Uravugal Mempada
()
About this ebook
S Valliyappan ( Known as Soma Valliappan) is a renowned writer, author, speaker, trainer, and an expert in the areas of Human Resource Management, Personality development, and Financial Investments. He has written over 50 books in Tamil and English on various subjects including Self Development,, Stock market, Emotional Intelligence, Time management, Sales, Leadership, and Personality development. Known for his erudite writing style, his articles and columns are widely published in leading Tamil newspapers and periodicals regularly. His book on Stock investing, titled Alla Alla Panam, released in 2004 by Kizhakku Publishers (New Horizon Media), has been a phenomenal success and has sold over 1,25,000 copies. Valliyappan is regularly invited by many Tamil Television channels for his opinions on stock market and economic events.
He is a Graduate in Economics from Madras University and Post Graduate in Business Administration with human resource and Marketing specializations. Valliyappan has undergone a comprehensive educational program on Emotional intelligence at XLRI , a premier Business Management Institute Jamshedpur, India.
Read more from Soma Valliappan
Nalladhaga Naalu Vaarthai Rating: 0 out of 5 stars0 ratingsManagement Guru Kamban Rating: 0 out of 5 stars0 ratingsEmotional Intelligence – Idliyaga Irungal Rating: 4 out of 5 stars4/5Alla Alla Panam 1 (Pangusandhaiyin Adippadaigal) Rating: 4 out of 5 stars4/5Aalapiranthavar Neengal! Rating: 0 out of 5 stars0 ratingsNaattu Kanakku Rating: 0 out of 5 stars0 ratingsNermaiyai Sambathikka Ivvalavu Vazhigala? Rating: 0 out of 5 stars0 ratingsAlla Alla Panam 3 (Pangusanthai Futures and Options) Rating: 0 out of 5 stars0 ratingsThittamiduvom! Vetri Peruvom! Rating: 0 out of 5 stars0 ratingsNalla Manam Vaazhga Rating: 0 out of 5 stars0 ratingsSambarikka Theriyum, Semikka Theriyuma? Rating: 0 out of 5 stars0 ratingsThottathellam Ponnagum Rating: 0 out of 5 stars0 ratingsVeettu Kanakku Rating: 0 out of 5 stars0 ratingsSollathathaiyum Sei Rating: 5 out of 5 stars5/5Uruthi Mattume Vendum Rating: 0 out of 5 stars0 ratingsThallu Rating: 4 out of 5 stars4/5Ellorum Vallavare Rating: 0 out of 5 stars0 ratingsK. Balachandar Rating: 0 out of 5 stars0 ratingsThadaiyethumillai Rating: 0 out of 5 stars0 ratingsAthirntha India - Panamathippu Neekkam 2016 Rating: 0 out of 5 stars0 ratingsMagilchiyaga Vaazhungal Rating: 0 out of 5 stars0 ratings‘Teen’ Tharikita Rating: 3 out of 5 stars3/5Manathodu Oru Sitting Rating: 4 out of 5 stars4/5Nenjamellam Nee! Rating: 0 out of 5 stars0 ratingsNyayamai Sambathikka Ithanai Vazhigala? Rating: 0 out of 5 stars0 ratingsIvvalavuthana Nee? Rating: 0 out of 5 stars0 ratingsEngumiruppavar Rating: 0 out of 5 stars0 ratingsMagizhchiyaga Vaazhungal Rating: 1 out of 5 stars1/5
Related to Uravugal Mempada
Related ebooks
