Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Oru Thoomaiyaana Kuttram
Oru Thoomaiyaana Kuttram
Oru Thoomaiyaana Kuttram
Ebook84 pages45 minutes

Oru Thoomaiyaana Kuttram

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajeshkumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Oru Thoomaiyaana Kuttram

Read more from Rajeshkumar

Related to Oru Thoomaiyaana Kuttram

Related ebooks

Related categories

Reviews for Oru Thoomaiyaana Kuttram

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Oru Thoomaiyaana Kuttram - Rajeshkumar

    19

    1

    கோர்ட்டில் மோசமான அமைதி நிலவியிருக்க - அந்த அமைதியை அறுத்துக் கொண்டு மொசைக் தலை நீதிபதி - ‘பல் செட்’டின் உபயத்தால் தீர்ப்பைப் படித்துக் கொண்டிருந்தார்.

    எனவே... ப்ராஸிக்யூஷன் தரப்பில் சொல்லியிருந்த குற்றச்சாட்டுகளை தீர விசாரித்துப் பார்த்ததில் குற்றம் சாட்டப்பட்டவர் இரண்டு கொடூரமான கொலைகளைப் புரிந்தவர் என்கிற உண்மை தெரிய வருகிறது. குற்றங்கள் செய்யப்பட்ட முறைகளைப் பார்க்கும் போது கொலையாளிக்கு - மிகக் கடுமையான முறையில் தண்டனை தர வேண்டிய அவசியமும் ஏற்படுகிறது… ஆகவே 320 வது செக்ஷன்படி மேற்படி குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கிறேன்...

    தீர்ப்பின் கடைசி வாசகம் காற்றில் கலந்த அதே விநாடி குற்றவாளிக் கூண்டில் நின்றிருந்த அந்த இளைஞன் –

    நோ... ஓ... ஓ... ஓ... ஓ…

    பெரிதாக வீறிட்டு தீர்ப்பின் அதிர்ச்சியைத் தாங்கிக் கொள்ள முடியாமல் கண் சோர்ந்து தளர்ந்து விழுந்தான்.

    போலீசார் ஓடி வந்து அவனைத் தூக்கினார்கள். ஜட்ஜ் சலனமேயில்லாமல் அவனை ஒரு தரம் பார்த்துவிட்டு தன்னுடைய அறையில் காத்திருக்கும் தயிர் வடை, காப்பிக்காக எழுந்தார்.

    பார்வையாளர்களுக்கு மத்தியில் மட்டும் லேசான சலசலப்பு.

    இவனையெல்லாம் தூக்குல போடக் கூடாது. நடுரோட்ல நிக்க வெச்சு... ‘மெஷின் கன்’ல இருக்கிற தோட்டா தீர்கிற வரைக்கும் சுட்டுத் தள்ளணும்...

    இவனுக்கு எந்த ஊரு?

    கோத்தகிரி...

    யாரைக் கொலை பண்ணினான்?

    அந்த அக்கிரமத்தை ஏன் கேக்கீறங்க? வாங்க... கான்டீனுக்குப் போய் ஒரு காப்பி சாப்பிட்டுக்கிட்டே சொல்றேன்...

    2

    கோத்தகிரி.

    பைக்கில் தடதடத்தபடி அந்த பங்களாவின் காம்பௌண்ட் கேட்டுக்குள் நுழைந்தான் சூரி. கனமான கம்பளிக் கோட்டையும் மீறிக் கொண்டு அவனுடைய தேகாப்பியாச உடம்பு திமிறியது. கழுத்தில் புலி நகம் கோர்த்த டாலர் ஆடியது. முப்பது வயது. முன்கோப முகம் சிலிர்த்து நிற்கிற மாதிரியான கிராப். சிவப்பான சின்னக் கண்கள்.

    பைக்கை ஸ்டாண்ட் இட்டு நிறுத்திவிட்டு - போர்டிகோ படியேறிய சூரியை அந்தக் குரல் தடுத்து நிறுத்தியது.

    சித்தப்பா...

    சூரி திரும்பினான்,

    ஆறு வயது தீபக் பைஜாமா மாதிரியான ட்ரஸ்ஸில் - லானைத் தாண்டி ஓடி வந்து கொண்டிருந்தான். அவனைப் பார்த்ததுமே சூரியின் முகம் கடுகடுப்புக்குப் போனது.

    என்னடா?

    தீபக் பக்கத்தில் வந்து நின்று மூச்சு வாங்கிக் கொண்டு சொன்னான்.

    நான் பாஸ் சித்தப்பா...

    பாஸா...

    ஆமா... ஃபர்ஸ்ட் ஸ்டாண்டர்ட்லேர்ந்து செகண்ட் ஸ்டாண்டர்ட் போயிட்டேன். இந்தாங்க ஸ்வீட்...

    பைஜாமாவின் பாக்கெட்டுக்குள் வலது கையை நுழைத்து கை நிறைய சாக்லேட்டுகளை அள்ளி சூரி முன்னால் நீட்டினான்.

    எடுத்துக்கோங்க சித்தப்பா...

    காலேஜுக்குப் போய்... பெரிய பி.ஏ. படிப்பு படிச்சு கிழிச்சிட்டான்… சரிதான் போடா... சாக்லேட்களை தட்டிவிட்டு போர்டிகோ படியேறினான் சூரி. எதிர்ப்பட்ட வேலையாளிடம் கேட்டான்.

    அப்பா... எந்த ரூம்ல இருக்கார்?

    அவன் நடுங்கிக் கொண்டே ஒதுங்கினான்.

    மா... மாடி ரூம்ல உட்கார்ந்து படிச்சிட்டிருக்கார்...

    கிழவனுக்கு அது ஒண்ணுதான் குறைச்சல்... முனகிக் கொண்டே ஹாலில் நடந்து மாடிப் படிகளில் தாவினான்.

    பிளாஸ்க்கோடு அந்தப் பெண் எதிர்ப்பட்டாள். பளிச்சென்ற முகம். பொட்டில்லாத நெற்றி. இருபத்தைந்து வயதான உடம்புக்கு வெள்ளைச் சேலையைக் கொடுத்திருந்தாள்.

    வாங்க தம்பி...

    நீங்க ஒண்ணும் என்னை வரவேற்க வேண்டாம்... நான் அப்பாவைப் பார்க்கத்தான் வந்தேன்... கடுகடுப்பான குரலில் சொல்லிவிட்டு விடுவிடுவென்று படியேற முயன்றவனை கை நீட்டி மறித்தாள் அவள்.

    நில்லுங்க தம்பி!

    அவன் நின்றான்.

    என்ன? படியைப் பார்த்துக் கொண்டு கேட்டான்.

    "நான் உங்க அண்ணனுக்கு வாழ்க்கைப்பட்டு ஏழு வருஷம் இந்த வீட்ல வாழ்ந்தவ. நான் உங்களுக்கு அண்ணி. உயில் சம்பந்தமா எம்மேலேயும்... மாமா மேலேயும் உங்களுக்கு கோபம் இருக்கிறது நியாயம்... ஆனா அந்த பச்சைமண் தீபக் மேலே உங்களுக்கு என்ன கோபம்? அவன் எவ்வளவு ஆசையா... சித்தப்பா.... நான் பாஸ்ன்னு

    Enjoying the preview?
    Page 1 of 1