Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kalveri Kolluthadi!
Kalveri Kolluthadi!
Kalveri Kolluthadi!
Ebook123 pages48 minutes

Kalveri Kolluthadi!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மராத்தியை தாய் மொழியாக கொண்டிருந்தாலும் திருமதி ஹம்சா தனகோபால் தமிழை தன் உயிர் மூச்சாக கொண்டிருக்கிறார். எண்ணில் அடங்கா புதினங்களையும், சிறுகதை தொகுப்புக்களையும் படைத்துள்ள இவர் இரண்டு கவிதை தொகுப்புக்களுக்கும் உரியவர். இவருடைய புதினங்களை ஆய்வு செய்து பலர் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர். பெண்களின் வாழ்வியல் பிரச்சனைகளையும் பெண் சிசு கொலையை வன்மையாக கண்டித்தும் எழுதியுள்ளார்.

முப்பது ஆண்டுகளுக்கு முன்பாகவே திருநங்கைகளுக்காக குரல் கொடுக்கும் விதமாய் "அன்று ஒரு நாள் " என்ற புதினத்தை படைத்துள்ளார். இந்த புதினத்திற்கான அணிந்துரையை அழகுப்படுத்தியவர் வார்த்தை சித்தர் வலம்புரி ஜான் அவர்கள்..

மத்திய அரசின் "பாஷா பாரதி சம்மான்" விருது, ரஷ்யா புஷ்கின் இலக்கிய விருது, தமிழக சிறந்த நூலாசிரியருக்கான விருது எனபற்பல விருது பெற்றுள்ள இவர் அண்மையில் சிறந்த பெண் எழுத்தாளருக்கான தமிழ் நாடு அரசின் "அம்மா இலக்கிய விருது - 2016" பெற்றது இவருக்கு தமிழ் இலக்கிய உலகில் ஒரு தனித்துவம் அளிக்கிறது.

நாற்பது ஆண்டுகளாய் தொடரும் இவரது எழுத்துப்பணி சமூக உயர்வுக்காக மேலும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580114204257
Kalveri Kolluthadi!

Read more from Hamsa Dhanagopal

Related to Kalveri Kolluthadi!

Related ebooks

Reviews for Kalveri Kolluthadi!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kalveri Kolluthadi! - Hamsa Dhanagopal

    http://www.pustaka.co.in

    கள்வெறி கொள்ளுதடி!

    Kalveri Kolluthadi!

    Author:

    ஹம்சா தனகோபால்

    Hamsa Dhanagopal

    For more books

    http://www.pustaka.co.in/home/author/hamsa-dhanagopal

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    1

    புத்தம் புது காலை. பிரசன்னா காலை செய்தித்தாளை எடுத்து மடித்து அழகாய் நீவி வைத்தான். விடிந்ததும் காபியும் செய்தித்தாளும் இல்லாவிடில் அது அவனுக்கு விடியலாய் இருக்காது. சமையல் அறையின் அன்றாட ஒலிகள். தங்கை சிநேகலதாவிற்கு உதவலாமா என நனைத்தான். ஆனால் அவள் அதை விரும்பமாட்டாள். அவளால் முடியவில்லை என்பதால் உதவ வந்திருக்கிறானோ என தப்பிதம் செய்துக் கொள்வாள்.

    எழுந்து நின்று லுங்கியை சரிப்படுத்தி இறுக்கிக் கொண்டான். கண்ணாடியின் முன் நின்றபோது முகத் தாடையில் சொரசொரப்பு பச்சை மீசையும் அடர்ந்த கிராப்பும் அவன் கோதுமை நிறத்தை எடுத்துச் சொல்லியே கன்னியரிடம் பல மனுக்களைச் சுலபமாய் பெற்றுக் கொடுத்தன. ஆனால் தங்கை சிநேகலதா...

    அண்ணா... அண்ணா இன்னும் என்ன செய்துட்டிருக்க. இன்னுமா பேப்பர் முடிக்கலை?

    ஆச்சு சிநேகா, ஷேவ் செய்துக்கலமா, இல்ல பாய்லர் போடலாமான்னு யோசிக்கறேன்.

