Un Perai Sollum Pothae
2/5
()
About this ebook
எழுத்தாளர் லதா சரவணன் 1981ல். பிறந்தார் சென்னை பல்கலைக்கழகத்தில் வணிக நிர்வாகப் படிப்பினை முடித்தார். வடசென்னையில் வெற்றிகரமாக இயங்கி வரும் ஸ்ரீ சாந்தி சாரீஸ் என்னும் நிறுவனத்தில் கணவருடன் இணைந்து நடத்திவருகிறார். இரட்டை பெண் குழந்தைகள் 10ம் வகுப்பிற்கு அடியெடுத்து வைக்கிறார்கள். 2003 ல் முதல் சிறுகதை தங்கமங்கை என்னும் இதழில் வெளியானது. முதல் நாவல் 2004 ஜனவரியில் பொங்கல் விருந்தாக கண்மணியில் பனிக்கால் வசந்தங்கள் என்னும் தலைப்பில் வெளியாகி இருந்தது. அது முதல் 53 நாவல்களும், 200க்கும் மேற்பட்ட சிறுகதைகளும், கட்டுரைகளும், வெகுஜனப்பத்திரிக்கைகளில் வெளியாகி உள்ளளது. (ராணி, தேவி, குமுதம், மாலைமலர், குடும்ப நாவல், தினமலர், தினதந்தி குடும்பமலர், பெண்மணி).
இவரது திருநங்கைகளின் வாழ்க்கை குறித்து காகிதப்பூக்கள் என்னும் நாவல் பிரசத்தி பெற்றது. அதே போல் ராணி வார இதழில் 2016 ம் ஆண்டில் 23 வாரத்தொடராக திருநங்கைகள் ஒவ்வொருவரின் வாழ்வியல் இவரது எழுத்தில் வெளிவந்திருந்தது. திருக்குறள் மையம் சார்பாக முப்பது திருக்குறளிற்கு - அதன் சாரம்சம் குறையாமல் நவீன காலத்தின் இயல்புகளை தொகுத்த உயிரோவியமும் 2015 ம் ஆண்டிலேயே ராஜா அண்ணாமலை மன்றத்தில் திருக்குறன் செம்மல் திரு. தாமோதரன் அவர்களால் வெளியிடப்பட்டது.
எழுதுவதோடு மட்டுமன்றி முருகதனுஷ்கோடி, கேசிஎஸ், எம்.ஜியார் ஜானகி கல்லூரி, சேம் வைவா, விநாயகா மிஷன், சாரதாம்மாள் மகளிர் கல்லூரி, எத்திராஜ், குயின்மேரிஸ், ஸ்டெல்லா மேரிஸ் இன்னும் பல இடங்களில் தன்னம்பிக்கைக் குறித்த பேச்சுகளை வெளிப்படுத்தியிருக்கிறார். அரசியல் நீங்கலான தொலைக்காட்சி நிகழ்வுகளில் பெண்ணியம் தொடர்பான கருத்துக்களையும் பெண்களின் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வுகளையும் வலியுறுத்தியிருக்கிறார். (மக்கள், சன்டிவி, புதிய தலைமுறை, பெப்பர்ஸ், நியூஸ் 7, பொதிகை, வானொலி நிலையம், வின்டிவி)
தற்போது ஒன் இந்தியா தமிழ், மற்றும் சில்சி என்னும் ஆன்லைன் தளங்களில் இவரது கதைகள் கட்டுரைகள் வெளியாகிவருகிறது. சென்ற வருடம் குமுதத்தில் நாவல் வெளியாகி இருந்தது. 2011ல் குயின் மேரிஸ் கல்லூரியிலும், 2012 போலீஸ் பப்ளிக் அசோசியேஷன் 2015 நேசம் மனிதவள மேம்பாட்டு மையம், 2016ல் ஒ.எம்.சி வில் மதுரை தமிழ் இலக்கிய மன்றம் சிறந்த எழுத்தாளர் மற்றும் கவிதையாசிரியர் என்னும் விருதும், 2008 ல் அரசாங்கம் நூலகம் இணைந்து நடத்திய சிறுகதைப் போட்டியில் கவரிமான் என்னும் கதைக்கு தேவநேயப்பாவணர் அரங்கில் திரு.பரிதி இளம்வழுதி அவர்களின் மூலம் பரிசு பெற்றார்.
