Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Oru Poo Uthirum
Oru Poo Uthirum
Oru Poo Uthirum
Ebook116 pages59 minutes

Oru Poo Uthirum

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

இந்துமதி என்ற பெயரில் எழுதும் இவர் தமிழகத்தின் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு சொந்தக்காரர். கிட்டத்தட்ட நூறு புத்தகங்கள் வெளியாகி உள்ளன.மூன்று சிறுகதைத் தொகுதிகள்.இவரது தரையில் இறங்கும் விமானங்கள்,சக்தி,நாவல்கள் சென்னை தூர்தர்ஷன் தொலைக்காட்சியிலும்,கங்கா யமுனா சரஸ்வதி சன்,ராஜ் டிவி களிலும், நீ நான் அவள் விஜய் டிவியிலும் தொடர்களாக ஒளிபரப்பப் பட்டன.இவர் திரைப்படத் துரையிலும் கால் பதித்துள்ளார்.அஸ்வினி என்ற பத்திரிகைக்கு ஆசிரியராக இருந்து நடத்தியுள்ளார். திரைப்படத் தணிக்கைக்குழு அங்கத்தினராகவும் இருந்துள்ளார்.தி

இவரது தரையில் இறங்கும் விமானங்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு எஸ்.ஐ.இ.டி. கல்லூரியில் துணைப்பாடத் திட்டமாக வைக்கப்பட்டுள்ளது. குருத்து, தண்டனை போன்ற சிறுகதைகளும் துணைப்பாடத் திட்டத்தில் சேர்க்கப்பட்டவைகளே! மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் இவரது படைப்புகள் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580123904062
Oru Poo Uthirum

Read more from Indhumathi

Related to Oru Poo Uthirum

Related ebooks

Reviews for Oru Poo Uthirum

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Oru Poo Uthirum - Indhumathi

    http://www.pustaka.co.in

    ஒரு பூ உதிரும்

    Oru Poo Uthirum

    Author:

    இந்துமதி

    Indhumathi

    For more books

    http://www.pustaka.co.in/home/author/indhumathi

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    1

    ரயிலின் ஷட்டரைத் திறந்து வெளியில் பார்த்தாள் காந்திமதி. ஏதோ ஒரு ஸ்டேஷனில் ரயில் நின்றிருந்தது. எந்த ஸ்டேஷன் என்பது தெரியவில்லை. சின்னத் தூற்றலாக மழை பெய்து கொண்டிருந்தது. ராத்திரி முழுதும் மழை பெய்திருக்க வேண்டும் என்று தோன்றிற்று. அந்த மழையோடு கூடிய மார்கழி மாதத்துப் பனியும், குளிரும் அதிகாலைப் பொழுதை இரவு நேரமாகக் காட்டிக் கொண்டிருந்தது. பெயர் தெரியாத அந்த வடக்கத்தி ரயில்வே ஸ்டேஷன் பனி மூட்டத்திற்கும் மழைத் தூறலுக்கும் இடையே மிக அழகாகத் தெரிந்தது. பாலுமகேந்திராவின் காமிரா வழியாகப் பார்க்கிற ரம்மியத்தைத் தோற்றுவித்தது.

    ஷட்டரைத் திறந்ததால் கம்பார்ட்மெண்ட் முழுதும் திடீரென்று வீசிய குளிரில் மேல் பர்த்தில் படுத்துக் கொண்டிருந்த மீனாவும், அருணும் ஒரு முறை புரண்டார்கள். அவர்களுக்கு எதிரில் கீழ் பர்த்தில் படுத்துக் கொண்டிருந்த அவளது கணவன் ஜெகதீசன் கூட. மெதுவாக நெளிந்தான்.

    அதற்கு மேலும் ஷட்டரைத் திறந்து வைத்தால் அவர்கள் மூன்று பேரின் தூக்கமும் கலையும். முகம் சுழித்துச் சிடுசிடுப்பார்கள்.

    'அந்த ஷட்டரை இழுத்து மூடேன் மம்மி. இந்த இருட்டுலயும் பனியிலயும் வெளியில் பார்க்க என்ன இருக்கு...?'

    மேல் பர்த்திலிருந்து குரல் வரும். அதிகாரமும், ஆணையும் கலந்து வருகிற அந்தக் குரல் மீனாவுடையதாக இருக்கும். முழுப் பெயர் மீனாபிரியதர்சினி. இருபத்தோரு வயது. எம்.பி.ஏ. படிக்கிற பெருமிதம். எல்.கே.ஜி.யிலிருந்து படித்த கான்வெண்ட் ஆங்கிலம். நுனிநாக்கின் உச்சரிப்பு, உலகத்தையே தன் கீழ்க் கொண்டு வந்துவிட முடியும் என்கிற. சதாம் உசேனின் தன்னம்பிக்கை. அவள் ஜெகதீசன் மாதிரி..

    அருண்குமார் அப்படியில்லை. சாது, அதிர்ந்து பேசாதவன். அதிகம் பேசாதவன். பயந்த சுபாவம். வெள்ளை வெளேரென்ற நிறம். மீனா ஜெகதீசன் மாதிரி மாநிறம். அருண்குமார் நிறத்தில் கூட அவளைக் கொண்டிருந்தான். நிறம் மட்டுமின்றி நல்ல களையான முகம்.

    'இவர்கள் இரண்டு பேருக்கும் மூத்தவன் கிருஷ்ணா. இருந்திருந்தால் எப்படி இருப்பான்? தன்னை மாதிரியா...? தன் கணவனைப் போலவா...? மீனாவைப் போல் வானம் விரலுக்கிடையிலா...? அல்லது அருண் மாதிரி அமெரிக்கையாகவா...?

