Oru Iniya Uthayam
5/5
()
About this ebook
Read more from Parimala Rajendran
Engiruntho Vanthaal Rating: 5 out of 5 stars5/5Magarantha Malargal Rating: 5 out of 5 stars5/5Irukodiyil Oru Malar Rating: 5 out of 5 stars5/5Ithayam Nanaikkum Mazhai Rating: 5 out of 5 stars5/5Thenralaga Nee Varuvaayaa Rating: 5 out of 5 stars5/5Osaiyindri Malarum Rating: 4 out of 5 stars4/5Kannil Theriyum Vaanam Rating: 5 out of 5 stars5/5Mandram Vantha Thendral Rating: 4 out of 5 stars4/5Uravu Pookkal Rating: 5 out of 5 stars5/5Uyirin Uyire Rating: 4 out of 5 stars4/5Unnil Vaazhkiren Rating: 5 out of 5 stars5/5Idhayaraagam Rating: 5 out of 5 stars5/5Ithu Oru Puthukavithai Rating: 5 out of 5 stars5/5Kaavalai Meeriya Kaatru Rating: 5 out of 5 stars5/5Poojaikettra Poovithu Rating: 5 out of 5 stars5/5Nenjamellam Neeye Rating: 5 out of 5 stars5/5Aayiram Vaasal Idhayam Rating: 4 out of 5 stars4/5Kaalangalil Aval Vasantham Rating: 4 out of 5 stars4/5Ithayathil Nee Rating: 5 out of 5 stars5/5Unnai Naanariven Rating: 5 out of 5 stars5/5Malarntha Vizhigal Rating: 5 out of 5 stars5/5Theivam Thantha Poove Rating: 0 out of 5 stars0 ratingsUnnai Saranadainthen Rating: 5 out of 5 stars5/5Uravukalaal Oru Ulagam Rating: 5 out of 5 stars5/5Un Vizhikal Velicham Tharum Rating: 4 out of 5 stars4/5Kalyaanamaalai Rating: 0 out of 5 stars0 ratingsThirumagal Thedi Vanthaal Rating: 0 out of 5 stars0 ratingsUravugal Thodarkathai Rating: 5 out of 5 stars5/5Vizhiye kathai Ezhuthu Rating: 0 out of 5 stars0 ratingsAanantham Vilaiyaadum Veedu Rating: 5 out of 5 stars5/5
Related to Oru Iniya Uthayam
Related ebooks
எல்லே... இளங்கிளியே! Rating: 0 out of 5 stars0 ratingsElle Ilankiliye Rating: 0 out of 5 stars0 ratingsPoove VenPoove Rating: 0 out of 5 stars0 ratingsEn Iniya Pon Nilaavey! Rating: 5 out of 5 stars5/5Swarangal Rating: 0 out of 5 stars0 ratingsPoojaikettra Poovithu Rating: 5 out of 5 stars5/5Vaalaik Kumariyadi Rating: 0 out of 5 stars0 ratingsவாலைக் குமரியடி! Rating: 0 out of 5 stars0 ratingsNandhini Oru Nandhavanam Rating: 5 out of 5 stars5/5காவலை மீறிய காற்று Rating: 0 out of 5 stars0 ratingsKaavalai Meeriya Kaatru Rating: 5 out of 5 stars5/5Niram Maarum Nenjam Rating: 0 out of 5 stars0 ratingsKalyana Oorvalam Rating: 0 out of 5 stars0 ratingsவசந்தம் வருமா..? Rating: 0 out of 5 stars0 ratingsInba Athirchi Nilaiyam Rating: 0 out of 5 stars0 ratingsஒளி தரும் உதயம்... Rating: 0 out of 5 stars0 ratingsOli Tharum Udhayam Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Thoranangal Katti Rating: 0 out of 5 stars0 ratingsNandha En Nila Rating: 0 out of 5 stars0 ratingsThoondirp Puzhukkal Rating: 5 out of 5 stars5/5Vikrama Thulasi Rating: 0 out of 5 stars0 ratingsMuththazhagi Rating: 0 out of 5 stars0 ratingsமுத்தழகி Rating: 0 out of 5 stars0 ratingsJarigai Pattaampoochigal Rating: 0 out of 5 stars0 ratingsஜரிகை பட்டாம்பூச்சிகள்... Rating: 0 out of 5 stars0 ratingsவானமடி நீ எனக்கு... Rating: 0 out of 5 stars0 ratingsVaanamadi Nee Enakku Rating: 0 out of 5 stars0 ratingsIdhayam Sonna Vilai Rating: 0 out of 5 stars0 ratingsPookkal Thinamum Malaginrana Rating: 0 out of 5 stars0 ratingsViralgalai Meettum Veenai Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Oru Iniya Uthayam
4 ratings0 reviews
Book preview
Oru Iniya Uthayam - Parimala Rajendran
24
1
வாழ்க்கை கடவுள் எழுதி வைத்த தீர்ப்பு. யாருக்கும் எதுவும் எப்போது வேண்டுமானாலும் நடக்கும். செல்லும் பாதைகளும் மாறலாம். பயணங்களும் தடைபடலாம். பங்களாவும், பகட்டுமாக வாழ்ந்த அந்த குடும்பத்தின் நிலைமை இன்று தலைகீழாகி விட்டது.