Ivvalavuthana Nee? Rating: 0 out of 5 stars0 ratingsNambikkai Vetri Perum Rating: 0 out of 5 stars0 ratingsVetrikku 16 Rating: 5 out of 5 stars5/5Vazhkaikku Siranthathu Thozhil Munaiva? Uthyoga Vazhva? Rating: 0 out of 5 stars0 ratingsIndru Muthal Vetri Rating: 0 out of 5 stars0 ratingsMunneru! Rating: 0 out of 5 stars0 ratingsManathodu Oru Sitting Rating: 4 out of 5 stars4/5Ovvoru Naalum Urchagam Rating: 5 out of 5 stars5/5Panakkaararaaga 10 Ragasiyangal Rating: 0 out of 5 stars0 ratingsGreat Words Win Hearts Rating: 0 out of 5 stars0 ratingsDevi Sridevi Rating: 0 out of 5 stars0 ratingsKonjam Yosikkalame... Rating: 0 out of 5 stars0 ratingsManam Oru Marmadesam Rating: 5 out of 5 stars5/5Neengal Innum Yen Kodeesvarar Agavillai? Rating: 0 out of 5 stars0 ratingsVetri Muzhakangal Rating: 0 out of 5 stars0 ratings'Nilavai Maraitha Megam...!' Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - November 2022 Rating: 0 out of 5 stars0 ratingsThittamiduvom! Vetri Peruvom! Rating: 0 out of 5 stars0 ratingsUratha Sindhanai Rating: 0 out of 5 stars0 ratingsMaaya Nilavu Rating: 5 out of 5 stars5/5Udan Rating: 0 out of 5 stars0 ratingsEllorum Vallavare Rating: 0 out of 5 stars0 ratingsPrabalamanavargalin Vetri Ragasiyangal Rating: 0 out of 5 stars0 ratingsThallu Rating: 4 out of 5 stars4/5Uruthi Mattume Vendum Rating: 0 out of 5 stars0 ratingsPon Vilangu Rating: 0 out of 5 stars0 ratingsEnnai Sutri Pengal Rating: 0 out of 5 stars0 ratingsMaalaiyil Solkiren Vaa Rating: 0 out of 5 stars0 ratingsNugathadi Rating: 0 out of 5 stars0 ratingsEera Vizhigal Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Uravugal Mempada
0 ratings0 reviews
Book preview
Uravugal Mempada - Soma Valliappan
http://www.pustaka.co.in
உறவுகள் மேம்பட
Uravugal Mempada
Author:
சோம. வள்ளியப்பன்
Soma. Valliappan
For more books
http://www.pustaka.co.in/home/author/soma-valliappan-novels
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
1. வெற்றி தோல்விகள்
2. அக்கறை மனிதர்கள்
3 கண்டிக்கலாமா கூடாதா?
4. மக்கள் தொடர்பில் ஐந்து மந்திரங்கள்
5. எம்பதி
6. அன்புக் கணக்கு
1. வெற்றி தோல்விகள்
பத்தாயிரம் தொழிலாளர்கள் பணிபுரியும் ஒரு பெரிய தொழிலகத்தின் பொது மேலாளர் அவர். பெயர் வைத்தியநாதன். நல்ல அறிவாளி. யோசிக்கும் திறன், முடிவெடுக்கும் திறன், பேசும் திறன், ஞாபகசக்தி என்று பல பலங்கள் அவருக்கு. நிறுவனத்தில் அவரைப்போலவே, மேலும் இரண்டு பொதுமேலாளர்கள் இருந்தாலும், அவர் பார்த்துவந்த உற்பத்திதுறை தான், நிறுவனத்தின் முதுகெலும்பு போன்ற துறை. இந்தக் காரணத்தினால், அவர் அதிக செல்வாக்கு உடையவராகவும் இருந்தார்.
பெரிய தொழிற்சாலைகளில், இப்படிப்பட்ட பொறுப்புகள் போக, இன்னும் கூட சில பொறுப்புகள் இருக்கும். அவை குறிப்பிட்ட வேலைகளுக்காக ஏற்படுத்தப்படும் தாற்காலிக கமிட்டிகளின் தலைமை போன்ற பொறுப்புகள். உதாரணத்திற்கு கேண்டீன் கமிட்டி, வொர்க்ஸ் கமிட்டி, மற்றும் மனமகிழ் மன்ற நிர்வாக குழு போன்றவை. இவை அனைத்தும் அந்தத் தொழிலகத்தில் அமைக்கப்பட்டு சீராக இயங்கி வந்தன. கூடுதலாக, அதன் ஊழியர்களுக்கென்று ஒரு கூட்டுறவு வங்கியும் நடத்தப்பட்டுவந்தது.
சிறப்பான நிர்வாகத்துக்கு வைத்தியநாதனை விட்டால் வேறு ஆள் கிடையாது என்பதுபோல, அங்கே இயங்கிய அத்தனை ஊழியர்நல கமிட்டிகளுக்கும் குழுத்தலைவராக, வைத்தியநாதனே நியமிக்கபட்டார்.
எதையும் சரியாகச் செய்யக் கூடியவர் என்கிற ஒரு காரணம் மட்டுமல்ல. நிர்வாகத்தினரின் முழு நம்பிக்கையும் பெற்றவர் அவர். நேர்மையானவர். நல்ல உழைப்பாளி. தவிர ஊழியர்கள், தொழிற்சங்கம் முதலியவற்றின் அச்சுறுத்தல்களுக்கெல்லாம் அஞ்சாதவர். நாள் ஒன்றுக்கு 16 மணி நேரம் வரை சாதாரணமாக வேலை செய்வார். இந்தத் தகுதிகள் போதாதா, அவர் உயரத்தை எட்ட!
