Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Oru Mukkiya Arivippu
Oru Mukkiya Arivippu
Oru Mukkiya Arivippu
Ebook83 pages32 minutes

Oru Mukkiya Arivippu

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Rajeshkumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Oru Mukkiya Arivippu

Read more from Rajeshkumar

Related to Oru Mukkiya Arivippu

Related ebooks

Related categories

Reviews for Oru Mukkiya Arivippu

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Oru Mukkiya Arivippu - Rajeshkumar

    21

    1

    அப்ஸரா குளியறையினின்றும் வெளிப்பட்டு தட்டு முட்டாய் சேலை சுற்றப்பட்ட உடம்போடு, ட்ரஸ்ஸிங் டேபிளுக்கு முன்னால் போய் நின்றாள். உதடுகளில் ஒரு ஹம்மிங். வெளிநாட்டு சோப் ஆயிரம் ரோஜாவாய் மணத்தது. கழுத்து வரைக்கும் போர்வையை போத்திக் கொண்டு கட்டிலில் படுத்திருந்த நிகில் வெற்று மார்போடு எழுந்து உட்கார்ந்தான். ரோமக் காடாய் மண்டிய மார்பில் தங்கச் சங்கிலி ஸ்வஸ்திக் டாலரோடு மினுமினுத்தது.

    அப்ஸரா...

    கொஞ்சலாய் முனகினாள்.

    என்னவாம்...?

    நாம காதலர்களா இருந்தப்ப காட்டிலும். கல்யாணம் ஆன பின்னாடிதான் நீ அழகாயிருக்கே...! நிறம்... என்னமா கூடியிருக்கு தெரியுமா...?

    இப்ப நான் என்ன நிறமாம்...?

    புதுசா பறிச்ச காரட் நிறம்...

    அப்படீன்னா நான் மண் மண்ணா இருக்கேனா...? மண்ணெல்லாம் ஒட்டிகிட்டு... பார்க்கவே சகிக்காது...

    "சரி கழுவின பின்னாடி ஒரு காரட் எப்படியிருக்குமோ... அப்படியொரு நிறம் உனக்கு...’’ - சொல்லிக் கொண்டே நிகில் கட்டிலினின்றும் எழுந்து மெதுவாய் நடந்து வந்து, அப்ஸராவின் பின்னால் நின்று அவளை ‘மெத்’தென்று கட்டிக் கொண்டான்.

    வேண்டாங்க... இப்பதான் குளிச்சுட்டு வந்திருக்கேன். மறுபடியும் என்னை குளிக்கும்படியா பண்ணிடாதீங்க... பனி பெய்யற இந்த ராத்திரியில் அடிக்கடி குளிச்சா டபுள் நிமோனியா வந்து படுத்துக்க வேண்டியதுதான்...

    ப்ளீஸ் அப்ஸரா...! இன்னும் ஒரே ஒரு தடவை குளிச்சுடு. அப்புறம் விடியற்காலை அஞ்சு மணி வரைக்கும் உன் உடம்பு மேல என் கை படாது...

    அவனுடைய அணைப்பில் அப்ஸரா திமிறினாள்.

    வேண்டாங்க... என் உடம்பெல்லாம் ஒரே வலி. படுத்து தூங்கணும் போலிருக்கு. நேரத்தை பார்த்தீங்களா... பதினோரு மணி...

    ப்ளீஸ்... ஒரு தரம்... ஒரே ஒரு தரம்...

    விடமாட்டீங்களே...?

    திரும்பி நின்று அவனைக் கட்டிக் கொண்டாள் அப்ஸரா.

    நிகில் அவளை அள்ளிக் கொண்டு படுக்கைக்கு போய் சாய்த்தான். சோப் வாசனையோடு கூடிய அவளுடைய கன்னத்தில் மெல்ல முத்தமிட்டான்.

    என்னங்க...

    ம்...

    விளக்கு வேண்டாங்க...

    ஏன்...?

    வெட்கமாயிருக்கு...

    இத பார்ரா...! வெட்கமாம் வெட்கம்...! கல்யாணமாகி ஆறு மாசம் ஆச்சு...! என்னமோ ஃபர்ட்ஸ் நைட்’ல வெட்கப்படற மாதிரி வெட்கப் படறியே...?

    வர... வர... நீங்க ரொம்ப மோசம்

    ஒரு ஜோக் சொல்லட்டுமா...? என்னோட ஆபீஸ் ஸ்நேகிதன் ஒருத்தன் எப்பவோ சொன்னது...

    சொல்லுங்க பார்க்கலாம்

    எதற்கெடுத்தாலும் சந்தேகம் படுகிற ஆபீஸ் மானேஜர் ஒருவர், ஊழியர்கள் கூட்டத்தைக் கூட்டி விசாரணை என்கிற பெயரில் பேசிக் கொண்டிருந்தார். பேசிக் கொண்டிருக்கும்போதே அவருடைய மனைவியிடமிருந்து டெலிபோன் வந்தது. பேசிமுடித்ததும் அவர் ஊழியர்களிடம் சொன்னார்.

    என் மனைவி கர்ப்பமாய் இருக்கிறாள்...

    ஒரு விநாடி அமைதிக்குப் பின் ஊழியர்கள் மத்தியிலிருந்து ஒரு குரல் கேட்டது. யாரை சந்தேகப் படுகிறீர்கள்...

    அப்ஸரா சிரித்தாள்.

    போன வாரம் நான் பத்திரிக்கையில் படிச்ச ஒரு ப்ளேபாய் ஜோக்கை சொல்லட்டுமா...?

    ம்... சொல்லு... சொல்லு... உன் வாயாலே ப்ளேபாய் ஜோக்கா? ஒரே கிக்தான்...!

    ஒரு ஹோட்டல்ல ஒரு அழகான பெண் தனியா உட்கார்ந்துட்டிருந்தாளாம். அப்ப ஒரு இளைஞன் அவளை நெருங்கி ‘மிஸ்... உனக்கு ஏதாவது கூல்ட்ரிங் வாங்கித் தரட்டுமான்னு’ கேட்டானாம். அதுக்கு அவ ஹோட்டல்ல இருக்கிற எல்லார்க்கும் கேட்கிற மாதிரி என்ன என்னை ஹோட்டலுக்கு கூப்பிடறியா?ன்னு கத்தினா. இளைஞன் பதறிப்போய் இல்ல நீ என்னை தப்பா புரிஞ்சுகிட்டே. உனக்கு ஒரு கூல்ட்ரிங் வாங்கித் தரட்டுமான்னு கேட்டேன் உடனே அவ இன்னமும் கோபமாகி படுக்கைக்கு வர்ற பொண்ணு நானில்லை... அதுக்கு வேற யாரையாவது பார்...ன்னு கத்த இளைஞனுக்கு படு சங்கடம். சுற்றிலும் இருந்தவங்க அவனை கேலியா பார்த்தாங்க. சிரிச்சாங்க. இவன். தலைகுனிஞ்சுகிட்டே போய் தனியா இருந்த மேஜைக்கு போய் உட்கார்ந்தான். கொஞ்ச நேரத்தில் அந்தப் பெண் பக்கத்தில் வந்து உட்கார்ந்து ஸாரி மிஸ்டர்! மத்தவங்க முன்னாடி உங்களை சங்கடப்படுத்தி விட்டேன்.

    Enjoying the preview?
    Page 1 of 1