கண்ணீருக்கு விடை கொடுக்க முடியாமல் அழுது சிவந்த முகத்துடன் படுத்திருந்தாள் சாவித்திரி.
வாழ்க்கையில் இனி என்ன இருக்கிறது. எல்லாம் முடிந்து விட்டது. இரண்டு பெண்களை எப்படி கரையேற்ற போகிறேன். இப்படி ஒரு சூழ்நிலை வரும் என்று கனவில் கூட நினைத்து பார்க்கவில்லையே.
அவர் நிம்மதியாக போய் விட்டார். இனி வரும் காலங்கள் நினைக்க, நினைக்க சாவித்திரிக்கு கண்களை இருட்டிக் கொண்டு வந்தது.
வேகமாக கதவை திறந்து உள்ளே வந்தாள் நிகிலா.
"இன்னும் உன் அழுகை முடியலையா... இப்படி ஒரு கையாலாகாத புருஷன் கிடைச்சதுக்கு நீ அழுது தான் தீரணும்.
கடைசி வரை உள்ள நிலைமையை வெளிப்படுத்தாமல்... நம்மையெல்லாம் தவிக்க விட்டுட்டு போயிட்டாரு.
லட்சம் லட்சமாக பணத்தை போட்டு பிஸினஸ் பண்ணினாலும் அதை கட்டிகாக்க தெரிஞ்சுருக்கணும்.
கண்டவனை நம்பி பணத்தை கொடுத்து ஏமாந்து... இப்போது திவாலாகி... கடன் தலைக்கு மேல் போனதும் நிம்மதியா தூக்கு மாட்டி செத்துட்டாரு...
இப்ப அவதிபடறது நாம்தானே...
சை... முதுகெலும்பில்லாத மனுஷன்"
எரிச்சலும், கோபமுமாக நிகிலா பேச,
சாவித்திரியின் கண்களில் கண்ணீர் வெள்ளமாக பெருக்கெடுக்கிறது.
அக்கா... என்ன இது... எந்த சமயத்தில் என்ன பேசணும்னு விவஸ்தை இல்லையா...?
இவ்வளவு நாள் அப்பா நம்மை சந்தோஷமாக வச்சுக்கலையா...? ராஜ வாழ்க்கை வாழலையா...?
பாவம்... நிலைமையை சமாளிக்க முடியாமல் வாழ்க்கையையே முடிச்சுக்கிட்டாரு. அப்பாவை இழந்த வருத்தம் துளியும் இல்லாமல் உன்னால் எப்படி இப்படி பேச முடியுது.
ப்ளீஸ்... அம்மாவே என்ன செய்யறதுன்னு தெரியாம, மனசாலே ரொம்பவும் நொந்து போயிருக்காங்க. அவங்களை மேலும் புண்படுத்தாதே."
"வாம்மா... அமைதி புறா... நடுத்தெருவில் நிறுத்திட்டு போனவருக்கு வக்காலத்து வாங்கி பேச வந்துட்டியா...
இன்னும் பத்து நாள் தான் இருக்கு... இந்த வீட்டை காலி பண்ணணும். இல்லைன்னா... கடன்காரன் கழுத்தை பிடிச்சு தள்ளுவான்.
ஒரு பைசா பாக்கி இல்லாமல், அவர் பட்ட கடனுக்கு... வீடு, பிஸினஸ் எல்லாம் முழுகி போச்சு...
அடுத்த வேளை சோத்துக்கு என்ன செய்ய போறோம்ங்கிற நிலைமை. கல்யாண வயசில் இரண்டு பெண்கள்...