வைத்தியநாதன் பற்றி இவ்வளவு தெரிந்துவிட்டதல்லவா? இப்போது சொல்லுங்கள், அவர் தன் வாழ்க்கையில் எவ்வளவு பெரிய வெற்றி பெற்றிருக்கவேண்டும்?
ஆனால், அவருடைய வாழ்க்கையின் முழு கதையையும் அறிந்தால் நீங்கள் அதிர்ச்சி கொள்வீர்கள். அவர் அடுத்தடுத்த உயர்ந்த பதவிகளுக்கு போகாதது மட்டுமல்ல. கமிட்டித் தலைவர் ஆன சில நாள்களில் உப்பு பொறாத ஒரு துறைக்கு மாற்றம் செய்யப்பட்டார். பல ஆண்டுகளுக்கு, தொடர்ந்து ஒதுக்கி வைக்கப்பட்டார்.
போகப் போக, ஊழியர்களின் வெளிப்படையான ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளானார். தொழிற்சங்கத்தினர், முச்சந்திகளில் மேடைபோட்டு, மைக் கட்டி, அவரை வசைபாடித் தீர்த்தார்கள்.
பல வருடங்கள் அலுவலகமே கதியாக கிடந்ததால், குடும்பத்தைக் கவனிக்க முடியாமல் போய் அங்கேயும் அவருக்குப் பல சிரமங்கள்.
அவர் செய்த தவறுதான் என்ன? அவரிடம் அப்படி என்ன குறை? அவர் பெற வேண்டிய வெற்றிகளைத் தவற விட்டதுடன், என்ன காரணத்தினால் சொந்தக் குடும்ப உறுப்பினர்களால் வேண்டாதவராக பார்க்கப்பட்டார்?
தனித்திறமையில் வல்லவரான அவர் இன்னொரு முக்கியமான விஷயத்தில் படு வீக். அதுதான் அடுத்தவரிடம் பழகுவது மற்றும் அடுத்தவர்களைக் கையாள்வது. வேலையைத் திறமையாகக் கையாண்ட அளவு, அவர் அவரைச் சுற்றியிருந்த மனிதர்களை கையாளவில்லை. சொல்லப் போனால், தனக்குக் கீழே உள்ள ஊழியர்கள் சகமனிதர்கள் தான் என்பதைக்கூட மறந்துபோனார். அவர்களை மிருகம்போல நடத்தினார். அடிமைத் தொழிலாளர்கள்போல அவர்களிடம் ஈவு இரக்கம் இல்லாமல் நடந்துகொண்டார்.
தனக்குத்தானே தீர்மானம் செய்துகொண்ட, அவருடைய சுயஉருவத்தினை (குஞுடூஞூ ஐட்ச்ஞ்ஞு) காப்பாற்றிக் கொள்ளுவதற்காக, அவர் மற்ற எவரையுமே அவர் அருகில் நெருங்க விடவில்லை. தன்னை ஒரு நெருப்பாகக் காட்டிக்கொண்டார். அதனால்தான் என்னவோ, இந்த நெருப்பைச் சுலபமாக நீர் ஊற்றி அணைத்துவிட்டார்கள்.
மற்றவர்களுடைய குறைகளைக் கண்டுபிடித்து அதை மேலிடத்தில் சொல்வதில் பெருமை கொண்டார். ஊழியர்களைத் தண்டிப்பதில் அவர் தயவுதாட்சண்யம் காண்பிக்கவில்லை. சட்டம், விதிகள், நடைமுறைகளே அவரது வழிகாட்டி. அடுத்தவர் நிலை எவ்வளவு சிரமமானதாக இருந்தாலும் சரி, எந்த விதியையும் மீறவில்லை. எவராக இருந்தாலும் சரி, நறுக்குத் தெரித்தார்ப் போல பதில் பேசுவார். தான் நேர்மையாகவும், கூடுதலாக உழைப்பவனாகவும் இருப்பதால், மற்ற எவரையும் முகத்துக்கு எதிரே கேள்விகள் கேட்க முடிவதில் ஒரு கர்வம்.
இப்படியே தொடர்ந்து, ‘ நான்தான் எல்லாம். எனக்கு நிகர் எவர்?’ என்று அவர் தொடர்ந்து இருந்ததால், அவருக்கு மேலிருந்தவர்கள், சக பொது மேலாளர்கள், தொழிற்சங்கத் தலைவர்கள், ஏனைய குழு உறுப்பினர்கள், ஊழியர்கள், அவ்வளவு ஏன், அவருடைய தனிச் செயலாளர்கள், ஊழியர்களே கூட அவரிடமிருந்து நகர்ந்து ஒதுங்கிவிட்டார்கள்.
