Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Oru Kodiyil Iru Malarkal
Oru Kodiyil Iru Malarkal
Oru Kodiyil Iru Malarkal
Ebook94 pages35 minutes

Oru Kodiyil Iru Malarkal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பரணி ஜமுனாவை கண்ட அடுத்த நொடியே அவளை விரும்ப ஆரம்பிக்கிறான். அந்த ஊரில் பெரிய பணக்காரர்களின் மகளான ஜமுனாவும் காலப்போக்கில் அவனை விரும்ப ஆரம்பிக்கிறாள். இதற்கிடையில் ஜானகி என்ற பெண்ணும் பரணியை விரும்புகிறாள். ஜமுனா அப்பாவின் சூழ்ச்சியால் பரணி வாழ்க்கை என்னாகிறது? யாருடன் அவனுக்கு திருமணம் நடக்கப்போகிறது? அவன் விரும்பும் ஜமுனாவுடனா? இல்லை அவனை விரும்பும் ஜானகியுடனா? வாங்க வாசிக்கலாம்...

Languageதமிழ்
Release dateJun 25, 2022
ISBN6580123904167
Oru Kodiyil Iru Malarkal

Read more from Indhumathi

Related to Oru Kodiyil Iru Malarkal

Related ebooks

Reviews for Oru Kodiyil Iru Malarkal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Oru Kodiyil Iru Malarkal - Indhumathi

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    http://www.pustaka.co.in

    ஒரு கொடியில் இரு மலர்கள்

    Oru Kodiyil Iru Malarkal

    Author:

    இந்துமதி

    Indhumathi

    For more books

    http://www.pustaka.co.in/home/author/indhumathi

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    1

    நேற்று மாலைதான் பரணி அந்தப் பெண்ணை முதல் முறையாகக் கோவிலில் சந்தித்தான். அதைச் சந்திப்பு என்று சொல்ல முடியாது. அர்ச்சனைத் தட்டு வாங்கிக் கொண்டு இருபது ரூபாய்த் தாளை நீட்டினாள் அவள். அந்தத் தேங்காய் பழக் கடைக்காரருக்குக் கோபம் வந்துவிட்டது.

    ஏம்மா இதை என்ன கபாலீஸ்வரன் கோவில் இல்லாட்டிப் போனால் காளிகாம்பாள் கோவில்னு நினைச்சீங்களா - கூட்டம் மிதிபடவும் தேங்காய் பழக்காரன்கிட்ட சில்லறை குலுங்கவும்...? நாள் முழுசும் உட்கார்ந்தா கூட நாற்பது பைசா கற்பூரம் வாங்க ஆளிருக்காது. நீங்க என்னடான்னால் நாலு ரூபாய் தட்டுக்கு இருபது ரூபாய் நீட்றீங்க... யார் கைல சில்லறை இருக்கும்...?

    அவள் ஏமாற்றத்துடன் திரும்ப, பின்னாலேயே இவன் தட்டு வாங்க நின்றிருந்தான்.

    எக்ஸ்க்யூஸ்மி... என்று அவனை ஏறிட்டாள். அப்போது தான் அவன் அவளை முழுமையாகப் பார்த்தான். அந்த அழகில் குபீரென்று தாக்கப்பட, பேச்சு எழும்பாமல் நின்றான்.

    உங்ககிட்டே இருபது ரூபாய்க்குச் சில்லறை இருக்குமா, ப்ளீஸ்...

    குரலிலும் ஓர் ஆகர்ஷண சக்தி இருப்பதை உணர்ந்து சட்டை பாக்கெட்டினுள் கை விட்டான். ஐந்து ரூபாய்த் தாளொன்று கிடந்தது - பாண்ட் பையிலிருந்து பர்ஸை எடுத்துப் பார்த்தான். அதே இருபது ரூபாய்த்தாள் ஒன்று அழுக்குப் பிடித்துத் தெரிய, இவனுக்குள் அவள் கேட்டு இல்லை என்று மறுக்கிற வருத்தம் ஏற்பட,

    ஸாரி, என்கிட்டேயும் அதே இருபது ரூபாய் நோட்டுதான் இருக்கு, என்றான்.

    அவள் முகத்தில் அப்பட்டமாய் ஏமாற்றம் தெரிந்தது. சில்லறை மாற்றப் பக்கத்தில் வேறு கடைகளோ, மனிதர்களோ இல்லை. அன்று அவசியம் அர்ச்சனை செய்ய வேண்டிய சூழ்நிலையில் அவள் மீண்டும் அவனைப் பார்த்துப் புன்னகை செய்தாள்.