எதை பத்தியும் யோசிக்காம... பிரச்சனைகளை சந்திக்க பயந்து போய் சேர்ந்தவருக்கு என்ன மரியாதை வேண்டியிருக்கு...
என்னசெய்ய போறோம்னு நினைச்சாலே, தலை சுத்துது... சை..."
கதவை படாரென்ற சப்தத்துடன் மூடி விட்டு நிகிலா வெளியேற, நித்யா... அம்மாவின் அருகில் உட்காருகிறாள்.
அம்மா... அம்மா... ப்ளீஸ்மா... அழாதே... அழுதழுது உடம்பை கெடுத்துக்காதே. யோசிப்போம். ஏதாவது வழி பிறக்கும்
"எப்படி நித்யா... எப்படி முடியும். இதோ பேசிட்டு போறாளே... அதை தாங்க முடியலைன்னாலும்... அது தானே உண்மை.
இரண்டு பெண்களை வச்சுக்கிட்டு நான் என்ன செய்வேன்னு... கொஞ்சமாவது யோசிச்சாரா...
இனி எப்படி வாழ போறோம் நித்யா... எங்கே போவோம். என்ன செய்ய போறோம்... எதுவுமே புரியலை"
கண்ணீருடன் மகளை பார்க்கிறாள்.
கிராமத்தில் ரங்கசாமி மாமா கிட்டே பேசினேன்
நிமிர்கிறாள்.
"ஆமாம்மா... இப்போதைக்கு கொஞ்ச நாளைக்கு நம்ப கிராமத்தில் போய் இருப்போம். பயப்படாதே... இரண்டு பேரும் படிச்சிருக்கோம். சொல்ல போனா... அக்காவுக்கு வேலை கிடைச்சுருக்கு. அவ விருப்பப்பட்டா வேலைக்கு போகட்டும்...
எல்லாம் போக... கையில் இரண்டு லட்சமாவது இருக்கும். அதை வச்சு...
கோடியில் புரண்ட நீங்க... இப்ப... தெருக்கோடிக்கு வந்துட்டிங்க... எப்படிம்மா... சமாளிக்க போறோம்.
இதையே சொல்லி புலம்பாம... கொஞ்ச நேரம் தூங்குமா... எல்லாத்தையும் நான் பார்த்துக்கிறேன்
வெளியே எங்கோ போய்விட்டு உள்ளே வரும் நிகிலாவை பார்க்கிறாள்.
அவள் பார்வையில் சோர்வு தெரிகிறது.
வேண்டாம். எதையும் கேட்க வேண்டாம். அவளாகவே சொல்லட்டும்.
அம்மாவும், பொண்ணுமாக என்ன முடிவு பண்ணீனீங்க
என்னக்கா இப்படி பேசற. மூத்தவள் நீ... நீ என்ன முடிவு எடுத்திருக்கே.
ம்... நாமும் தற்கொலை பண்ணிக்கிட்டு சாகலாம்னு... எரிச்சலை கிளப்பாதே. நாலு பேர் கிட்டே கையேந்தாம கெளரவமாக வாழணும்... எல்லா சொத்துக்களையும் இழந்து... நம்மை தலைகுனிய வச்சுட்டு போயிட்டாரு. இனி எந்த காலத்திலும் நிமிர முடியாது. பிச்சையெடுக்காம கெளரவமாக வாழணும் இல்லையா... அதுக்கு தான் வழிபண்ணிட்டு வரேன்
மெளனமாக இருக்கிறாள் நித்யா.
"இண்டர்வுயூ அட்டெண்ட் பண்ணின கம்பெனிக்கு போய் வேலைக்கான ஆர்டரை வாங்கிட்டு வரேன். அடுத்த வாரத்திலிருந்து வேலைக்கு போகணும். நான் தங்கறதுக்கு லேடீஸ் ஹாஸ்டலில் ஏற்பாடு பண்ணிட்டேன்.
நீயும், அம்மாவும் முள்ளிக்காடா... முல்லைகாடா..." அந்த கிராமத்தில் போய் இருங்க. மாசாமாசம் பணம் அனுப்பறேன். இப்போதைக்கு இதுக்கு மேலே யோசிக்க முடியலை.’’
"சரிக்கா... நீ சொல்றது தான் சரி. நானும் இதை தான் யோசிச்சேன். ரங்கசாமி மாமா கிட்டே சொல்லி நாங்க தங்கறதுக்கு வீடு பார்க்க சொல்லியிருக்கேன்.