நாளடைவில் எல்லோருக்கும் வேண்டாதவராக ஆகிவிட்டார். அவரால் காயப்படாதவர்கள், பாதிக்கபடாதவர்களே அந்த தொழிலகத்தில் இல்லை என்கிற அளவு போய்விட்டது. அப்படி எல்லோர் எரிச்சலும் ஒன்றுசேர அவர் பதவிக்கு வேட்டு வைக்கப்பட்டது. அதிகாரமும் பதவியும் ஒரேநாளில் பறிபோனது.
ஒரு வைத்தியநாதன் மட்டுமா இப்படி இழந்திருக்கிறார்? அவரைப் போலவே இன்னும் எவ்வளவோ நபர்கள் இருக்கிறார்கள்.
எத்தனையோ திறமைகள் இருக்கலாம். ‘இருக்கட்டுமே... அவர் எங்களிடம் ஒழுங்காக நடந்துகொண்டிருக்கவேண்டும்’ என்று விமர்சனம் எழுகிறபோது ஒருவருடைய தோல்வி உறுதியாகிறது. ஆம், வாழ்க்கை என்பது எல்லோரும் கூடிவாழ்வதுதான். எல்லோரையும் அனுசரித்து நடந்துகொள்வதுதான். இன்றைய உலகத்தில் நான்...என்.... என்கிற வீம்பு எல்லாம் செல்லாக்காசு ஆகிவிடும். வாழ்க்கையில் வெற்றி என்பது எப்படி எல்லோரையும் அனுசரித்து, அவர்களுக்கு வேண்டிய உதவிகள் செய்து, நம் வெற்றியில் அனைவரையும் பங்குகொள்ளச் செய்ய வைப்பதே ஆகும். தனி மனித உழைப்பு, தனித்திறன் மட்டுமே முழுமையான வாழ்க்கையை வழங்கிவிடாது.
பெரிய அலுவலகமில்லை. ஏசி யில்லை. கூப்பிட்ட குரலுக்கு ஓடி வர பத்துப் பேர் இல்லை. போகலாம் என்றவுடன், இதோ என்று சொல்லி ஓடிவந்து நிற்கும் டாடா சுமோ கார் இல்லை. சொத்துக்கள் இல்லை. சமயங்களில் பாக்கெட்டிலே பணம் இல்லை.
ஆனாலும் நிறைவான வாழ்க்கை. எல்லாவற்றையும் விட, ‘இவர் நன்றாக இருக்க வேண்டும். இவருக்காக நான் எதுவும் செய்வேன்’ என்று சொல்லும் நூற்றுக்கணக்கானவர்களைச் சம்பாதித்திருக்கும் வாழ்க்கை. மன நிம்மதி தரும் வாழ்க்கை.
இப்படி இருப்பவர்களைப் பற்றி என்ன சொல்ல? இப்படியும் சிலர் இருக்கிறார்கள்தானே! அப்படிப்பட்டவர்களில் ஒருவர் கவிஞர் அறிவுமதி.
அவருக்கு சினிமாமீது காதல். முயற்சித்தார். ‘உள்ளேன் ஐயா’ என்று ஒரு படம் செய்ய வாய்ப்பு கிடைத்தது. கதை விவாதத்துக்காக, இயக்குனரான அவருக்கு, சென்னை தி. நகரில் அபிபுல்லா சாலையில் ஒரு அலுவலகம் அமைத்து கொடுக்கிறார் தயாரிப்பாளர் புதுவை அற்புதம்.
அறிவுமதியை பெரியாள் ஆக்கியதோ இல்லையோ, அந்த 73, அபிபுல்லா சாலையில் அமைந்திருக்கும் அலுவலகம், திரைப்படத்தில் சாதிக்க வேண்டும் என்று கிராமங்களில் இருந்து கிளம்பி சென்னை வந்த இளைஞர்கள் பலருக்கும் புகலிடமாகவும் புகழ் பெற்றுதந்த இடமாகவும் இருந்திருக்கிறது
சினிமா கனவுகளோடு ஆனால் வழி தெரியாமல் தவித்தவர்களை அரவணைத்துக்கொண்டார் அறிவுமதி. தகுந்த அறிவுரை சொல்லி அனைவரையும் தன் அலுவலகத்தில் தங்கவைத்து பாதுகாத்திருக்கிறார். அவரிடம் அடைக்கலம் புகுந்த
பலரும் இன்றைய நசத்திரங்கள். பூமியில் இருந்தபடி அவர்களை நிறைவாகப் பார்த்துகொண்டிருக்கும் அவரைப்பற்றி, ஆனந்தவிகடன் பத்திரிகையில், ஒரு கட்டுரை எழுதப்பட்டது. அந்தக் கட்டுரையின் தலைப்பு - ‘73, அபிபுல்லா சாலை.’