    தெரியவில்லை அவளுக்கு. ஆறு வயதில் காணாமற் போன சுரேஷ் கிருஷ்ணாவை நினைத்துக் கொண்டாள். நினைத்துக் கொள்வதா...? எப்போது அவனை மறந்தோம்...?' இருந்திருந்தால் இப்போது தங்களுடன் கூட வந்திருப்பான். வெடவெடவென்று உயரமாய், ஒல்லியாய், இருபத்தைந்து வயது இளைஞனாய்...

    'கிருஷ்ணா... கிருஷ்ணா...!'

    காந்திமதி ஜன்னலைக் கொஞ்சம் மூட.றியா..? குளிர் தாங்கலை... - போர்வைக்குள்ளிலிருந்து கனத்த குரல்.

    ஷட்டரை இழுத்து மூடிவிட்டு எழுந்து கதவைத் திறந்து கொண்டு பாத்ரூமிற்குப் போனாள். முகம் கழுவி, பல் தேய்த்துக் கொண்டு வந்து அமர்ந்தாள். ரயிலின் வேகம் குறைந்து கொண்டே வந்தது. ஏதோ ஸ்டேஷன் வரப் போகிறது. ஆக்ராவாக இருக்குமோ...? இருக்கலாம். ஆக்ரா தான் அவளை அதிகம் பாதித்த ஊர். மைலாப்பூர் சித்திரை குளத்தின் மூலையில் இருந்து சிவசாமி ஐயர் பெண்கள் பள்ளிக்கூடத்தில் படிப்பு முடித்து கல்லூரியில் சேர அப்பாவைக் கெஞ்சிக் கொண்டிருந்தவளை ஆக்ராவிலிருந்து வந்து பெண் பார்த்தான் ஜெகதீசன். மறு மாதமே கல்யாணத்தை முடித்துக் கொண்டான். இரண்டு நாட்களுக்குப் பின்னர் ஜெகதீசனுடன் அவள் பயணித்த இடம் ஆக்ரா.

    அப்போது ஜெகதீசன் ஆக்ராவில் தான் இருந்தான். தனிக்குடித்தனம். வித்தியாசமான மனிதர்கள். புரியாத பாஷை. மயிலாப்பூரில் கபாலீஸ்வரர் கோவிலையும், மாடவீதியையும் சுற்றி வந்தவளுக்கு, லஸ் கடைகள் தவிர மவுண்ட்ரோடு கடைகள் கூட அறியாதவளுக்கு, கபாலியையும் காமதேனுவையும் விட்டால் தியேட்டர் தெரியாதவளுக்கு ஆக்ரா பிடிக்காமல் தான் இருந்தது. ஹிந்தி சட்டென்று கற்றுக் கொள்ள முடியாத பாஷையாகப் பட்டது. அதற்கும் ஜெகதீசனின் உதவியை நாட வேண்டி நேரிட்டது. ஒவ்வொன்றிற்கும் அவன் எதிரில் போய் நிற்கப் பயமாகக்கூட இருந்தது.

    ஜெகதீசன் சற்று இறுக்கமான பேர்வழியாக இருந்தான். அதிகம் பேசாதவனாக இருந்தான். அளந்து சிரிப்பவனாகக் காணப்பட்டான். ஒரு வார்த்தைக்கு மேல் பதில் சொல்லாதவனாக இருந்தான். அவனிடம் இன்னும் ஓர் தனித்தன்மையும் இருந்தது. எதற்கும் யாரையும் எதிர்பார்க்க மாட்டான். யாருடைய உதவியும் இன்றி அவனால் எதையும் செய்து கொள்ள முடியும். அவளுக்கு உடம்பு சரியில்லை என்றால் சமைப்பான். தன் துணிகளுக்குத் தானே இஸ்திரி போட்டுக் கொள்வான். அலுவலகத்திலிருந்து வந்ததும் காந்திமதி ஏதாவது "கை வேலையாக இருந்தால் அவனே காபி கலந்து கொண்டு வந்து உட்காருவான்.

    'ஏன்... என்னைக் கூப்பிடக் கூடாதா...? நான் கலந்து தந்திருக்க மாட்டேனா..?' அவள் பயந்து ஏதோ தப்பு செய்து விட்ட குற்ற உணர்வுடன் அருகில் போய் விட்டால் மிகச் சாதாரணமான பதிலாக வரும்.

    ஸோ வாட்..? எனக்குத் தான் காபி கலக்கத் தெரியுமே..... நீ ஏதோ வேலையில் இருந்தாய். அதனால் நானே கலந்துண்டுட்டேன்..

    உங்களுக்குக் காபி கலந்து தர்றதும் என்னுடைய வேலை தானே...?

    நோ. அது உன்னுடைய வேலை தான் என்பதில்லை. காபி எனக்கு. அதை நான் கலந்துக்கிறதில் என்ன தப்பு...? நீ இன்னும் இப்படி மைலாப்பூர் மாடவீதிப் பெண்ணாகவே இருக்கக் கூடாது.

    பின்ன என்ன செய்யணும்...?

    முதலில் இந்த மாதிரி வீட்டோடு அடைஞ்சு கிடக்கிறதை விடணும். வெளியில் போகணும். சுற்றி இருக்கிறவங்களோடு பழகணும். தனியா கடைக்குப் போய் வரத் தெரிஞ்சுக்கணும். இந்தி கத்துக்கணும்.

    ம்ஹூம். சுட்டுப் போட்டாலும் எனக்கு இந்தி வராது.

    'வரணும்.

    Enjoying the preview?
    Page 1 of 1