உமாபதி கலையரங்கத்தில் தங்கமங்கை நடத்திய விழாவில் தங்கமங்கை என்னும் விருதை பெற்றார். அண்மையில் நடைபெற்ற அறம் தமிழ்பண்பாட்டு மையத்தில் ஆற்றல் அரசி என்னும் விருது தரப்பட்டது. எழுத்துலகிலும் தொழில் துறையிலும் அவர்களின் பணி தொடர்ந்து கொண்டு இருக்கிறது.
Read more from Latha Saravanan
Nenjodu Kalanthidu Uravalae..! Rating: 4 out of 5 stars4/5Kalvanin Kaadhali Rating: 5 out of 5 stars5/5Tholaintha Devathai Rating: 0 out of 5 stars0 ratingsUnnai Naan Santhithen Rating: 2 out of 5 stars2/5Irubathu Kodi Nilavukal Rating: 0 out of 5 stars0 ratingsNeruppai Oru Nilavu Rating: 0 out of 5 stars0 ratingsIppadiyum Ivargal Rating: 0 out of 5 stars0 ratingsMinmini Poochikal Rating: 0 out of 5 stars0 ratingsChithira Paavaigal Rating: 0 out of 5 stars0 ratingsVilaimagalin Vilaiyilla Kaditham Rating: 0 out of 5 stars0 ratingsMayanizhal Rating: 0 out of 5 stars0 ratingsAayiram Nilavae Vaa! Rating: 0 out of 5 stars0 ratingsPatharasa Paravaigal Rating: 0 out of 5 stars0 ratingsIyandhira Ithayangal Rating: 0 out of 5 stars0 ratingsAntha Micro Nodigal Rating: 0 out of 5 stars0 ratingsMaavilai Thorangal Rating: 5 out of 5 stars5/5Andha Anbu Aabathanathu Rating: 0 out of 5 stars0 ratingsDosmeniyan Devil Rating: 0 out of 5 stars0 ratingsMarainthu Vidathey Maya Rating: 0 out of 5 stars0 ratings
Related to Un Perai Sollum Pothae
Related ebooks
Enna Solla Pogiraai? Rating: 5 out of 5 stars5/5Kalyana Oonjal Rating: 0 out of 5 stars0 ratingsNetru Varai Nee... Yaaro? Rating: 0 out of 5 stars0 ratingsEngey En Jeevan Rating: 5 out of 5 stars5/5Suriyan Theyumo? Rating: 0 out of 5 stars0 ratingsKaadhalenum Vaanavil Rating: 4 out of 5 stars4/5Nallathor Veenai Seithe...! - Part 1 Rating: 5 out of 5 stars5/5Kaadhal Cafe Rating: 5 out of 5 stars5/5Yenazhuthaai Enuyire Rating: 5 out of 5 stars5/5Perazhagithaan Nee Rating: 5 out of 5 stars5/5Unakkenna Venum Sollu! Rating: 0 out of 5 stars0 ratingsYamunai Aatriley… Era Kaatriley… Rating: 4 out of 5 stars4/5Azhagey Vaa! Arugil Vaa!! Rating: 0 out of 5 stars0 ratingsEngirundho Vandhan Rating: 1 out of 5 stars1/5Ullam Irandum Ondru Rating: 0 out of 5 stars0 ratingsDevathai Vandhal Rating: 2 out of 5 stars2/5Aboorva Ragam Rating: 5 out of 5 stars5/5Anbin Vaasaliley... Rating: 0 out of 5 stars0 ratingsMazhai Mega Mayilgal Rating: 5 out of 5 stars5/5Kai Arugil Thendral Rating: 5 out of 5 stars5/5Maranthal Thane Ninaipatharku! Rating: 5 out of 5 stars5/5Aahaya Medai Katti...! Rating: 5 out of 5 stars5/5Kaadhal Enbathu Mayavalai Rating: 4 out of 5 stars4/5Andha Yetho Ondru…! Rating: 4 out of 5 stars4/5Uruga Marukkum Meluguvarthikal Rating: 0 out of 5 stars0 ratingsMaavilai Thorangal Rating: 5 out of 5 stars5/5Eppozhuthum Un Soppanangal…! Rating: 4 out of 5 stars4/5Un Kannil Neer Vazhinthal... Rating: 3 out of 5 stars3/5Neela Nayanangalil... Rating: 2 out of 5 stars2/5Anal Mele Panithuli Rating: 5 out of 5 stars5/5