    இன்னிக்கு எனக்குப் பர்த்டே. அதனால் அர்ச்சனை செய்யலாம்னு வந்தால் சில்லரை ஒரு பிரச்சினையாய் இருக்கு...

    பர்த்டேவா... என்று முகமலர்ந்த பரணி, மெனிமோர் ஹாப்பி ரிடர்ன்ஸ்! சொன்னான்.

    இஃப் யூ டோண்ட் மைண்ட், என்கிட்ட ஒரு அஞ்சு ரூபாய் இருக்கு. அதைக் கொடுத்து அர்ச்சனைத்தட்டு வாங்கிக்கோங்க...

    ஐயயோ... வேணாங்க.... சில்லறை கிடைக்காட்டிப் போனால் என்ன செய்யறதுங்க...?

    அதனால் என்ன, நான் இந்தக் கோவிலுக்கு அடிக்கடி வர்றவன். நீங்களும் வருவீங்கதானே..... அடுத்த முறை பார்க்கிறபோது வாங்கிக்கறேன்...

    அவள் தயங்க, அவன் மீண்டும் வற்புறுத்தினான்.

    பிறந்த நாளா இல்லாது போனால் நானும் வற்புறுத்தப் போறதில்லீங்க. சாதாரண அர்ச்சனைன்னால், இன்னிக்கு இல்லாட்டிப் போனால் நாளைக்குப் பண்ணிக்கட்டும்னு விட்டுடுவேன். நீங்க பிறந்த நாள்னு சொன்னதுக்கு அப்புறம் ஒரு நாலு ரூபாய் காசுக்காகப் பேசாமல் இருக்கிறது மனுஷத் தனம் இல்லீங்களே...!

    அவள் அப்போதும் யோசித்துப் பின் சொன்னாள்.

    அப்படின்னால் ஒண்ணு செய்யலாமா? இந்த இருபது ரூபாயை வச்சுக்கிட்டு அந்த ஐந்து ரூபாயைக் கொடுங்க. நான் இந்தக் கோவிலுக்கு ஒவ்வொரு செவ்வாய், வெள்ளியும் வருவேன். அடுத்த செவ்வாய்க்கிழமை வர்ற போது மீதிப் பதினைஞ்சு ரூபாயை வாங்கிக்கறேன்...

    என்னங்க நீங்க...ஒரு அஞ்சு ரூபாய்க் காசுக்கு-

    அப்படின்னா வாங்கிக்கறேன். இல்லாட்டிப் போனால் வேணாம்....

    சரி சரி.... அப்படியே செய்யலாம்... இந்தாங்க அஞ்சு ரூபாய்…

    இந்தாங்க இருபது ரூபாய்.

    இரண்டு பேரும் சிரித்துக் கொண்டார்கள். அவள் அந்த ஐந்து ரூபாயைக் கடைக்காரரிடம் கொடுத்து அர்ச்சனைத் தட்டு வாங்கிக் கொண்டாள். அந்தச் சின்னப் பணப் பரிமாற்றத்தில் ஏற்பட்ட உரிமையில் அவன் அவளுக்காகக் காத்திருந்து ஒன்றாக உள்ளே நுழைந்தான். அவள் யார், எங்கிருந்து வருகிறாள் என்பதையெல்லாம் தெரிந்து கொள்ளத் துடித்த மனதைச் சிரமப்பட்டு அடக்கிக் கொண்டான். எதையாவது விசாரிக்கப் போய் அவள் அதைத் தவறாக நினைத்துக் கொண்டுவிட்டால் என்ன செய்வது என்கிற பயம் தோன்றியது.

    அவளுடன் சேர்ந்து நடந்தபோது ஏற்பட்ட சந்தோஷம் இதுவரை அனுபவித்தறியாததாக இருந்தது. உடல் நரம்பு ஒவ்வொன்றிலும் புது ரத்தம் பாய்கின்ற உணர்வு ஏற்பட்டது. அந்த வெளிர் நீல ஜார்ஜெட் புடவையின் கறு நீல சரிகைக் கரையிட்ட பார்டருக்குள்ளிருந்து எட்டிப் பார்த்த பாதங்களின் வெண்மை இவனை மயக்கிற்று. பாதத்தின் நிறத்தை விட அதிகம் பளபளத்த முகத்தையும், மைதீட்டிய கண்களையும், செப்புப் போன்ற சின்ன

    Enjoying the preview?
    Page 1 of 1