் ஆழமான பள்ளம் தெரிந்தது.

    விவேக் காரினின்றும் இறங்கி ஸ்பாட்டை நோக்கி வருவதை பார்வையில் வாங்கிய இன்ஸ்பெக்டர் ஒருவர், ஓட்ட நடையோடு வந்து எதிர்கொண்டு சல்யூட் ஒன்றை விநியோகித்துவிட்டு தளர்ந்தார்.

    விவேக் கேட்டான்.

    நீங்க இன்ஸ்பெக்டர் நந்தகுமார், ஆம் ஐ கரெக்ட்?

    எஸ். ஸார்! மாடம்பாக்கம் போலீஸ் ஸ்டேஷன்

    இங்கே என்ன பிரச்சினை?

    ஒரு ஆக்ஸிடெண்ட் ஸார். மாருதி கார் ஒண்ணு அறுபதடி பள்ளத்துல விழுந்திருக்கு.

    டெத் ரோல்...?

    காருக்குள்ளே யார் யார் இருக்காங்கன்னே தெரியலை ஸார். தகவல் கிடைச்சு நாங்களும் இப்பத்தான் வந்தோம்.

    விவேக் கார் விழுந்த பள்ளத்தை நோக்கி நடந்து கொண்டே கேட்டான்.

    ஆக்ஸிடெண்ட் பத்தி உங்களுக்குத் தகவல் கொடுத்தது யாரு?

    ஒரு வாட்ச்மேன் பெரியவர். மாடம்பாக்கம் உரக்கம்பெனியில் நைட் டியூட்டி பார்த்துட்டு சைக்கிள்ல வீட்டுக்கு போயிட்டிருந்த அவர் மேல கார் மோதற மாதிரி வந்திருக்கு. பெரியவர் மேல மோதாம இருக்கிறதுக்காக காரை டர்ன் பண்ணப் போக அது பள்ளத்துக்குள்ளே பாய்ஞ்சிடுச்சு. இது ஒரு ஆக்ஸிடெண்ட் ஸ்பாட்னு போர்டு வெச்சிருக்கோம். இருந்தாலும் வருஷத்துல ரெண்டு மூணு ஆக்ஸிடெண்ட்ஸ் நடந்துடுது ஸார்.

    பெரியவருக்கு ஒண்ணும் அடிபடலையே?

    இல்ல ஸார்... அதிர்ச்சியில் கீழே விழுந்துட்டார். கை, கால்ல லேசா சிராய்ப்பு. அவ்வளவுதான்...

    எத்தனை மணிக்கு ஆக்ஸிடெண்ட் நடந்தது?

    விடிகாலை நாலரை மணிக்கு ஸார்.

    விவேக் ஆக்ஸிடெண்ட் ஸ்பாட்டை நெருங்கி பள்ளத்துக்குள் எட்டிப் பார்த்தான். பள்ளத்துக்குள் இருட்டு பரவியிருந்தது.

    சாலையோர தடுப்புச் சுவர் பெயர்க்கப்பட்டிருக்க... கார், செடிகொடிகளுக்கு மத்தியில் ஈரல்கொத்தாய் பாய்ந்து ஒரு பக்கமாய் புரண்டிருந்தது. பள்ளத்துக்குள் இருள் தேங்கியிருந்ததால் எதுவும் சரிவர புலப்படவில்லை.

    டார்ச் இருக்கா? விவேக் கையை நீட்ட அடுத்த நிமிஷம் டார்ச் கைக்கு வந்தது. டார்ச்சினின்றும் ஜனித்த வெளிச்சப் பந்து பள்ளத்துக்குள் உட்கார்ந்திருந்த இருட்டைக் கழுவிக் கூட்டியது. விவேக் இருட்டைக் கொஞ்சம் கொஞ்சமாய் ஒற்றி எடுத்துக் காரின் உடைந்த கண்ணாடி ஜன்னலுக்குள் வெளிச்சத்தை செலுத்த...