    அந்த சிறிய வீட்டுச் சமையல் அறை வாசற்படியில் தந்தத்தில் செய்து நிற்க வைத்த சிலைபோல சிநேகலதா வந்து நின்றாள். சாதாரண வாயல் சேலைகூட அந்த கோல மயிலின் அழகையும் ஓஹோவென எடுத்துச் சொல்லின. காண்போர் இமைகள் வேலை நிறுத்தம் செய்துவிடும்.

    நான் எப்பவோ பாய்லர் போட்டாச்சு. இப்பவே மணி பத்து. போய் குளிண்ணா. எனக்குப் பசிக்குது.

    நீ சாப்பிடும்மா. நான் பிறகு சாப்பிட்டுக்கிறேன்.

    நீ சாப்பிடாம நான் எப்ப சாப்பிட்டிருக்கேன். சீக்கிரம் வாண்ண.

    ஸாரி... ஸாரிடா கன்னா. இதோ நொடியில் வந்துடறேன்.

    முகம் மழித்தல் மறந்து குளியலறைக்கு ஓடுகிறான் பிரசன்னா. தங்கை காபிகூட குடித்திருக்க மாட்டாள். அவள் பசியுடன் இருப்பாள் என்பது எப்படி மறந்தது. தலையில் தட்டிக் கொண்டான்.

    அண்ணா, நீ சோப்பு எடுத்துப் போகலை பாரு.

    தேங்க்ஸ்டா கண்ணா

    ஓடி சோப் பெட்டி எடுத்தான். அப்போது தெருவிலிருந்து அந்த குரல் ஒரே ரிதமாய் உள்ளே ஓடி வந்தது.

    கீ...ரை... மொளக்கீரை, அரைக்கீரை. சிறுக்கீரை, மணத்தக்காளி புளிச்சக் கீரை...

    இந்தக் குரல் வெளியிலிருந்து உள்ளே ஓடி வந்து தொட்டதும்.

    ஏம்மா சிநேகா, கீரை வேணுமின்னு நேத்து சொன்னியே என்ன கீரை வேணும்னு சொல்லு. நான் போய் வாங்கி வரேன்.

    ஏன் நான் போய் வாங்க மாட்டேனா. இப்படி இரக்கம் காட்டறது, எனக்காக மத்தவங்க வேலை செய்யறது எனக்குப் பிடிக்காதுன்னு உனக்குத் தெரியுமில்ல அண்ணா.

    ஸாரிடா கண்ணா. சாரி நீயே போய் வாங்கிக்கோ.

    ஒரு ரூபாய் நாணயம் தேடி எடுத்துப் போனாள் சிநேகலதா.

    இளம் வயது கீரைக்காரி தலையில் சின்ன குன்று போல் கூடையில் பலவகை கீரைகளுடன் நடக்க, அவள் இளமைகள் குலுங்க பல கண்கள் மொய்த்தன என்பதை அவள் அறிந்தாளோ இல்லையோ தெரியவில்லை.

    பிரசன்னாவின் எதிர்வீட்டு மாடியில் சந்திரசேகர் செய்தித்தாளுடன் நின்றிருந்தான். அவன் கையில் செய்தித்தாள் இருந்ததே தவிர பார்வை என்னமோ தெருவில்தான் குறுக்கும் நெடுக்குமாய் நடை பயின்றது.

    கீரைக்காரி தன் அழகுகள் குலுங்க நடந்தபோது, சந்திரசேகரின் மனமும் சேர்ந்து குலுங்கிற்று. சே... பெண் என்றால் இப்படியல்லவா அமைய வேண்டும். நமக்கும் மனைவி என்று ஒரு வத்தல் வந்து சேர்ந்திருக்கிறதே.

    தாய் சொல் மீறா தனயனாய் அலமுவின் கழுத்தில் தாலி முடிந்தான்.

    பெயரைப் பாரு... அலர்மேல் வள்ளி... சீ... சுத்தக்காடு... கொஞ்சலாய் கிள்ளக்கூட உடம்பில் சதை இல்லை. சிரித்தால் வந்து குத்துமோ என்கிற பல் வரிசை.