Reviews for Un Perai Sollum Pothae
2 ratings0 reviews
Book preview
Un Perai Sollum Pothae - Latha Saravanan
http://www.pustaka.co.in
உன் பேரைச் சொல்லும் போதே
Un Perai Sollum Pothae
Author:
லதா சரவணன்
Latha Saravanan
For more books
http://pustaka.co.in/home/author/latha-saravanan
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
1
அமைதி! உலகில் பலரும் தேடி ஓடும் மூன்றெழுத்து மந்திரம். கண்ணாமூச்சி ஆடி எப்போதாவது ஒருமுறை மாட்டிக் கொள்ளும் வலைமீன்! கோவில் அமைதியின் உறைவிடம் என்பது இறை நம்பிக்கை கொண்டவர்களின் கருத்து! அது மறுக்க முடியாத உண்மையும் கூட! எத்தனை இன்னல்களையும், கவலைகளையும் மனம் கொண்டிருந்தாலும், கடவுளின் முன் ஒரு விநாடி கை கூப்பி நிற்கும் தருணம் எப்பேர்ப்பட்ட மனமும் அமைதியடைவது நிஜம்!
வாழ்க்கையென்னும் காற்றாடி பறக்க இறை நம்பிக்கை எனும் நூலும், வழிபாடு எனும் காற்றும் அவசியம். அதனால்தான், நம் முன்னோர்கள் கூட ஆலயத் திருப்பணிகள் செய்வதில் பெரும் ஆர்வம் காட்டினார்கள்.
மேற்கூறிய அறிவுரையைக் கேட்டுக் கொண்டிருக்கும் போதே தாயின் தோளைத் தட்டி, கிளம்புவோமா அம்மா?
என்று கேட்டாள் வர்ணிகா.
ஏன்டி! உனக்கு இத்தனை அவசரம்! நீ போய் பிராகாரம் சுத்து. இன்னும் கொஞ்ச நேரத்தில் முடிந்து விடும்...!
சிறு கெஞ்சலோடு தாய் மறுபடியும் திரும்பிக் கொள்ள, சரிந்த துப்பட்டாவைச் சீராக்கி நகர்ந்தாள்.
அடிக்கடி வரும் கோவில்தான் என்றாலும், மாதத்திற்கு இருமுறை யாரேனும் உபாசகர் கொண்டு சொற்பொழிவு நடத்துவது வழக்கம், அம்மா தவறாமல் ஆஜராகி விடுவார்கள். முன்பெல்லாம் படிப்பைக் காரணம் காட்டி மறுத்து விடுகிறவள், இப்போது கல்லூரிப் படிப்பு முடிந்து வீட்டில் இருப்பதால் வர வேண்டிய கட்டாயம்.
என்னதான் காத்துக் கொள்வதாய்க் காட்டிக் கொண்டாலும், கோவிலுக்கு வருவது அவளுக்குப் பிடித்தமான ஒரு விஷயம்தான்! சொற்பொழிவு முடிய எட்டு மணி ஆகி விடுவதால், அம்மாவைத் தனியே விடவும் மனமின்றிக் காத்து இருந்தாள்.
நாகர் சிலைக்கு அருகில் உள்ள அந்தக் கை உடைந்த சிலையின் அருகில் வந்தாள். கவனிப்பாரற்று வர்ணமிழந்து இருந்தது அச்சிலை. ஆனால் அதன் முகத்தில் மட்டும் ஏதோவொரு அழகிய பொலிவு. அதன் கண்கள் உயிரோடிருப்பவை போன்று தோன்றும். இங்கு வரும் நாள் முதலே அந்தச் சிலையை அவள் கவனிப்பது உண்டு!
முதன்முதலாய்ப் பார்க்கும் போதே ஏதோ ஒருவித ஈர்ப்பு எழ, அங்கு வரும்போது எல்லாம், அச்சிலையுடன் ஏதாகிலும் பேசுவதை அவள் வழக்கமாகக் கொண்டிருந்தாள். வியப்பு என்னவெனில் அதற்குக் காஞ்சனா என்று பெயர் கூட இட்டு இருந்தாள்.