அன்றைக்கு அங்கே வந்துபோனவர்களின் பெயர்களை அந்த நேரத்தில் சொல்லியிருந்தால் அவர்களை யார் என்று தெரிந்திருக்காது. ஆனால் இப்போது?
அவர்கள் எல்லாம் பிரபலம். சாதித்துக் கொண்டிருப்பவர்கள். அவர்களின் ஒட்டுமொத்த குரல் வாழ்த்துவது அறிவுமதியைத்தான். அவரால் தான் மேலே வந்தோம். அவர் போல வருமா? அவர் அண்ணன். அவர் எங்கள் அன்னை போல. இன்னும் என்ன என்னவோ நெகிழ்ச்சியுடன் சொல்லுகிறார்கள்.
அவர்கள் அறிவுமதி கொடுத்ததாக சொல்லுவது அவரது அறிவை அல்ல.
அறிவுமதி ஒன்றும் அவ்வளவு பிரபலமில்லை. ஆனால் அவரை கொண்டாடுபவர்கள், அவருக்கு பின்னால் இருப்பவர்கள், அவரது படை பலம் என்ன தெரியுமா?
பாலா, சீமான், தபு சங்கர், யுகபாரதி, நா.முத்துகுமார், பழநிபாரதி, நெல்லை ஜெயந்தா,
நந்தலாலா, கபிலன், அஜயன் பாலா, செல்வபாரதி, சரவணன் என இத்தனை பேரும் அபிபுல்லா சாலையில் அடைக்கலம் கொடுக்கப்பட்டவர்கள்தாம். ஒரு மனிதரால் ஒன்றிரண்டு பேருக்கு உதவி செய்யமுடியும். ஆனால் எப்படி இத்தனை பெரியக் கூட்டத்துக்கு வழிகாட்டியாக இருந்திருக்கிறார்?
இயக்குனர் சீமான் அறிவுமதியுடன் தஞ்சை தமிழ் பல்கலைகழகத்துக்குப் போயிருக்கிறார். வேலை முடிந்தபின், அங்கிருந்து குளிப்பதற்காக இருவரும் காவேரி ஆற்றுக்குப் போயிருக்கிறார்கள். சட்டையைக் கழற்றி வைத்துவிட்டு அயர்ச்சி காரணமாக சீமான் தூங்கிவிட்டிருக்கிறார். கண்விழித்துப்பார்த்தால், அறிவுமதி, அழுக்காக இருந்த சீமானின் சட்டையை துவைத்துவிட்டு, காய வைத்துக்கொண்டிருந்தாராம்.
பழ. பாரதி என்கிற பெயருடன் வந்தவருக்கு பழநி பாரதி என்கிற பெயரையும் சொல்லி, அவருடைய ’நெருப்பு பறவைகள்’ என்கிற முதல் கவிதைப் புத்தகத்தினை முழுவதும் திருத்தி வடிவமைத்து கொடுத்திருக்கிறார் அறிவுமதி. கூடவே சில வாய்ப்புகளையும் அவருக்குக் கைக்காட்டியிருக்கிறார்.
இயக்குனர் பாலாவை இயக்குனர் பாலுமகேந்திராவிடம் அறிமுகப்படுத்தி உதவி இயக்குனராக சேர்த்துவிட்டது, நா.முத்துகுமாரின் ’பட்டாம் பூச்சி விற்பவன்’ என்ற முதல் கவிதைப் புத்தகதினை சாரல் வெளியீடு மூலமாக கொண்டுவந்தது என மேலே குறிப்பிட்ட அத்தனை பேருக்கும் ஏதோ ஒரு வகையில் விளக்கேற்றி வைத்திருக்கிறார் அறிவுமதி.
அறிவுமதி வளர்த்துவிட்டவர்கள் பொருளாதார ரீதியாக பலமடைந்தாலும் பிரதிபலனாக அரிவுமதி என்ன பெற்றார் என்று கேட்டால் அவர் என்ன சொல்கிறார் தெரியுமா? ’பல பாசமுள்ள தம்பிகளை சம்பாதித்திருக்கிறேன்" என்கிறார் அவர்.
இது சுமார் 45 ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவம் இது. வருடம் 1963. அப்போது அப்துல்கலாம் ஓர் இளம் பொறியாளர். இந்திய விண்வெளி ஆராய்சித் துறையில் பணிபுரிகிறார்.