    ரத்தத்தோடு ஒரு பெண்ணின் கை தெரிந்தது. நெயில் பாலிஷ் பூச்சோடு நீள நீளமான விரல்களோடு துவண்டு போன கை. திட்டுத் திட்டாய் ரத்தம் உறைந்த அந்தக் கையை அடியொற்றி டார்ச்சின் வெளிச்ச வட்டம் மெல்ல ஊர்ந்து மேலேறியது. ஜரிகை பார்டரோடு பட்டுப்புடவை தலைப்பும், அதைத் தொடர்ந்து தோள்பட்டை... காது. கழுத்து... தாடை... உதடு... மூக்கு... கண்கள்... என்று வெளிச்ச வட்டம் முழுதாய் நகர்ந்து முகத்தைக் காட்ட விவேக் அதிர்ச்சியோடு இன்ஸ்பெக்டரிடம் திரும்பினான்.

    மிஸ்டர் நந்தகுமார்...

    ஸார்...

    காருக்குள் சிக்கியிருக்கிற பெண்ணைப் பார்த்தா ரொம்பவும் பெரிய இடத்துப் பொண்ணு மாதிரி தெரியுது. உடம்பில் உயிர் இருக்கலாம். கார்ல வேறு யாரும் இருக்கிற மாதிரி தெரியலை. உடனடியா அந்தப் பெண்ணை ஹாஸ்பிடலைஸ் பண்ண முடிஞ்சா காப்பாத்திடலாம்... ஃபயர் சர்வீஸ் பீப்பிளுக்கு தகவல் கொடுத்து அவங்க வந்து அந்தப் பெண்ணைக் காப்பாத்தறதுக்குள்ளே உயிரோடு இருக்கிறது சந்தேகம். நாமே கயிற்றைக் கட்டிவிட்டு பள்ளத்துக்குள்ளே இறங்கிட வேண்டியதுதான். கயிறு இருக்கா?

    கொண்டு வந்திருக்கோம் ஸார்.

    அடுத்த பத்தாவது நிமிஷம் விவேக்கும், இன்ஸ்பெக்டர் நந்தகுமாரும் இரண்டு கான்ஸ்டபிள்களோடு இடுப்பில் கயிற்றை கட்டிக்கொண்டு பள்ளத்தில் மெதுவாய் இறங்கி காரைச் சூழ்ந்தார்கள்.

    டார்ச் வெளிச்சத்தில் காரைச் சுற்றிலும் பரவியிருந்த செடிகொடிகளை பிய்த்து எறிந்துவிட்டு உள்ளே பார்த்தார்கள்.

    ட்ரைவிங் சீட்டில் அந்தப் பெண் ரத்தச் சகதியோடு சிக்கியிருந்தாள்.

    காருக்குள் வேறு யாரும் இல்லை.

    உயிர் இருக்கா பாருங்க நந்தகுமார்.

    நந்தகுமார் நாசியருகே கையை வைத்து பார்த்துவிட்டு லேசா மூச்சு இருக்கிற மாதிரி தெரியுது ஸார் என்றார்.

    கான்ஸ்டபிள்கள் அந்தப் பெண்ணின் உடம்பை இடிபாடுகளிலிருந்து மெல்ல வெளியே எடுத்தார்கள்.

    விவேக், காரின் பின் பக்கக் கதவுக்குள் கையை விட்டு அந்தச் சிறிய ப்ரீஃப்கேஸை எடுத்தான். லாக்கர்களை விடுவித்து திறந்தான்.

    நெற்றியில் அதிர்ச்சிக்கோடுகள் உற்பத்தியாயிற்று.

    ப்ரீஃப்கேஸில் ரத்தக்கறையோடு இரண்டு வெள்ளை நிற க்ளவுஸ்களும் பக்கத்திலேயே ஒரு பிஸ்டலும் தெரிந்தன.

    விவேக் அந்த பிஸ்டலை எடுத்து அதன் வயிற்றைத் திறந்து புல்லட் சேம்பரைப் பார்த்தான்.

    ஆறு தோட்டாக்கள் இருக்க வேண்டிய புல்லட் சேம்பரில் நான்கு மட்டும் குடியிருந்தது.

    இரண்டு தோட்டாக்கள் உபயோகப்படுத்தப் பட்டிருக்க வேண்டும்.

    விவேக் துப்பாக்கியின் வாயை முகர்ந்து பார்த்தான்.

    கந்தக வாசனை அடித்தது.

    2

    டெல்லி.

    சென்ற மாதத்தில் ஒருநாள். நேரம் மாலை ஆறுமணி. ஹோட்டல்

    Enjoying the preview?
    Page 1 of 1