Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Urugi Odum Mezhugugal
Urugi Odum Mezhugugal
Urugi Odum Mezhugugal
Ebook102 pages35 minutes

Urugi Odum Mezhugugal

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.

Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580100604276
Urugi Odum Mezhugugal

Read more from Devibala

Related to Urugi Odum Mezhugugal

Related ebooks

Reviews for Urugi Odum Mezhugugal

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Urugi Odum Mezhugugal - Devibala

    http://www.pustaka.co.in

    உருகி ஓடும் மெழுகுகள்

    Urugi Odum Mezhugugal

    Author:

    தேவிபாலா

    Devibala

    For more books

    http://www.pustaka.co.in/home/author/devibala-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    1

    நான் புறப்படட்டுமா டார்லிங்?

    த பாருங்க! மறக்க வேண்டாம் நான் சொன்னதை!

    என்ன சொன்ன நீ?

    அதுக்குள்ள மறந்தாச்சா? நாளைக்கு எங்க பாட்டிக்குத் திதி... அதுக்குப் படைக்க ஒரு புடவை வாங்கிட்டு வரணும். மறக்காம நீங்க லீவு போடணும். என்னால் தனிய எல்லா வேலைகளையும் செய்ய முடியாது. சமையலுக்கு ஒரு ஆளைக் கூட்டிட்டு வரணும்!

    ஓக்கே... வரட்டுமா?

    வாசலுக்கு வந்தான் யோகராஜ்.

    தம்பீ!

    அழைத்தவள் யோகராஜின் அம்மா.

    என்னம்மா! வேண்டா வெறுப்பாகக் கேட்டான் யோகராஜ்.

    க... கட்டிக்க ஒரே ஒரு புடவைதான் இருக்கு. அதுவும் கிழியத் தொடங்கியாச்சு. மாத்திக் கட்டிக்க புடவை இருந்தாத்தானே மானம் மறைக்க முடியும். அதனால...

    அதனால?

    கோவிச்சுக்காதே ராசு... ஒரு புடவை...

    என்ன அங்கே புலம்பல்? உள்ளேயிருந்து வந்தாள். யோகராஜின் மனைவி வீணா நந்தினி.

    அம்மாவுக்கு புடவை வேணுமாம்!

    இந்த வயதுல என்ன இப்படியெல்லாம் ஆசை?

    ஆசையில்லைமா! தேவை!

    என்னங்க நீங்க புறப்படுங்க. நேரம் வீணாகுது!

    தம்பி நில்லுடா!

    என்னம்மா?

    நேரம் வீணாகுதுன்னு நினைச்சிருந்தா, கருவுலேயே உன்னைக் கலைச்சிருப்பேண்டா. நான் உன்னைப் பெத்த தாய்! நேத்து வந்தவள். அனுமதிச்சுத்தான் நான் உன்கூட பேசணும்னு அவசியமில்லை!

    யார் நேத்து வந்தவ? நான் உரிமைப்பட்டவர். இவரோட பெண்டாட்டி! நான் ஒண்ணும் ஓசிச் சோத்தைத் தின்னுட்டு, திண்ணைல தூங்கலை. எங்கப்பா பெரிய பணக்காரர். என் பேருக்கு ஒரு வீடும், பேங்க்ல அம்பதாயிரம் பணமும் இருக்கு!

    நான் அவனைப் பெத்தவ!

    வீதில நின்னு உரக்கச் சொல்லுங்க. பெத்துப் போட்டுட்டா ஆகலை. பன்னி கூட குட்டி போடுது வதவதனு. வயசானாலும் நாலு காசு வேணும் கையில. ஊரானை நம்பி ஒடம்ப வளர்க்கக் கூடாது!

    பாருடா யோகராஜ். உன் கண்ணு முன்னால, உன் தாயை தாறுமாறா பேசறா உன் மனைவி. உன்னால... உன்னால...

    த்ஸ்! சும்மாரும்மா அவனவனுக்கு ஆயிரம் தலைவலி இதுல நீ வேற. புடவை என்ன கலர் நந்தினி!

    பிடிச்சதா எடுங்களேன் நான் தானே கட்டிக்கப் போறேன்!

    ஏண்டா டேய்! பெத்த தாயைப் பொசுக்கிட்டு, ஏதோ ஒரு பாட்டிக்காக தெவசம் பண்றியா?

    எங்க பாட்டி ஓசிச் சோறு இல்லை எனக்கு சொத்து வச்சிட்டுப் போயிருக்காங்க. அதான் திதி!

    யோக ராஜ் புறப்பட்டுப் போய் விட்டான்

    வீணாவும், வீட்டைப் பூட்டிக் கொண்டு கிழவியை சட்டை செய்யாமலே மாதர் சங்கக் கூட்டத்துக்கு புறப்பட்டு விட்டாள்.

    கிழவி உறைந்து போய் உட்கார்ந்திருந்தாள்.

    அழவில்லை. அழ முடியாது அவளால். அழுகை வற்றியாகி விட்டது பத்து வருடம் முன்னால் பட்டுப்புடவையும், வைரம், தங்க நகைகளோடு மீனாட்சி அம்மாள் என்றால் வீதியே கையுயர்த்திக் கும்பிடும் நிலையில் இருந்தவள்தான்.

    கணவர் தனியார் நிறுவனமொன்றில் பெரிய அதிகாரியாக இருந்தவர்.

    யோகராஜ் ஒரே மகன்.

    பத்து வயது வரை யோகராஜை நடக்கவிடக்கூட மனமில்லாமல் 'தோளில் சுமந்து திரிந்தவள்தான்.

    யோகராஜின் அப்பா மிகவும் இளகிய மனம் படைத்தவர். கலியுகக் கர்ணன். வாரி வாரி வழங்கியதில்தான் தவறே ஆரம்பமானது.

    வள்ளல் என்ற பெருமைதான் மிச்சம். கையிலிருந்த காசு கரையத் தொடங்கி விட்டது. இதில் சொந்த பந்தங்கள் என்ற காக்காய் கூட்டம். அவர் ஓய்வு பெற்ற மூன்றாவது வருடம் மாரடைப்பால் மரணமடைந்தார்.

    அடுத்த வருடம் மருமகள் வந்து அவருக்கு திதி செய்தால் மகத்துவம் என்று மகனுக்குக் கல்யாணம் செய்து வைத்தார் மீனாட்சி அம்மாள். தன் தலையில் ஒரு லாரி மண் என்பது புரியாமல்.

    வீணா நந்தினி படித்த, அழகான, பணக்காரப் பெண். படிப்படியாக யோகராஜை பல முனைத் தாக்குதல் மூலம் படிய வைத்து, அவனது எதிர்ப்பு சக்தியை! அறவே விலக்கி, ஆட்சியைக் கைப்பற்றினாள்.

    தன் பிள்ளைதான் தன் சுவாசம் என்று நம்பிய தாயை, அந்தப் பிள்ளையைக் கொண்டே கரைத்து, ஒவ்வொன்றாகப் பறித்து, மூன்றே வருடங்களில் முழுத்துயைகூட. மிஞ்சாத அளவு நிறுத்தி விட்டாள்.

    நந்தினியின் பிறந்த வீட்டுப் பேய்கள் யோகராஜீக்கு அவ்வப்போது வேப்பிலை அடிக்கும்

    Enjoying the preview?
    Page 1 of 1