பாரு காஞ்சனா! அம்மா கூடக் கோயிலுக்கு வந்தாலே இப்படித்தான் தாமதமாகி விடும். ஆமாம், இன்று கோயிலில் ஏதாவது ருசிகரச் சம்பவம் நடந்ததா?
சிலையிடம் மாறாத சிரிப்பு ஒன்று வெளிப்பட்டது.
அடுத்த முறை வரும்போது உன்னைச் சீர்செய்து பிராகாரம் அருகில் வைக்கச் சொல்லிப் பேச வேண்டும்.
சிலையில் கண்கள் உயிர்பெற்று அசைவதைப் போல் இருந்தன. சன்னமான குரலில் அவள் சிலையுடன் பேசிக் கொண்டு இருந்ததைக் கண்டு நகைத்தன இரண்டு விழிகள்.
ஆனால், தன்னையும் மீறி அவ்வாறு இளநகை புரிந்ததே தவறென்று மனம் சாடிட, உடனே அவ்விடம் விட்டு நகர்ந்தன நெடிய கால்கள். இவை ஏதும் அறியாமல் கொஞ்சினாள் வர்ணிகா.
அதற்குள் பரிமளாவின் குரல் கேட்கவும், சிலையிடம் விடைபெற்று இவளும் நகர்ந்தாள். நல்லவேளை, கிளம்பிட்டீங்க. ஆனா நேரமாயிடுச்சு. இதே அர்ச்சனை வீட்டிலே அப்பாகிட்டே கேட்கப் போகுது பாருங்க!
இவ ஒருத்தி! எனக்கு நீ இரண்டாவது மாமியாருடீ! வா, போகலாம். டிபன் செய்யணும். அப்பா காத்திருப்பார்.
இப்போதான் நினைவு வந்ததா?
கூட்டத்தினை விலக்கிக் கொண்டு, மீண்டும் ஒரு முறை அன்னையை நோக்கிக் கரம் குவித்து, நமஸ்கரித்து விட்டு வெளியே வந்தனர்.
பரிமளாம்மா..!
அர்ச்சகர் தன் குடுமியோடு வியர்வை பெருகிய உடலை வெண்மையான டவல் கொண்டு மூடியபடி வந்தார்.
சொல்லுங்க சாமி!
அம்மா! நாளை மறுநாள் சனிப் பிரதோஷம். மற்றப் பிரதோஷங்களை விடவும், சனிப்பிரதோஷம் நூறு பிரதோஷத்திற்குச் சமம்.
நீங்க போன முறையே பூஜைக் குண்டான செலவுகளையெல்லாம் ஏற்றுக் கொள்வதாய்ச் சொல்லியிருந்தீர்கள்?
ஆமாம் சாமி! நல்ல வேளை ஞாபகப்படுத்திட்டீங்க! வர்ணிம்மா!
என்க, தன் கைப்பையைத் தாயிடம் திணித்துவிட்டு, நீங்க கொடுத்திட்டு வாங்க. நான் போய் வண்டியை எடுக்கிறேன்,
என்று நகர்ந்தாள்.
இளம் மஞ்சள் நிற சல்வாரில் கற்கள் கொண்டு வேலைப்பாடு செய்யப்பட்டு இருந்தும், தோளில் புரண்ட கூந்தலில் ஒற்றை மஞ்சள் ரோஜா. காதுகளில் HANGING DROPS. திராட்சைக் கண்களும், செர்ரி பழமெனச் சிவந்த உதடுகளும், எலுமிச்சை நிறமும் பார்ப்போரைச் சுண்டி இழுக்கும் அழகு உடையவள் வர்ணிகா.
தமிழ் மேல் கொண்டுள்ள பற்றால் தமிழ் இலக்கியம் பயின்றாள். காற்றில் பறந்த துப்பட்டாவை இழுத்துக் கட்டியபடி வண்டியைத் திருப்பிட, அத்தெரு ரோமியோக்களில் ஒருவன் – டேய், அங்கே பாருடா மச்சான், மாம்பழம் மாதிரி இருக்கா! ம்.. எவனுக்குக் கொடுத்து வைச்சிருக்கோ?
மெதுவா பேசுடா மச்சி! ஆளு சரியான ராங்கிக்காரி, போன வாரம் இதே தெரு முனையிலே நம்ம சேகர் இவகிட்டே நல்லா வாங்கினான்.
