Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Saathal Saamraajjiyam
Saathal Saamraajjiyam
Saathal Saamraajjiyam
Ebook102 pages1 hour

Saathal Saamraajjiyam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajeshkumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Saathal Saamraajjiyam

Read more from Rajeshkumar

Related to Saathal Saamraajjiyam

Related ebooks

Related categories

Reviews for Saathal Saamraajjiyam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Saathal Saamraajjiyam - Rajeshkumar

    18

    1

    "ஹேப்பி நியூ இயர்"

    சொல்லிக் கொண்டே வீட்டுக்குள் நுழைந்த கோகுல்நாத் விவேக்கும் - ரூபலாவும் பக்கம் பக்கமாய் உட்கார்ந்து ஏதோ ஒரு புத்தகத்தை புரட்டிக் கொண்டிருப்பதைப் பார்த்ததும் - எதிரே ஒரு நாற்காலியை இழுத்து போட்டுக் கொண்டு தானும் உட்கார்ந்தார்.

    ‘‘வாங்க... அங்கிள்... விஷ் யூ... த ஸேம்..." - ரூபலா சொல்ல, விவேக் எழுந்து நின்று - புத்தாண்டு வாழ்த்துக்கள் சொல்லி - கோகுல்நாத்தின் கையைப் பற்றிக் குலுக்கினான்.

    ‘‘என்ன விவேக் ஏதோ புஸ்தகத்தை படிச்சிட்ருந்த மாதிரி இருந்தது? என்ன புஸ்தகம்ன்னு நான் தெரிஞ்சுக்கலாமா?’’

    "தாராளமா...’’ - இடது கையிலிருந்த புத்தகத்தின் அட்டையைக் காட்டினான் விவேக். கோகுல்நாத் அந்த இளஞ்சிவப்பு - அட்டையின் மேல் எழுதப்பட்டிருந்த எழுத்துக்களை சிரமப்பட்டு படித்தார்.

    ‘சைவ சித்தாந்த சுத்த திருக்கணித பஞ்சாங்கம்.

    கோகுல்நாத்தின் உதடுகளில் ஒரு கேலி புன்னகை தொற்றிக் கொண்டது.

    "என்ன விவேக்... பஞ்சாங்கத்தை படிச்சிட்டிருக்கீங்க?’’

    ‘‘பஞ்சாங்கம்ன்னு கேலி பேசாதீங்க கோகுல்நாத். என்னைப் பொறுத்தவரைக்கும் இது ஒரு காலக்கண்ணாடி. போன வருஷ பஞ்சாங்கத்தை ஏதேச்சையாக புரட்டிப் பார்த்துட்டிருந்தேன். இந்த வருஷத்தில் - ராஜாங்கம் சம்பந்தப்பட்ட காரியங்களில் கொலைகள் நிகழும். லஞ்சம் களவு அதிகமாகும். சட்டம் காவல் துறையினர்க்கு அலைச்சலை உண்டாக்கும். நயவஞ்சகம் பெருகும் - அப்படீன்னு போட்டிருந்தது. போன வருஷம் பூராவும் நாம் அலைச்சல்பட்ட கதைதான் உங்களுக்குத் தெரியுமே! அதான் இந்த வருஷத்திய பஞ்சாங்கத்தை புரட்டி எப்படியிருக்குன்னு பார்த்துட்டிருக்கேன்..."

    ‘‘எப்படியிருக்கு?’’

    ‘‘படிக்கட்டுமா?’’

    ‘‘ம்...’’

    ‘‘இவ்வருஷம் சூரியனுக்கு மூன்று ஆதிபத்தியங்களும், குருவுக்கு இரண்டு ஆதிபத்தியங்களும், அசுப கிரஹமாகிய சனிக்கு இரண்டு ஆதிபத்தியங்களும், அகங்காரனுக்கு ஒரு ஆதிபத்தியமும் ஏற்பட்டு இருப்பதால் - லோக ஜனங்களுக்கு நன்மை உண்டாகும். ஸதாசாரம் விருத்தியாகும். நல்ல மழை பெய்து நீர் வளம் பெருகும். ஸ்தீரி ஐன முன்னேற்றமாகும். தான்ய உற்பத்தி பெருகும். வாத பித்த ரோகம் குறையும். ஆனால் ஆறுக்கும் ஒன்பதுக்கும் அதிபதியான குரு புதனுடன் பரிவர்த்தனை பெற்று - சனியுடன் கூடி மூன்றில் நிற்கிறார். அதனால் அரசுக்கு சோதனைகள் பல நேரிடும். தேச உபத்ரவம், அக்னி பயம், ப்ரஜா நாசம், பிறர் கொலை, தற்கொலை மிகும். மேலும் சூரியன் அங்ககாரகனோடு சேர்ந்து...’’

    கோகுல்நாத்துக்கு கொட்டாவி பீறிக் கொண்டு வந்தது.

    ரூபலா சிரித்தாள்.