இன்னும் இரண்டு வாரத்தில் வீட்டை காலி பண்ணி தரணும். அங்கே போய் எனக்கு ஏதாவது வேலை கிடைக்குமான்னு பார்க்கிறேன்."
சரி... நீ போய் எனக்கு காபி கொண்டு வா. தலைவலிக்குது
நித்யா உள்ளே போக,
அக்காவும், தங்கையுமாக பேசியதை உள்ளிருந்து கேட்டவள், பொங்கி வரும்டி அழுகையை அடக்குகிறாள்.
காரில் பவனி வந்த வாழ்க்கை.
நிகிலா இந்த செயின் உனக்கு பிடிச்சுருக்கா. அப்பா கோயமுத்தூர் போகும் போது வாங்கிட்டு வந்தேன்.
உன் பர்த்டேக்கு என்னோட பிரசெண்ட். எத்தனை பவுன் தெரியுமா... ஏழு பவுன்"
சாவித்திரி எதுக்கு இப்படி கால்வலியோடு கஷ்டபடறே. சமையலுக்கு ஆள் வச்சுக்க. மாசம் பத்தாயிரம் தானே... கொடுத்துட்டா போச்சு.
உன் கோதுமை நிறத்துக்கு. இந்த வெண்பட்டு புடவையை விட, அந்த கருநீல பட்டு புடவை அழகா இருக்கும் நித்யா... இரண்டையுமே எடுத்துக்க.
பணத்தை பணமென்று பாராமல் குடும்பத்துக்காக செலவழித்தவர். இப்போது வீட்டிலிருக்கும் தட்டு, முட்டு சாமான்கள் முதற்கொண்டு கடனில் மூழ்கி விட்டது.
துணிமணிகளுடன் வெளியேற வேண்டிய நிலைமை. கையில், காதில் கூட பொட்டு தங்கம் இல்லை.
நாளைக்கு எப்படி இரண்டு பேருக்கும் கல்யாணம் நடக்கப் போகிறது.
ஊரையே வளைச்சு பந்தல் போட்டு கல்யாணம் பண்ணுவேன் சாவித்திரி. ரம்பை, ஊர்வசி மாதிரி அழகாக இரண்டு மகள்களை வச்சிருக்கேன். ராஜகுமாரன் மாதிரி மாப்பிள்ளை பார்ப்பேன்."
எல்லாம் கனவாகி விட்டது.
எதிரில் உட்கார்ந்திருப்பவரை பார்க்கிறாள் நித்யா.
"வக்கீல் சார்... எந்த ப்ராப்ளமும் இல்லை... சொன்ன மாதிரி புதன்கிழமை வீட்டை காலி பண்ணி சாவி தந்திடறோம்.
வேறு எதிலும் கையெழுத்து போட வேண்டியிருக்கா... பரிதாபம் தெரிய பார்த்தவர்,
இல்லம்மா... எல்லா செட்டில்மென்டும் முடிஞ்சாச்சு... ஆனா... உங்களுக்கு எதுவுமே மிச்சப்படலை. அதுதான் சங்கடமாக இருக்கு. எப்படி வாழ்ந்தவங்க... இனி என்ன செய்ய போறீங்க... வருத்தமா இருக்கும்மா.
"காசு, பணம் இருந்தப்ப உறவு ஜனம் தேடி வந்தது. கடன் தலைக்கு மேலே போய், அப்பா தூக்கில் தொங்கிட்டாருன்னு தெரிஞ்ச பிறகு, துக்கம் கேட்க வந்தவங்க... ஒரே நாளில் காணாமல் போயிட்டாங்க. இதுதான் உலகம். இனி எங்க வாழ்க்கையை நாங்க பார்த்துக்கிறோம். படிச்ச படிப்பு கை கொடுக்கும். அக்காவுக்கு வேலை கிடைச்சுருக்கு.
நானும், அம்மாவும் கிராமத்துக்கு போறோம்.
கூட இருந்து எல்லாத்தையும் நல்லபடியா முடிச்சு கொடுத்ததுக்கு நன்றி சார்" கையெடுத்து கும்பிடும் நித்யாவை அனுதாபத்துடன் பார்க்கிறார்.
இரண்டு சூட்கேஸ்களில் துணிகளை எடுத்து வைத்த நித்யா ஹாலில் மாட்டியிருக்கும் அப்பாவின் போட்டோவை பார்க்கிறாள்.
அப்பா... எங்க நிலைமையை