இவதானா அது!? ஏன்டா என்கிட்டே முன்னாடியே சொல்லலை. பொம்பிளை. அவளுக்கு இவ்வளவு திமிரா? இதையெல்லாம் இப்படியே விட்டுடக் கூடாது,
அவர்கள் பேசியபடி இருக்கும் போதே வர்ணிகா அவன் புறம் சென்றாள்.
சொன்னா? என்ன பிரதர் செய்து இருப்பே?
இந்த நேரடிக் கேள்வியை எதிர்பார்க்காத அவர்கள் பதில் பேச முடியாமல் திகைத்தனர்.
பேசுங்க பிரதர். என் முதுகுக்குப் பின்னாடி அத்தனை பேசுனீங்க! இப்போ நானே நேரில் வந்து நிக்குறேன். அமைதியா இருக்கீங்க.
அது வந்து நீங்க என் நண்பனை....
நான்தான் அடிச்சேன்! அதுக்கு இப்போ என்ன நியாயம் கேக்கப் போறியா? இல்லை. திருப்பி அடிக்கப் போறியா?
அதெப்படி ஒரு ஆம்பிளையை அடிக்கலாம், நீ?
ஆம்பிளைக்கு அர்த்தம் தெரியுமா, உனக்கு? மீசை முளைச்சிட்டதாலோ, உடல் வலிமையினாலோ மட்டும் அதை நிரூபிக்கக் கூடாது. உன் துணிவு பிறரைக் காக்கத்தான் இருக்கணும். கவுக்க இருக்கக் கூடாது. பார்க், பீச்சுன்னு துவங்கிக் கடைசியிலே கோயில்லேயும் உங்க கமெண்டுகளைத் துவங்கிட்டாயெப்படி?
இருந்தாலும்... அடிச்சிருக்க வேண்டாம்....!
மயிலே மயிலேன்னா இறகு போடாதே, அன்னிக்கு வாங்கினதுலே அவன் இப்போ வரலை பார்த்தியா?
மேடம்! ப்ளீஸ்... நீங்க போங்க. அவன் ஏதோ தப்பாப் பேசிட்டான்!
அவர்கள் அவசரமாய்க் கலைய, இவளும் வண்டியருகில் நின்ற தாயிடம் வந்தாள்.
ஏன்டி, உன் வம்பைக் கோயில்லேயும் துவங்கிட்டியா?
வம்பில்லைம்மா! ஒரு கேள்வி கேட்டான். பதில் சொன்னேன்.
என்ன கேள்வி?
இதெல்லாம் வயசுப் பிள்ளைங்க சமாச்சாரம்! உங்களுக்கு ஏன்? பேசாம வண்டியிலே ஏறுங்க!
கழுதை! உனக்கு வரவர வாய் ரொம்ப நீளம். எல்லாம் உங்க அப்பா தர்ற செல்லம்!
வழியில் குட்டி விநாயகர் கோவில் வரவும் பரிமளா கன்னத்தில் போட்டுக் கொள்ள, வர்ணிகா சிரித்தாள்.
ஏன்டி சிரிக்கிறே?
கோவில்லதான் இத்தனை நேரம் சாமி கும்பிட்டீங்க? போதாதா? சந்து பொந்துலே இருக்கிறே விக்கிரகத்தைக் கூட விடறதில்லையா? உங்க முகத்தைப் பார்த்துச் சாமிக்கு போரடிச்சிடப் போகுது.
பக்தி உள்ள மனசு சின்னது பெரிசு எல்லாம் பார்க்காது வர்ணிகா!
அய்யோ, அம்மா! ரோட்டோரமா நம்ம ஆளுங்க பண்ற அட்டகாசத்தைத் தாங்க முடியாமத்தான் ஒரு தெருவுக்கு நாலு கோயில் முளைச்சி இருக்கு.
கடவுள் மேல நம்பிக்கையில்லாதவ மாதிரியே பேசுறியே?
நம்பிக்கை மனசிலே இருக்கு. 10 மணி நேரம் கோயில்ல இருந்தாத்தான் கடவுள் அருள் புரிவார்னு இல்லே. 10 விநாடிகள் கண் மூடி வணங்கினாலே போதும்.