    ‘‘அங்கிள்! ஒரு தலையணை கொண்டு வந்து தரட்டுமா?"

    விவேக் நிமிர்ந்தான்.

    ‘‘என்ன பஞ்சாங்கம்ன்னா அவ்வளவு கேலியா இருக்கா? எவ்வளவு விஞ்ஞான பூர்வமா எழுதி வெச்சிருக்காங்க தெரியுமா?’’

    ‘‘அப்போ பஞ்சாங்கப்படி... இந்த வருஷமும்... பிறர் கொலை, தற்கொலை அதிகம் இருக்கும்ன்னு சொல்ல வர்றீங்க?’’

    ஆமாம்...

    ‘‘சரி... அதுக்காக என்ன பண்ணப் போறதா உத்தேசம்?’’

    ‘‘இந்த வருஷம் பூராவும் ஒரு லாங் லீவ் போட்டுட்டு... வீட்ல ஹாய்யா படுத்துக்கிட்டு... ரத்னபாலா, அம்புலிமாமா படிச்சுகிட்டு... டி.வி.யில் ஒலியும் ஒளியும் பார்த்துக்கிட்டு... ஒவ்வொரு சண்டேயும் பிக்னிக் ஸ்பாட் போய் கிட்டு..."

    டெலிபோன் அலறியது. மூன்று பேரும் திரும்பினார்கள்.

    விவேக் டெலிபோனை பயமாய் பார்த்தான். சிவன், இயேசு, அல்லாவை நினைத்துக் கொண்டான்.

    "கடவுளே! ராங் நெம்பரா இருக்கணும்.’’

    ரூபலா டெலிபோனை நோக்கிப் போய் ரிஸீவரை எடுத்தாள்.

    "ஹலோ...’’

    .....

    "ஆமா... இருக்கார்...’’

    .....

    ‘‘ஒரு நிமிஷம்.’’ ரிஸீவரின் வாயைப் பொத்தி - விவேக்கிடம் நீட்டினாள் ரூபலா.

    "போன் உங்களுக்குத்தான் என் பிராண நாதரே!’’

    போன்ல யாரு?

    "டி.ஐ.ஜி. தீனதயாளன்...’’

    "போச்சு... ஜனவரி ஒண்ணாம் தேதி அன்னிக்கே... கேஸ் வந்தாச்சு...’’ வலது கையை உதறிக் கொண்டே வந்து - ரிஸீவரை வாங்கினான் விவேக்.

    ‘‘ஹலோ..."

    ‘‘மிஸ்டர் விவேக்!’’

    ‘‘நான்தான் ஸார்...’’

    ‘விஷ் யூ... ஏ... ஹேப்பி... நியூ இயர்...

    ‘‘தாங்க்யூ... ஸேம் டூ யூ... ஸார்...

    ‘‘உங்களுக்கு புது வருஷ வாழ்த்துச் சொல்லத்தான் போன் பண்ணினேன். சாயந்தரம் க்ரைம் பிராஞ்ச் வருவீங்களா?’’

    ‘‘வரணுமா... ஸார்?"

    ‘‘வர்ற ஏப்ரல் மாசம் டெல்லியில் நடக்க இருக்கிற கிரிமினாலஜி செமினாரைப் பற்றி கொஞ்சம் டிஸ்கஸ் பண்ணனும். ஒரு ஒன் அவர் ஸ்பேர் பண்ணுங்க போதும்...’’

    "வர்றேன் ஸார்...’’

    ‘‘தாங்க்யூ...’’ - அவர் ரிஸீவரை வைத்து விட,

    சந்தோஷ சிரிப்போடு கோகுல்நாத்தையும் ரூபலாவையும் பார்த்தான்.

    ‘‘வாழ்த்து சொல்லத்தான் டி.ஐ.ஜி. போன் பண்ணியிருக்கார்.’’

    கோகுல்நாத் புன்னகைத்தார்.

    விவேக்! இன் னிக்கு ஜனவரி ஒண்ணாம் தேதி. கத்திக்கும் துப்பாக்கிக்கும் யாரும் இன்னிக்கு வேலை கொடுக்க மாட்டாங்க. வாங்க... முன் பக்கமா இருக்கிற ரூம்ல போய் - ஹாய்யா செஸ் ஆடலாம். ரூபலா! எனக்கு சூடா ஏலக்காய் டீ வேணும்

    ‘‘தர்றேன் அங்கிள்...’’

    ரூபலா சமையலறையை நோக்கி நகர்ந்து போக -

    விவேக்கும் கோகுல்நாத்தும் முன்னறைக்கு வந்தார்கள்.

    செஸ் போர்டை டீபாயின் மேல் விரித்து - கறுப்பிலும் - வெள்ளையிலும் ராஜா ராணிகளை வரிசையாய் - நால்வகை படைகளோடு நிறுத்தி - முதல் இரண்டு பாண்ட்ஸ்களை நகர்த்தி - விளையாட்டை

    Enjoying the preview?
    Page 1 of 1