    எதிர்வீட்டில் கீரைக்காரி சிரமத்துடன் கூடை இறக்க, அவள் சேலைத் தலைப்பு அதை சாக்காக்கி ஒதுங்கி சிரித்தது.

    எதிர்வீட்டு கதவு திறந்து அவன் கனவுக் கன்னி மின்னலாய் தோன்றினாள்.

    சிரிப்புடன் கீரைக்காரியிடம் பேசுவது கேட்கவில்லை. கீரைக்காரி ஏதோ கேட்டிருக்க வேண்டும். உள்ளே போய் எவர்சில்வர் தம்பளரில் ஏதோ கொடுக்கிறாள் இவன் கனவுக் காதலி.

    கீரைக்காரி வாங்கிதாக சாந்தி செய்துக் கொள்கிறாள்.

    இவன் வீட்டு உள்ளிருந்து எழுகிறது குரல். அலமுதான். அதைத் தொடர்ந்து கொலுசுகளின் சிணுங்கல்.

    சாப்பிட வாங்க. சாப்பிட வாங்கன்னு சொன்னா இங்கே நின்னு அப்படி என்னத்தான் செய்...

    கணவன் வேடிக்கை பார்ப்பது கண்டு அப்படியே சொற்களுக்குச் சிறையிட்டாள். அவன் அருகே போய் எட்டிப் பார்த்தாள்.

    'பளிச்' சென்ற தந்தச் சிலையாய் சிநேகலதா. மாக்கல் சிற்பமாய் கீரைக்காரி.

    ஒரு விநாடி அந்தப் பெண்கள் மீது எரிச்சலும் பொறாமையும் கோபமும் எழுந்தது உண்மை. ஆனால் அவர்கள் அப்பாவிகள். இப்படி ஒளிந்து நிற்கும் கணவன்தானே...

    தன் அழகற்ற தேகத்தின்மீது - பெண்மையின் மீது அவளுக்கே வெறுப்பு ஏற்பட்டது. 'கண்ணீர் பிரசவமாயிற்று.’

    சிரிப்புடன், ஏம்மா இது சிறு கீரைத்தானே. என்றாள் சிநேகலதா.

    ஆமாம் பொண்ணு. மனசார குளுகுளுன்னு மோர் குடுத்தியே ஒனக்கு தப்பா குடுப்பேனா? ஒன் புள்ளைக் குட்டி நல்லா இருக்கணும் தாயி.

    சின்ன வருத்தம் அந்த கோலமயில் முகத்தில்.

    எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலைம்மா. இந்தாகாசு.

    எவ்வளவுக்குக் கீரை எடுத்தே பொண்ணு.

    ஒரு ரூபாய்க்கு. ஒரு ரூபா குடுத்திருக்கேனே. ஏன் அது அம்பது பைசாவா.

    இல்ல பொண்ணு. ரெண்டு ரூவா குடுத்திருக்கே. அதான் நீ பாக்கலியான்னு கேட்டேன்.

    இல்லே... இல்லம்மா. என்னால் பார்க்க முடியாது. பார்க்கத்தான் இந்தக் கண்ணு அழகா இருக்கு. ஆனா பார்வை கிடையாது.

    ஒளியற்ற அந்த அழகிய விழிகளைப் பார்த்தபடி ஒரு ரூபாய் நாணயத்தை சிநேகலதாவின் உள்ளங்கையில் வைத்து அழுத்தினாள் கீரைக்காரி.

    பார்த்தா அப்படி தெரியல பொண்ணு. கண்ணில்லாதவன் ஆண்டவன்னு சொல்றாங்களே அது சரியாத்தானே இருக்கு. இந்த கூடைய பிடிப்பியா தாயி. ஐயோ... நான் பாரு வேணாம் தாயி. நானே

    ப்ச்சு. என்ன கீரைக்காரம்மா, என்னால முடியும். நானே வேணா தூக்கி விடட்டுமா?

    இமை மூடலில் அந்தப் பெரிய கூடையின் பாரத்தை எடுத்து கீரைக்காரப் பெண்ணின் தலையில் வைத்தாள் சிநேகலதா.

    "நீ நல்லாயிருப்ப

    Enjoying the preview?
    Page 1 of 1