அப்போ நான் செய்வதெல்லாம் பிரார்த்தனை இல்லையா?
வண்டியை ஸ்டாண்ட் போட்டபடியே, நான் அப்படிச் சொல்லலைம்மா?
என்றாள்.
அதற்குள் ஜெயராமன் வந்து, என்ன பரிமளா, இவ்வளவு தாமதப்படுத்திட்டே?
என்றார்.
கோவில்ல விசேஷங்க? ஏன்? என்னாச்சு?
ராமநாதன் வந்திருக்கான்.
யாரு? சென்னையில் உள்ள உங்க நண்பரா? ரொம்ப நாளாச்சு. கூடக் கலா வரலையா?
ம்கூம்...
என்ன திடீர்னு?
தெரியலை! ஆனா ரொம்பவும் சோர்ந்து போய்த் தெரியறான். நீயா எதையும் பேச வேண்டாம். அவனா பேசட்டும்!
சரிங்க!
யாருப்பா வந்திருப்பது?
என் நண்பன் ராமநாதன். வா, உன்னைத்தான் முதலில் அறிமுகப்படுத்தணும்.
நடுத்தரமான அந்த வீட்டின் ஹாலைக் கடந்து அடுத்த அறையை அடைந்தனர். சற்றே வழுக்கை கொண்ட தலையும், ஃப்ரேமிட்ட கண்ணாடியுமாய் உயரமான அந்த மனிதர் அமர்ந்திருந்த விதம் கம்பீரமாய் இருந்தாலும், அவர் சிரிப்பில் மெல்லிய சோகம் இழை ஓடிக் கொண்டது போல் தோன்றியது, வர்ணிகாவிற்கு.
வாங்கண்ணா.. வாங்க. இப்போதான் எங்க வீட்டுக்கு வழி தெரிஞ்சுதா? எத்தனை வருஷமாச்சு உங்களுக்கு? ஆமா, கலா வரலையா? நலம்தானே?
நீ மாறவே இல்லேம்மா. அப்போ எப்படி நிக்காம கேள்வி கேப்பியோ, அதே மாதிரிதான் இப்பவும் இருக்கே. கலாவுக்கு உடம்புக்கு சுகமில்லை. ஆமா, இவ உங்க மகள்தானே! என்னமாய் வளர்ந்திட்டா!
வணக்கம் அங்கிள்.
வணக்கம்மா! உன் மக ரொம்பவும் அழகுதான்.
நீங்க மட்டும் என்ன அங்கிள், வயசு ஏற ஏற பர்சனாலிட்டி போட்டி போடுதே!
ஏய், என்னடி பெரியவங்ககிட்டே மரியாதை இல்லாம? அண்ணி, பிள்ளைங்க எல்லாம்...
நலம்தாம்மா..
ஏம்மா வர்ணிகா, அம்மாவை என்ன பண்ணினே, இத்தனை கோபமா இருக்காளே?
இன்னைக்குக் கோவில்லே இருந்து சீக்கிரமா கூட்டிட்டு வந்திட்டேன். எதுக்கு வேஸ்ட்டா நேரத்தைச் செலவிடணும்?
ஆமாமா...! உன்னையும், உங்க அப்பாவையும் மாதிரிக் கால்ல வெந்நீர் ஊத்திகிட்டா வர முடியும்?
ப்ரிஜ்ஜில் இருந்த ஆரஞ்ச் பழச் சாற்றை டம்ளரில் வார்த்து விநியோகித்தார் பரிமளா.
அம்மா, பக்தி தானா வரணும். தம்பட்டம் அடிக்கக் கூடாது. இம்மாதிரி இடைத் தரகர்கள் மூலம் பக்தி வளருதோ இல்லையோ, கலகம் வளருது. இன்னைக்கு அர்ச்சனைக்குக் கொடுத்த பணத்தை, நாலு ஏழைப் பிள்ளைங்களோட வயிற்றுப் பசியைத் தீர்க்கலாமே!
நல்லா பேசுறேம்மா...!
ராமநாதன் அவளைப் பாராட்டிட...!
"நீங்க வேற பாராட்டிட்டீங்களா? ஏற்கெனவே உங்க நண்பர் ரொம்பவும் செல்லம் கொடுத்துக் கெடுத்து வைச்சிருக்கார்.
"ஆம்பிளை பிள்ளை மாதிரி